Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் முழுவதும் சுற்றி இந்து கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் சுற்றி இந்து கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர்

fpn03me7.jpg

துாத்துக்குடி: உலகம் முழுவதும் சுற்றி இந்துக் கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் பலராமதாஸ் ஹெல்லர், திருச்செந்துõர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் யுதிஷ்டிரர் தாஸ். அவரது மனைவி பெயர் கமலாவதி தாசி. கடந்த 1965ம் ஆண்டு இஸ்கான் அமைப்பை தோற்றுவித்த சுவாமி பிரபு பாதாவின் ஆன்மிக உரையை அமெரிக்காவில் கேட்ட அவரும், மனைவியும் கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினர். பின்னர் அவர் அங்கு புதிய விருந்தாவன் பகுதியிலுள்ள கிருஷ்ணர் கோவில் கோசாலையில் பணிக்கு சேர்ந்தார். தனது மகன்கள், மகளுக்கு கிருஷ்ணர் சார்ந்த பெயர்களையே வைத்தார். யுதிஷ்டிரர் தாசின் மூன்றாவது மகன் பலராமதாஸ் ஹெல்லர்(28), சிறு வயது முதலே இந்த மதத்தில் அதிக பற்றுக் கொண்டு கீதை உள்ளிட்ட நுõல்களை வாசிக்க தொடங்கினார். போட்டோகிராபரான அவர், தனது 15 வயது முதல் உலகம் முழுவதும் சுற்றி வந்து இந்து சமயத்தை அறிவதோடு, கோவில்களின் அரிய படங்களை சேகரித்து கண்காட்சி நடத்தும் வழக்கம் உடையவர். ஏற்கனவே அவர் அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் அது போன்ற கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் தற்போது இந்து மதத்தின் வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், புகழ் பெற்ற கோவில்களை தரிசிப்பதற்காகவும், கடந்த ஜனவரி 20ம் தேதி டில்லி வந்தார். அதன்பின் பைக்கில் ஆக்ரா, புனே, பெங்களூர், குருவாயூர், கன்னியாகுமரிக்கு சென்று அங்குள்ள புகழ் வாய்ந்த கோவில்களை தரிசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். திருச்செந்துõர் வந்தார். கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்தார். அங்குள்ள சிற்பங்கள், கலையம்சங்கள், வரலாறுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதுபற்றி அவர் கூறும்போது, ""ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் தோன்றியபோது உள்ள கோட்பாடுகள் இந்தியாவில் தற்போதும் தொடர்கின்றன. இங்கு கடவுள் பக்தி அதிகம் உள்ளது. அமெரிக்காவில் ஜாதி, மத மோதல்கள் இல்லை. அதுபோன்ற நிலை இங்கு வரவேண்டும்,'' என்றார். ராமேஸ்வரம், புதுச்சேரி, சென்னை சென்று அங்குள்ள கோவில்களை தரிசித்து ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஜெர்மனி புறப்படுகிறார். பலராம தாஸ் ஹெல்லருடன், அவருடைய காதலி ஜெர்மனைச் சேர்ந்த நவோமி ஸ்டீன் கன்னியாகுமரி வரை வந்தார். தாயார் இறந்து விட்டதால் அவர் அவசரமாக ஜெர்மன் திரும்பி விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய,அமெரிக்க நாட்டுக்காரர்கள் அதாவது மேலைத்தேயவர்கள் எங்கள் கலாச்சாரம்,பண்பாடு என சிந்திக்க ஆரம்பிக்கும் போது எம்மவர்கள் மேலைத்தேயகலாச்சாரத்தை தங்கள் வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலைத்தேய கலாச்சாரம் எண்டு வீட்டுக்குள்ள சின்ன பார் (bar) ஒன்றையே வைத்திருக்கினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலைத்தேய கலாச்சாரம் எண்டு வீட்டுக்குள்ள சின்ன பார் (bar) ஒன்றையே வைத்திருக்கினம்

இதை நாங்கள் ஊரிலை வீட்டுக்கு பின்னாலை வைச்சிருந்தனாங்களாக்கும். ;)

நாங்கள் இத்தனை வருஷம் விரதங்கள் பிடித்தும் திருவிழாக்கள் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இவராவது ஏதும் புரட்சி செய்கிறாரா பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இத்தனை வருஷம் விரதங்கள் பிடித்தும் திருவிழாக்கள் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இவராவது ஏதும் புரட்சி செய்கிறாரா பார்க்கலாம்.

லீசா ஆண்ரி

விரதம் பிடிக்கின்றபோதும், திருவிழா செய்யும்போதும், எப்படா முடியும், ஆடு அடிச்சு விழுங்க வேணும் என்ற நினைப்பில் செய்கின்ற கூத்துக்குப் பேர் பக்தியா? உங்களுக்கு ஒழுங்கா நடக்கத்தெரியா, கடவுளில் பிழை பிடிக்கின்றியள்.

ம் ம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத்தேய கலாச்சாரம் எண்டு வீட்டுக்குள்ள சின்ன பார் (bar) ஒன்றையே வைத்திருக்கினம்

வீட்டை சின்ன(வீடு) வைக்காமல் இருந்தா சரி தானே

:huh::rolleyes:

இதை நாங்கள் ஊரிலை வீட்டுக்கு பின்னாலை வைச்சிருந்தனாங்களாக்கும். ;)

ஆமா வீட்டுக்குள்ளேயே கள்ளு கொட்டகை போட்ட ஆக்காலாச்சே அததன் இப்போ மொடன் ஸ்டைல மினி கோம் பார் என்டு சொல்லுறங்க :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம்.

என்ன மெளனவிரதமா

:huh:

இதை நாங்கள் ஊரிலை வீட்டுக்கு பின்னாலை வைச்சிருந்தனாங்களாக்கும். ;)

வீட்டுக்கு பின்னாலே கழிவிடம்தானே இருக்கும் அது தான் தங்களின்ட பாரோ

:P

நாங்கள் இத்தனை வருஷம் விரதங்கள் பிடித்தும் திருவிழாக்கள் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இவராவது ஏதும் புரட்சி செய்கிறாரா பார்க்கலாம்.

திருவிழா இன்று வந்தா அப்ப தான் அவா கோயிலுக்கு வருவா

;)

வீட்டை சின்ன(வீடு) வைக்காமல் இருந்தா சரி தானே

:huh::rolleyes:

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு பின்னாலே கழிவிடம்தானே இருக்கும் அது தான் தங்களின்ட பாரோ

:rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.. ஆன்மிக உரை என்ற பெயரிலே ஒரு வெள்ளைக்காரனை கெடுத்துப்போட்டாங்களே..! கணனி தொழில்நுட்பம் என்று வாழ்கிற ஒரு வெள்ளைக்காரன் இப்படி இருக்கிறானே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.