Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்”

Featured Replies

“மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்”

vikkineswaran.jpg?resize=600%2C398

மத்திக்கு முன் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருக்கலாம். ஆனால், சுயமரியாதையை இழந்து மாகாணத்தை தெற்கிற்கு அடகு வைத்திருப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடக அமையத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (17.12.17) விஜயம் செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் மத்திய அரசு அதிகாரங்களை பகிர முன்வராத நிலையே நீடிப்பதாக கவும், இந்த நிலமை மாற்றமடைய வேண்டுமாயின் உடனடி அரசியல் யாப்பு மாற்றம் ஒன்றே தற்போது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வட மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்களில் மத்திய அரசின் தலையீடு காணப்படுவதோடு, அதற்கு வடக்கில் பணியாற்றும் பல அலுவலர்களும் உடந்தையென சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையில் தாம் செய்வதற்கு முன்வந்த விடயங்களை செயற்படுத்த விடாமல் தடுத்தமையே இதுவரை தான் பெற்றுக்கொண்ட அனுபவம் எனக் குறிப்பிட்ட முதல்வர், கடந்த காலத்தில் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக சில அலுவலர்கள் செயற்பட்டமையும் இதற்கு காரணமென குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் தலையீடுகளுக்கு உதாரணமாக, கடந்த 17 வருடங்களாக வடக்கில் சேவையாற்றிய ஒருவரை இடமாற்றம் செய்ய பொதுச் சேவைகள் ஆணைக்குழு கட்டளை பிறப்பித்துள்ள போதும், ஆளுநரின் அனுசரணையில் அந்த இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் மாணாக சபை ஆட்சி முறையின் மீது காணப்படும் மத்திய அரசின் இவ்வாறான செல்வாக்கு, வடக்கு மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பை சீர்குலைப்பதாகவே அமையுமென சி.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தி உள்ளார்.

http://globaltamilnews.net/2017/55670/

  • தொடங்கியவர்

தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள்!

 

தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள்!

 

 
 
 
கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்.

உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல, ஊழலற்ற உயர்ந்த குணமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பத்திரிகையாளர்கள் சங்க விஜயத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதன்போது வடக்கு முதல்வரிடம் வினவப்பட்டவையும், அவர் அதற்கு அளித்த பதில்களும் மேலே தரப்பட்டுள்ளன.

(யாழ் நிருபர் தீபன்)

http://tamil.adaderana.lk/news.php?nid=98475&mode=lead

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

“மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்”

 

 

இப்போமட்டும் மாகாணத்தை அடகு

 வைக்கல்லையா ஐயா? ஒருத்தர் முஸ்லிம்களுக்கு நாங்கள் துரோகம் பண்ணிட்டோம் என்கிறார், இன்னொருத்தர் சிங்களவருக்கு எதிரா நாங்கள் ஆயுதம் தூக்கினதுதான தப்பு எண்டுறார், மற்றொருத்தர் தமிழ்கட்சிகள் சேர்ந்து இருக்கணும் என்கிறார், அடுத்தவர் தமிழ்கட்சிகள் பிரிந்து செல்வதை நியாபடுத்துறார்,

இன்னொருத்தர் நமது மக்களே சொந்த இருப்பிடங்களுக்கு முழுசா திரும்பாத நிலையில் ரோஹிங்கிய்யா முஸ்லிம்களை எங்களட்ட தாருங்கள் நாங்கள் வடக்கில் வைத்திருந்து பத்திரமா பாக்கிறோம் என்கிறார், பொருத்துவீடு நல்லம் என்று ஒருவர் சொல்லுறார், ஓட்டுவீடுதான் வேணும் என்று இன்னொருத்தர் சொல்லுறார், ஒருத்தர் இந்தியா வேணும் என்கிரார், மற்றவர் ரணில் அல்லது மஹிந்த வேணூம், அடுத்தவர் சீனா...

இப்படியே அடிச்சுக்கொண்டு,அவனவன் இருப்புக்கு மட்டும் விளம்பரம் தேடிக்கொண்டு எதுவுமே பெறாமல் காலத்தை ஓட்டுவதைவிட சிங்களவனட்டையே வடக்கை அடகு வையுங்கள்உருப்படியா ஏதாவது பண்ணுவான் என்று புலம்பெயர் தமிழர்களே சீக்கிரம் சொல்வார்கள் பொறுத்திருந்து பாருங்கள்!

Edited by valavan

  • தொடங்கியவர்

நேர்மையான, ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் – விக்னேஸ்வரன்

 

cmவரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், நேர்மையான, ஊழலற்ற, சேவைமனப்பாங்குடைய, மக்களை நேசிக்கும், பண்பும் கொண்ட திறமையான  வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

“உங்கள் பிரதேசத்தை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நேர்மையும், திறமையும், ஊழலை வெறுப்பவராகவும், மக்களை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதே அவரிடம் இருக்க வேண்டிய தகைமைகள்.

எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல. ஊழலற்ற உயர்ந்த குணங்களை உடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்.

கட்சி தவறு செய்தாலும், மக்கள் ஆதரவிருந்தால் அவர்கள் கட்சியையே மாற்றியமைப்பார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/12/18/news/28011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.