Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களது ஒற்றுமையே இனத்தைக் காக்க வல்லது!!

Featured Replies

  • தமிழர்களது ஒற்றுமையே இனத்தைக் காக்க வல்லது!!
 
tkn-11-07-rm-98-dim-650x430.jpg

தமிழர்களது ஒற்றுமையே இனத்தைக் காக்க வல்லது!!

 

 

தமி­ழிலே ஒரு முது மொழி ‘‘ அர­சன் அன்­ற­றுப்­பான் தெய்­வம் நின்­ற­றுக்கும்’’ என்­ப­தா­கும். இந்த முது­மொ­ழி­யின் தாக்­கத்தை இலங்­கை­யின் இறை­மை­யில் தெளி­வா­கக் காண­லாம்.

ஆங்­கி­லே­யர் கையில் இருந்த இறைமை சுதந்­தி­ரம் என்ற பெய­ரில் சிங்­கள இனத்­தின் கைக்கு மாறி­யது. மூவி­னத்­த­லை ­மை­க­ளின் ஒற்­று­மை­யி­னால் பிறந்­த­து­தான் சுதந்­தி­ரம். சுதந்­தி­ரம் என்­பது ஒவ்­வொரு மனி­த­னின் பிறப்­பு­ரி­மை­யா­கும். இந்­தப்­பி­றப்­பு­ரிமை சிறு­பான்மை இனத்­தைப் பொறுத்த மட்­டில் கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது.

திட்­ட­மிட்­டுக் காய் நகர்த்­திய நாட்­டின்
முத­லா­வது தலைமை அமைச்­சர் டி.எஸ்.

இலங்­கை­யின் முதல் தலைமை அமைச்­சர் டி.எஸ் சேன­நா­யக்க. சிங்­கள மக்­கள் அவ­ரைத் தேச­பி­தா­வா­கக் கரு­து­கி­றார்­கள். அவ­ரைப்­பற்­றிய தமி­ழர்­க­ளின் மதிப்­பீடு அவர் ஒரு சூத்­தி­ர­தாரி. இலங்­கைப்­பி­ரச்­சி­னைக்கு வித்­திட்ட முதல் முதல்­வர் அவர். பெரிய தந்­தி­ர­சாலி. அவ­ரது செயற்­பா­டு­கள் எப்­படி அமைந்­தவை என்­ப­தைப் பாருங்­கள். அவ­ரது நோக்­கம்– குறிக்­கோள் தமி­ழி­னம் சிறு­பான்மை இனம் தான். ஆனால் அன்­றைய அர­சி­யல் வானில் நட்­சத்­தி­ரங்­க­ளாக ஔி வீசி­ய­வர்­கள். அவர்­கள் பெரு­மை­யைப் புக­ழைக்­கண்டு அவ­ரது எண்­ணங்­கள், தமி­ழி­னத்தை எப்­படி அடக்­க­லாம் ஒடுக்­க­லாம் எனச்­சிந்­திக்க வைத்­தது.

 

இரு ஆயு­தங்­க­ளைக் கையி­லெ­டுத்­தார். ஒன்று நாடா­ளு­மன்­றில் எம்­மின உறுப்­பி­னர் தொகையை எப்­படி குறைக்­க­லாம் என்­ப­தாக அமைந்­தது. இரண்­டா­வது, தமி­ழர் வாழ்­வி­டங்­க­ளில் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­திச் சிங்­கள உறுப்­பி­னர் தொகையை நாடா­ளு­மன்­றத்­தில் அதி­க­ரிக்­கச் செய்­ய­லாம் என்­ப­தா­கும்.

சுதந்­தி­ரம் பெற்ற கையோடு பிரசா உரி­மைச் சட்­டத்­தை­யும் வழக்­கு­ரி­மைச்­சட்­டத்­த­தை­யும் கொண்­டு­வந்து நாடா­ளு­மன்­றத்­தில் மலை­யக மக்­க­ளது உறுப்­பி­னர் தொகை­யைக் குறைத்­தார். கிழக்­கி­லங்கை தமி­ழர் வாழ்­வி­டங்­க­ளைக் கொண்ட பூமி, செந்­நெல் விளை­யும் கள­னி­கள் மிகுந்த இடம். இந்­தப்­பூ­மி­யிலே திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற் றங்­களை ஏற்­ப­டுத்­தி­னார். விளைவு என்ன? சிங்­கள மக்­க­ளின் பரம்­பல் அதி­க­ரித்­தது. சிங்­கள உறுப்­பி­னர் தோன்­றத் தொகு­தி­கள் பல தோற்­றம் பெற­லா­யின.

தமி­ழர்­க­ளது செயற்­றி­றன் கண்டு
பொறாமை கொண்ட சிங்­க­ளத் தரப்­புக்­கள்

படிக்­காத மேதை­யான டி.எஸ்­சின் தேவை என்ற நிலை ஏற்­பட்ட போது இலங்­கை­யின் தேசி­யக் கொடி எப்­ப­டி­யாக அமைய வேண்­டு­மென ஒரு குழு­ஆ­ராய்ந்­தது. மூவின மக்­க­ளின் உறுப்­பி­னர்­க­ளும் அக்­கு­ழு­வில் இடம்­பெற்­றி­ருந்­த­னர். அக்­கொ­டி­யில் சிங்­கம் என்ற சின்­னமே இடம்­பெற வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­ட­போது அன்­றைய தமிழ்த்­த­லை­மை­க­ளில் ஒரு­வ­ரான சி. சுந்­த­ர­லிங்­கம் நந்­தி­யும் அக்­கொ­டி­யில் இடம் பெற­வேண்­டு­மென வாதிட்­டார்.

அந்­நி­லை­யில் தமிழ் தலை­மை­கள் ஒன்­றாக இணைந்து ஒரு­கு­ர­லாக ஓங்­கிக் குரல் எழுப்­பி­யி­ருந்­தால் நந்­தி­யும் இலங்­கை­யின் தேசி­யக் கொடி­யில் இடம்­பெற்­றி­ருந்­தது. முஸ்­லிம் தலை­மை­க­ளும் பிறை­யைத் தமது சின்­ன­மாக ஏற்­க­வேண்­டு­மெ­னக் கேட்­டி­ருப்­பார்­கள்.

தூர­நோக்­கும் பரந்த எண்­ண­மும் அன்­றைய தலை­மை­க­ளி­டம் வழக்­கில் இல்­லா­த­தால் சிங்­கமே சின்­ன­மாக இலங்­கைக் கொடி­யில் அமைந்­து­விட்­டது. தமிழ் இனத்­தி­ன­தும் முஸ்லிம் இனத்­தி­ன­தும் அடை­யா­ள­மாக அக்­கொ­டி­யில் பச்சை, மஞ்­சள் நிறத்­தில் இரு­கோ­டு­கள் வரை­யப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யில் சிறு­பான்மை இனத்­த­வர்­கள் ஒன்­றிய மன­தோடு அக்­கொ­டிக்கு மரி­யா­தை­யும் வணக்­க­மும் செலுத்­து­கி­றார்­களா? இல்­லையே! அத்­த­கைய நிலை­யில் எப்­படி இலங்­கை­யில் நல்­லி­ணக்­கம் ஏற்­பட முடி­யும்?

ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லத்­தின் அர­சி­யல்
அணு­கு­முறை மீது அதி­ருப்தி கொண்டு
புதிய கட்­சியை உரு­வாக்­கிய
எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கம்

அன்­றைய கால­கட்்­டத்­தில் தமி­ழர்­க­ளின் தலைமை கண­ப­திப்­பிள்ளை காங்­கே­யர் பொன்­னம்­ப­லத்­தின் கையி­லி­ருந்­தது. (ஜீ.ஜீ.பொ) டீ.எஸ்.சின் மந்­திரி சபை­யிலே கைத்­தொ­ழில் அமைச்­ச­ராக ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லம் வீற்­றி­ருந்­தார். டீ.எஸ் சின்­போக்­கை­யும் தமி­ழர்­களை ஒடுக்க அவர்­கை­யாண்ட சட்ட திட்­டங்­க­ளை­யும் கண்ட எஸ்.ஜே.வி செல்­வ­நா­ய­கம் உள்­ளம் குமு­றி­னார். இலங்­கை­யில் தமி­ழர் இருக்­கையை எப்­ப­டித்­தங்க வைக்­க­லாம் என்ற கோணத்­தில் சிந்­த­னை­ யைப்­ப­ட­ர­விட்­டார்.

பொன்­னம்­ப­லம் அவர்­க­ளில் தலை­மை­யி­லி­ருந்து வௌியே­றித் தமக்­கி­சைந்­த­வர்­க­ளு­டன் இணைந்து தமி­ழ­ர­சுக்­கட்­சியை உரு­வாக்­கி­னார். கட்­சி­யின் கொள்­கை­களே கட்­சி­யின் உயி­ரா­கும் என்­றும் கட்­சிப்­ப­ணி­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளைக் கட்­சி­யின் நிழல்­க­ளென்­றும் அறி­வு­றுத்­தி­னார். பிர­தே­ச­வா­ரி­யா­கப்­பி­ரிந்த தமி­ழி­னத்தை ஒரே குடை­யின் கீழ் கொண்டு வந்­தார். கட்­சித் தலை­மை­க­ளை­யும் இணைப்­பித்­தார். அவர் வழி­யில் தமி­ழி­னம் ஒன்று திரண்­டது. அந்த ஒற்­றுமை என்ற வலு­வைக்­கொண்டு சிங்­க­ ளத்­த­லை­மை­க­ளைப் பணிய வைத்து ஒப்­பந்­தம் செய்­தார்.

இலங்­கை­யின் ஆட்சி மொழி சிங்­க­ளமே என்ற சட்­டத்­தை­யும் சிங்­க­ளமே போதனா மொழி­யாக இருக்­க­வேண்­டும் என்ற திட்­டத்­தை­யும் மாற்­றி­ய­மைத்­தார்.

‘சிலோன்’ என்று அழைக்­கப்­பட்ட இலங்­கை­யின் பெயரை சிறீ­லங்­கா­வா­கச் சிங்­கள அரசு மாற்­றம் செய்­த­போது, மும்­மொ­ழி­க­ளி­லும் ஸ்ரீலங்கா என்று எழு­தத் தலைப்­பட்­ட­னர். அன்று முத­லின் ஐந்து ரூபா தமி­ழில் ஸ்ரீலங்க என்று பொறிக்­கப்­பட்­ட­தைக் கண்­ணுற்ற தந்தை செல்வா அன்றை பிர­த­மர் ஸ்ரீமாவை நேரே போய்ச்­சந்­தித்­துத் தமி­ழில் இலங்கை என்றே எதி­லும் எழு­தப்­ப­ட­வேண்­டும் எனக் கேட்டு நடை முறை­யில் அதைச் செயல் படுத்­தி­னார்.

இது­வொரு வர­லாற்­றுப் பதிவு. தமி­ழர் சிறு­பான்­மை­யி­னர். எந்­தக்­கட்­டத்­தி­லும் ஆயு­தம் எந்­தக்­கூ­டாது ஏந்­தி­னால் பேர­ழி­வைச் சந்­திப்­போ­மென வற்­பு­றுத்­திச் சாத்­வீக முறை­யில் போராட்­டங்­களை நடத்­திக் காட்­டி­னார். அவர் சுட்­டிக்­காட்­டிய அடுத்த தலைமை, துப்­பாக்கி வேட்­டுக்கு இரை­யா­னது தமி­ழி­னத்­தின் சாபக்­கேடே அடுத்த தலைமை சம்­மந்­தன் ஐயா தந்தை வழி­யில் தனை­யன் என்ற நெறி­யில் தமி­ழி­னத்தை வழி­ந­டத்­து­கி­றார்.

ஆயு­தப் போராட்­டம் நடந்­தி­ருக்­கக் கூடாது; ஆனால் அது நடந்து விட்­டது. எம்­மி­னம் வீரத்­தின் விளை­நி­லம் என்­பதை வெகுண்­டெ­ழுந்த இழை­ஞர் அணி உல­கிற்கே எடுத்­துக்­காட்­டி­யது. தியா­கத்­தீ­யில் தம்­மைத்­தாமே ஆகு­தி­யாக்­கி­னார்­கள் போர்க்­க­ளத்­துக்கு பெட்­டி­யைச் சுமந்து சென்­டறு அப்­பெட்­டி­யி­லேயே சட­ல­மா­கத் திரும்­பி­வந்த காட்­சியை உல­கில் எந்த நாட்­டி­லும் கண்­ட­துண்டா? அல்­லது கேட்­ட­துண்டா? உல­கம் கண்டு வியந்­தது.

‘‘நீங்­கள் உங்­கள் உரி­மை­யைக் கேளுங்­கள். அதில் தவ­றொன்­று­மில்லை.’’ அந்த உரி­மை­க­ளைப்­பெற முயன்ற செயற்­பா­டு­க­ளிலே இருந்த தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்டி அவற்­றைத் தவிக்­கு­மாறு கூறி­யது. அத்­த­வ­று­களை விலக்­கிக் கொள்­வதை அமைப்பு கருத்­தில் கொள்­ளா­த­தால் அவர்­களை அழிக்­க­வும் செய்­த­னர். ‘‘அர­சி­யல் பிழைத்­தோ­ருக்கு அம் கூற்­றா­கும்’’ என்­பது தமி­ழர் செல் நெறி­யா­கும். அற­நெ­றி­யின் குறை­பாட்­டால், உரி­மைப்­போர் தோல்வி கண்­டது.

இன்­றைய தேர்­தல் களம் கண்டு இன்­றைய தலை­மு­றை­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றும் செய்தி இது. ஒற்­று­மைக்கு வேட்டு வையா­தீர்­கள். ஒற்­று­மை­யால் தான் இன்­றும் தலை நிமிர்ந்து நிற்­கி­றோம். எனவே என்­ன­தான் கருத்து வேற்­று­மை­கள் ஏற்­பட்­டா­லும் இனத்­தின் ஒற்­றுமை நலி­வ­டைய இட­ம­ளிக்­கா­தீர்.

http://newuthayan.com/story/68241.html

  • கருத்துக்கள உறவுகள்

இதைத தலைவர்கள் உணர்கிறார்கள் இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

 ஒற்­று­மைக்கு வேட்டு வையா­தீர்­கள். ஒற்­று­மை­யால் தான் இன்­றும் தலை நிமிர்ந்து நிற்­கி­றோம். எனவே என்­ன­தான் கருத்து வேற்­று­மை­கள் ஏற்­பட்­டா­லும் இனத்­தின் ஒற்­றுமை நலி­வ­டைய இட­ம­ளிக்­கா­தீர்.

http://newuthayan.com/story/68241.html

 

ஒற்றுமையாய் வாழ்வதாலே, உண்டு நன்மையே...!

வேற்றுமையை வளர்ப்பதனாலே, விளையும் தீமையே..!!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.