Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

ஆட்டுக்கு தடை ,மாட்டுக்கு தடை என்று சொல்லி கடைசியில் கள்ளுக்கும் தடை போட்டிட்டாங்கள் 

இதைத்தான்... ஆட்டை  கடிச்சு, மாட்டை  கடிச்சு... ஆளைக்  கடிக்கிறது என்று தவறணையில் முன்பு சொல்வார்கள். :grin:

  • தொடங்கியவர்

கள் தொடர்பான வர்த்தமானியும் பனை தென்னைவள அபிவிருத்தியும் தொடர்பாக
வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, putthan said:

ஆட்டுக்கு தடை ,மாட்டுக்கு தடை என்று சொல்லி கடைசியில் கள்ளுக்கும் தடை போட்டிட்டாங்கள் 

அப்பிடியே அங்காலை தமிழர்களுக்கு தடை எண்டு வரும்.....

Edited by குமாரசாமி
டி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தடை வராவிட்டல் சரி. ஐ மீன் யாழ்.கொம்
யாழ்.கொம் இல் வந்தால், குமாரசாமி அண்ணை லொக்கேசனையும் போழுதுபோக்கையும் மாற்றவேண்டி வரும்.  tw_blush:

  • தொடங்கியவர்
பிரதமருடனும் நிதியமைச்சருடனும் கலந்துரையாடல்
 

-எம்.றொசாந்த்

கள் இறக்கப்படுவதற்கு, அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இணையத்தள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

“குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல், கொழும்பில் பிரதமருடனும் நிதி அமைச்சருடனும், நேற்று (30) இடம்பெற்றது. இதன்போது வடக்கு - கிழக்கு பகுதியில் வாழும் குறித்த தொழிலாளர்கள், அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ள தொழில் நடவடிக்கையால், அதனை நம்பி வாழும் குடும்பங்கள் தற்போது அச்சமடைந்துள்ளன.

“வடக்கில், குறித்த தொழில் தடை, நடைமுறைக்கு வருமாயின், அதனை நம்பி வாழும் 12 ஆயிரம் குடும்பங்கள், பேரவலத்தைச் சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கியத்துக்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்படும்.

“எனவே, இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி, குறித்த சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

“இதனிடையே, அரசாங்கத்தின் இந்த அறிவிப்புத் தொடர்பாக குறித்த தொழிற்றுறைசார்ந்த வல்லுநர்கள், கவலை அடையவோ, அச்சமடையவோ தேவையில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிரதமருடனும்-நிதியமைச்சருடனும்-கலந்துரையாடல்/71-206372

 
 
‘கள் இறக்க தடையில்லை’
 

-எம்.றொசாந்த்

திருத்தப்பட்ட மதுவரித் திணைக்களச் சட்டத்தின் பிரகாரம், கித்துள் மரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதி பெறப்பட தேவையில்லை என்பதே அமுலுக்கு வரவுள்ளதென, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கின்ற மதுவரித் திணைக்களச் சட்டமூலத்துக்கான ஒரு மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டே, பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

“ஏற்கெனவே உள்ள மதுவரித் திணைக்களச் சட்டத்தின் படி, மதுவரித் திணைக்கள அனுமதி இல்லாமல், எந்த மரத்திலிருந்தும் கள்ளிறக்க முடியாது. இப்போது வரவிருக்கும் திருத்தத்தில், அச்சொற்றொடருக்குப் பதிலாக ‘கித்துள்’ மரத்தைத் தவிர எந்த மரத்தில் இருந்தும் கள் இறக்க முடியாது.

“இதை இன்னொரு வகையாகக் கூறுவதாயின், இதுவரை எந்த மரத்திலிருந்தும் (உ-ம்: தென்னை, பனை) கள் இறக்குவதற்கு, மது வரித் திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படல் வேண்டும் என்பதேயாகும்.

“இச்சட்டமூலத்தின் மூலம், கித்துள் மரத்திலிருந்து கள் பெறப்படுவதற்கு மது வரித்திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படத் தேவையில்லை. இதற்காக ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ, நிதி அமைச்சரிடமோ முறையிடத் தேவையில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கள்-இறக்க-தடையில்லை/71-206371

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, vaasi said:

யாழில் தடை வராவிட்டல் சரி. ஐ மீன் யாழ்.கொம்
யாழ்.கொம் இல் வந்தால், குமாரசாமி அண்ணை லொக்கேசனையும் போழுதுபோக்கையும் மாற்றவேண்டி வரும்.  tw_blush:

அடுத்தது நான் தான் எண்டு சொல்ல வாறியள் போலை கிடக்கு.:grin:
தருணம் பார்க்கி--- எண்டு ஒரு பட்சி போன வருசம் சொல்லிச்சு.....நானும் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு நைஸாய் விலகிட்டன். tw_blush:

எல்லாம் பகிடிக்கு...:cool:

கள்ளுக்கும் லொக்கேசனுக்கும் தடை வந்தால் இருக்கவே இருக்கு "அகண்ட வெளி" 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.