Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!!

Featured Replies

 
 

யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!!

 

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு,பிஸ்டல் ஒன்று, 394 ரவைகள் போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன.

சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

v-1.jpg

v1.jpg

http://newuthayan.com/story/56010.html

 

 

புளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு : ஒருவர் கைது

( ரி.விரூஷன் )

 

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

polet.jpg

குறித்த வீடானது முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வந்த நிலையில் பின்னர் நீதிமன்றில் வீட்டின் உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

25497515_1018083631676339_1819042011_n.j

இதனை தொடர்ந்து இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய வீட்டினை மீட்பதற்காக பொலிஸார் சென்ற போதே வீட்டின் அலுமாரிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

இதன்படி வீட்டில் இருந்து ரீ.56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படும் மகசீன் 6 உம், பிஸ்டல் 1, இராணுவம் பயன்படுத்தும் தண்ணீர் போத்தல் ஒன்று, வோக்கி டோக்கி ஒன்று, மற்றும் வாள் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

25519707_1018083618343007_1836454767_n.j

மேலும் குறித்த வீட்டில் இதுவரை காலமும் வசிந்து வந்த முன்னாள் புளொட் அமைப்பைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25519713_1018083338343035_1009438842_n.j

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

25555700_1018089055009130_2016040394_n.j

25497439_1018089048342464_349364573_n.jp

http://www.virakesari.lk/article/28412

  • தொடங்கியவர்
புளொட்டின் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
 

image_ccc9d471bf.jpgபுளொட்டின் முன்னாள் உறுப்பினர்  ஒருவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து  துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வருவதாகவும், அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளமையை அடுத்து   வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

 நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற பொலிஸார் சென்று, அங்குள்ள பொருள்களை அகற்றும் போது  அலுமாரி ஒன்றுக்குள் ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2 396 ரவைகள், கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

  அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு, . அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் மேலும் கூறினர்.

image_9a6ff6842b.jpg

image_dce10da253.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/புளொட்டின்-முன்னாள்-உறுப்பினர்-வீட்டிலிருந்து-ஆயுதங்கள்-மீட்பு/71-209111

  • தொடங்கியவர்

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது- சித்தார்தன்

 
 
 

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது- சித்தார்தன்

எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நேற்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற தர்மலிங்கம் சித்தார்தன் நிலைமைகளை ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.இந்த வீட்டை முன்பு அலுவலகமாகப் பாவித்தோம் கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் குறித்த வீட்டில் இருந்தவர் எங்களிடம் இருந்து ஒதுங்கியிருந்திருக்கின்றார்இப்போது எடுக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கு எவ்வாறு வந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/மீட்கப்பட்ட-ஆயுதங்கள்-த/

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் இயக்கம் ஆரம்பித்து...  40 வருடங்களில், 
இது வரை, ஒரு இராணுவத்தையும்....  சுட்டுக் கொன்றதில்லை.
மாறாக... இயக்கத்தில் சேர்ந்த, அப்பாவி இளைஞர்களையும், பொதுமக்களையும் தான், 
அந்த ஆயுதத்தால் சுட்டுக் கொன்றார்கள்.

சில வேளை....  மால தீவை,  பிடிக்கப் போகும் போது... கொண்டு போன ஆயுதமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல சிறியண்ண, இவர்கள் மாலைதீவு பிடிக்க போகும்போது. இவ்வாயுதங்கள் ( T-81,T82) பயன்பாட்டுக்கு வந்திட்டுதோ தெரியல்ல :grin:

  • கருத்துக்கள உறவுகள்

T-81
ஆமியின் கொள்சர் 

தாங்கள் கொடுத்ததை 
இப்போ எதோ பூமியில் இதுவரை 
இல்லாததை எடுக்கிற மாதிரி படம் போடுகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.