Jump to content

உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது!


Recommended Posts

உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது!

 
 

லகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை.

இத்தாலி கேப்டன் ஜியான்லுகி பஃபான் கண்ணீர்

 

ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக் கோப்பைக்கு முன்னேறியது.

உலகக் கோப்பைத் தொடருக்கு, 1958-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இத்தாலி அணி தகுதிபெறவில்லை. முன்னதாக, 1930,1958-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் இத்தாலி அணி விளையாடியதில்லை. தோல்வி அதிர்ச்சியால், அந்த நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

buffon

இத்தாலி அணியின் கேப்டன் ஜியான்லுகி பஃபான் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைக் கரையச்செய்தது. தற்போது, 39 வயதான பஃபான் ரஷ்யா உலகக் கோப்பைத் தொடருடன் இத்தாலி அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். துரதிருஷ்டவசமாக அவரின் ஆசை தகர்ந்ததையடுத்து, நேற்றுடன் சர்வதேசப் போட்டியிலிருந்து விடைபெற்றார். இத்தாலி அணிக்காக 175 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதுவரை 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள பஃபான், ரஷ்ய உலகக் கோப்பையில் பங்கேற்றால், 6 உலகக் கோப்பையில்  விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பார். இத்தாலி அணி 4 முறை உலகக் கோப்பையை வென்ற அணி. கடைசியாக, 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தது... 

 

ஸ்வீடன் அணியின் கேப்டன் ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச், கடந்த ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். அதனால், அந்த அணியும் தடுமாற்றத்துடன்தான் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு, ஸ்வீடன் அணி உலகக் கோப்பையில் விளையாடியது. கடந்த இரு தொடர்களுக்குத் தகுதி பெறவில்லை. 

https://www.vikatan.com/news/world/107717-fifaworld-cup-2018-italy-disqualified.html

Link to comment
Share on other sites

60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி

 

சுவீடன் அணியுடனான பிளோ ஓப் (play-off) சுற்றில் தோல்வியை சந்தித்த இத்தாலி அணி 1958ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

மிலான் நகரில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற சுவீடனுடனான இரண்டாவது கட்ட பிளே ஓப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிர்ப்பந்தத்துடன் களமிறங்கிய இத்தாலி அந்தப் போட்டியில் எந்த ஒரு கோலையும் புகுத்தாமல் ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் கட்ட பிளே ஓப் போட்டியில் சுவீடன் 1-0 என்ற கோல்களால் வெற்றியீட்டிய நிலையிலேயே குறித்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

 

இதன்மூலம் பிளே ஓப் சுற்றை 1-0 என வென்ற சுவீடன் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு முதல்முறை தகுதி பெற்றது.

1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதை மறுத்த இத்தாலி, அதற்குப் பின் தற்போது மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளது. இத்தாலி அணி இதுவரை நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்றிருப்பதோடு இரண்டு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள ஒரு அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி 1984ஆம் மற்றும் 1992ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்களுக்கு தகுதி பெறாததே அந்த அணி பிரதான கால்பந்து தொடர் ஒன்றை இழந்த கடைசி சந்தர்ப்பங்களாகும்.  

இந்நிலையில், தனது சொந்த மண்ணில் 74,000 ரசிகர்கள் முன் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று (13) களமிறங்கிய இத்தாலி அணி போட்டியின் 73 வீதமான நேரத்தில் பந்தை தன் வசம் வைத்துக்கொண்டு 23 கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் அவர்களால் கோல் ஒன்றை புகுத்த முடியாமல் போனது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் இத்தாலி வீரர் மார்கோ பரொலோவுடன் சுவீடன் வீரர் பின்புறமாக மோதியபோது நடுவரிடம் இத்தாலி தரப்பு பெனால்டி கேட்டபோதும் போட்டியை தொடர நடுவர் சமிக்ஞை செய்தார்.

<

 

தொடர்ந்து முதல் கட்ட பிளோ ஓப் போட்டியில் கோல் புகுத்திய ஜொஹன்சனை போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் சுவீடன் இழந்தது. அவரது இடது முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து ஜொஹன்சன் வெளியேறினார்.  முதல் பாதியில் இத்தாலி அணிக்கு சாதகமாக போட்டி தொடர்ந்தபோதும் அந்த அணியால் கோல் புகுத்த முடியாமல் போனது.

முதல் பாதி: இத்தாலி 0 – 0 சுவீடன்

இத்தாலி மத்தியகள வீரர் பிளோரன்சி 53ஆவது நிமிடத்தில் உதைத்த பந்து எதிரணி கோல் கம்பந்தை நோக்கி பறந்தபோது அது கோலாக மாறும் என்று அவர் சற்று உற்சாகம் அடைந்தார். ஆனால் அந்த பந்து கம்பத்திற்கு வெளியால் பறந்தது.

போட்டி முடிவை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும்போது இத்தாலி பக்கத்தில் பரபரப்பு அதிகரித்தது. அரங்கில் நிரம்பி வழிந்த இத்தாலி ரசிகர்கள் அந்நாட்டு தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தார்கள். எனினும் சுவீடன் தொடர்ந்து தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு இத்தாலிக்கு கடும் சவால் கொடுத்து வந்த நிலையில் இறுதி விசில் ஊதப்பட்டது.

சொந்த மைதானத்தில் இடம்பெற்ற மிகவும் தீர்மானம் மிக்க இந்த ஆட்டத்தை வெற்றி கொள்ளத் தவறியமையினால், 60 ஆண்டுகளின் பின் இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.   

முழு நேரம்: இத்தாலி 0 – 0 சுவீடன்

இந்த தோல்வியுடன் இத்தாலி அணியின் கோல் காப்பாளர் கியான்லிகி பபோன் கால்பந்து அரங்கில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். இதன்மூலம் அவர் ஆறாவது சாதனை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தார். “என்னை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்” என்று போட்டிக்கு பின் அவர் அழுதபடி ராய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். 

 

கடந்த 20 ஆண்டுகளாக இத்தாலி அணிக்கு விளையாடும் 39 வயதான பபோன், 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார்.    

பபொனின் ஜுவென்டஸ் கழக அணியைச் சேர்ந்த சக வீரர் அன்ட்ரி பார்சக்லி மற்றும் ரோமா மத்தியகள வீரர் டானியல் டி ரொஸ்ஸி ஆகியோருடன் ஜோர்ஜியோ சிலினி ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எதிர்பார்த்துள்ளனர். இவர்கள் மொத்தம் 461 போட்டிகளில் இத்தாலி அணிக்காக ஆடியுள்ளனர்.

2018 ஜுன், ஜூலை மாதங்களில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் 32 நாடுகளில் இதுவரை 29 நாடுகள் தேர்வாகியுள்ளன. எஞ்சியுள்ள மூன்று அணிகளை தேர்வு செய்வதற்கான தனுதிகாண் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்?

Football is all about drama. இந்த நாடகத்தில் நெகட்டிவ் கிளைமேக்ஸ்தான் ட்விஸ்ட். இதோ, 2018 உலகக் கோப்பையிலிருந்து இத்தாலி வெளியேறியதைப் போல...1930 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறவில்லை. 1958 உலகக் கோப்பையிலும் அதேநிலை. 2018 உலகக் கோப்பையிலும் அவர்கள் விளையாடப்போவதில்லை. ஆக, இத்தாலி உலகக் கோப்பையை மிஸ் செய்வது இது முதன்முறை அல்ல. ஆனால், 60 ஆண்டுகளுக்குப் பின் இது முதன்முறை. இத்தாலி கால்பந்து வரலாற்றில் இது செமத்தியான அடி. ‘THE END’ என முடிவுரை எழுதிவிட்டன அந்நாட்டுப் பத்திரிகைகள். கிட்டத்தட்ட பூகம்பம் ஏற்பட்டது போல பேரிழப்பு. இதிலிருந்து மீள நாளாகும்.

இத்தாலி

 


பெரிய அணிகள் உலகக் கோப்பையில் இடம்பெறாமல் போவது இயற்கை. 1966-ல் இங்கிலாந்து உலகச் சாம்பியன். ஆனால், அவர்களால் 1974, 1978, 1994-ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்கமுடியவில்லை. இங்கிலாந்துக்கு ஓகே; ஒருமுறை சாம்பியன். இத்தாலி அப்படி அல்ல, நான்கு முறை உலகச் சாம்பியன். இரண்டு முறை உலகக் கோப்பை ரன்னர் அப். இத்தாலியின் டிஃபன்ஸ் இரும்புக்கோட்டை. இருந்துட்டுப் போகட்டும். பழைய பெருமையெல்லாம் கால்பந்தில் எடுபடாதே! உலகச் சாம்பியனே என்றாலும் தகுதிச்சுற்றில் வென்றால்தானே அடுத்த உலகக் கோப்பையை நினைத்துப் பார்க்க முடியும்! இதுதான் பியூட்டிஃபுல் கேமின் பியூட்டி!
 

எங்கே சொதப்பியது...?  

806e8d71a7deebec05ff8193b35b28b7_17424.j


ரஷ்யாவுக்குச் செல்லும் ஃபிளைட்டை இத்தாலி மிஸ் செய்துவிட்டதை விட, அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது ஸ்வீடன் என்பதுதான் சுவாரஸ்யம். ஆம், 2006-க்குப் பின்முதன்முறையாக ஸ்வீடன் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான டிரா வெளியானதுமே இத்தாலிக்குக் கிலி. காரணம், ஸ்பெயின், இத்தாலி என ஒரே குரூப்பில் பலம் வாய்ந்த அணிகள். ஸ்வீடனுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இத்தாலியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 180 நிமிடங்கள், 27 இலக்கை நோக்கிய ஷாட்கள், 40 கிராஸ்கள், 76 சதவீத possession, ஆனால், ஒரு கோல்கூட அடிக்கவில்லை. பின் எப்படி அவர்களால் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும்? இத்தாலியின் இந்தப் பின்னடைவு ஆச்சர்யம்தானே தவிர அதிர்ச்சி இல்லை. 

 
ஒரு முறையான சிஸ்டம் இல்லையென ஃபெடரேஷன்மீது சிலர் குற்றம் சுமத்தலாம். பயோ டேட்டா வெயிட்டாக இல்லாதவரை மேனேஜராக நியமித்தது தவறு எனப் பழி போடலாம். இப்படி, தோல்விக்குப் பல காரணங்களை அடுக்கலாம். ஆனால், இத்தாலி கோட்டைத் தாண்ட முடியாததற்கு காரணம் வீரர்களே. 2016 யூரோ கோப்பைத் தொடரில் பங்கேற்ற இத்தாலி அணி படு வீக். பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்ட்டே மட்டும் மூளையைக் கசக்காமல் இருந்திருந்தால், அவர்கள் கதி அதோகதிதான். காலிறுதிக்குக் கூட வந்திருக்க மாட்டார்கள். 

download_17208.jpg

அனுபவத்திலிருந்து பாடம் கற்காத அணி விளங்கவே விளங்காது. அணி மட்டுமல்ல மேனேஜரும்தான். உதாரணம், இத்தாலி பயிற்சியாளர் கியான் பியரோ வென்சுரா. ஸ்வீடனுக்கு எதிரான உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் ஃபர்ஸ்ட் லெக்கில், இத்தாலி பிளேயிங் லெவனில் இருந்த ஏழு வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். மிலன் நகரில் நேற்று நடந்த செகண்ட் லெக்கில் ஆறு சீனியர் பிளேயர்கள். இள ரத்தமே இல்லை. சீரி ஏ தொடரில் அதிக கோல்கள் அடித்த நேபோலி கிளப் வீரர் ஜார்ஜினோ எப்போதோ, இத்தாலி ஜெர்ஸி அணிந்திருக்க வேண்டியவர். நேற்றுதான் அவர் முதன்முறையாகக் களமிறங்கினார். அதுவும் டூ லேட். போதாக்குறைக்கு லோரென்ஸோ இன்சிக்னேவை பெஞ்சில் உட்கார வைத்து விட்டார் மேனேஜர். சில மேனேஜர்களுக்கு முக்கியமான கட்டத்தில்தான் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். வென்ச்சுரா அதற்கு நேர் எதிர்!

alessandro-florenzi-italy-sweden_4155335


ஸ்வீடனுக்கு எதிரான போட்டி மட்டுமே இத்தாலிக்குப் பிரச்னை இல்லை. கடந்த யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2-0 என ஸ்பெயினை வென்றது இத்தாலி. இரண்டரை மாதங்கள் கழித்து டுரின் நகரில் நடந்த போட்டியில் மேட்ச் 1-1 என டிரா. இந்த செப்டம்பர் மாதம் மாட்ரிட் நகரில் நடந்த போட்டியில் 3-0 என இத்தாலியைத் துவம்சம் செய்தது ஸ்பெயின். கான்ட்டே இத்தாலி பயிற்சியாளராக இருந்தபோது 3 பேர் கொண்ட டிஃபன்ஸ் ஃபார்மட்டை செயல்படுத்தினார். இது கோல் அடிக்கப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என ஸ்பெயின் வீரர் ஜாவி தெரிவித்திருந்தார். ஆனால், வென்ச்சுரா 4-2-2 ஃபார்மெட்டை விடாப்பிடியாகக் கடைப்பிடிக்க, மிட்ஃபீல்டில் ஸ்பயெின் புகுந்து விளையாடியது. கடந்து ஐந்து ஆண்டு கால இத்தாலியின் கால்பந்து வரலாற்றைத் திருப்பினால், லக்சம்பர்க், ஹைதி அணிகளுக்கு எதிராகவும் டிரா செய்துள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக வெற்றிபெற முடியாமல் போனது, இத்தாலி எந்தளவு கோல் அடிப்பதில் வீக் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

 

இப்படியே போனால், உலகக் கோப்பையில் இத்தாலியின் செயல்பாடு படு மோசமாகி விடும். 2006-ல் உலகக் கோப்பை வென்ற பின், 2022 கத்தார் உலகக் கோப்பை வரை, இத்தாலி உலகக் கோப்பையில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும். ஆம், 2010, 2014-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இனி புதிய பயிற்சியாளராகப் பதவியேற்பவர் உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது. தவிர, முன்னணி வீரர்கள் டனிலோ டீ ரோஸி, கியான்லூயி பஃபான், ஆண்ட்ரே பர்ஸாக்லி எல்லோரும் ஓய்வுபெற்றுவிட்டதால், தரமான இளம் வீரர்கள் உருவெடுக்கவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் ஜாம்பவான்களுக்கு இணையான மாற்று வீரர்களைக் கண்டுவிட்டது. இத்தாலி அவர்களைப் பின்பற்ற வேண்டிய நேரமிது.

https://www.vikatan.com/news/sports/107809-how-did-italy-miss-to-qualify-for-world-cup.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி தோற்றது ஜேர்மனிக்கு நாய்பேய் புளுகு...tw_blush:

Link to comment
Share on other sites

பயிற்சியாளரை நீக்கியது இத்தாலி
 

image_1918f6e624.jpg

ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறாததைத் தொடர்ந்து, தமது பயிற்சியாளர் ஜியம்பியரோ வென்டூராவை இத்தாலி நீக்கியுள்ளது.

அந்தவகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் அன்டோனியோ கொன்டேயை பிரதியீடு செய்த ஜியம்பியரோ வென்டூராவின் 17 மாத பதவிக் காலம், சுவீடனுடனான உலகக் கிண்ண தகுதிப் போட்டியில், 1-0 என்ற மொத்த கோல்களில் இத்தாலி தோற்றதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

ஜியம்பியரோ வென்டூராவின் கீழ், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்பெய்னுக்கெதிராக ஒரு புள்ளியை மாத்திரம் இத்தாலி பெற்றதோடு, சொந்த மண்ணில் இடம்பெற்ற மசிடோனியாவுடனான போட்டியிலும் சமநிலை முடிவையே பெற்றிருந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சியாளரை-நீக்கியது-இத்தாலி/44-207341

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.