Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

928 கிலோ கொக்கைன் சிக்கிய, அழிந்ந கதை

Featured Replies

928 கிலோ கொக்கைன் சிக்கிய, அழிந்ந கதை

 

போதைப் பொருள். இன்று நாட்­டுக்கு மிகவும் அச்­சு­றுத்­த­லாக மாறி வரு­கின்ற ஒரு சாபம். இந்த போதைப் பொருளை முற்­றாக நாட்டில் இருந்து ஒழிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பங்­க­ளிப்­புடன் அர­சாங்கம் பல்­வேறு திட்­டங்­களை அமுல் படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போதைப் பொருள் கடத்தல்காரர்­களும் தமது திட்­டங்­களை மாற்றி வரு­கின்­றனர்.

 இந் நிலையில் அவற்றை முறி­ய­டித்து, போதைப் பொரு­ளினை கைப்­பற்றும் பொலிஸார் அவ்­வாறு கைப்­பற்­றப்­படும் போதைப் பொருட்­க­ளுக்கு என்ன நடக்­கின்­றது என தொடர்ச்­சி­யாக மக்கள் எழுப்பி வந்த கேள்­விக்கு, இது தான் இறு­தியில் நடக்கும் என செயல் ரீதி­யாக பதி­ல­ளித்­தனர்.

 ஆம், 2016 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்ட 928 கிலோ 229 கிராம் கொக்கைன் போதைப் பொரு­ளினை பொது மக்கள் பார்­வை­யிடும் வண்ணம் அழித்து ஒழித்­தமை ஊடாக அவர்கள் பதி­ல­ளித்­துள்­ளனர். ஆசி­யா­வி­லேயே கைப்­பற்­றப்­பட்ட அதி கூடிய நிறை­கொண்ட இந்த கொக்கைன் போதைப் பொரு­ளினை அழிக்கும் நிகழ்­வ­ானது ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட பிர­மு­கர்­களின் முன்­னி­லையில் இடம்­பெற்­றது.

 இந்த கொக்கைன் தொகை அழிக்­கப்­பட்­டமை தொடர்பில் அறிய முன்னர், ஆசி­யாவின் அதி­கூ­டிய கொக்கைன் கைப்­பற்­றப்­பட்ட நட­வ­டிக்­கையை கொஞ்சம் ஞாபகம் செய்­யலாம்.

2016.டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அப்­போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய குற்­ற­வியல் மற்றும் போக்கு வரத்து விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வா­வுக்கு தகவல் ஒன்று கிடைத்­தி­ருந்­தது. அந்த தக­வலை மையப்­ப­டுத்தி பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் லுட வைட்டின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் பிர­போத தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் விசா­ரணை செய்து நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர்.

ஈக்­வ­டோடில் இருந்து பெல்­ஜியம், சவூதி அரே­பியா ஊடாக இலங்­கையின் கொழும்பு துறை­மு­கத்­துக்கு பெபி­யூலா எனும் கப்பல் வந்­தி­ருந்­தது. சுமார் 600 இற்கும் அதி­க­மான கொள்­க­லன்­களை அந்த கப்பல் தாங்கி வந்­தி­ருந்­தது. 2016 ஒக்­டோபர் 12 ஆம் திகதி ஈக்­வ­டோரில் இருந்து பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருந்த அந்த கப்பல், 2016 டிசம்பர் 9 ஆம் திகதி இந்­தி­யாவின் மொன்ரோ துறை முகத்தை நோக்கி கொழும்பு துறை­மு­கத்தில் இருந்து பய­ணிக்க ஆரம்­பித்­தது. இதன்­போதே அந்த கப்­பலில் கொக்கைன் இருப்­பது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் உறுதி செய்த நிலையில், உட­ன­டி­யாக கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு அறிக்கை தாக்கல் செய்து சுற்றி வளைப்­புக்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்­டனர். இத­னை­ய­டுத்து கடற்­ப­டை­யினர் மற்றும் சுங்கப் பிரி­வி­னரின் உத­வி­யுடன் இந்­தியா நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த அந்த கப்­பலை மீளவும் கொழும்பு துறை முகத்­துக்கு இழுத்து வந்து, சி.ஐ.சி.டி இறங்கு துறையில் அதனை நக்­கூ­ர­மிட்டு சோதனை நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின. இதன்­போது, அந்த கப்­பலில் பார­திம்ப எனும் இந்­திய நிறு­வ­னத்தின் முக­வ­ரிக்கு இறக்­கு­மதி செய்ய கோரப்பட்­டி­ருந்த கொள்­கலன் ஒன்றில் தேக்கு குற்­றி­க­ளுக்கு இடையே சூட்­சு­ம­மாக மறைத்து வைக்­கப்பட்­டி­ருந்த கொக்கைன் போதைப் பொரு­ளினை போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் கைப்­பற்­றினர்.

 இந் நிலை­யி­லேயே அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் கடந்த ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக தொடர்ந்­தன.

இந்த விசா­ர­ணை­களில், குறித்த கொக்கைன் போதைப் பொரு­ளா­னது இலங்­கைக்கு கொண்டு வரப்­ப­ட­வில்லை என்­பதும் அது இந்­தி­யாவை நோக்­கியே கொண்டு செல்­லப்­பட்­டது என்­ப­தையும் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் தமது விசா­ர­ணை­களில் உறுதி செய்­தனர். போதைப் பொரு­ளினை பொலிஸார் மீட்ட போது அந்த கப்­பலில் இருந்­த­வர்­களின் வாக்கு மூலம் பதிவு செய்­யப்பட்ட நிலையில், கப்பல் சட்­டத்தின் பிர­காரம் கொள்­கலனில் இருக்கும் பொருட்­க­ளுக்கு குறித்த கப்பல் நிறு­வனம் பொறுப்­பேற்­காது என்­பதை அடிப்­ப­டை­யாக கொண்டு அவர்கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து குறித்த போதைப் பொருள் தொடர்பில் சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்ப­டாத நிலையில், தற்­போ­தைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் தன­பால ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அந்த போதைப் பொரு­ளினை அழிப்­பது குறித்து சட்ட மா அதி­ப­ருடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. குறிப்­பாக விசா­ரணை அறிக்­கையை ஆராய்ந்த சட்ட மா அதிபர் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரின் விண்­ணப்பம் பிர­காரம் அவற்றை அழிப்­பது உசி­த­மா­னது என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்தார்.

 அதன்­படி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் தன­பால ஆகி­யோரின் வழி நடத்­தலில் விஷ போதைப் பொருள், அபின் மற்றும் அபா­ய­க­ர­மான ஒள­த­டங்கள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் நீதி­மன்­றிடம் இருந்து அழிப்­புக்­கான உத்­தரவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி லுட வைட் குழு­வினர் கோரினர். அந்த கோரிக்­கைக்கு கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார அனு­ம­தி­ய­ளித்தார்.

 அதன்­ப­டியே இத்­தனை பாரிய தொகை போதைப் பொரு­ளினை எப்­படி அழிப்­பது என்ற கேள்வி எழுந்­தது. இது தொடர்பில் அரச இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­கள அதி­கா­ரிகள், சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் கொழும்பு மாந­கர சபையின் பொது சுகா­தார பரி­சோ­த­கர்கள், போதைப் பொருள் ­த­டுப்புப் பிரிவின் உயர் அதி­கா­ரிகள் என அனை­வரும் ஒன்­றி­னைந்து கலந்­து­ரை­ய­டல்­களை ஆரம்­பித்­தனர்.

 இதன்­போது கொழும்பு மாந­கர சபையின் பிர­தான வைத்­திய அதி­காரி ருவன் விஜே­முனி, இந்த கொக்கைன் தொகையை 1300 செல்­சியஸ் வெப்­பத்தில் அழிக்க முடியும் எனும் வாதத்தை முன்­வைத்­தி­ருந்தார்.

 இந் நிலை­யி­லேயே சூழ­லுக்கு பாதிப்­பின்றி அந்த கொக்கைன் தொகையை அழிக்க ஆரா­யப்­பட்­டது. இது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் அத்தகைய உய­ரிய வெப்­ப­நிலை கொண்ட உலை உள்ள நிறு­வனம் எது என தேடப்­பட்ட போதே, கழிவுப் பொருள் முகா­மைத்­துவம் தொடர்பில் பெயர் பெற்ற இன்சி இகோ­சைக்கிள் நிறு­வ­னத்தின் உதவி இதற்­காக பெறப்­பட்­டி­ருந்­தது.

அதன்­ப­டியே இந்த கொக்கைன் தொகையை அழிக்க கடந்த திங்­க­ளன்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களை பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­க­ரவின் கீழ் ஊடகப் பிரிவின் அதி­கா­ரிகள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். கட்­டு­நா­யக்க மற்றும் புத்­தளம் ஆகிய இரு நக­ரங்­களில் இரு வேறு இடங்­களில் இந்த கொக்கைன் போதைப் பொருள் அழிப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற நிலையில், இதற்­கான முழு­மை­யான ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களை அவர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

 

 பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் ருவன் குண­சே­க­ரவின் தக­வல்­களின் படி, இந்த கொக்கைன் போதைப் பொருள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் எந்த சந்­தேக நபரும் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. அத்­துடன் இந்த கொக்­கைனும் இந்­தி­யாவை நோக்கி எடுத்துச் செல்­லப்ப்ட்­டது. எனவே அதனை இனி­மேலும் வைத்­தி­ருப்­பதில் பய­னில்லை. அதன்­ப­டியே 16 பில்­லியன் ரூபா பெறு­மதி மிக்க இந்த கொக்கைன் போதைப் பொரு­ளினை அழிக்க சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்பட்டுள்­ளது.

 

அதன்­படி, குறித்த கொக்கைன் தொகை முதலில் இன்சே இகோ­சைக்கிள் நிறு­வ­னத்தின் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை அண்­மித்த கைத்­தொழில் வல­யத்தில் உள்ள கழிவுப் பொருள் முகாமை செய்­யப்படும் இடத்­துக்கு கொண்டு செல்­லப்பட்­டி­ருந்­தது. அங்கு ஜனாதிபதி , பிர­தமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்ட பிர­மு­கர்கள் முன்­னி­லையில், அந்த கொக்கைன் தொகை­யா­னது திண்­மத்தில் இருந்து திர­வ­மாக மாற்­றப்­பட்­டது.

 அதா­வது 30 மூடை­களில் கட்டி திண்­ம­மாக இருந்த அந்த கொக்கைன், முதலில் உறுதி செய்­ய இரசாயன சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொக்கைன் என உறுதி செய்­யப்பட்டதன் பின்னர் மீளவும் நிறுக்­கப்பட்டு அதன் அளவு உறுதி செய்­யப்பட்­டது. இவை­ய­னைத்தும் கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லை­யி­லேயே இடம்­பெற்­றன.

 இந் நிலையில் இவ்­வாறு உறுதி செய்­யப்­பட்ட கொக்கைன் பின்னர் அங்கு நீர் நிரப்பி வைக்­கப்பட்டி­ருந்த நான்கு பாரிய கொள்­க­லன்­க­ளுக்குள் இடப்­பட்­டது. நீருடன் சேர்ந்து குறித்த கொக்கைன் கரைந்து கொக்கைன் ஹைட்ரோ குளோ­ரைட்­டாக மாற்­றப்­பட்­டது.

பின்னர் அந்த நான்கு கொள்­க­லன்­க­ளுக்­குள்ளும் அடை­யாளம் காணத்­தக்­க­தாக ஒவ்­வொரு நிறப் பூச்­சுக்கள் இடப்­பட்­டன.

இந் நிலையில் இன்சி இகோ­சைக்கிள் நிறு­வ­னத்தின் ஜீ.பி.எஸ். தொழில் நுட்­பத்­துடன் கூடிய லொறியில் அந்த கொக்கைன் ஹைட்­ரோ­கு­ளோரைட் அடங்­கிய கொள்­க­லன்கள் புத்­த­ளத்தில் உள்ள அவர்­க­ளது சீமெந்து உற்­பத்தி நிலை­யத்­துக்கு பலத்த பாது­க­ாப­்புடன் கொண்டு செல்­லப்பட்டது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர், பொலிஸ் பாது­காப்­புடன் இவ்­வாறு அந்த கொக்கைன் ஹைட்­ரோ­கு­ளோரைட் புத்­த­ளத்­துக்கு கொண்டு செல்­லப்பட்­டது.

 குறித்த சீமெந்து உற்­பத்தி நிலை­யத்தில் 2000 - முதல் 3000 செல்­சியஸ் வெப்ப நிலை கொண்ட உலைகள் உள்ள நிலை­யி­லேயே, குறித்த கொக்கைன் ஹைட்ரோ குளோரைட் அங்கு கொண்டு செல்­லப்­பட்­டது. அங்கு வைத்து அது வெப்­ப­மாக்­கப்­பட்டு ஆவி­யாக்கி அழிக்­கப்­பட்­டது.

இலங்­கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெரு­ம­ள­வான கொக்கைன் போதைப் பொருள் கைப்­பற்றப்­பட்­ட­துடன் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த 2016 ஜூன் 14 ஆம் திகதி 91.300 கிலோ கொக்­கைனும், 2016 ஜூலை 21 ஆம் திகதி 274 கிலோ கொக்­கைனும் 2016 ஜூலை 24 ஆம் திகதி 219.975 கிலோ கொக்­கைனும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு நாட­ளா­விய ரீதியில் மொத்­த­மாக 1486 கிலோ 303 கிராம் கொக்கைன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இத­னை­விட ஹெரோயின் போதைப் பொருள் 147 கிலோ 739 கிராம் 636 மில்லி கிராமும், கஞ்ஞா 108 கிலோ 329 கிராம் 630 மில்லி கிராமும் ஹஷீஸ் 4 கிலோ 695 கிராம் 766 மில்லி கிராமும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இவை தொடர்பில் 264 பேர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­தி­ருந்­தனர். இதில் கொக்கைன் தொடர்பில் கைது செய்­யப்ப்ட்­ட­வர்கள் அறுவர் மட்­டுமே. ஏனையோர் ஹெரோயின் தொடர்பில் 224 பேரும் கஞ்சா தொடர்பில் 24 பேரும் ஹஷீஸ் தொடர்பில் 10 பேரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்பட்­டி­ருந்­தனர். இத­னை­விட அந்த ஆண்டில் மட்டும் 83 வெளி நாட்­ட­வர்கள் போதைப் பொருள் குற்­றச்­சாட்டு தொடர்பில் பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்ட­தாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை 2017 ஆம் ஆண்­டினை பொறுத்­த­வரை, 81627 பேர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்பட்­ட­தா­கவும் இதில் 36 பேர் வெளி நாட்­ட­வர்கள் எனவும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தன­பால தெரி­விக்­கின்றார். அந்த ஆண்டில் மட்டும் 50 கோடி ரூபா வரையிலான பெறுமதி மிக்க போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹெரோயின் 332 கிலோ 518 கிராம் 500 மில்லி கிராமுடன் 29690 சந்தேக நபர்களும், கஞ்சா 4993 கிலோ 500 கிராமுடன் 51873 சந்தேக நபர்களும் கொக்கைன் 220 கிலோ 697 கிராமுடன் 29 சந்தேக நபர்களும் ஹஷீஸ் 38 கிலோவுடன் 35 சந்தேக நபர்களும் அந்த ஆண்டில் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 இந் நிலையில் இலங்கை போதைப் பொருள் மத்திய நிலையமாக மாற்ற கடத்தல் காரர்கள் எடுத்துள்ள முயற்சியை முறியடிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

 அமெரிக்கா, இன்டபோல் ஆகியவற்றுடனும் ஐ.நா..வின் போதைப் பொருள் தடுப்பு மையத்துடனும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே நாளைய இலங்கையை போதைப் பொருள் அற்ற இலங்கையாக காண நாமும் கைகோர்ப்போம்.  

http://epaper.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:

எனவே நாளைய இலங்கையை போதைப் பொருள் அற்ற இலங்கையாக காண நாமும் கைகோர்ப்போம்.  

:unsure:

  • தொடங்கியவர்

சும்மா முழுச கூடாது..:rolleyes: ஏதாவது  எழுதவேணும்.

யாழ் கள விதி இது. நீங்கள் சுழியன் அல்லோ ஏதாவது விடுங்கோ..:grin:

9 minutes ago, putthan said:

:unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

சும்மா முழுச கூடாது..:rolleyes: ஏதாவது  எழுதவேணும்.

யாழ் கள விதி இது. நீங்கள் சுழியன் அல்லோ ஏதாவது விடுங்கோ..:grin:

 

விதியை மீறக்கூடாது தான்.....

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவை நீதிபதிக்கு முன்னாள்  எரிச்சவையள்,ஆனால் உதுக்கு ஏன் பெரிய எடுப்புஎடுக்கினம் என்று முழுசினன்...tw_blush:

  • தொடங்கியவர்

அது கஞ்சா.. இது கொக்கைன்..

இதை ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் அழித்தவர்கள் போனவாரம்.

3 minutes ago, putthan said:

விதியை மீறக்கூடாது தான்.....

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவை நீதிபதிக்கு முன்னாள்  எரிச்சவையள்,ஆனால் உதுக்கு ஏன் பெரிய எடுப்புஎடுக்கினம் என்று முழுசினன்...tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.