Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது…

Featured Replies

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது…

 

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என தெரிவித்தார்.

cvk3.jpg?resize=900%2C675cvk2.jpg?resize=900%2C675cvk1.jpg?resize=900%2C675

 

http://globaltamilnews.net/2017/57056/

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுடர் தெரிவித்துள்ளார்

  • தொடங்கியவர்

உடையும் கூட்டமைப்பை இறுகப் பிடிக்கவே தமிழரசில் சங்கமித்தோம்….

 
cvk3.jpg?resize=900%2C675
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தாயகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு கூட்டமைப்பை பலப்படுத்தும் நோக்குடன் கூட்டமைப்புடன் இணைந்து தாம் போட்டியிட உள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
 
தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அக்கட்சியின் சார்பில் வேந்தன் அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,  நடைபெறவுள்ள தேர்தல் தேசியத்தை பெறுவதற்கான தேர்தல் அல்ல. இது அபிவிருத்தியை இலக்காக கொண்ட தேர்தல். இந்த தேர்தலில் பல குழுக்களாக பிரிந்து நின்று போட்டியிட்டு தாயகத்தை பிளக்காமல் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும்.
 
அதற்காவே நாம் தமிழ் மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுகின்றோம்.  ஆயுத போராட்டத்தின் போது தமிழ் மக்கள் பலம் பொருத்தி இருந்தோம். இன்று அவ்வாறான நிலைமை இல்லை எம்மிடம் அரசியல் பலம் மாத்திரமே உள்ளது.  எனவே நாம் அரசியலில் பிரிந்து நிற்காமல் ஒற்றுமையாக நின்று எமது தேசிய பலத்தினை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் காட்ட வேண்டும். அதன் ஊடாகவே நாம் பேரம் பேசும் சக்தியாக உருவாக முடியும்.
 
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து உள்ளோம். கூட்டமைப்பில் எவர் பிழை செய்தாலும் அதனை நாம் தட்டிக்கேட்போம்.  தற்போதுள்ள அரசியல் களத்தை கருத்தில் கொண்டே நாம் கூட்டமைப்புடன் இனைந்து உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2017/57120/

 

தமிழரசு கட்சி என்றுமே புலிகளை எதிர்த்ததில்லை:-

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Tamil-arachu-kadchi.jpg?resize=802%2C451

தமிழரசு கட்சி என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படவில்லை. என்றைக்கும் விடுதலைப்புலிகளை புறக்கணிக்கவில்லை. என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகளின் போராளிகளுக்கு ஆசனம் ஏன் வழங்க வில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு பதில் அளித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில, விடுதலை புலிகள் அமைப்பையோ, அதன் உறுப்பினர்களையோ என்றைக்கும் தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் ஆசனம் கேட்டது உண்மை அப்போதைய சூழலில் அதனை வழங்க முடியவில்லை.

இருந்த போதிலும் தேர்தலுக்கு பின்னரான கால பகுதி முதல் தற்போது வரை நாம் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் நெருக்கமாகவே உள்ளோம். என தெரிவித்தார். அதன் போது, விடுதலை புலிகளின் உண்மையான போராளிகள் போரிட்டு வீரச்சாவடைந்துள்ளனர். ஏனையோர் ” சைனட் ” கடித்து வீரசாவை தழுவிக்கொண்டனர் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போது ,

அது குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிவிக்கலாம். அது கட்சியின் கருத்தல்ல. தமிழரசு கட்சி என்றைக்கும் விடுலை புலிகளை எதிர்த்தது இல்லை என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2017/57124/

முழுமையாக கைக்கூலிகளின் கட்சியாக தமிழரசுக்கட்சி மாறிவருகிறது.

கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவதிலும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை வெல்ல வைப்பதிலும் தமிழரின் விரைவான நல்ல எதிர்காலம்  தங்கியுள்ளது.

ஜனநாயக போராளிகள் கட்சி மூலம் ஈழத்தமிழரை ஏமாற்ற இந்தியக் கயவர்கள் / தமிழினப் படுகொலைகாரர்கள் முயன்றார்கள் என்பது பலரும் அறிந்தது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.