Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவருக்கு பிடி ஆணை வழங்க வந்த போலீஸாருடன் தகராறு செய்த இலங்கை அகதி!

Featured Replies

கணவருக்கு பிடி ஆணை வழங்க வந்த போலீஸாருடன் தகராறு செய்த இலங்கை அகதி!

 
 

கணவருக்கு பிடிவாரண்ட் கொடுக்க வந்த போலீஸாருடன்  இலங்கைத் தமிழ் அகதி பெண் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் தயாபரராஜ். அவரது மனைவி உதயகலா. இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு  மே மாதம் 5-ம் தேதி தங்கள் குழந்தைகளுடன் அகதியாக தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர். தனுஷ்கோடி போலீஸார் இவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத் தண்டனைக்குப் பின் இவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.

 

srilanjka

தயாபரராஜ் இலங்கையில் இருந்த போது பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக இலங்கை சாகவச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இவர்கள் அகதிகளாக இந்தியா தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை சாகவச்சேரி நீதிமன்றம் தயாபரராஜுக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை போலீஸார் இந்தியத் தூதரகத்தின் மூலம் தமிழக போலீஸாருக்கு இந்த பிடி ஆணையினை அனுப்பியுள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட இந்த பிடி ஆணையுடன் போலீஸார் அகதி முகாமில் உள்ள தயாபரராஜ் வீட்டிற்கு சென்றுள்ளனர். தயாபரராஜ் அங்கு இல்லாத நிலையில் அவரது மனைவி உதயகலாவிடம் பிடி ஆணையினை போலீஸார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை வாங்க மறுத்த அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் பிடி ஆணையை ஒட்ட முயன்ற போலீஸாரிடமும், இதனை பதிவு செய்ய சென்ற தனியார் புகைப்படக்காரரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் அந்த பிடி ஆணையை போலீஸார் உதயகலாவின் வீட்டில் ஒட்டியுள்ளனர். போலீஸாருடன் பெண் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://www.vikatan.com/news/tamilnadu/112187-a-refugee-girl-who-disputes-with-the-police-who-gave-her-a-mandate.html

  • கருத்துக்கள உறவுகள்

சரி பிழைக்கு அப்பால் உதயகலாவின் துணிவிற்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.