Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..

Featured Replies

இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..

 

 

TNPF-2.jpg?resize=750%2C360

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டமாகக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
“ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின்போது வழங்கப்பட்டது. அக் கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளது. நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தாங்கள் 30.1 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்ல என தெளிவாகக் கூறியநிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டதுபோலவே பொறுப்பூக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆக்கப்பட்ட போதும் அதனைது செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில் ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்தநிலைதான் காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்துகின்றோம். இதில் பாதிக்கப்பட்ட மக்களது கருத்தும் மிகத் தெளிவாக உள்ளது என்பதனை குறிப்பிடவிரும்புகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர்.
எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுதுகின்றோம்.

பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும் அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதன்பொருட்டு மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தினை விரையில் ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை அதனை இணைத்தலைவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துக்ககள் பெறப்படும் அம் மக்களுக்கு ஜதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” – என்றார்.

http://globaltamilnews.net/2018/67127/

  • கருத்துக்கள உறவுகள்

 

சரியான நேரத்தில் எடுக்கப்படும் சாதூரியமான நடவடிக்கை. முதலமைச்சரினது தலைமை வழிநடத்துகிறது. இவர் நீண்டு வாழ்ந்து மக்களுக்கு உதவ வேண்டும்.

 

அரசியல் குழப்பத்தால், இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை - ஜெனீவாவிலும் பேரிடி

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தால் இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உருவாகியுள்ளதுடன், பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
 
இலங்கையின் அரசியல் கொதிநிலையைத் தணிக்க அமெரிக்காவும், இந்தியாவும் களமிறங்கியுள்ளதுடன், மேலும் சில இராஜதந்திரிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளனர்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமரை அமெரிக்கத் தூதுவர் மற்றும் இந்தியத் தூதுவர் ஆகியோர் சந்தித்து பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியிருந்தனர்.
 
தேசிய அரசில் பிளவு ஏற்பட்டால் இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடிகள் உருவாகும். புதிய அரசியலமைப்பு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளைச் செய்வதில் தடங்கல் ஏற்படும். தனியரசு அமைந்தால் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல்போகும். அவ்வாறு ஏற்பட்டால் 2020ஆம் ஆண்டுவரை அரசியல் ஸ்திரமற்ற தன்மையே காணப்படும்.
 
எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சவால் மிக்கதாகவும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
 
சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலை காரணமாகவே இவ்வாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
 
அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
 
நேற்றுமுன்தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 60 சதத்தால் குறைந்து, 156.74 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.
 
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதையடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களாலேயே பொருளாதார உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது
On 2/16/2018 at 8:53 PM, நவீனன் said:

இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..

இவர்கள் இதன் சாத்தியம், எதிர்கால நன்மைகள் / தீமைகள் போன்றவற்றை முறையே ஆராயாமல், வழமைபோல தங்கள் சுயநல அரசியல் நகர்வாக அவசர கதியில் தனித்து இதை மேற்கொள்வாராகின் அது தற்போது நடைபெறும் நிகழ்வுகளை குழப்பியடித்து, தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக அமையும்.

கஜேந்திரகுமார் இதுவரை உருப்படியாக ஒன்றையும் செய்யாததால் அவர் எதையும் ஓன்றுக்கு பலமுறை சிந்தித்து செயற்படவேண்டும்.

இம்முறை அவரது கட்சிக்கு கிடைத்த வாக்குகள்  தமிழரசுக் கட்சியின் மீதுள்ள வெறுப்பால் வந்த வாக்குகள் என்பதையும் தனக்கு கிடைத்த வாக்குகள் இல்லை என்பதையும் விளங்கும் பக்குவம் கஜேந்திரகுமாருக்கு வரவேண்டும்.

கஜேந்திரகுமார் கிணற்றுத் தவளையாக நடத்தும் சுயநல அரசியலை கைவிட்டு தமிழர் உரிமைகளை வெல்லும் நோக்கில் ஏனைய நல்ல சக்திகளுடன் கைகோர்த்து யதார்த்த அரசியலை முன்னெடுக்க முன்வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

இல்லையென்றால் சுயநல அரசியலால் படுகுழிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் நிலையே இவருக்கும் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Rajesh said:

இவர்கள் இதன் சாத்தியம், எதிர்கால நன்மைகள் / தீமைகள் போன்றவற்றை முறையே ஆராயாமல், வழமைபோல தங்கள் சுயநல அரசியல் நகர்வாக அவசர கதியில் தனித்து இதை மேற்கொள்வாராகின் அது தற்போது நடைபெறும் நிகழ்வுகளை குழப்பியடித்து, தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக அமையும்.

கஜேந்திரகுமார் இதுவரை உருப்படியாக ஒன்றையும் செய்யாததால் அவர் எதையும் ஓன்றுக்கு பலமுறை சிந்தித்து செயற்படவேண்டும்.

 

8 hours ago, போல் said:

இம்முறை அவரது கட்சிக்கு கிடைத்த வாக்குகள்  தமிழரசுக் கட்சியின் மீதுள்ள வெறுப்பால் வந்த வாக்குகள் என்பதையும் தனக்கு கிடைத்த வாக்குகள் இல்லை என்பதையும் விளங்கும் பக்குவம் கஜேந்திரகுமாருக்கு வரவேண்டும்.

கஜேந்திரகுமார் கிணற்றுத் தவளையாக நடத்தும் சுயநல அரசியலை கைவிட்டு தமிழர் உரிமைகளை வெல்லும் நோக்கில் ஏனைய நல்ல சக்திகளுடன் கைகோர்த்து யதார்த்த அரசியலை முன்னெடுக்க முன்வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

இல்லையென்றால் சுயநல அரசியலால் படுகுழிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் நிலையே இவருக்கும் ஏற்படும்.

இதற்கு முன்னால் தெரிபவர் கஜேந்திரகுமார் ஆக இருந்தாலும் இதற்க்கு பின்னால் முதமைச்சரும் புலம்பயர்ந்த ஆலோசகர்களும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.  இதுவரை இந்த அரசாங்கத்தின் மேற்கு ஆதரவு காரணமாக இலங்கையின் போர்க்குற்றங்களை  உலக அரசியல் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த அரசாங்கம் மேற்கு எதிர்ப்பு அரசாங்கமாக மாறும் நிலை இருக்கிறது. அதை சீனா எதிர்பார்க்கிறது. அமேரிக்கா அதை தடுக்க எதையும் செய்யும். இரு பகுதியும் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்டவை. ஆகவே அவர்களுக்கு இலங்கை போர்க்குற்றங்களை பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்று இலங்கையை இறுக்கும் தேவை வந்து இருக்கிறது. அதற்கு அவர்களுக்கு ஒரு வலுவான காரணம் தேவை. இந்த கையெழுத்து முயற்சி  அதுவாக இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.