Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. உடலை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் என்ன.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி

Featured Replies

ஜெ. உடலை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் என்ன.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி

 

 சென்னை: ஜெயலலிதா வாரிசு என கூறும் வழக்கில் அம்ருதாவிடம் ஏன் டிஎன்ஏ சோதனை செய்யக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார்.

டிஎன்ஏ சோதனை

 

டிஎன்ஏ சோதனை

ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா உடலை தோன்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 

ஏன் நடத்தக்கூடாது?

இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா உரிமைகோரும் வழக்கில் ஏன் டிஎன்ஏ சோதனை நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

 

ஆயிரம் பேர் வருவார்கள்

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் விளம்பரத்துக்காக டிஎன்ஏ சோதனை கேட்பதாக கூறினார். ஒருவருக்கு அனுமதி வழங்கினால் ஆயிரம் பேர் இதுபோல் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

 

பின்னர் முடிவு செய்யலாம்..

மேலும் ஜெயலலிதாவின் வாரிசா என முடிவு செய்தபின் உடலை ஒப்படைக்க முடிவு செய்யலாம் என்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மனுதாரர் இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் விளம்பரம் தேட ஒன்றுமில்லை என்றனர்.

 

இப்போது ஏன் என கேள்வி

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உரிமைகோராமல் மறைந்த பிறகு ஏன் உரிமை கோருகிறீர்கள் என்றும் மனுதாரரிடம் நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார். டிஎன்ஏ சோதனை கேட்காத போது எப்படி உத்தரவிட முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

தமிழக அமைதியை பாதிக்கக்கூடாது

மேலும் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் தமிழகத்தின் அமைதியை பாதிக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார். இதைத்தொடர்ந்து டிஎன்ஏ சோதனை, உடல் ஒப்படைப்பு தொடர்பாக நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அரசு அக்கறை கொள்கிறது

வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என நாங்கள் ஆவணங்களை தாக்கல் செய்கிறோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மாநில முதல்வராக இருந்தவரின் நற்பெயரில் அரசு அக்கறை கொள்கிறது என்றும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.

 

நாளைக்கு ஒத்திவைப்பு

மேலும் பெங்களூரை சேர்ந்தவர்கள் சென்னை வந்ததை குறிப்பிடாமலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனை காரணம் காட்டியே வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்ற நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.

 


Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/amrutha-has-filed-petition-chennai-high-court/articlecontent-pf283213-305846.html

  • தொடங்கியவர்

`ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது?' தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி

ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

high_court_14541_18439_12074_15122.jpg

 


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரி அம்ருதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே உரிமை கோராதது ஏன்? பெங்களூருவிலிருந்து சென்னை வந்ததை குறிப்பிடாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காகவே மனுவைத் தள்ளுபடி செய்ய முடியும். மனுவில் டி.என்.ஏ பரிசோதனைக்கு கோராதபோது எப்படி டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிடமுடியும். டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டால் தமிழகத்தின் அமைதி பாதிக்கப்படக் கூடாது. ஜெயலலிதாவின் உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது என்று நிரூபித்தால், அடுத்தகட்ட விசாரணை தொடரப்படும். மனுவை முழுவதுமாகத் தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி நீதிபதி வைத்தியநாதன் வழக்கை நாளைவரை ஒத்திவைத்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதிக்கலாம். ஆனால், டி.என்.ஏ பரிசோதனைக்கு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை. விளம்பரத்துக்காக மட்டுமே பலரும் உரிமை கோருகின்றனர். டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதித்தால், இதே போல ஆயிரம் பேர் வருவார்கள். மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று நாங்கள் நிரூபிக்கிறோம்' என்று வாதிட்டார். வழக்கை விசாரித்தி நீதிபதி வைத்தியநாதன், நாளைவரை தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

https://www.vikatan.com/news/tamilnadu/111432-madras-hc-justice-questions-to-tn-government.html

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு உடல் கிடந்தால் தானே .

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, இணையவன் said:

அதுவும் போலியா ? :unsure:

1.75 லட்சம் கோடியை 2g உழலையே ஒன்ருமில்லாதவாக்கியவர்களுக்கு இதெல்லாம் சர்வசாதராணம் அந்த உழல் காரணாமாக  நாங்கள் அழிவதுக்குரிய  காரனம்களில்  ஒன்று .  உண்மையில்  அங்கு உடல் இருந்தாலும் ஹிந்தியாவின் நீதி என்ன செய்யும் காசை வேண்டிக்கொண்டு மறுபக்கம் தலையாட்டும்.

  • தொடங்கியவர்

``சோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?” - அம்ருதாவுக்கு நீதிபதி கேள்வி

 
 

``சோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?” என அம்ருதாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்ருதா

 

ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு எனப் பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த அம்ருதா கூறிவருகிறார். அம்ருதா, முன்னர் பரபரப்பைக் கிளப்பியபோது, “நான் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, ஜெயலலிதா-சோபன்பாபு தம்பதிக்கு மகளாகப் பிறந்தேன். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காக, தன் சகோதரியான சைலஜாவிடம் ஜெயலலிதா கொடுத்து வளர்த்தார்’’ என்றார். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அம்ருதா தொடர்ந்த வழக்கை, நீதிபதி மதன் பிலோகூர் தலைமையிலான அமர்வு தள்ளுபடிசெய்தது. ஆனால் இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துகொள்ளலாம் என்று அனுமதியளித்திருக்கிறது. இவ்வளவு காலம், ஜெயலலிதாவைத் தன் பெரியம்மா என்று சொல்லிவந்த அம்ருதா, இப்போது 'அம்மா' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அதற்காக, மரபணுப் (DNA) பரிசோதனைக்கும் தயார் என்றும் கூறிவருகிறார்.

 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், அம்ருதாவிடம் புதுக் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. “ஜெயலலிதாவை அம்மா என உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவை ஏன் தந்தை என உரிமை கோரவில்லை” எனக் கேள்வி எழுப்பியதாேடு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜனவரி 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/111518-chennai-high-court-questions-amrutha.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மகள் என உரிமைகோரும் வழக்கு; நீதிபதி சரமாரி கேள்வி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 

 
download%201

ஜெயலலிதா, மகள் உரிமை கோரும் அம்ருதா   -  கோப்புப் படம்

ஜெயலலிதாவின் மகள் என உத்தரவிடக்கோரி பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு, தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி, ஜெ.தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.5-க்கு ஒத்திவைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் என பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சில காலம் முன்னர் பேட்டி அளித்து டெல்லியில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.

இதன் பேரில் தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக் கோரி அம்ருதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா, ரஞ்சனி ரவீந்திரநாத், எல்.எஸ்.லலிதா ஆகியோர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் வி.பிரகாஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர் நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். வழக்கைத் தொடுத்தவர் உண்மையான வாரிசா என முடிவு செய்த பின்னரே உடலை ஒப்படைப்பது குறித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு ஏன் முதலில் டி.என்.ஏ சோதனை செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

புதிய மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். புதிய மனுக்களை அம்ருதா தரப்பினர் தாக்கல் செய்த நிலையில் விசாரணை இன்றும் தொடர்ந்தது. அப்போது நீதிபதி சராமாரியாக கேள்விகளை கேட்டார். நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வாதம் வருமாறு:

இன்று விசாரணை தொடர்ந்தபோது, அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் “டிஎன்ஏ கோரிக்கை, உறவினர்கள் சேர்ப்புடன் புதிய மனுத்தாக்கல் செய்துவிட்டோம். தீபா தீபக்கை வழக்கில் சேர்க்கவும் கூடுதலாக மனு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

“தொடர்ந்து வரும் இந்த விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் ஏதும் அப்பல்லோவில் உள்ளதா? அப்பல்லோ மருத்துவமனையையும் இந்த வழக்கில் சேர்க்கலாமே. அவர்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதாமே” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

“ரத்த மாதிரி உள்ளதா என தெரிந்துக் கொண்டு தெரிவிக்கிறேன். ஆனால் அதற்கு முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இதை ஆழ்ந்து வாதிக்க வேண்டும். அதனால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அரசுத்தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி அம்ருதா தரப்பிடம் “ஜெயலலிதா அம்மா என உரிமை கோரும் நீங்கள், உங்கள் தந்தை ஷோபன்பாபு என்பதை ஏன் உரிமை கோரி இதற்கு முன் நீதிமன்றம் வரவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

“சோபன்பாபு ஏற்கனவே இறந்துவிட்டார். தற்போது மனுதாரரின் தாய் உடல் அடக்கம் செய்யபட்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.” என்று அம்ருதாவின் வழக்கறிஞர் பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் “அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே சினிமாவில் பிரபலமானவர் ஜெயலலிதா. அவருடன் போயஸில் அம்ருதா மற்றும் உறவினர்கள் இருந்ததாக சொல்கிறார்கள். ஒரு ஆதாரம், ஒரு போட்டோ ஏதும் காண்பிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ், “புகைப்படங்களும் இருக்கலாம் கேட்டு சொல்கிறேன். ஜெயலலிதாவுடன் பேசியதற்கான ஆவணங்கள் உள்ளது. போன் காலர் ஐடி உள்ளது. அவர் முதல்வராக இல்லாதபோது மனுதாரர் தரப்பு பழகினாலும், அவர் ரெட் அலர்ட் கேட்டகிரியில் இருந்ததால் போயஸ் தோட்டத்தில் சந்திக்க முடியவில்லை.” என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள அதிமுக பிரமுகரும், வக்கீலுமான அரும்பாக்கம் ஜோசப் கோரிக்கை வைத்தார். நீதிபதி வைத்தியநாதன் “இதே போல் 6 கோடி பேர் கிளம்பி வந்தால் என்ன செய்வது? மனுவாக தாக்கல் செய்யுங்கள். விசாரிக்கலாம். மனுவாக தாக்கல் செய்யலாம் அல்லது அரசுக்கு உதவலாம்” என்று தெரிவித்தார்.

பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன் “காலையில் மாலை போட்டு விட்டு மாலையில் காலை வாருகிற நிலை தான் தமிழகத்தின் விதியாக உள்ளது. ஒரு காலத்தில் எல்லோரும் அம்மா என்றார்கள் அப்போது அம்ருதா அம்மா என்று அழைக்கவில்லை. இப்போது அம்ருதா அம்மா என்கிறார் ஆனால் மற்றவர்கள் ஜெயலலிதா என்கிறார்கள்.

முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். கூட மருத்துவமனையில் சென்றும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை என சொல்கிறர்கள். அப்புறம் இத்தனை நாட்களாக சந்திக்காத மனுதாரரை எப்படி பார்க்க முடியும்” என்று தெரிவித்தார்.

“யாரையும் வழக்கில் அனுமதிக்க கூடாது. வழக்கே உகந்ததா என முடிவு செய்யாமல் யாரையும் வழக்கில் சேர்ப்பது சரியல்ல” என அரசுத்தரப்பு வழக்கறிஞர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதையடுத்து இது தொடர்பாக தமிழக அரசு, தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 5-க்கு நீதிபதி வைத்தியநாதன் ஒத்திவைத்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22242268.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்த உடனே  ஜெயலலிதா உடலை தோண்டி எடுக்க வேண்டியதில்லை. முதற்கட்டமாக அவர் பயன்படுத்திய பொருட் கள் ஏதாவது எடுத்து அதை பரிசோதிக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.