Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார்

Featured Replies

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் 

 

 
 

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார்.

cv.jpg

வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய சூரி­யன்­சின்­னத்தில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்தில் போட்டியிடும் இ.கௌத­மனை ஆத­ரித்து  நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரி­வித்த அவர், 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்­டி­யிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மாகா­ண­சபை தேர்தல் நடை­பெற இருக்­கின்­றது. இதில் முத­ல­மைச்சர் ஒரு பக்­கமும் மாவை­சே­னா­தி­ராஜா இன்­னொ­ரு­பக்­க­மு­மாக போட்­டி­யி­டு­வார்கள். இதில் நிச்­ச­ய­மாக மாவை சேனா­தி­ராஜா வெல்­லப்­போ­வ­தில்லை. 

 மீண்டும் தற்­போ­தைய முத­ல­மைச்­சரே வெல்­லுவார். மாகா­ண­சபை தேர்­தலில் முத­ல­மைச்சர் தனித்து நிற்­கப்­போ­வதும் இல்லை. ஆனால் பொதுச்­சின்­னத்­திலோ சைக்கிள் சின்­னத்­திலோ போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை அவர் உதய சூரியன் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது. 

இதே­வேளை அர­சாங்­கத்­துடன் பேசி செய்­யக்­கூ­டிய சின்­னச்­சின்ன காரி­யத்தை கூட எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்து சம்­பந்தன் அவர்கள் செய்­ய­வில்லை. காணாமல் போனோர் விட­யம் அர­சியல் கைதிகள் விட­யம் கேப்­பா­பி­லவு காணி விடயம் உட்­பட மக்­களின் பல்­வேறு விட­யங்­களை அர­சுடன் கலந்­து­பேசி தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத எதிர்க்­கட்சி தலை­வ­ரா­கவே இவர் இருக்­கின்றார். ஆனால் தமக்கு தேவை­யான மாவட்ட அபி­வி­ருத்தி குழு பதவி வீடு வாசல் பங்­களா தமக்கு தேவை­யான சலு­கை­களை பெற்­றுக்­கொண்­டார்­களே தவிர தேர்­தலில் வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு உருப்­ப­டி­யாக ஒரு காரி­யமும் செய்­ய­வில்லை. எதிர்க்­கட்சி தலை­வ­ராக சம்­மந்தன் இருந்தால் கூட உண்­மை­யா­கவே அவர் எதிர்க்­கட்சி தலைவர் இல்லை. நாம் கண்ட அமிர்­த­லிங்கம் போன்ற ஒரு எதிர்க்­கட்சி தலை­வரை போன்று தமிழர் மத்­தியில் ஒரு எதிர்க்­கட்சி தலைவர் இல்லை. அமிர்­த­லிங்கம் அவர்கள் ஒரு நாட்­டிற்கு விஜயம் செய்தால் ஒரு நாட்டின் அதி­ப­ருக்கு கொடுக்­கப்­படும் மரி­யா­தைதான் அங்கு கொடுக்­கப்­பட்­டது. ஆனால் இன்­றைய எங்­க­ளது எதிர் கட்சி தலைவர் பத­வி­யா­னது ஜனா­தி­ப­தி­யினால் ஒரு சன்­மா­ன­மா­கவே வழங்­கப்­பட்­டது. 

இது மாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்­றத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களில் என்னை தவிர ஏனைய 15 பேருக்கும் 2 கோடி ரூபா பிர­தம மந்­தி­ரியின் அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக அபி­வி­ருத்தி திட்டம் என்ற பேரில் வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கை கேட்டு விட்டு இரண்டரை வருடங்களாக அற்ப சலுகைகளுக்காக பின்னால் நிற்கிறார்கள் கூட்டமைப்பினர் எனவே மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/28684

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ உங்களுக்கெல்லாம் என்ன நடந்துவிட்ட்டது? சட்டாம்பி வரப்போறார் பிரம்போட. தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது போல. வேஷம் ஒன்றொன்றாய் கலையுது 

9 hours ago, நவீனன் said:

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார்.

நப்பாசைகள் யாரைத்தான் சும்மாவிட்டது.
ஆனந்தசங்கரியுடன் பித்தலாட்டக்காரர்கள் தான் இணைந்து அரசியல் செய்ய முடியும்.

  • தொடங்கியவர்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் என் பெயரை இழுத்து பலர் நன்மைகளைப் பெற எத்தனிக்கின்றார்கள் – சிவி

viki.jpg?resize=278%2C181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது. எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் ஏற்கனவே எனது கருத்துக்களை வெளியிட்டு விட்டேன். ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய,தமது மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளேன். உள்ளூராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுகாறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்கி வந்துள்ளன. இதே போன்றுதான் முன்னர் அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து எமது கூட்டுறவு சங்கங்களை சின்னாபின்னமாக்கி வைத்தன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன். அத்துடன் அக்கொள்கையானது 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒத்தது என்றும் கூறியுள்ளேன். தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நான் மதிக்கின்றேன்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/2017/58128/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.