Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட்

Featured Replies

அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட்

 

 
 

அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட்

அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தலிலே பிழையான பாதையிலே வாக்களித்து நாங்கள் உருவாக்கிய பிரதேசபைகள் நகரசபைகளை என்ன செய்தார்கள் என்ன அபிவிருத்தி நடந்தது என்று எங்களுக்கு தெரியும். கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள் மத்திய அரசினூடாக நாங்கள் கொடுத்த நிதியை செலவு செய்தார்கள் ஒழிய அவர்களிடம் அபிவிருத்தி தொடர்பான எந்த திட்டங்களும் இருக்கவில்லை. அதன் தாக்கத்தை இன்று உணர்கின்றோம். எமது மக்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இருக்கின்றார்கள். சில கிராமங்களில் பாதைகள் அமைக்கப்படவில்லை. மக்களின் கஸ்ரங்களை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வேறு கட்சிகளிலிருந்து எதையும் செய்யமுடியாது என உணர்ந்தவர்கள் இன்று எமது கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களின் நோக்கம் மக்களுக்கு பணியாற்றி தீர்வைத்தர வேண்டும் என்பதுதான்.

எனவே மக்களே சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள். பல கட்சிகளிலிருந்து வருவார்கள் பல பாசாங்குகளை செய்து வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கேட்பார்கள். அவர்களால் உங்களுக்கும், உங்கள் ஊருக்கும் எந்த அபிவிருத்திகளையும் செய்ய முடியாது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நல்லாட்சியை பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினுடாக கொண்டு வந்த நாம் எமது மக்களின் கல்வியையும், பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தை தவற விட்டால் இன்னும் நான்கு வருடங்களுக்கு கஸ்ரப்பட வேண்டியவர்களாக, கையேந்த வேண்டியவர்களாக நாங்கள் மாறி விடுவோம். எமது வேட்பாளர்கள், கல்வியாளர்கள் அரசியல் நாகரீகம் உள்ளவர்கள். நமது பிரதேசத்தின் அபிவிருத்தியை பெறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முப்பது வருடங்களாக யுத்தத்தின் பின் சமாதானம். சமாதானத்தின் பின் அதைத்தருவோம் இதைத்தருவோம் என சொல்பவர்கள் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். யார் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ அல்லது அபிவிருத்தியை மேற்கொள்வார்களோ அவர்களை தெரிவு செய்யுங்கள். இத்தருணத்தை பிழையாக பாவித்து விடாதீர்கள். உள்ளுராட்சி மன்றத்தினூடாக ஊரிலே உள்ள பாடசாலையை, வைத்தியசாலையை, வீடுகளை வழங்குகின்ற இந்த ஆட்சியை, ஆட்சி செய்ய தெரியாதவர்களிடம் ஒப்படைத்தீர்கள். ஒப்படைத்ததன் பலாபலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளுர் பாதைகளில் பயணிக்க முடியவில்லை. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மத்திய அமைச்சர் அழைத்தால் வரமாட்டார்கள். திட்டத்தை தீட்டுங்கள் என்றால் தீட்டமாட்டார்கள். செய்யச்சொன்னால் செய்ய மாட்டார்கள். செய்வதற்க ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே நாங்கள் உருவாக்கிய பிரதமர் இருக்கிறார். நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நமது எதிர்காலத்தை நமது தலைவிதியை நமது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்தத் தேர்தலிலே யானைச் சின்னத்திற்கு வாக்களித்து ஒற்றுமையை காட்டுங்கள் என தெரிவித்தார்.

http://www.samakalam.com/செய்திகள்/அபிவிருத்தியையும்-இளைஞர/

  • தொடங்கியவர்
  •  
  • மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்
download-1.jpg

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

மன்­னார் மாவட்­டத்­தின் உள்­ளூ­ராட்சி அதி­கா­ரங்­களை எங்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தால், அடுத்த நான்கு வரு­டங்­க­ளுக்­குள்ளே, மாவட்­டத்­தின் அனைத்­துக் கிரா­மங்­க­ளை­யும், ஊர்­க­ளை­யும் மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வோம் என்று அமைச்­சர் ரிஷாட் பதி­யு­தீன் தெரி­வித்­தார்.

மன்­னார் மாவட்­டத்­தின் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து, மன்­னார் பஸ் தரிப்பு நிலை­யத்­தில் நேற்று இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும்­போதே, அமைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த காலங்­க­ளில் மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் அதி­கா­ரங்­களை, வேறு கட்­சி­க­ளி­டம் கைய­ளித்­த­தன் மூலம், நீங்­கள் அடைந்த நன்­மை­கள் என்ன? நாம் எத்­த­னையோ தேவை உள்­ள­வர்­க­ளாக இருக்­கின்­றோம்.

கொழும்பு அரசு வழங்­கு­கின்ற நிதி­யு­த­வி­யு­டன் மாத்­தி­ரம்­தான், இந்­தப் பிர­தே­சத்­தில் அபி­வி­ருத்­தி­கள் இடம்­பெ­று­கின்­ற­தே­யொ­ழிய, உள்­ளூ­ராட்சி அதி­கா­ரங்­க­ளைக் கையேற்­ற­வர்­கள் உருப்­ப­டி­யாக எது­வுமே செய்­ய­வில்லை.

 
 

தேர்­தலை மைய­மாக வைத்து, அர­சி­யல் அதி­கா­ரங்­களை மட்­டும் தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டு­மென்ற ஆசை­யில் வரு­கின்ற கட்­சி­க­ளுக்­கும், வாக்­க­ளிக்­கா­தீர்­கள்.

மன்­னார் மாவட்­டத்­திலே பல்­வேறு அபி­வி­ருத்­திப் பணி­களை மேற்­கொள்­வ­தற்கு, நாங்­கள் திட்­டங்­களை வகுத்­துச் செயற்­ப­டுத்தி வரு­கின்­றோம். மன்­னார் நக­ரத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் நிதி­யொ­துக்­கி­யுள்­ளோம். சிலா­வத்­துறை நக­ரத்­தை­யும் நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­டங்­களை வகுத்­துள்­ளோம். அதற்­கான நிதி­யும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சிலா­வத்­துறை கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளில், நாங்­கள் ஈடு­பட்டு வரு­கின்­றோம். கட்­டுக்­க­ரைக்­கு­ளத்தை புன­ர­மைக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம். இந்­திய மீன­வர் பிரச்­சி­னை­யைத் தீர்த்து வைக்க வேண்­டும்.

இவ்­வா­றான பிரச்­சி­னை­களை இல­கு­வா­கத் தீர்ப்­ப­தற்கு கொழும்பு அதி­கா­ரங்­களை மாத்­தி­ர­மின்றி, உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் ஆட்­சி­யும் எமது கைக்­குக் கிட்ட வேண்­டும்-­ – என்­றார்.

http://newuthayan.com/story/66164.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.