Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு!

Featured Replies

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு!

 

கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யுத்த காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல அமைப்புக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ததுடன், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்து போரடினர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்னர், இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் தனது தந்திரோபாயத்தின்மூலம் இவ்வமைப்புக்களை வளைத்துப்போட்டு வருகின்றது.

இவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரோபாயத் திட்டத்திற்கு கனடாவின் தமிழ் காங்கிரசும் பலியாகியுள்ளது.

இச்செய்தியினை தமிழ் காங்கிரஸ் நிராகரித்ததுடன், தமிழ் காங்கிரசினால்  கொண்டாடப்படும் நிகழ்வை ஆவணமாக்குவதற்கு ரூபவாகினி கூட்டுத்தாபனம் தம்மிடம் அனுமதி கோரியதாகவும் தாம் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ் காங்கிரஸ் அமைப்பு கூறிவருகின்றது.

ரூபவாகினி கூட்டுத் தாபனமானது சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம். இதில் பணியாற்றுபவர்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள்.

இவ்வாறிருக்கும் நிலையில், யுத்த காலப்பகுதியில் ரூபவாகினி உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு, மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

இவ்வாறான ஒரு நிறுவனமே, ஒருபுறம் மக்களுக்காக உதவுவதாகக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறுவதுடன், அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கும் விலைபோய் வருகின்றது.

http://inioru.com/விடுதலைப்-புலிகளால்-உருவ/

  • கருத்துக்கள உறவுகள்
 
 
'ரூபவாகினி' கனடா வருகைக்கு பலத்த எதிர்ப்பு! (ரொரன்ரோ,கனடா) 
[

சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான 'ரூபவாகினி' தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் மற்றும் மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைப்பு ஆகியன வன்மையாக எதிர்க்கின்றன. இவ்விடையம் குறித்து கடந்த 31.12.2017 அன்று ரொரன்ரோவில் ஊடச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இவ்வமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவிலயாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கை வருமாறு:

   

'பௌத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான 'ரூபவாகினி' தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் வன்மையாக எதிர்க்கின்றது. இவ்விடயத்தில் ஒட்டுமொத்த கனடா வாழ் தமிழர்களின் உணர்வு வெளிப்பாட்டினை தமிழ்த்தாய் மன்றம் எதிரொலித்து நிற்கிறது எனலாம்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்புக்குத் துணைநின்றது மட்டுமல்லாமல் அந்த இன அழிப்பினை பயங்கரவாதத்துக் எதிரான போராக சித்தரித்து, எம்மக்களின் இழப்பினை, வலிகளை மூடி மறைத்து, பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்குத் தூபமிட்டு, அதன் இனவாத அரசியலுக்குத்துணை நின்று உலகின் கண்களிலிருந்து உண்மைக்குற்றவாளிகளை மூடிமறைத்ததன் மூலம் ரூபவாகினி தொலைக்காட்சி தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த பங்காளியும் ஆகிறது. எனவே இத்தொலைக்காட்சிக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவது எமது கடமை ஆகிறது.

தமிழர் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் கடலெனத் திரண்ட மக்களால் மிகவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. காணாமல் போனார் உறவுகள் தொடர்ந்து சுழல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தியபடியே உள்ளார்கள். அரசியல் கைதிகள், காணி ஆக்கிரமிப்பு இவற்றுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்தபடியே உள்ளன. அந்நிகழ்வுகள் குறித்து மட்டும் கள்ள மௌனம் சாதித்தபடி இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கனடா வந்து பொங்கல் விழாவினைப் படம் பிடிப்பதானது இவர்களின் வருகைக்குப் பின்னால் இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் நிகழ்ச்சி நிரலினை புடம்போட்டுக் காட்டுகிறது.

தமிழ் - சிங்கள நல்லிணக்கம் எனும் போர்வையில் இதன் உள்ளே ஒளிந்திருக்கும் அரசியல் ஆதாயம் குறித்துக் கனடா வாழ் தமிழ் உறவுகள் விழிப்படைய வேண்டும். இத்தகைய அரசியலுக்குத் துணைபோவதென்பது ஒத்தோடித்தனம். இவ் ஒத்தோடித்தனம் கண்டிக்கப்படவேண்டியது. ரூபவாகினி தொலைக்காட்சி ஒரு ஊடகமாகவே தமது பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறது என்று முதலில் சொன்னவர்கள் சிறீலங்கா அரசால் முன்மொழியப்பட்ட சாசன வரைவின் வெற்றிக்கு சகல இன மக்களின் ஒத்துழைப்பும் தேவையாகையால் நாடு தழுவிய பரப்புரைகள் அவசியம் எனப்பட்டதன் உணர்வே இந்த ரூபவாகினி விடயம் என்று இன்று தாங்களாகவே ஒத்துக்கொண்டார்கள். இது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ள நிகழ்ச்சி நிரல்.

கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் கனடியத் தமிழர் பேரவை என்ற கனடியத் தமிழ் காங்கிரசு அமைப்பு சிங்கள அரச பயங்கரவாதத்தின் சதிவலையில் சிக்கிக்கொண்டதையே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்தியம்புகின்றன.

இதுவரை 400,000க்கும் அதிகமான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறுதிப்போரில் மட்டும் 90, 000 தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். இந்த அரச பயங்கரவாதச் செயல்களை எல்லாம் மூடிமறைத்து பொய்யான தகவல்களை உலகுக்கு வழங்கிய அரச ஊதுகுழலான ரூபவாகினியின் கையில் படிந்துள்ளது எம் இனத்தின் இரத்தக் கறை.

இன அழிப்பின் பங்குதாரர்களாகிய ரூபவாகினி தொலைக்காட்சியின் கனடா வருகையை எதிர்க்காவிடின் எமது மக்களை இனவழிப்புச் செய்த கொடுங்கோலரசின் கொடுமைகளை நாம் ஏற்றுக்கொண்டவர்களாகிறோம்

ஆகவே 146, 000 தமிழர்களின் இறப்பை சிங்கள தேசத்தின் வெற்றியாகக் கொண்டாடிய இனவாத ஊடகமான ரூபவாகினியின் வருகையானது இவ்வின அழிப்பினைச்செய்து கொண்டாடிய மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா போன்றவர்களின் வருகை போன்றதே.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்துக்குப் பலியான எமது அன்புக்கினிய மக்களுக்கான நீதிக்குக் குரல்கொடுப்போம்! தமிழீழ விடுதலைக்கு தமது விலைமதிப்பற்ற உயிர்களைக்கொடுத்த 60 000க்கும் மேற்பட்ட எம் மாவீரர்களின் உணர்வுகளுக்கு என்றும் உண்மையாக இருப்போம்! பௌத்த சிங்களப் பேரினவாத அடிவருடிகளின் கனவை தவிடுபொடியாக்குவோம்.' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Roopavahini-toronto-311217-seithy%20(1).
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.