Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்­கள் அத்­தனை பேரும் உத்­த­மர்­தானா சொல்­லுங்­கள்!!

Featured Replies

  •  
  • நீங்­கள் அத்­தனை பேரும் உத்­த­மர்­தானா சொல்­லுங்­கள்!!
141206164716_suresh_premachandran_eprlf_

நீங்­கள் அத்­தனை பேரும் உத்­த­மர்­தானா சொல்­லுங்­கள்!!

 

 

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் வாக்­க­ளிப்பு நாள் நெருங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றது. தென்­ப­குதி, அர­சி­யல், கொதி நிலை­யின் உச்­சத்­தில் போய்க் கொண்­டி­ருக்­கின்­றது. வடக்கு அத்­த­கைய கொதி­நி­லை­யில் இல்­லா­வி­டி­னும் கொதி­நிலை நோக்கி கொஞ்­சம் கொஞ்­ச­மாக நக­ரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. தேர்­தல் என்று வந்­தாலே ஒரு­வர் மீது ஒரு­வர் சேறை வாரி­யி­றைப்­பது எம்­மி­டையே ஊறிப்­போன ஒரு பழக்­கம். அப்­படி நடக்கா விட்­டால் அது தேர்­தலே அல்ல என்­பது எழு­தாத விதி.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்­காக உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­குக் கேட்­கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பைச் சேர்ந்த, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் வவு­னி­யா­வில் வைத்து அணு­குண்­டொன்­றைப் போட்­டார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் தன்­னைத் தவிர ஏனைய 15 பேருக்­கும் அரசு தலா 2 கோடி ரூபா ஒதுக்­கி­ய­தா­க­வும், அர­சி­யல் லஞ்­சம் வழங்­கியே அவர்­களை வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க வைத்­த­தா­க­வும் அவர் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தார்.  இதே கருத்தை நாடா­ளு­மன்­றத்­தில் அவர் கூறி­யி­ருந்­தார்.

அது பெரி­தாக எடு­ப­ட­வில்லை. இப்­போது தேர்­தல் காலம் என்­ப­தால், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத் தில் போட்­டி­யி­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தவிர்ந்த ஏனைய கட்­சி­க­ளுக்கு இந்த விட­யம் பெரும் தீனி என்­ப­தால் விவ­கா­ரம் பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­றது.

 

பேரம் பேசு­தல்

சிவ­சக்­தி­ஆ­னந்­த­னின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் தலை­வர் சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ரன் அடிக்­கடி கூட்­ட­மைப்­பின் தலை­வர்­க­ளைக் குற்­றம் சுமத்­தும்­போது, அவர்­கள் பேரம் பேசு­வ­தில்லை என்று கூறு­வார். அரச தலை­வர் தேர்­த­லில் ஆத­ரவு வழங்­கும் போ­தும் சரி, ஏனைய விட­யங்­க­ளில் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கும்­போ­தும் சரி இவர்­கள் பேரம் பேசு­வ­தில்லை என்று சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ரன்­தான் குற்­றம் சுமத்தி வந்­தார்.

கடந்த டிசெம்­பர் மாதம், வரவு – செல­வுத் திட்ட மூன்­றா­வது வாசிப்பு மீதான வாக்­க­ளிப்­புக்கு முன்­ன­தாகக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்­த­னர். வரவு – செல­வுத் திட்­டத் துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வேண்­டும் என்­றால் சில நிபந்­த­னை­களை முழு­மைப்­ப­டுத்­து ­மாறு கோரி­னர். அதற்கு ரணில் இணங்­கிய பின்­னரே ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­யான காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம், காணி விவ­கா­ரம் உள்­ளிட்ட விட­யங்­க­ளும், உட­ன­டிப் பிரச்­சி­னை­யான அபி­வி­ருத்தி விட­யங்­க­ளும்­தான் அங்கு பேரம் பேச­லாக முன்­வைக்­கப்­பட்­டன.

வடக்கு – கிழக்­கைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்­து­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கத்­தக்­க­தாக, அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டா­மல் தென் ப­குதி அமைச்­சர்­கள் நேர­டி­யாக வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுக் கின்­ற­னர் என்று கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ரணி­லு­ட­னான அந்­தச் சந்­திப்­பில் ஆவே­ச­மாக எடுத்­து­ரைத்­த­னர். எங்­கள் மக்­க­ளின் தேவை­கள் எங்­க­ளுக்­குத்­தான் தெரி­யும்.

தென்­ப­குதி அமைச்­சர்­கள் தங்­க­ளுக்கு வேண்­டி­யதை எமது பிர­தே­சத்­தில் செய்ய முடி­யாது. மக்­க­ளின் கோரிக்­கை­களை நாங்­கள் முன்­வைக்­கின்­றோம். அதற்கு நிதி ஒதுக்­கீடு வேண்­டும் என்று கோரப்­பட்­டது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­தன், அரசு 2 கோடி ரூபா நிதி ஒதுக்­கீடு வழங்­கா­விட்­டால் வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க மாட்­டேன் என்று கூறி­யி­ருந்­தார்.

யதார்த்­தம்

வரவு – – செல­வுத் திட்­டத்தில் சாதா­ரண பெரும்­பான்மை இருந்­தாலே நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றி­விட முடி­யும். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார் பில் அமைச்­சர்­க­ளாக இருப்­போ­ரும் வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தாலே பாதீடு நிறை­வே­றி ­வி­டும். இது­தான் யதார்த்­தம். அரசு மூன்­றில் இரண்டு பெரும் பான்மையையும் எதிர்­பார்த்­த­தி­னால், கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வை­யும் கோர­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. சந்­தர்ப்­பம் பார்த்து பேரம் பேசல் இடம்­பெற்­றது.

இங்கே தரு­ணம் பார்த்து பேரம் பேசி மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக 2 கோடி ரூபாவை அர­சைக் கொண்டு ஒதுக்க வைத்­த­வர்­கள் செய்­தது தவறா? அல்­லது வாக்­க­ளிக்­கா­மல் விட்டு தனது மக்­க­ளுக்­குக் கிடைக்க வேண்­டிய அபி­வி­ருத்­தி­யைத் தடுத்த சிவ­சக்தி ஆனந்­த­னது செயற்­பாடு தவ­றா­னதா? வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக சிவ­சக்தி ஆனந்­தன் வாக்­க­ளிக்­கா­மல் விட்­ட­தால் அவர் கண்ட பயன் என்ன?

வடக்கு முதல்­வ­ரின் குற்­றச்­சாட்டு

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்­தது. அந்த ஆண்டு ஜூன் மாதம் வடக்கு மாகாண முத­ல­மைச் சர் சி.வி.விக்­னேஸ் வரன், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்­த­போது பர­ப­ரப்­புக் குற்­றச் சாட்­டொன்றை முன்­வைத்­தி­ருந்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் தென்­ப­கு­திக்கு அழைக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண சபையை புறந்­தள்ளி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர­டி­யாக நிதி வழங்­கப்­ப­டு­கின்­றது என்று விக்­னேஸ் வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் காலம் என்­ப­தால் குறித்த அந்­தக் குற்­றச்­சாட்­டும் பெரும் சர்ச்­சையை அந்த நேரத்­தில் தோற்­று­வித்­தி­ருந்­தது. கிட்­டத்­தட்ட சிவ­சக்தி ஆனந்­தன் இப்­போது முன்­வைத்த விட­யம் போன்­று­தான் அந்த விட­ய­மும் பெரும் பர­ப­ர­ப்பா­கி­யி­ருந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் 3 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மாத்­தி­ரமே தென்­ப­கு­திக்கு அழைக்­கப்­பட்டு நிதி ஒதுக்­கப்­பட்­ட­தாக முத­ல­மைச்­சர் தனது குற்­றச்­சாட்­டில் குறிப்­பிட்­டி ­ருந்­தார்.

சுரே­ஷின் வாக்­கு­மூ­லம்

குறிப்­பிட்ட அந்த மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வர், சிவ­சக்­தி­ ஆ­னந்­த­னின் கட்­சித் தலை­வ­ரான சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன்.

முத­ல­மைச்­ச­ரின் குற்­றச்­சாட்டு வெளி­யா­ன­தும், தாம் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய சுரேஷ், ‘நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நிதி ஒதுக்­காது மாகாண சபைக்­கூ­டாக அபி­வி­ருத்­தி­க­ளைச் செய்ய வேண்­டும் என்ற முத­ல­மைச்­ச­ரின் கருத்து சரி­யா­னது அல்ல. புதிய அரசு வந்த பின்­னர் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எனி­னும் சில அமைச்­சர்­கள் ஊடாக நிதி­யைப் பெற்று சில அபி­வி­ருத்­தி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

விக்­கி­யி­டம் விளக்­கம்

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்த குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் அவ­ரி­டம் விளக்­கம் கோரு­வது என்று, சுரேஷ் பிரே­ம­சந்­தி­ர­ னும் பங்­கெ­டுத்த கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட் டது. இந்­தச் செய்தி வெளி­யா­ன­தும் முத­ல­மைச்­சர் பதி­ல­றிக்­கை­யொன்றை வெளி­யிட்­டார். அதில் தனது குற்­றச்­சாட்டை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன் நிதி பெற்­ற­மையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை­யைக் கலந்­தா­லோ­சிக்­கா­மல் தென்­ப­கு­தி­யில் நிதி பெறப்­பட்­டது உண்­மை­தான் என்று விக்கி கூறி­யி­ருந்­தார்.

கடுப்­பான சுரேஷ்

முத­ல­மைச்­ச­ரின் பதி­ல­றிக்­கை­யி­னால் கடுப்­பான அப்­போ­தைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன், மீண்­டும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பொன்றை நடத்­தி­னார்.

‘‘முத­ல­மைச்­சர் பயன்­ப­டுத்­திய வார்த்­தை­கள் தவ­றா­னவை. கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மீது சேறு­பூச முத­ல­மைச்­சர் முயற்­சிக்­கின்­றாரா ? நாடா­ளு­மன்­றம் தென்­ப­கு­தி­யில்­தான் இருக்­கின்­றது. மக்­கள் எங்­க­ளி­டம் முன்­வைக்­கும் கோரிக்­கை­களை நாம் அங்கு சென்­று­தான் தெரி­விக்க முடி­யும்.

அத­ன­டிப்­ப­டை­யில் திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­கின்­றார்­கள். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் தென்­ப­கு­திக்கு அழைக்­கப்­பட்டு நிதி வழங்­கப்­பட்­டது என்­ப­தற்­கும், திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­கும் வேறு­பா­டு­கள் உள்ளன’’ என்று அந்­தப் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் சுரேஷ் திரு­வாய் மலர்ந்­த­ரு­ளி­யி­ருந்­தார்.

பதில் என்ன ?

சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன் உள்­ளிட்ட மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மாத்­தி­ரம் தனி­யாக நிதி வழங்­கப்­பட்­டது ஏன் ? கூட்­ட­மைப்­பில் அப்­போது 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இருந்த நிலை­யில் மூவ­ருக்கு மாத்­தி­ரம் நிதி வழங்­கி­யது ஏன் ? நாடா­ளு­மன்­றத்­தில் 225பேர் இருக்­கை­யில் இவர்­க­ளுக்கு மாத்­தி­ரம் நிதி வழங்­கி­யது ஏன்? இப்­போது இரண்டு கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­ட­துக்­குப் பக்­கம் பக்­க­மாக கேள்வி கேட்­கும் சிவ­சக்தி ஆனந்­தன், 2015ஆம் ஆண்டு தனது கட்­சி­யின் தலை­வ­ருக்கு
நிதி கிடைத்­த­போது ஏன் கேள்வி கேட்­க­வில்லை.

ஆனந்­த­னது கருத்­துப்­படி இப்­போது வழங்­கப்­பட்ட 2கோடி ரூபா அர­சி­யல் இலஞ்­சம் என்­றால், முன்­னர் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ர­ னுக்கு வழங்­கப்­பட்ட நிதி­யும் அர­சி­யல் இலஞ்­சமே.

மக்­கள் முன்­வைத்த திட்­டங்­க­ளுக்கே அரசு நிதி ஒதுக்­கி­ய­தாக சுரேஷ்பிரே­ம­சந்­தி­ரன் முன்­வைத்த விளக்­கம் சரி­யா­னால், தமது தொகுதி மக்­க­ளின் கோரிக்­கை­க­ளையே 2 கோடி ரூபா­வுக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தோம் என்ற கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது விளக்­க­மும் சரி­யா­னதே.

உங்­க­ளுக்கு வந்­தால் குருதி மற்­ற­வர்­க­ளுக்கு வந்­தால் தக்­கா­ளிச் சட்­னியா ஆனந்­தன் அவர்­களே? ஒவ்­வொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அவ­ர­வர்­க­ளது தொகுதி அபி­வி­ருத்­திக்கு திட்ட முன்­மொ­ழி­வு­க­ளைச் சமர்­பித்­தி­ருந்­தார்­கள். அதற்கு அரசு சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளங்­கள் ஊடாக நிதியை ஒதுக்­கி­யுள்­ளது.

ஒரு சதம் கூட சம்­பந்­தப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கைக­ளுக்­குச் செல்­லாது. 2015ஆம் ஆண்டு நடந்­த­தும் இது­தான். இந்த உண்­மை­கள் எல்­லாம் தெரிந்­தி­ருந்­தும், 2 கோடி ரூபா நிதி பெற்­ற­தான கதையை இப்­போது, அது­வும் தேர்­தல் காலத்­தில் நீங்­கள் கூறு­வ­தன் பின்­ன­ணி­யில் கூட்­ட­ணி­யின் வெற்றி தெரி­ய­வில்லை. மாறாக கூட்­ட­மைப்பை தோற்­க­டித்து சிங்­க­ளக் கட்­சி­க­ளி­டம் ஆட்­சி­யைத் தாரை­வார்க்­கும் சூட்­சு­மமே எதி­ரொ­லிக்­கி­றது.

http://newuthayan.com/story/64927.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.