Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கர்ப்பப்பையை எடுக்கிறதுக்காகக் காசு சேர்க்கிறேன்'' - திருநம்பி செல்வத்தின் வாழ்க்கையும் வலிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலை ஆறு மணிக்கு என்னுடைய அலைபேசி ஒலிக்க, பாதி தூக்கத்தில் எடுத்தேன். ''நான் செல்வம் பேசுறேன். என்னைப் பார்க்கணும்னு சொன்னீங்களே. இப்போ சென்னைக்கு வந்திருக்கேன்' என்றது அந்தக் குரல். நான் பல நாள்களாக எதிர்பார்த்திருந்த குரல். தூக்கம் முற்றிலும் விலக, அவர் சொன்ன இடத்துக்கு 10 நிமிடங்களில் வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். 

யார் இந்த செல்வம் அண்ணன்? அவ்வளவு சீக்கிரமாக சந்திக்க என்ன ஸ்பெஷல்னு கேட்கறீங்கதானே? செல்வம் அண்ணன், ஒரு திருநம்பி. தான் ஒரு திருநம்பி எனத் தைரியமாகப் பொது சமூகத்தில் அடையாளப்படுத்திக்கொண்டவர். இது தவிர அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. ஆனால், அவரிடம் கேட்க நிறையக் கேள்விகள் என்னிடம் இருந்தன. பிறக்கும்போது ஆணாக இருந்து, பிறகு பெண் தன்மை அடைந்து, தன்னைப் பெண்ணாக வெளிப்படுத்திக்கொள்ளும் திருநங்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். கேலி, தீண்டல்களைத் தாண்டி அவர்கள் பற்றிய தெளிவும் மதிப்பும் கொஞ்சமாவது சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிறப்பால் பெண்ணாக இருந்து, ஆண் தன்மையை அடையும் திருநம்பிகள் நிலை பரிதாபமானது. அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதே அரிதானது. ஒரு சராசரிப் பெண், ஆணைபோல சட்டை அணிவதையும், தலைமுடியை வெட்டிக்கொள்வதையுமே வியப்போடு பார்க்கும் சமூகம், தன்னை முழுமையாக ஆணாக மாற்றிக்கொள்ள நினைப்பவர்களை எப்படிப் பார்க்கும்? எப்படி 'பெரிய மனது' செய்து அங்கீகரிக்கும்? அதையெல்லாம் கடந்துவந்த ஒரு திருநம்பிதான் செல்வம் அண்ணன். 

 

 

திருநம்பி

கறுப்பு பேன்ட், நீலநிற முழுக்கைச் சட்டை அணிந்தவர் என்னருகே வந்து. 'ஹாய்' எனக் கையசைத்ததும் தெரிந்துகொண்டேன். ''செல்வம் அண்ணா?'' எனக் கேட்டதும் புன்னகையுடன் தலையசைத்தார். ஓர் ஆணுக்கான அத்தனை லட்சணமும் அவரிடம் இருந்தது. நிழலுக்காக ஒரு மரத்தடியில் சென்று நிற்க, இலைகளைப் பூக்களாக உதிர்த்து வரவேற்றது. 

''என் முன்னாள் பெயர், பாண்டிச்செல்வி. தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தேன். அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி என மக்கள் செல்வம் நிறைந்த குடும்பத்தில் நடு குழந்தையாகப் பிறந்தேன். அப்பாவுக்குக் கூலி வேலை. நான், என் அண்ணன், அக்கா மூணு பேருமே படிக்காதவங்க. சின்ன வயசிருந்தே அப்பாவுக்கு உதவியா வேலை பார்த்துட்டிருந்தோம். எனக்கு நாலு வயசா இருக்கும்போதே என்னைக் குளிப்பாட்ட அம்மாவை விட மாட்டேனாம். என் அம்மா அடிக்கடி சொல்லும். அப்பவே என் உடம்புல மாற்றம் வந்துச்சானு சொல்லத் தெரியலே. பொண்ணுங்க போடுற டிரெஸ், வளையல், கம்மல்னு எதுவுமே பிடிக்காமல் போக ஆரம்பிச்சிது. அண்ணனின் டிரெஸ்ஸையே போட்டுப்பேன். பன்னிரண்டு வயசுலதான் அந்த மாற்றத்தைச் சரியா உணர்ந்தேன். வீட்டுலதான் முதல்ல சொன்னேன். ஆனால், நான் விளையாட்டுக்கு சொல்றதா யாருமே பெருசு பண்ணலை. அப்புறம் என்னுடைய நடவடிக்கையைப் பார்த்துப் புரிஞ்சுகிட்டாங்க'' என்றபடி மரத்தின் மீது சாய்ந்துகொண்டார் செல்வம். 

திருநங்கை

வெளியே தெரிய ஆரம்பித்த அந்த நிமிடங்களை செல்வம் எப்படிக் கடந்திருப்பார் என யோசிக்கும்போதே இதயத்தில் சொல்லத் தெரியாத வலி உண்டாகிறது. 

''வீட்டுல உள்ளவங்களுக்கும், ஊர்ல ஒரு சிலருக்கும் மட்டும்தான் நான் பொண்ணு இல்லைன்னு தெரியும். ஊருக்குள்ளே ரவுடி மாதிரி சுத்திட்டு எல்லோரையும் மிரட்டுறதுதான் என் வேலையே. அப்படி இருந்த எனக்குள்ளும் காதல் மலர் பூக்க ஆரம்பிச்சது. பதினெட்டு வயசுல எல்லோருக்கும் ஏற்படுற மாதிரி காதல் சாரல் என்னையும் நனைச்சது. ஶ்ரீகலா என்ற பொண்ணை எங்க ஊரில் சந்திச்சேன். ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. என்னைவிட ஒரு வயசு சின்னவள் அவள். என்மேல ரொம்பவே பாசமா இருப்பா. எனக்கு எல்லாமே அவள்தான் எனத் தோணுச்சு. எங்க காதல் அவ்வளவு அழகானது. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வெச்சிருந்தோம். ஆனாலும், நான் பெண்ணாக இருந்து ஆணா மாறினது மட்டும் அவளுக்குத் தெரியாது. சொன்னால் நிராகரிச்சுடுவாளோனு பயத்தில் மறைச்சுட்டேன். ஆறு, வயல்வெளி, கோயில் என மூணு வருஷம் எங்க காதலின் பாதங்கள் பதிந்தன. ஒரு கட்டத்தில், ஶ்ரீகலா அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சதும் அவளை வீட்டுக்குள்ள அடைச்சு வேற ஒருத்தருக்குக் கல்யாணம் பண்ண பார்த்தார். ஶ்ரீகலா எனக்கு போன் பண்ணி, 'நீ இல்லேன்னா செத்துருவேன்'னு அழுதா. அந்த அழுகையை என்னால் தாங்க முடியலை. அதேநேரம் இதுக்குமேலேயும் உண்மையை மறைக்கக் கூடாதுனு முடிவுபண்ணி நான் ஒரு திருநம்பி எனச் சொல்லிட்டேன். சட்டுனு போனை வெச்சுட்டா'' என நிறுத்துகிறார் செல்வம். 

'அப்புறம் என்ன ஆச்சு?' என்பதுபோல நிமிர்ந்து பார்த்தேன். மரத்தின் மீதிருந்த வந்த ஒரு பறவையின் சத்தம் கேட்க, அது பேசி முடிக்கட்டும் என்பதுபோல இருந்துவிட்டுத் தொடர்கிறார்.

''சரி, எங்கே இருந்தாலும் நல்லா வாழட்டும்னு கடவுளை வேண்டிக்கிட்டேன். ஆனால், அரைமணி நேரம் கழிச்சு அவளே கூப்பிட்டாள். 'நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லே. படுக்கை சுகத்துக்காக மட்டும் நான் உன்னை விரும்பலை. என்னை எங்கேயாச்சும் கூட்டிட்டு போயிடு'னு சொன்னா. எனக்கும் பெரிய துணிச்சல் வந்துச்சு. ஶ்ரீகலாவோடு கேரளாவுக்குப் போயிட்டேன். அங்கே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆறு மாசம் சந்தோசமா வாழ்ந்தோம். நாங்க இருந்த இடம் என் அப்பாவுக்கு மட்டுமே தெரியும். ஶ்ரீகலா அப்பாவுக்குச் சந்தேகம் வந்து எங்க வூட்டுக்குப் போய் மிரட்டவும், அப்பா பயத்தில் எங்க இடத்தைச் சொல்லிட்டார். 

அவங்க நாங்க இருந்த இடத்துக்கு வந்து என்னை அடிச்சுத் தள்ளிட்டு, ஶ்ரீயைக் கூட்டிட்டுப் போகப் பார்த்தார். 'நாம சந்தோசமா வாழ ஒரு வீடு வேணும்னு அவ அடிக்கடி சொல்லுவா. அப்பா பிடியில் இருக்கும்போதும், 'நான் உனக்காகக் காத்திருப்பேன். சீக்கிரமே வந்து என்னை கூட்டிட்டுப் போ'னு சொன்னா. அவளைத் துணிந்து அனுப்பி வெச்சேன். நானும் ஊருக்கே திரும்பிவந்து எல்லோர் முன்னாடியும், 'நான் ஒரு திருநம்பி'னு அறிவிச்சேன். எங்க எதிர்காலத்துக்காக சொந்தமா வீடு கட்டணும்னு முடிவெடுத்து உழைக்கிறதுக்காக சென்னைக்கு வந்துட்டேன்'' என்றார்.

திருநம்பி

மனிதர்களை சர்வ சாதாரணமாக விரட்டும் இந்த மாநகரம் செல்வத்தை எப்படி வரவேற்று இருக்கும்?

''பல சவால்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். கல்குவாரியில் கல் உடைக்கிறதில் ஆரம்பிச்சு, கிரேன் ஆபரேட்டர் வரைக்கும் பார்க்காத வேலையே இல்லை. என்கூட வேலை பார்த்த யாருக்கும் நான் ஒரு திருநம்பினு தெரியாது. என் பிறப்புறுப்பை நான் இன்னும் ஆபரேசன் பண்ணிக்கலை. இப்போவரை ஒண்ணுக்குப் போகும்போது யாராச்சும் பார்த்திருவாங்களோனு அம்புட்டு பயமா இருக்கும். தினம் தினம் செத்து செத்து வாழறேன். சாகறதுக்குள்ளே அந்த ஆபரேசன் பண்ணிக்கணும் அதுதான் என் பெரிய ஆசை. சென்னைக்கு வந்த புதுசுல என்கிட்டேயும் அவள்கிட்டேயும் செல்போன் இல்லை. எனக்காக அவ காத்திருப்பா என்கிற நம்பிக்கையில் மூணு வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சேன். கல்பாக்கத்தில் சொந்தமா ஒரு வீடு கட்டி முடிஞ்சதும், அவளைக் கூட்டிட்டு வர்றதுக்காக சொந்த ஊருக்குப் போனேன். அப்போதான் அவளுக்கு வேற கல்யாணம் நடந்துட்ட விஷயம் தெரிஞ்சது. உடைஞ்சு போயிட்டேன். என் ஶ்ரீகலாவும் கண்டிப்பா அழுது துடிச்சு ஓய்ஞ்சுபோய், அவள் அப்பாவின் மிரட்டலுக்குப் பயந்துதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பா. இனி அழுது என்ன பண்றது? ஆறு மாசம் அவளோடு வாழ்ந்த வாழ்க்கையே போதும்னு தோணுச்சு. அவள் நினைவாலேயே நாள்களை நகர்த்தறேன். இப்போ எனக்கு 32 வயசு. காதல் தோல்வியைவிட பெரிய வலி எதுவுமே இல்லே கண்ணு'' என்ற செல்வம் கண்கள் துளிர்க்கின்றன. 

உண்மைதானே... கடந்துவிடக் கூடிய வலியா அது?

''நாங்க பிரிஞ்ச நாளிலிருந்து இப்போவரை ஶ்ரீகலாவைப் பார்க்கலை. இனியும் எங்கே இருக்கானு கேட்டுத் தெரிஞ்சுக்க விரும்பலை. ஆனால், வலி மாறாது. அதனாலேயே மூணு வருஷம் எந்த வேலைக்கும் போகாமல் மனசாலும் உடம்பாலும் சோர்ந்துபோய் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அப்புறம், குஜராத்துக்குப் போய் ஆபரேசன் பண்ணி மார்பகங்களை எடுத்துட்டேன். பொதுவா திருநம்பிகளுக்கும் பீரியட்ஸ் வரும். கர்ப்பப்பையை எடுத்துடுவாங்க. எனக்கு என்னவோ அது வரவே இல்லை. கெட்ட ரத்தம் வெளியேறாமல் இருக்கிறதே ஆபத்துன்னு சொல்றாங்க. கர்ப்பப்பையை எடுக்கறதுக்கு ஆபரேசன் பண்ணணும். அதுக்காக பணம் சேர்த்துட்டிருக்கேன். இப்போ அப்பா, அம்மா, தம்பி மூணு பேரும் ஶ்ரீகலாவுக்காக நான் கட்டின வீட்டுலதான் இருக்காங்க'' என்றவர் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. 

 

https://www.vikatan.com/news/tamilnadu/115718-i-am-saving-money-to-remove-my-uterus-says-transgender-selvam.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர் காதல்தோல்வியில் துவண்டு விடாமல் வாழ்ந்து காட்டியிருக்கிறார் பாராட்டப் பட வேண்டிய விடயம்......!  tw_blush: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.