Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் பொக்கெட் சம்பந்தன் – மஹிந்த.

Featured Replies

ரணிலின் பொக்கெட் சம்பந்தன் – மஹிந்த.

Mahintha-_0235.jpg?resize=800%2C558
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கெட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கேட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். நாட்டில் ஏற்பட்டு உள்ள இனபிரச்சனையை தீர்ப்பதற்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம் வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை.

எதிர்க்கட்சியாக உள்ளதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது. என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64653/

  • தொடங்கியவர்

மூன்று கட்சிகள் சேர்ந்தே ஆட்சியமைத்துள்ளன

Mahintha-_0235.jpg?resize=800%2C558
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்ந்து தான் ஆட்சி அமைத்து உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இந்த ஆட்சியில் என்ன அபிவிருத்தி நடைபெற்றது என உங்களால் கூற முடியுமா ? எமது ஆட்சியில் வீதிகள் , மின்சாரம் , தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தோம். பாடசாலைகள் , ஆய்வுகூட வசதிகள் புகையிரத சேவை என்பவற்றை ஏற்படுத்தி தந்தோம்.

அதெல்லாம் வடக்கு மக்களுக்கு மிகவிரைவாக பெற்று தந்தோம் ஏனெனில் தெற்கில் உள்ள மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் ஒரு நாட்டு மக்கள் எனும் வகையில் வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் தான் அத்தனை அபிவிருத்திகளையும் வடக்கு மக்களுக்கு விரைந்து செய்தது கொடுத்தோம்.

விவசாய காணிகளில் இருந்த வெடிபொருட்களை அகற்றி விவசாய நடவடிக்கைகளை ஊக்கிவித்தோம் பசளைகளை மானிய அடிப்படையில் 350 ரூபாய்க்கு வழங்கினோம். ஆனால் தற்போது அவ்வாறான வசதிகள் உண்டா ? பசளை வேண்டும் என இந்த அரசாங்கத்திடம் கேட்டால் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பசளையை இறக்குமதி செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அது வரையில் பயிர்கள் காத்திருக்குமா ?

இந்த அரசாங்கம் என நான் சொல்வது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்ந்து தான். அந்த மூன்று கட்சியுமே இணைந்து அரசாங்கமாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64692/

  • தொடங்கியவர்

சம்மந்தன், ரணிலின் பொக்கட் பைக்குள்

சம்மந்தன், ரணிலின் பொக்கட் பைக்குள்

 
 
நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாத்துகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பேரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (01) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இப் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் போது கருத்து தெரிவித்த அவர், மூன்று ஆண்டுகளின் பின்னர் நான் யாழ்ப்பாண மக்களுடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய காலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இருந்தது. உங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நாம் வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியை தழுவ வேண்டி ஏற்பட்டது.

ஆனால் நாங்கள் இருந்த போது காணப்பட்ட நிலைமைகள் இன்று இருக்கின்றதா என நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். புதிய ஆட்சி உருவாகி குறிப்பிட்ட சில கால இடைவெளிக்குள் என்ன அபிவிருத்தி இடம்பெற்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் ஆட்சியில் இருந்த போது மின்சாரம், நீர், போக்குவரத்துக்கான வீதிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் மகிந்தோய ஆய்வு கூட வசதிகள், மிக நீண்ட காலமாக இல்லாதிருந்த வடக்கிற்கான புகையிரத சேவை என அனைத்து துறைகளிலும் அபிவிருத்தியை முன்னெடுத்திருந்தோம்.

இவ்வாறு நான் அபிவிருத்திகளை செய்தற்கு காரணம் தெற்கு மக்கள் போன்று வடக்கு மக்களும் வாழ வேண்டும் என்பதற்காகவே, ஆனால் இன்று எமது மண்ணில் விளைந்த விசாய பொருட்களான அரிசி, உழுந்து, விவசாய பசளைகள் கூட வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னனி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்தே ஆட்சி செய்கின்றன. இதில் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதிர்கட்சியாக செயற்படவில்லை. இரா. சம்மந்தன் ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார்.

நான் ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றார்களே தவிர திரும்பி வரவேயில்லை. தற்போது சிவசக்தி ஆனந்தன் 200 இலட்சம் ரூபா வாங்கியதாக கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்வதற்காக பயன்படுத்தவில்லை.

எனவே இனிமேலும் வடக்கு மக்கள் இவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம். இந்த அரசாங்கம் பொய்களை கூறிக் கூறிக் கொண்டிருந்த்தை தவிர வேறேதனை செய்திருந்த்து. எனவே இவர்களுக்காக உங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டாம். நாங்கள் தற்போது புதிய வித்தியாசமான கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம். எம்மை எமது சின்னமான தாமரை மொட்டு சின்னத்தை மக்கள் வெற்றிபெற செய்து முன்னைய காலம் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

(யாழ் நிருபர் சுமித்தி)
 
 
 
 

http://tamil.adaderana.lk/news.php?nid=99696

  • தொடங்கியவர்

பிச்சைகார்களிடம் ஏமாறவேண்டாம். – மஹிந்த

Mahintha-_0224.jpg?resize=717%2C474

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமது காயத்தை ஆறவிடாது அதனை காட்டியே பிச்சை எடுக்கும் ஏமாற்று பிச்சைகாரர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அந்த பிச்சைகாரர்களிடம் தொடர்ந்து ஏமாற கூடாது. என  முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

 
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை  ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார்.  ஆம் அதனை வாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு நிதியினையும் செலவு செய்து விட்டனர். ஆனால் எந்த திட்டத்தினையும் நடைமுறைப்படுத்த வில்லை. வடக்கு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர்.
 
பிச்சை எடுப்பவர்கள் தமது காயத்தை ஆற விடாது வைத்து , அதனை காட்டி பிச்சை எடுப்பது போன்று செயற்பட வேண்டாம் .அவ்வாறு ஏமாற்ற வேண்டாம். அவ்வாறு ஏமாற்றும் பிச்சைகார்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருந்து அந்த ஏமாற்று காரகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
 
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். வடக்கு,  கிழக்கு,  தெற்கு என அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாம் இனவாதிகள் அல்ல . எனது நெருங்கிய உறவினர் தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64720/

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி வந்தா,

சம்பந்தன் வந்தா

கருப்புத்துண்டைக்கட்டிக்கொண்டு

எதிர்க்கும் கஜேந்திரகுமார் 

இப்ப யாழ்ப்பாணத்தில இல்லையா?

அல்லது மகிந்தவை அவர்கள் மன்னித்துவிட்டார்களா?

இனப்படுகொலைக்கும்

இவருக்கும் சம்பந்தம்

இல்லையென்று முடிவெடுத்துவிட்டார்களா?

 

தமிழ் பேரவை எங்க

போயிட்டினம்?

மகிந்தவுடன் போட்ட டீல்

காரணமாக மெளனமா?

 

ரணில் வந்தா எதிர்ப்பு

மகிந்த வந்தால் வரவேற்பு

நல்லாத்தான் ஆடுறாங்க கேமை

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

எனது நெருங்கிய உறவினர் தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.

புரியல்ல என்ன பிரச்சனை என்ன கதை, கதைக்கிறார் மான்புமிகு.....

பிரச்சனை எதோ கலியாணம் கட்டினால் தீர்ந்திடும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

நாட்டில் ஏற்பட்டு உள்ள இனபிரச்சனையை தீர்ப்பதற்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம் வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை.

மகிந்தவின் ஆட்சியிலேயே கூட்டமைப்புடன் பல  சுற்று பேச்சுவார்த்தை மூடிய அறைக்குள் நடைபெற்றது.இன்று வரை என்ன பேசப்பட்டது என்பது வெளிவரா விட்டாலும் தோல்வியில் முடிந்தது என்பது மட்டும் உண்மை.. இப்போ ஒரு நாடகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என தேர்த்தல் நாடகம் ஆடுகிறார் மகிந்த.இனப்படுகொலை செய்தவரை எதிர்த்து யாரும் எதிர்ப்பு காட்டாதது ஆச்சரியமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.