Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்று படுமா தமிழ்த்தலைமைகள் ?

Featured Replies

ஒன்று படுமா தமிழ்த்தலைமைகள் ?

mmmmmm-e696cabfab70eda2a45257de97ae2ce7e0896414.jpg

 

2000ஆம் ஆண்­டு­களின் தொடக்­கத்தில், தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தற்­கான அவ­சியம் எழுந்­தது போன்ற சூழல் இப்­போது வடக்கில் மீண்டும் தோன்­றி­யி­ருப்­ப­தான கருத்து வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது.

வடக்கு, கிழக்கில் ஓரி­ரண்டு தவிர, மற்­றெல்லா உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் யாருக்கும் பெரும்­பான்மை பல­மில்­லாத ஊசல் நிலை ஒன்று தோன்­றி­யி­ருப்­பதும், தென்­னி­லங்­கையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ பலத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதும் இத்­த­கைய கருத்து வலுப்­பெற்­ற­மைக்கு முக்­கிய காரணம்.

தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தமக்­கி­டையில் மோதிக் கொள்ளத் தொடங்­கி­யுள்­ளதன் விளை­வாக, சிங்­களத் தேசி­ய­வாதக் கட்­சி­களும், தமிழ் மக்­களின் அர­சியல் நலன்­க­ளுக்கு மாறாகச் செயற்­பட்ட சந்­தர்ப்­ப­வாதக் கட்­சி­களும், தலை­யெ­டுக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

வடக்­கிலும் கிழக்­கிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றி­ருந்த ஏக­போக நிலையைக் கேள்­விக்­குட்­ப­டுத்தும் வகையில், மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. வடக்­கிலும் கிழக்­கிலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐ.தே.க, ­ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்­பன பெற்­றி­ருக்­கின்ற வாக்­கு­களும், ஆச­னங்­களும், ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

கடந்த காலங்­களில், இத்­த­கைய தேசியக் கட்­சி­க­ளுக்கு ‘முண்டு’ கொடுத்துக் கொண்­டி­ருந்த, சில சிறிய தமிழ்க் கட்­சி­களின் பிர­மு­கர்கள் கூட, தேசியக் கட்­சி­களின் நுழைவு ஆபத்­தா­னது என்று கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.

ஊச­லாடும் சபை­களின் நிர்­வா­கத்தை சீராக முன்­னெ­டுப்­ப­தற்­காக மாத்­தி­ர­மன்றி, தமிழர் தாயகப் பகு­தி­க­ளுக்குள், பேரி­ன­வாதக் கட்­சி­களின் நுழைவைத் தடுப்­ப­தற்­கா­கவும், மஹிந்த ராஜபக் ஷவை எதிர்­கொள்ளும் வியூ­கத்தை வகுப்­ப­தற்­கா­கவும், தமிழ்க் கட்­சிகள் இணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்ற கருத்து பல தரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.

தேர்தல் முடிவு அறி­விக்­கப்­பட்­டதும் யாழ்ப்­பா­ணத்தில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய, கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்­கொள்­வ­தற்கு, சமஷ்டித் தீர்வை வலி­யு­றுத்தும் தமிழ்த் தேசியக் கட்­சிகள் கொள்கை ரீதி­யாக இணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்­தி­ருந்தார்.

அதற்குப் பதி­ல­ளிக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றை நடத்­திய தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம், கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக தாம் பிர­சா­ரங்­களைச் செய்­தி­ருந்­தாலும், கூட்­ட­மைப்­புக்கோ, அதி­லுள்ள கட்­சி­க­ளுக்கோ தாம் எதி­ரா­ன­வர்கள் அல்ல என்றும், அத­னுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்குத் தாம் தயா­ரா­கவே இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவ­ரது அந்தக் கருத்து, மீண்டும் தமிழ்த் தேசி­ய­வாத நிலைப்­பா­டு­டைய கட்­சிகள் மத்­தியில் உற­வுகள் வலுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்குச் சாத­க­மா­ன­தாக இருந்­தாலும், அதற்­காக அவர் முன்­வைத்த நிபந்­தனை சிக்­க­லா­னது.

தமிழ் மக்­களை நடுத்­தெ­ருவில் கொண்டு வந்து நிறுத்­திய கூட்­ட­மைப்பின் தலை­மைகள், பங்­காளிக் கட்­சி­களின் தலை­மைகள் அதற்குப் பொறுப்­பேற்று, வெளி­யேற்­றப்­பட்டால், கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­படத் தயார் என்று கூறி­யி­ருந்தார் கஜேந்­தி­ர­குமார். வழக்­க­மாக, சம்­பந்தன், சுமந்­தி­ர­னுக்கு எதி­ராக ஏக வச­னத்தில் கூட விமர்­சனம் செய்து வந்த கஜேந்­தி­ர­குமார், இப்­போது, பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் அந்­தந்தக் கட்­சியில் இருந்து வெளி­யேற்ற வேண்டும் என்று கோரும் நிலைக்கு வந்­தி­ருக்­கிறார். இது நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான- ஒற்­று­மைக்­கான ஒரு கருத்­தாக அமை­ய­வில்லை. பிற­கட்­சி­களின் தலை­மையை அகற்­று­மாறு கோரும் உரிமை அந்­தந்தக் கட்­சி­களின் உறுப்­பி­னர்­க­ளுக்கு மாத்­திரம் இருக்­கி­ற­தே­யன்றி, இன்­னொரு கட்­சிக்குக் கிடை­யாது.

ஆனால் கஜேந்­தி­ர­கு­மாரின் கருத்து, அந்த உரி­மையை அவர் தான் வைத்துக் கொள்­வது போல அமைந்­தி­ருக்­கி­றது, கூட்­ட­மைப்பில் உள்ள எல்லா முக்­கிய தலை­வர்­க­ளையும் வெளி­யேற்றி விட்டு அந்த வெற்­றி­டத்தை தாம் அப­க­ரித்துக் கொள்­வ­தற்குத் திட்டம் போடு­கி­றாரோ என்ற நியா­ய­மான சந்­தே­கத்தை எழுப்பக் கூடி­யது அவ­ரது கருத்து, தமிழ்த் தேசிய கட்­சி­களை பலப்­ப­டுத்தி, தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்­டத்தை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற நிலையில், அதனை எந்­த­வொரு தரப்பும் தமது அர­சியல் நல­னுக்­காக பயன்­ப­டுத்திக் கொள்­வது நியா­ய­மல்ல. (6ஆம் பக்கம் பார்க்க)

ஓன்று படுமா?....(தொடர்ச்சி)

அதா­வது, கூட்­ட­மைப்பு தற்­போது ஏற்­பட்­டுள்ள சரிவில் இருந்து மீள்­வ­தற்கோ, அல்­லது, ஏனைய கட்­சிகள் கூட்­ட­மைப்பில் தமது ஆதிக்­கத்தை பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கோ என்­றில்­லாமல் பொதுக்­கொள்­கையின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வ­தற்­கான அழைப்பே பொது­வாக தமிழ் மக்­களால் விடுக்­கப்­பட்­டது.

சிங்­களப் பேரி­ன­வாதக் கட்­சிகள் வடக்கில் மக்கள் மத்­தியில் உள்ள வாழ்­வா­தார மற்றும் பொரு­ளா­தாரத் தேவை­களைப் பயன்­ப­டுத்தி, தமிழ் மக்­களின் வாக்­கு­களை சுரண்டத் தொடங்­கி­யுள்ள அபா­ய­க­ர­மான ஒரு சூழலில், தமிழ்த் தேசியக் கட்­சிகள் பல­வீ­ன­ம­டையத் தொடங்­கி­யுள்­ளன.

தனியே தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்­டத்­துடன் நின்று விடாது, அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு, முத­லீடு என்று கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­யங்­க­ளையும் இந்தத் தேர்தல் முடி­வுகள் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றன.

தமிழ் மக்­களின் உரிமைப் பேராட்டம் தொடங்கி, நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாகி விட்­டது. இந்தக் கால­கட்­டங்­களில் தமிழ் மக்கள் ஏரா­ள­மான பொரு­ளா­தார வாய்ப்­பு­க­ளையும், ஏனைய பிற வசதி வாய்ப்­பு­க­ளையும் இழந்­தி­ருக்­கி­றார்கள்.

போர் முடிந்து 9 ஆண்­டு­க­ளாகி விட்ட போதும், தமிழ் மக்­களால், நாட்டின் பிற பகு­தி­களில் வாழும் மக்­க­ளுடன் போட்டி போட முடி­யாமல் இருக்­கி­றது. வாழ்­வா­தார, பொரு­ளா­தாரப் போராட்­டத்தில் அவர்கள் விளிம்பு நிலையில் தான் நிற்­கி­றார்கள்.

உரிமைப் போராட்டம் என்ற கார­ணத்தைக் கூறி, தமிழ் மக்­களைத் தொடர்ந்தும் இதே நிலையில் வைத்­தி­ருக்க முடி­யாது. தமிழ் மக்­களைப் பொரு­ளா­தார ரீதி­யாகப் பல­ம­டையச் செய்­வதும் கூட, உரிமைப் போராட்­டத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வழி தான்.

ஆனால், தமிழ்த் தேசியக் கட்­சிகள் இந்தப் பக்­கத்தை பெரி­தாக கணக்கில் எடுத்துக் கொள்­வ­தே­யில்லை. அவர்கள் எப்­போதும் தமிழ் மக்­களை உணர்ச்­சி­ம­யப்­ப­டுத்தி, கொதி­நி­லையில் வைத்­தி­ருக்­கவே விரும்­பு­கின்­றனர் அதுவே தமது வாக்கு வங்­கியை தக்க வைக்கும் என்று கரு­து­கின்­றன.ர் ஆனால் அது நிரந்­த­ர­மா­ன­தல்ல.

தமிழ் மக்கள் மாற்று வாய்ப்­பு­க­ளையும் தேட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். தமது வாழ்­வா­தார, பொரு­ளா­தார வளப்­ப­டுத்­த­லுக்கு கைகொ­டுக்கக் கூடி­ய­வர்கள் என்று பேரி­ன­வாதக் கட்­சி­களை நோக்கி பாயத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இந்தத் தரு­ணத்தில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் விழித்துக் கொள்­வது முக்­கியம்.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலை விட தமக்கு நான்கு மடங்கு அதி­க­மான வாக்­குகள் கிடைத்­தி­ருப்­பதால், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தலைகால் புரி­யாமல் நிற்­கி­றது.

ஆனால், தமிழ் மக்­களை இதே சூழ­லுக்குள் வைத்­தி­ருக்க நினைத்தால், இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட சரிவு நாளை அவர்­க­ளுக்கும் ஏற்­ப­டாது என்று நிச்­ச­ய­மில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இன்­னமும் யாழ்ப்­பாண மக்­களின் கட்­சி­யாகத் தான் இருக்­கி­றது. அதற்கு வெளியே தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற முடி­ய­வில்லை.

வெறு­மனே, யாழ்ப்­பாண மக்­களின் கட்­சி­யாக வலுப்­பெ­று­வதால் மாத்­திரம், ஒரு கட்­சியால் ஒட்­டு­மொத்த தமிழ்­மக்­களின் பிர­தி­நி­தி­யாகி விட முடி­யாது.

வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பார்த்து, வடக்கு, கிழக்­குக்கு வெளியே தான் அதிக தமி­ழர்கள் வாழ்­கி­றார்கள் என்று கூறி­யவர் மஹிந்த ராஜபக் ஷ

அப்­ப­டி­யான நிலையில், யாழ்ப்­பா­ணத்தில் மாத்­திரம் செல்­வாக்குப் பெற்ற கட்­சி­யாக மாறி­யி­ருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும் நிலை இருக்­காது.

தாங்கள் வெற்­றி­பெறும் போது, தம்­மையும், கூட்­ட­மைப்­புக்குள் இழுத்துச் சென்று பல­வீ­னப்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்­களோ என்ற அச்சம் கஜேந்­தி­ர­குமார் போன்­ற­வர்­க­ளிடம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கூட்­ட­மைப்பு வெற்றி பெற்ற போது, ஒன்­று­ப­டுங்கள் என்று கோரா­த­வர்கள், கூட்­ட­மைப்பு சரிவைச் சந்­திக்கும் போது அவ்­வாறு கோரு­வது ஏன் என்­பது அவர்­களின் வாதம்.

ஆனால் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்ற போது, தமிழ் மக்­களின் வாக்­குகள் சித­ற­வில்லை. தமிழ் மக்­களின் வாக்­கு­களை பேரி­ன­வாதக் கட்­சி­களால் பெரி­ய­ளவில் ஊட­றுக்க முடி­ய­வில்லை. தமிழ் மக்­களின் பலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆனால் இப்­போது நிலைமை அப்­ப­டி­யில்லை. எல்­லாமே மாறத் தொடங்­கி­யுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சரிவைச் சந்­தித்­துள்­ளது என்­றாலும், அதனை ஈடு­கட்டும் வகையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி பேர­ரெ­ழுச்சி கண்­டுள்­ளதா என்று பார்க்க வேண்டும்.

கூட்­ட­மைப்பின் சரி­வுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் முன்­னேற்­றத்­துக்கும் இடையில் ஓர் இடை­வெளி உள்­ளது, அந்த இடை­வெ­ளியை பேரி­ன­வாதக் கட்­சி­களே நிரப்­பி­யி­ருக்­கின்­றன.

தமிழ்­மக்­களின் அபி­லா­சை­களை விட்­டுக்­கொ­டுக்­காத தமிழ்த் தேசிய கட்­சி­க­ளிடம் இருந்து, தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை விழுங்க எத்­த­னிக்கும் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுக்குச் சென்­றி­ருக்­கின்ற வாக்­குகள், தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்கி விடும்.

இது­வரை காலப் போராட்­டத்­தையும், அதன் பலன்­க­ளையும் சிதைத்து சின்­னா­பின்­ன­மாக்கி விடும்.

தமிழ் மக்­களின் வாக்­குகள் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததால் தான் இது­வ­ரையில் ஏதோ ஒரு பல­மான நிலை­யி­லா­வது வைத்துப் பார்க்­கப்­படும் நிலை காணப்­பட்­டது.

தமிழ்த் தேசிய கட்­சி­களின் மத்­தியில் தோன்­றி­யி­ருக்கும் முரண்­பா­டுகள், அதையும் தொலைத்து விட்டு நிற்­கின்ற நிலைக்குத் தான், கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது.

ஆபத்து ஒன்று தோன்றி வரு­வதை தமிழ்த் தலை­வர்கள் பலர் உணர்ந்­தி­ருக்­கி­றார்கள். இத்­த­கைய சூழலில் தான், மீண்டும் தமிழ்த் தேசிய நிலைப்­பா­டு­டைய கட்­சி­களை ஒன்­று­ப­டுத்த முடியும்.

ஆனால், இதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் விடாப்­பி­டி­யான போக்கும், நிலைப்­பாடும் சாத­க­மான சமிக்­ஞை­களை வழங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இப்­போது கிடைத்­துள்ள வெற்­றியை அடுத்­த­தாக, மாகாண சபை­யிலும், பாரா­ளு­மன்­றத்­திலும் அறு­வடை செய்யும் ஆவல் அவர்களுக்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அரசியல் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவர்கள் அவர்கள்.

இதுவரை நெருக்கடிகளை எதிர்கொண்டு விட்டு, அதற்கான பலனை அறுவடை செய்யத் தொட்ங்கியுள்ள போது, ஒற்றுமை என்ற பெயரில் ஒரு சூறாவளி வந்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் நியாயம் இல்லை என்று கூற முடியாது.

ஆனால், தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்ட ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் நலன்கள் தான் முக்கியம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தனிப்பட்ட சுகநலன்களுக்காக கொழும்பு அரசுக்கு விலைபோய் விட்டார்கள் என்று தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டி வந்தது.

இப்போது, தமிழ் மக்களின் நலன்கள் என்று வரும் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு தான் நடந்து கொள்ளப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள், நலன்களைக் கடந்த ஓர் ஒற்றுமையைத் தான் தமிழ்த் தேசிய இனம் இன்று எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் நிறைவேற்றுமா?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-18#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற காலம் கடந்த ஞானம் சிலவேளைகளில் பலருக்கு வருவதுண்டு. யதார்த்தமான கருத்துகள் எனினும் இதை  தீர்க்கதரிசனத்துடன் தமிழ்  மக்களின் கவனத்திற்கு   முன்னரே கொண்டு செல்லும் வேலையை தமிழ் அரசியல் தலைமைகள் செய்யவில்லை.

தமிழர்கள் எந்த அடிப்படையிலும் ஓரணியில் நிற்கக் கூடாது என்பதற்காக இந்திய மற்றும் சிறீலங்காப் புலனாய்வுகள் வேலை செய்கின்றன. எமக்கு பொது வாக்கெடுப்பெல்லம் நடக்காது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் ஆணையைக் காட்ட 1977 பொதுத் தேர்தலைப் பயன்படுத்தியது போல், இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஓரணியில் நின்று தமது அரசியல் பேணவாக்களை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பது தமிழினப் பகைகளின் விருப்பு. தமிழர்களை பலவாறு சிதைப்பது தான் அவர்களின் இலக்கு. காங்கிரசைக் காப்பாற்ற நிற்கும் கசேந்திரகுமாரின் செயற்பாடுகளும் இதற்கு வசதியாகி விட்டது. கூட்டமைப்பின் செயலற்றதன்மையால் தமிழர்களுக்கு நடந்தேறும் இந்த அவலத்தைத் தடுக்க முடியாதுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.