Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை இறால் பிரட்டல்

Featured Replies

Bild könnte enthalten: Essen
 

சென்னை இறால் பிரட்டல்

தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது)

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

கொத்துமல்லி தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை பழ சாறு - 2 தேக்கரண்டி

உப்பு -தேவையான அளவு

மரசெக்கு கடலெண்ணய் - 3 மேஜைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் தலா ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் 1 கப் ( சதுர துண்டுகளாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 100 கிராம் (அம்மிகல்லில் விழுதாக நசுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)

செய்முறை :

1.ஒரு வடச்சட்டியில் சின்ன வெங்காயவிழுதுடன், தக்காளி கொத்துமல்லித்தழை,கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி பின் மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.

2. அடுப்பில் வடச்சட்டியை வைத்து மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் விழுதையும் போட்டு வதக்கவும்.

3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின், அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

4. மேலும் இதனுடன், அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு வதக்கவும்.

5. மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தூள் சேர்த்து கிளறவும்.

6.இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாரு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.

7.பிறகு கழுவிவைத்த இறாலை இதனுடன் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

8.குறைவான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.

9. வெந்ததும் சிறிது சிறிதாக மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக பொன்னிறமாக சிவக்க சிவக்க எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 

https://www.facebook.com/TASTYSAMAYAL/

 

  • கருத்துக்கள உறவுகள்

9 வது ....மரசெக்கு கடலெண்ணெய்க்கு நாங்கள் எங்க போறது. சப்பாத்தி, பானுக்கு சூப்பராய்  இருக்கும்....!  tw_blush:

  • தொடங்கியவர்

எங்காவது  தமிழ் கடைகாரரிடம் ஒரு சொல்லு சொல்லி பாருங்கள்.. ஒரு மாதத்தில் நீங்கள் போகும்போது தானாக கூப்பிட்டு சொல்வார்கள் மரசெக்கு கடலெண்ணெய்  வந்து இருக்கு என்று..:grin: ஆனால் அது என்ன எண்ணெய் என்பதுக்கு நான் பொறுப்பு இல்லை.:rolleyes:

 

சரி மரசெக்கு கடலெண்ணெய் என்றால் என்ன என்று தேடியபோது கிடைத்தது.

மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ, கல்லாலோ செய்யபட்டிருக்கும். செக்கின் அடிபாகம் , மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்கபடுகிறது. பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.

செக்கில் கடலெண்ணெய் ஆட்டுவதற்கு கிணற்று தண்ணீர் ஊற்றி தான் (ஆட்டும்பொழுது ஏற்படும் வெப்பத்தைத்தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சிறிது சிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான அல்லது கல்லால் ஆன செக்குகளை சுழலவைப்பதின் மூலம் வேர்கடலையில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும். அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கிணற்று நீர் சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது . பின்னர் கிணற்று நீர் தனியாக பிரிக்கப்பட்டுவிடும். தண்ணீர் ஊற்றாமல் கடலெண்ணைய் ஆட்ட இயலாது என்பதே உண்மை.

இப்படி மர, கல் செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் கடலெண்ணைக்கு அபாரமான மணமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மணம், மருத்துவகுணம் சுவை இதெல்லாம் அலாதி தான். .

மர, கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மர, கல் செக்கு எண்ணெய் சாப்பிட்டால்... அதன் ருசி கால காலத்திற்கும் மறக்காது. இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்,
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த கடலை எண்ணெயை அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காயவைத்து) உபயோகித்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர். அதனால் தான் வெளிநாட்டில் கூட இதை
" King of Oil " என்று அழைக்கிறர்கள்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழ கொழப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர்சத்துக்கள்தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் வைட்டமின்கள், தாது பொருட்கள் நார்சத்துக்கள், குளோரப்பில், கால்சியம், மக்னீசியம், காப்பர், இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
சமையல் எண்ணெய்களை எப்படி சுத்திகரிக்கபடுகின்றன என்பதை பார்த்தால் உண்மையான நிலை தெரியவரும். பல உள்நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் மூலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும். அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில்

இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் காஸ்டிக்சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர்கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கி விடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதியஅமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்..சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்தும் பொழுது சூடுதாங்காமல் உருக்குலைந்து விடுகிறது. கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்.. இயற்கை உணவே! ஆரோக்கிய வாழ்க்கை!!!

 

https://www.facebook.com/TASTYSAMAYAL

1 hour ago, suvy said:

9 வது ....மரசெக்கு கடலெண்ணெய்க்கு நாங்கள் எங்க போறது. சப்பாத்தி, பானுக்கு சூப்பராய்  இருக்கும்....!  tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.