Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..!” - அரசியல் பேசும் உதயநிதி

Featured Replies

“நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..!” - அரசியல் பேசும் உதயநிதி #VikatanExclusive

 
 

காதல், நகைச்சுவை படங்கள் எனத் தனக்கென்று ரசிகர்களைத் தக்கவைத்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள 'நிமிர்' படத்தின் அனுபவங்கள் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் சில கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம்.

நிமிர்’ படம் எப்படி நடந்தது?

 

“ப்ரியதர்ஷன் சார் எனக்கு நல்லா பழக்கம். 'இப்படை வெல்லும்' ஷூட்டிங்கில் இருந்தப்போ ஒரு நாள் போன் செய்தார்.' 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தை ரீமேக் செய்யலாம்னு இருக்கேன் நீ நடிக்கணும்’னு சொன்னார். நீங்க டைரக்ட் செய்றீங்கன்னா எந்தப் படமா இருந்தாலும் நடிக்கிறேன் என்றேன். மூணு கண்டிஷன் போட்டாங்க. ஷேவ் பண்ணணும், 20 நாள் செருப்பு போடாம நடிக்கணும், காலைல 5 மணிக்கு முதல் ஷாட் எடுப்பேன். ‘இதுக்கு ஓகேன்னா படம் பண்ணலாம்னு சொன்னாங்க.’ நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் சார்னு சொல்லிட்டேன்.”

நிமிர்

‘நிமிர்’ படத்தில் உங்களுடன் நடித்த சக நடிகர்கள் பற்றி?

“ப்ரியன் சார் எது தேவையோ அதை மட்டும்தான் எடுப்பார். அதனால் பெரிய காம்பினேஷன் ஷாட்ஸ் எங்களுக்குள் இல்லை. செட்ல இருந்ததில் நானும் கருணாகரனும்தான் ஜூனியர்ஸ். எங்களுக்குள் மட்டும்தான் அதிக டேக் யார் வாங்குறா, சீக்கிரமாக யார் முடிக்கிறதுங்கிற போட்டி இருந்துச்சு. எனக்கு அப்பாவா மகேந்திரன் சார் நடிச்சிருக்காங்க. அவருக்கு படத்துல நிறைய வசனங்கள் இல்லை. அவர் வந்து நின்னு பார்ப்பார், அப்படியே கண்ணுலயே பேசிட்டுப் போற மாதிரி ஒரு கதாபாத்திரம்.

ப்ரியன் சாரே, ‘பாஸ்கர் போன டேக்கே ஓகே பண்ணிட்டேன். நான் இதை யூஸ் பண்ணமாட்டேன்’னு சொன்னாலும் கேட்காமல் எம்.எஸ். பாஸ்கர் அண்ணன் நடிச்சிகிட்டே இருப்பார். முக்கியமான கதாபாத்திரத்துல சமுத்திரக்கனி நடிச்சிருக்கார். நமிதா பிரமோத் இந்தப் படம் மூலமா தமிழ்ல அறிமுகமாகுறாங்க. அவங்க நடிப்பை நான் திரைலதான் பார்த்தேன், நல்லா நடிச்சிருக்காங்க. கண்டிப்பா தமிழ்ல பெரிய நிலைக்கு வருவாங்க. பார்வதி நாயர் அவங்களுக்கும் படத்துல நல்ல கதாபாத்திரம். எங்க எல்லாருக்குமே ப்ரியன் சாருன்னு ஒரு கனெக்ட்டிங் பாயின்ட் இருந்துச்சு. எங்க எல்லாருகிட்ட இருந்தும் வேலை வாங்குனது அவரோட ஜீனியஸ் லெவல்தான்.’’

சமுத்திரக்கனி | உத்யனிதி | மகேந்திரன்

ப்ரியதர்ஷன், மகேந்திரன், சமுத்திரக்கனினு மூன்று இயக்குநர்கள் கூட இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறீர்கள். உங்க வீட்டு இயக்குநர் கிருத்திகா என்ன சொன்னாங்க?

“படத்தோட எல்லா வேலைகளும் முடித்து முதல் முறையாக அவங்க கூடத்தான் படம் பார்த்தேன். படம் முதல் பாதி முடிவதற்கு முன்னாடியே ப்ரியன் சார பார்த்து, "உதய் என் பக்கத்துல உட்கார்ந்து இருக்கார் சார். ஆனா எனக்கு திரையில தெரியுற செல்வம் கதாபாத்திரம் ரொம்ப எதார்த்தமா இருந்துச்சு சார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு"னு சொன்னாங்க. படம் முழுசா பார்த்துட்டு, ‘மனிதனுக்கு அப்புறமா காலர தூக்கிவிட்டுக்குற மாதிரி ஒரு படம் பண்ணிருக்க’னு சொன்னாங்க.’’

எப்போது உங்கள் மனைவி கிருத்திகா இயக்கத்தில் படம் நடிக்கப்போகிறீர்கள்?

“அவங்க 'காளி' பட பிஸில இருக்காங்க. கண்டிப்பா இந்தப் படத்தை முடிச்சவுடனே ரெண்டு மாதம் இடைவெளி எடுப்பாங்கன்னு நினைக்கிறேன். அதுக்குப் பிறகு, கதை எழுதி, அது எனக்குப் பிடிக்கணும், பட்ஜெட்டுகுள்ள இருக்கணும். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு.’’

படத்தை வேறு யாரெல்லம் பார்த்தார்கள். அப்பா படம் பார்த்தாரா?

“மோகன்லால் சார் படம் பார்த்தார். படத்தைப் பார்த்துட்டு படம் சம்பந்தமா நிறைய பேசினார். இது என்னோட கரியர்ல நல்ல படமா இருக்கும்னு வாழ்த்தினார். சீனு ராமசாமி சார் படம் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமாகிட்டார். "நான் உங்களுக்காக யோசிச்சு வச்சதெல்லாம் இந்தப் படத்துல நடிச்சுட்டீங்களே. நான் வேறதான் யோசிக்கணும்"னு சீனு சார் சொன்னார். அப்பா படத்தைப் பார்த்துட்டு, "ரொம்ப அழகான ஒரு படம் பண்ணியிருக்கீங்க’னு பாராட்டினார். மகேந்திரன் சார் போன் பண்ணி ரொம்ப நேரமாகப் பேசினார்.’’

கலைஞர் எப்படி இருக்கார்.  தாத்தாவை சமீபத்தில் பார்த்தீர்களா? 

“உடல்நலம் ரொம்ப தேறியிருக்கு. பேச முடியவில்லை. ஆனால், எல்லாரையும் அடையாளம் காண்கிறார். பொங்கல் அன்று வாழ்த்து வாங்கினோம். என் தங்கச்சிபோய் பேசும்போது சிரிச்சாங்க. என்னதான் உடம்பு தேறியிருந்தாலும். அந்த வயசுக்கு உண்டான சோர்வு இருக்கத்தான் செய்கிறது. அறிவாலயத்துக்கு வந்துள்ளார், முரசொலி பவள விழா கண்காட்சிக்கு வந்திருக்கிறார். விரைவில் திரும்ப வருவாங்கனு நம்பிக்கை இருக்கு.’’

உதயநிதி

சமீப காலமாகப் பெரிய ஹீரோ படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டீர்களே?

“ஆமாம். எல்லாரும் அதைவிட பெரிய ஹீரோ ஆகிட்டாங்க. எல்லாருடனும் படம் பண்ணணும்னு ஆசைதான். அஜித் சார்கிட்டகூட மூணு வருஷத்துக்கு முன்னாடி கால்ஷீட் கேட்டேன், சொல்றேன்னு சொன்னாங்க. நான் மட்டும் ஆசைப்பட்டா போதாது அவங்களும் ஒப்புக்கணும். இன்றைய காலகட்டத்துல படம் தயாரிப்பது ஈஸியான ஒன்று. அதை வெளியிடுவது மிகக் கடினமான விஷயமா ஆகிடுச்சு. எனது படங்களைத் தயாரிப்பதிலேயே எனக்கு நேரம் சரியாக இருக்கு.’’

எல்லாத் தயாரிப்பாளர்களும் படத்தை எடுப்பது சுலபம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருக்கிறது என்கிறீர்களே. இதன் பின்னணி என்ன?

“ஜி.எஸ்.டி, டிக்கெட் விலையேற்றம் ஆகியவை வந்த பிறகு, படம் நல்லா இருந்தா மட்டும்தான் மக்கள்,  தியேட்டருக்குள் வர்றாங்க. படங்கள் எண்ணிக்கையும் அதிமாக இருக்கிறது. வாரத்துக்கு நான்கு, ஐந்து படங்கள் வருகின்றன. தயாரிக்கப்படுகிற படங்களின் எண்ணிக்கையையும் குறைக்கணும். டெக்னீஷியன்ஸ், நடிகர்களும் அவங்க சம்பளத்தைக் கணிசமா குறைச்சுக்கிட்டா தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். இவையனைத்தையும் தாண்டி பைரசி, இதை ஒழிக்க தமிழக அரசுதான் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்துல மட்டும்தான் படம் ரிலீஸான அன்றே பைரசி வெளியாகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள். சினிமாக்காரராய் ரஜினி, கமல், விஷால் இவர்களில் உங்கள் ஆதரவு யாருக்கு?

“அது அவரவர் விருப்பம். இதுல கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் வரட்டும். அவங்களோட கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளணும். நான் சினிமாக்காரன் என்பதைவிட ஓர் அடிப்படை தி.மு.க உறுப்பினர் . பிறந்ததிலிருந்தே நான் தி.மு.க-காரன்தான். தி.மு.க ரத்தம்தான் என் உடம்பில் ஓடுகிறது. எங்களிடம் வந்து யாரும் ஆதரவு கேட்கவில்லை. ஒரு தி.மு.க உறுப்பினராய் நான் இவர்களது அரசியல் முடிவை வரவேற்கிறேன்.''

உதயநிதி

தமிழகத்துல பாரதிய ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறதா. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க மேற்கொள்ளும் வழிமுறைகள் சரியானதாகத் தெரிகிறதா. தி.மு.க அதை எப்படி சமாளிக்க இருக்கிறது?

“பாரதிய ஜனதா கட்சி தமிழகத்துக்குள்ள  எப்படியாவது வந்துவிட வேண்டும்னு பார்க்கிறார்கள். நோட்டாவைவிட கம்மியாக ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும். சமாளிக்கிற அளவுக்கு அவங்க பெரிய ஆளுங்க இல்ல. முதலில் பா.ஜ.க நோட்டவைவிட அதிகமாக ஓட்டு வாங்கட்டும். பிறகு பார்க்கலாம். இந்த (தமிழக) அரசாங்கத்தையே அவங்கதான் நடத்துறாங்க. இது வெறும் கைப்பொம்மை அரசுதான். ஆளுநர் ஏதோ ஆய்வுக்குப் போகிறார் என்கிறார்கள். இதெல்லாம் ஆளுநர் செய்யுற வேலையா. இதுக்கு முன்னாடி நடக்காத விஷயங்களெல்லாம் நடக்குது. ஒரு மந்திரி 'மக்கள் ஆளுநர்'னு சொல்றார். மக்களா அவரைத் தேர்ந்தெடுத்தாங்க. அப்புறம் எதுக்கு மக்கள் பிரதிநிதியாக இவங்களெல்லாம்  இருக்காங்க. நிச்சயமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரைக்கும். இந்த மாதிரி கொல்லைப்புறம் வழியா ஆட்சியைப் பிடிக்கிற மதவாத சக்திகள் இங்கே வேரூன்றுவது கண்டிப்பாக நடக்காது.’’      

அடுத்த என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க?

 

“சீனுராமசாமி சார் இயக்குற 'கண்ணே கலைமானே' படத்துல நடிக்கிறேன். தமன்னா ஹீரோயின், யுவன் ஷங்கர் ராஜா இசை .ஒரு இயல்பான யதார்த்தமான படம்.  இயக்குநர் மித்ரனுடன் ஒரு படமும், அட்லீயின் உதவி இயக்குநர் ஈனோக் என்பவருடன் ஒரு படம் என அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கு.’’

https://cinema.vikatan.com/tamil-cinema/news/114219-udhayanidhi-speaks-about-recent-political-situation-in-tamilnadu.html

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்துக்குள்ள  எப்படியாவது வந்துவிட வேண்டும்னு பார்க்கிறார்கள். நோட்டாவைவிட கம்மியாக ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும். சமாளிக்கிற அளவுக்கு அவங்க பெரிய ஆளுங்க இல்ல. முதலில் பா.ஜ.க நோட்டவைவிட அதிகமாக ஓட்டு வாங்கட்டும். பிறகு பார்க்கலாம். இந்த (தமிழக) அரசாங்கத்தையே அவங்கதான் நடத்துறாங்க. இது வெறும் கைப்பொம்மை அரசுதான். ஆளுநர் ஏதோ ஆய்வுக்குப் போகிறார் என்கிறார்கள். இதெல்லாம் ஆளுநர் செய்யுற வேலையா. இதுக்கு முன்னாடி நடக்காத விஷயங்களெல்லாம் நடக்குது. ஒரு மந்திரி 'மக்கள் ஆளுநர்'னு சொல்றார். மக்களா அவரைத் தேர்ந்தெடுத்தாங்க. அப்புறம் எதுக்கு மக்கள் பிரதிநிதியாக இவங்களெல்லாம்  இருக்காங்க. நிச்சயமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரைக்கும். இந்த மாதிரி கொல்லைப்புறம் வழியா ஆட்சியைப் பிடிக்கிற மதவாத சக்திகள் இங்கே வேரூன்றுவது கண்டிப்பாக நடக்காது.’’      

தமிழ்நாட்டை ஊழல் செய்யும் முதல் மாநிலமாய் மாற்றியதில் உங்கள் தாத்தா தான் தொடக்கி வைத்தவர் இப்பவும் உங்கள் கையில் புழங்கும் பணம் நேர்மையாக வந்ததா இல்லையே தமிழனின் இரத்தத்தை உறிஞ்சி குடித்த ஊழல் பணம் திராவிடம் என்று சொல்லி பச்சை தமிழனை அடிமையாக்கின வாய் மாலம் மெல்ல மெல்ல இல்லாமல் போகும் உங்களின் அடுத்தபடம் எப்பங்க ரிலிஸ் தமிழ் ராக்கர்ஸ் வாழ்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.