Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாரா வளர்ப்பில் சாதிக்கும் யாழ்ப்பாண இளம்பெண்

Featured Replies

தாரா வளர்ப்பில் சாதிக்கும்  யாழ்ப்பாண இளம்பெண்

 

               
20170916_145035.jpg

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.  வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார்.  அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

 இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும்  ஸ்ராலினியுடன் பேசியபோது,

2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை நாட்டப்பட்டது. அங்கு பல புதிய வர்த்தக முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமான முதலீட்டாளர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.  இங்கே எப்படி பரவலாக கோழி இறைச்சி விற்கப்படுகிறதோ அதே போல் அங்கே உள்ள பெரும்பாலான கடைகளில் தாரா இறைச்சி விற்கப்படுகிறது. தாரா இறைச்சியின் சுவையும், போசணைப் பெறுமானமும் நன்றாகவே இருந்தன. தாரா இறைச்சி ஏன் எங்கள் பகுதிகளில் இல்லை என எனக்குள்ளே கேள்வி தோன்றியது. அதனை ஏன் சிறு தொழில் முயற்சியாக ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்தேன்.
20170916_153825.jpg

எனக்கு சுவடிகள் நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் நடராஜா பிரபுவும், கணேசமூர்த்தி ஸ்ரீபவனும் சரியானதொரு வழிகாட்டிகளாக இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் 2016 ஆனி மாதம் ஐந்து சோடி தாராக்களுடன் தாராப் பண்ணையை கொக்குவில் பொற்பதி பிரதேசத்தில் ஆரம்பித்தேன். எனக்கு இந்த தொழில் முயற்சி பெரும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஏனெனில், எமது மக்கள் தாரா இறைச்சி, முட்டைகளை பெரும்பாலும் உணவுத் தேவைக்கு பயன்படுத்தாத சூழலே இருந்தது. மக்களுக்கு தாரா இறைச்சி மற்றும் முட்டை நல்ல போசனைப் பெறுமானங்கள் நிறைந்தது என விழிப்பூட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் முயற்சித்தோம். அது நல்ல பலனை அளித்தது. கிட்டுப் பூங்காவில் நடந்த சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் காட்சிக் கூடமொன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடிந்தது.
20170916_153909.jpg

 இப்போது ஓரளவு தாரா இறைச்சி நுகர்வு எம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தாரா முட்டைகளை அழகுசாதன தேவைக்காக இங்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தாராக்கள் குறித்து எம்மக்களிடையே சில கருத்துக்கள் உண்டு. ஒன்று, தாரா முட்டை சரியான வெடுக்கு என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற அளவுக்கு தாரா முட்டை வெடுக்கு கிடையாது.

இரண்டாவது, தாராக்கள் வளர்ப்பதற்கு குளம் அல்லது நீர்நிலை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது. நான் கோழிக் கூடுகள் போன்ற நிலக் கூடுகளுக்குள் வைத்து தான் கடந்த ஒன்றரை வருடங்களாக தாரா வளர்த்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. நீர்நிலை அவசியமல்ல. இருந்தால் நல்லது.

மூன்றாவது தாராக்களுக்கு சாப்பாட்டு செலவு கூடுதலாக இருக்கும் என்பது. நான் பெரிதாக எந்த செலவும் இல்லாமல் தான் தாரா வளர்த்து வருகிறேன். மூன்று திருமண மண்டபங்களில் ஓடர் கொடுத்துள்ளேன். அங்கே வீணாகும் சாப்பாடுகளை வாங்கி வந்து தான் தாராக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். இது தவிர அசோலாக்களையும், மண்புழுக்களையும்  வளர்த்து தாராக்களுக்கு உணவாக்கி வருகிறேன்.

 தாராக்களை மூன்று நிலைகளில் விற்பனை செய்து வருகிறேன். தாராக் குஞ்சு ஒருசோடி 450 ரூபாய்க்கும், 3 மாதம் நிரம்பிய தாராக்கள் ஒரு சோடி - 1400 ரூபாய்க்கும், பெரிய தாராக்கள் 3500 ரூபாய்க்கும் விற்று வருகிறேன். என் போன்ற தாரா வளர்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தாரா வளர்ப்பு முறைகளை சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே சில இடங்களில் என்னிடம் தாரா வாங்கி வளர்ப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் சந்தை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.
20170916_144948.jpg

தாரா வளர்ப்பு மட்டுமல்ல தாரா முட்டை மா என்கிற சத்து மாவையும் உற்பத்தி செய்து வருகிறேன். வல்லாரையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். அத்தோடு கத்தாழை நாற்றுக்களையும் விற்பனை செய்கிறேன். முருங்கை கன்றுகளை வளர்க்கும் நோக்கமும் எதிர்காலத்தில் இருக்கிறது.  இவையெல்லாவற்றையும் தாண்டி சுவடி அமைப்பின் கல்வி நிறுவனமூடாக சின்னம் சிறார்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வருகிறேன், என்றார்.

இன்று வேலையில்லா பட்டதாரிகள் பலர் அரசாங்க வேலைக்கு மட்டுமே விண்ணப்பித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முற்றுமுழுதாக தன் உழைப்பை நம்பி புதிய முயற்சிகளை செய்யும் இளையோரை ஊக்குவிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.  வறுமையான தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஸ்ராலினி இன்று  24 வயதிலேயே இந்த நிலைக்கு முன்னேறி இருப்பது ஏனையவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
 
தீசன்-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

http://www.nimirvu.org/2017/10/blog-post_31.html

  • கருத்துக்கள உறவுகள்

சகல வசதிகளும் கொண்ட வெளிநாடுகளில் வாழ்ந்தும் வேலை வெட்டிக்குபோகாமலிருக்கும் ஆண்கள் வாழும் நம்மினத்தில்தான், அடிபடை வசதிகளே குறைவான தேசத்தில் வாழ்ந்தாலும் புதிதாய் தொழிற்முயற்சிகளை கண்டுபிடிக்கும் இந்த பெண்களும் இருக்கிறார்கள்! நயன்தாரா ஒன்றும் பெரிய அழகில்லை, நீங்க வளர்க்கிற தாராதான் அழகு!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஸ்ராலினி ராஜேந்திரம்.

  • 1 year later...

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமது வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வடக்குமாகாண பெண்கள் முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறு சுயதொழில் முயற்சிகளில் வடக்கு மாகாணத்தில் ஈடுபடுகின்ற பெண்கள் பலரும் சாதித்து வருவதுடன் ஏனைய பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு சிறந்த எடுத்தக்காட்டாக யாழ்ப்பாணம் மாவட்டம் பண்டத்தரிப்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ராலினி தனி ஒரு பெண்ணாக வாத்து பண்ணை ஆரம்பித்து இயற்கை விவசாயத்தை ஊக்கிவித்து வருகிறார்

வணிக மேலாண்மை கல்வி பயின்றுள்ள இவர், வங்கியில் கிடைத்த வேலையினை தவிர்த்துவிட்டு வாத்துப்பண்ணை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

தனது வாத்துப் பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் பற்றி பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் ஸ்ராலினி.

à®à®²à®à¯à®à¯ à®à®³à¯à®¨à®¾à®à¯à®à¯ பà¯à®°à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®£à¯à® à®à®°à¯ பà¯à®£à¯à®£à®¿à®©à¯ வà¯à®±à¯à®±à®¿ à®à®¤à¯

"வணிக மேலாண்மையில் எனது உயர்தர கல்வியினை முடித்த பின்னர், 2016ஆம் ஆண்டு வாத்து பண்ணையினை ஆரம்பித்தேன். கொக்குவில் பொற்பதி பகுதியில் எனது பண்ணை அமைந்துள்ளது. உண்மையில் வாத்து வளர்ப்பு என்பது மிகவும் இலகுவான ஒன்றாகும். இயற்கையாக வளரக்கூடடிய அசோலா என்கின்ற பாசியினத்தை நான் வளர்த்து அதற்கு உணவளிக்கிறேன். அதே நேரம் கடைகளில் கிடைக்கும் உணவுகள் மற்றும் மரக்கறிக் கழிவுகள் என்பன வாத்துகளுக்கு உணவாக வழங்கலாம்."

"வாத்து என்பது எல்லா காலநிலைக்கும் ஏற்றவாறு வாழக்கூடியது. நாம் கோழிகளை எடுத்துக்கொண்டால் மழைகாலத்தில் தொடர்ந்து உயிரிழக்கும். ஆனால் வாத்து அவ்வாறு நோய் வாய்ப்படுவதில்லை. அதே நேரம் மழை, வெயில் மற்றும் குளிர் என எல்லா காலங்களிலும் வாத்துகள் உயிர்வாழும்."

"நான் வாத்து வளர்ப்பினை தேர்வு செய்ததன் காரணம் என்னவென்றால், கோழி வளர்ப்பில் ஏற்படும் பாதக தன்மையினை நிவர்த்தி செய்யும் முகமாக தான் நான் வாத்து வளர்ப்பில் ஈடுபட்டேன். உதாரணமாக கோழிவளர்ப்பு என்பது நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் வைத்து பார்ப்பது போன்றதாகும், ஆனால் வாத்து வளர்ப்பில் குஞ்சு பொரிச்சு வளர்ந்து இறைச்சியாகும் வரையில் நோய் ஏற்படாது மருந்துகள் கொடுக்கும் தேவை இருக்காது. வாத்து இறைச்சி முட்டைக்கு தற்போது மிகுந்த தேவையுள்ளது. 600ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையில் லாபம் வழங்கக்கூடியதாக உள்ளது."

"நான் முழுக்க முழுக்க இயற்கை உணவுகளை வாத்துகளுக்கு வழங்குகிறேன். தாரா முட்டையினை அழகுகலை தொழில் சார் கலைஞர்களும் வாங்குகின்றனர் அதனைவிட தலைக்குக்கும் பயன்படுத்துகின்றனர். கோழி முட்டை 2 இன் சத்து தாரா முட்டை ஒன்றில் உள்ளது."

à®à®²à®à¯à®à¯ à®à®³à¯à®¨à®¾à®à¯à®à¯ பà¯à®°à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®£à¯à® à®à®°à¯ பà¯à®£à¯à®£à®¿à®©à¯ வà¯à®±à¯à®±à®¿ à®à®¤à¯

சீருயிர் என்ற எனது இந்த பண்ணையின் நோக்கம் ஒரு பண்ணையாளர் தனது விலங்குகளுக்கு இயற்கையான உணவுகளை எவ்வாறு உற்பத்தி செய்து வழங்குவது என்ற விடயத்தை பரப்புவதாகும்.

நான் வாத்து வளர்ப்புடன் நின்றுவிடாது ஆடு வளர்ப்பு முயற்சியுடன் இயற்கை பூச்சிக் கொல்லி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முயற்சியும் ஆரம்பித்துள்ளேன். இயற்கை பசலை ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்தது என்றால், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இரசாயணம் விசிறும் மரக்கறிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் சில விவசாயிகள் மக்கள் நலன் கருதி இயற்கை விவசாய முறையினை பின்பற்றுகின்றனர் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை இயற்கையான கரசல்கள் மற்றும் பசலைகள் கிடைக்கப்பெறாமை அதை நான் கவனத்தில் கொண்டு அந்த உற்பத்திகளை செய்து வழங்குகின்றேன்.

வேப்பிலை கரைசல், உள்ளிக் கரைசல் என பலவகையான கரைசல்கள் அதாவது ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக பூச்சி பிரச்சனை உள்ளது என்றால் நாம் இரசாயன மருந்துகளை வாங்கி பயன்படுத்தாமல் இவ்வாறு இயற்கை கரைசல்களை பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் தற்போது நாம் சமூகத்தில் அருகிவரும் கற்றாழை, புதினா, சிறுகுறிஞ்சா, வல்லாரை போன்ற மூலிகைகளை தேடி எடுத்து அதனை வளர்த்து விற்பனை செய்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் நிறைய பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சில பெண்கள் அவர்களுடைய பட்டப்படிப்பினை முடித்து வேலையின்றி உள்ளனர். அவர்கள் எதற்கும் கவலைப்படாது எங்களால் எதையும் சாதிக்கமுடியும் என நினைத்து முயற்சித்தால் வெற்றியடையாலாம். இவ்வாறு நாமே முன்வந்து நமது சிந்தனைக்குரிய தொழில் செய்தால் கட்டாயம் அதில் நாம் சாதிக்கமுடியும்.

இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் வெற்றி கதை

நான் வாத்து பண்ணை ஆரம்பிக்கும் போது வங்கியில் சிறிய கடன் பெற்றுதான் ஆரம்பித்தேன். இது போன்று பிற பெண்களும் சுய தொழில் தொடங்கும் போது அரச தினைக்களங்களும் வங்கிகளும் உதவி செய்தால் அவர்களை ஊக்கிவிப்பதாக அமையும். குறைந்த வட்டி வீதங்களில் நுன்கடன்களை வழங்கவேண்டும். எனக்கு வங்கி, அரசதினைக்களங்கள், புனர்வாழ்வு அமைச்சகம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உதவிகளை பெற்று எனது நிறுவனத்தை நான் விஸ்தரித்தேன் என்கிறார் ஸ்ராலினி.

இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் வெற்றி கதை

நான் இந்த பண்ணையினை ஆரம்பிக்கும் போது எனது வீட்டின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தேன். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்யவேண்டும் என வற்புறுத்தும் பெற்றோருக்கு மத்தியில் எனது தாய் தந்தை எனது இந்த முயற்சிக்கு ஆதரவு தந்தார்கள். எனக்கு வங்கியில் வேலை கிடைத்தும் அதனை தவிர்த்து இந்த பண்ணையினை ஆரம்பித்தேன்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48723878

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.