Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள்

Featured Replies

சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள்

Mahinda-jan-6-2014-4a9cf35a0537249909bed8d6730bcc5c56d7da19.jpg

 

சாட்­சிக்­காரன் காலில் விழு­வதை விட சண்­டைக்­காரன் காலில் விழு­வது மேல் என்­றொரு பழ­மொழி. இந்தப் பழ­மொ­ழியைத் தான் இப்­போது தமி­ழர்கள் நாடு­கி­றார்­களோ என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தேசியக் கட்­சி­களின் ஆதிக்கம் வடக்கில் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருப்­பது மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்­சியை மையப்­ப­டுத்தி வெளி­வரும் கருத்­துக்­களில் இருந்தே, இந்த விவ­கா­ரத்தைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

முதலில் மஹிந்த ராஜபக் ஷவின் மீள்­வ­ரு­கையை சாத­க­மா­ன­தாக தமிழர் தரப்­பிலும் சிலர் நோக்கத் தொடங்­கி­யுள்­ளதைப் பற்றிப் பார்க்­கலாம்.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், தெற்கில் தோன்­றி­யுள்ள ராஜபக் ஷ அலையை அடுத்து, சிலர் அவரைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளனர். அவர் மூலம் தமது பிரச்­சி­னையை தீர்க்­கலாம் என்று நம்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

பிபி­சி­யிடம் கருத்து வெளி­யிட்­டுள்ள காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பெற்றோர் தரப்பின் பிர­தி­நிதி ஒருவர், தமது உற­வு­களைக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி எந்த உத­வியும் செய்­யாத நிலையில், மஹிந்த ராஜபக் ஷவே அதனைச் செய்யக் கூடி­யவர் என்ற ஒரு சிறிய நம்­பிக்கை தமக்குப் பிறந்­தி­ருப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார்.

அவ­ரது காலத்தில் காணா­மல்­போகச் செய்­யப்­பட்­ட­வர்கள் குறித்து அவரே பதி­ல­ளிக்க வேண்டும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

காணாமல் போன­வர்கள் தொடர்­பாக பதி­ல­ளிப்­ப­தற்­கான கடப்­பாட்டைத் தாம் கொண்­டி­ருப்­ப­தாக, மஹிந்த ராஜபக் ஷ கரு­தி­யி­ருந்தால், அதனை அவர் ஆட்­சி­யி­லி­ருந்த காலத்­தி­லேயே செய்­தி­ருப்பார்.

அப்­போது அதனைச் செய்­யா­தவர் மீண்டும் ஆட்­சிக்கு வந்து அதனைச் செய்வார், என்று நம்பும் நிலைக்கு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இது அவர்­களின் ஏமாற்­றத்­தையும், தடு­மாற்­றத்­தை­யுமே வெளிப்­ப­டுத்­து­கி­றது..

இந்த விட­யத்தில் மாத்­தி­ர­மன்றி, ஏனைய பல விட­யங்­க­ளிலும் தமிழர் தரப்பில் பலரும் இது­போன்ற தடு­மாற்­றங்­க­ளையே கொண்­டி­ருக்­கின்­றனர்.

ஓர் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­றா­விடின், இன்­னொரு தெரிவை நாடு­வது தான், வாக்­கா­ளர்­களின் இயல்­பான மனோ­நிலை. அத்­த­கை­ய­தொரு சாதா­ரண மனோ­நி­லைக்கு தமிழர் தரப்பில் ஒரு பகு­தி­யி­னரும் விதி­வி­லக்­கா­ன­வர்கள் அல்ல என்­பது உறு­தி­யாகத் தெரி­கி­றது.

தெற்கில் தோன்­றி­யுள்ள ராஜபக் ஷ அலை என்­பது, சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் வழியே கட்­ட­மைக்­கப்­பட்­டது என்ற உண்­மையை உண­ராமல் தான், அவரைக் கொண்டு தமது பிரச்­சி­னை­களைத் தீர்க்­கலாம் என்று தமிழர் தரப்­புக்கு சிலர் நம்­பு­கின்­றனர்.

ராஜபக் ஷ முடி­வெ­டுப்­பதில் உறு­தி­யா­னவர். ஆனால் தனது நிலைப்­பாட்டில் எப்­போதும் இறுக்­க­மா­னவர். மஹிந்த ராஜபக் ஷ ஒரு­போதும், தமிழர் தரப்பின் உரி­மை­களை விட்டுக் கொடுக்க இணங்­கி­ய­வ­ரில்லை.

அண்­மைய தேர்­தலில் கூட, தாமே தூய தமிழ்த் தேசி­ய­வா­திகள், என்று அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்ட தரப்­பி­னரால், ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பு யோசனை என்று கூறி நிரா­க­ரிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கையை இது சமஷ்­டியே, தனி­நாட்டை கொடுக்கப் போகி­றது என்று பிர­சா­ரப்­ப­டுத்­தியே சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றவர் மஹிந்த.

அப்­ப­டிப்­பட்ட மனோ­நி­லையில் உள்­ள­வ­ரிடம், அத்­த­கைய வாக்­கு­று­தியைக் கொடுத்த ஒரு­வ­ரிடம் இருந்து, எவ்­வாறு தமி­ழர்கள் தமக்­கான உரி­மை­க­ளையும், தேவை­க­ளையும் நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழு­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம், தமிழ் மக்கள் கேள்வி கேட்­ப­தற்கு தார்­மிக உரிமை இருக்­கி­றது. ஏனென்றால், அவரை பத­விக்குக் கொண்டு வந்­த­வர்கள் தமி­ழர்கள்.

ஆனால் ராஜபக் ஷவை நோக்கி அத்­த­கைய தார்­மிக உரி­மை­யோடு கேள்வி எழுப்ப முடி­யாது. அவர் சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­க­ளினால் தான், வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார். அவர்­களின் நிலையில் இருந்தே செயற்­ப­டு­வா­ரே­யன்றி, தமிழ் மக்­களின் மீது அவர் கரி­சனை கொள்வார் என்று நம்ப முடி­யாது. உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் தீவிர விசு­வா­சி­களில் ஒரு­வ­ரான, உதய கம்­மன்­பில, தாமரை மொட்டை, தமிழ் வண்­டு­களும், முஸ்லிம் தேனீக்­களும் வட்­ட­ம­டிக்கும் என்று கூறி­யி­ருந்தார்.

சந்­தி­ரி­காவின் காலத்தில் தமி­ழர்கள், சிங்­களப் பெரும்­பான்­மை­யி­ன­ரான செடி­களின் மீது படர்­கின்ற கொடிகள் என்று கூறப்­பட்ட கருத்து பெரும் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது,

அது­போலத் தான், மொட்டைச் சுற்றி வட்­ட­ம­டிக்கும், தேனீக்­க­ளா­கவும், வண்­டு­க­ளா­கவும், தான் சிங்­களப் பேரி­ன­வா­திகள் தமி­ழர்­களைப் பார்க்­கின்­றனர்.

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்­சிக்கு வந்தால், அவரைக் கொண்டு பிரச்­சி­னை­களைத் தீர்க்­கலாம் என்று நம்­பு­கின்ற தரப்­பாக ஒன்றும், அவர் எதற்கும் இணங்­க­மாட்டார் என்­பதால், தமி­ழர்கள்

எதிர்ப்பு அர­சி­யலை இல­கு­வாக கையா­ளலாம், சர்­வ­தே­சத்தை தமது பக்கம் திருப்­பலாம் என்று மற்­றொரு தரப்­பி­னரும், கணக்குப் போடு­கின்­றனர். 

இது தமி­ழரின் அர­சியல் போக்கு, கிட்­டத்­தட்ட, 13 ஆண்­டு­க­ளுக்குப் பின்­நோக்கித் திரும்பிச் செல்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

2005 பாரா­ளு­மன்றத் தேர்­தலைப் புறக்­க­ணிக்க விடு­தலைப் புலிகள் கோரினர். அதற்குக் காரணம், கடும்­போக்­கா­ள­ரான மஹிந்த ராஜபக் ஷவை போரில் இல­கு­வாகத் தோற்­க­டித்து விடலாம் என்ற கணிப்புத் தான்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யானால் அவ­ருடன் பேசியும் எதையும் பெற முடி­யாது, சண்­டை­யையும் பிடிக்க முடி­யாது என்­பது புலி­க­ளுக்குத் தெரியும். அவ­ரது சர்­வ­தேச ஆத­ரவுத் தளம் தமக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்றும் புலிகள் கரு­தி­யி­ருந்­தனர்.

அதனால் தமி­ழர்­களே வாக்­க­ளிக்­காமல், ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கினர். அப்­போது அந்தத் தெரிவு தப்­பாகிப் போனது. அது புலி­க­ளுக்கே ஆபத்­தா­ன­தா­கவும் அமைந்­தது.

அந்த முடி­வுக்குப் பின்­னரும் தமிழர் தரப்பில் உள்ள சிலர் இன்­னமும் பாடம் கற்­றுக்­கொள்­ள­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்குக் கொண்டு வந்தால், ஏதோ சர்­வ­தேசம் எல்­லா­வற்­றையும் பிடுங்கிக் கொடுத்து விடும் என்ற கனவில் மிதக்­கி­றார்கள்.

பூகோள அர­சி­யலைக் கையாளும் திறன், மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இருக்­கி­றது என்­பதை யாரும் மறந்து விடக் கூடாது. பூகோள அர­சி­யலைத் தனக்குச் சாத­க­மாக வளைத்துக் கொள்­வதில் மஹிந்த ராஜபக் ஷ சளைத்­த­வ­ரில்லை.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் என்று அடை­யா­ளப்­ப­டுத்தி அவர் தொடுத்த, தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான போரே அதற்கு சரி­யான உதா­ரணம்.

அதற்குப் பின்­னரும், இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் எதிர்ப்­பு­க­ளை­யெல்லாம் புறந்­தள்ளி, சீனாவை இன்று இலங்­கையின் தவிர்க்க முடி­யாத தலை­யீட்டு சக்­தி­யாக கொண்டு வந்து சேர்த்­த­வரும் அவர் தான்.

அதுவே அவ­ருக்கு 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யையும், பாடத்­தையும் கற்றுக் கொடுத்­தது. மீண்டும் ஆட்­சிக்கு வரக்­கூ­டிய மஹிந்த ராஜபக் ஷ இன்­னொரு தரம், தவறு செய்வார் என்று நம்ப முடி­யாது.

சர்­வ­தேச அர­சியல் போக்­கு­களை அனு­ச­ரிக்கத் தவ­றி­யதே தமது ஆட்சி பறி­போகக் காரணம் என்ற பாடத்தைப் படித்த அவர் மீண்டும் அதே தவறை இழைக்க முனை­ய­மாட்டார்.

மேற்­கு­ல­கத்­தையும் இந்­தி­யா­வையும் தனது கைக்குள் போட்டுக் கொள்­வா­ரே­யானால், அவர் எந்தப் பிரச்­சி­னை­யு­மின்றி ஆட்­சியைத் தொடர முடியும்.

அப்­ப­டி­யான ஒரு அணு­கு­மு­றையை அவர் தெரிவு செய்தால், சர்­வ­தே­சத்­திடம் நீதியைப் பெறும் தமி­ழர்­களின் கனவும் பொசுங்கிப் போகும்.

மஹிந்த ராஜபக் ஷ இப்­போது உள்­ளது போன்ற நெகிழ்­வுத்­தன்­மையைக் கடைப்­பி­டிக்­க­மாட்டார், அவர் இறுக்­க­மான போக்கை கடைப்­பி­டிப்பார். அது தமி­ழர்­களின் உணர்­வு­களைக் கொதி நிலையில் வைத்­தி­ருக்கும். அதனைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி, அர­சியல் செய்­யலாம் என்று நம்பும் தரப்­பு­களும் தமிழர் தரப்பில் இருக்­கலாம்.

அது பிரச்­சி­னை­க­ளையும் பிரச்­சி­னை­களைச் சார்ந்த அர­சி­ய­லையும் நீடிப்புச் செய்­யுமே தவிர, முடி­வுக்குக் கொண்டு வராது. பிரச்­சி­னை­களை நீட்டி, அர­சி­யலில் குளிர் காய விரும்­பு­ப­வர்­க­ளுக்கே அவ­ரது போக்கு கைகொ­டுக்கும்.

தெற்கில் மஹிந்­தவின் எழுச்­சி­யையும், வடக்கில் தேசியக் கட்­சி­களின் வளர்ச்­சி­யையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அர­சாங்­கத்தில் உள்ள தேசியக் கட்­சிகள் தமி­ழர்­களை நோக்கி வெகு­வாக நகர்ந்­தி­ருக்­கின்­றன. தற்­போ­தைய தேர்தல் முறையும் அதற்கு கை கொடுத்­தி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கட்­சிகள் மத்­தியில் உள்ள பிள­வு­களால் ஏற்­பட்ட அதி­ருப்தி, அவற்றின் மீதான நம்­ப­கத்­தன்மை இழப்பு, தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு ஆகி­ய­வற்றை முதன்­மைப்­ப­டுத்தும் வாக்­கா­ளர்கள் தேசியக் கட்­சி­களின் பக்கம் சாயத் தொடங்­கி­யுள்­ளனர்.

தமிழ்த் தேசியக் கட்­சி­களால், பொரு­ளா­தார ஆதா­யங்­களைப் பெற முடி­யாது, வேலை­வாய்ப்பு போன்­ற­வற்றை அடைய முடி­யாது என்­பதை உணர்ந்து, தேசியக் கட்­சி­களின் மீது அத்­த­கைய வாய்ப்­பு­க­ளுக்­காக தமி­ழர்கள் திரும்­பி­யுள்­ளனர்.

இலங்­கையின் ஏனைய பகு­தி­களில் வாழும் மக்­களைப் போல, பொரு­ளா­தார, வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள தமிழ் மக்­களும் தலைப்­ப­டு­கின்­றனர். கொள்­கையை மட்டும் பேசிக் கொண்­டி­ருப்­பதால் அது சாத்­தி­ய­மில்லை என்­பதை அவர்கள் உணரத் தொடங்­கி­யுள்­ளனர்..

தமி­ழர்கள் மத்­தியில் சலுகை, பொரு­ளா­தார ஆதா­யங்கள் செல்­வாக்குச் செலுத்த ஆரம்­பித்­துள்­ள­மைக்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன. இன்­னமும் பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னே­றாத மக்கள் அதற்­கான வாய்ப்­புகள் எங்­கி­ருந்து கிடைக்­கின்­றன என்­பதை பகுத்­த­றிந்து பார்க்கத் தயா­ராக இல்லை.

அவர்­க­ளுக்கு, தமது முன்­னேற்­றத்தை அடை­வ­தற்­கான வழிதான் முதன்­மை­யா­ன­தாகத் தெரி­கி­றது.

இன்னும் பத்து பதி­னைந்து ஆண்­டு­களில் இந்த நிலை மேலும் மோச­ம­டையும். ஏனென்றால், புலம்­பெ­யர்ந்து வாழும் உற­வு­களின் உத­வி­களில் தங்­கி­யி­ருப்போர், அங்­கி­ருந்து வரும் உத­வி­களில் கணி­ச­மா­ன­வற்றை இன்னும் 10 ஆண்­டு­களில் இழந்து விடுவர்.

புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்­கு­மான உறவுகளில் இப்போதே இடைவெளி அதிகரித்து விட்டது. முன்னரைப் போன்று இப்போது வெளிநாட்டு நிதிப் பாய்ச்சல் இல்லை.

வெளிநாடுகளில் உள்ள உறவுகள் தமக்கான தேவைகள் வசதிகளை பெருக்கிக் கொள்ள முனையும் போது, இங்கு அனுப்பும் பணத்தை குறைத்து விடுவர். அது வடக்கின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.

அப்போது சலுகை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை நோக்கிய அரசியல் இன்னும் கூடுதலாக முனைப்படையும். தேசியக் கட்சிகள் திறந்து விடப் போகும் அத்தகைய வாய்ப்புகளுடன் போராட முடியாத நிலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏற்படும்.

சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்று தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கினால், அல்லது தமிழ் மக்களை அவ்வாறு சிந்திக்கத் தூண்டினால் அதன் விளைவை தமிழ்த் தேசியக் கட்சிகள் தான் அறுவடை செய்யும்.

அத்தகையதொரு அகோரப் பசியுடன் தான் சிங்களப் பேரினவாதப் பூதம், காத்திருக்கிறது.. அந்த இரையை அடைவதற்காக சிங்களப் பேரினவாதப் பூதம் தன்னை மறுவடிவமைத்துக் கொள்ளவும், ஒருபோதும் தயங்காது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-18#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சரி மூன்று வருடமாக சதிகாரரை நம்பித்தான் நடந்ததென்ன?

பயங்கரவாத தடுப்பு சட்டத்தைக் கூட இன்னமும் இல்லாமல் பண்ண முடியவில்லை.

100 நாட்களுக்குள் எத்தனை விளையாட்டு நடக்கப் போகுது என்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்னமும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வருவது, சீனா மீதான பயம் காரணமாக, எதிர்மறையாக நன்மை தரலாம்.

ரணிலின் மத்திய வங்கி பிணைமுறி அவரை விழுத்தப் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

பிபி­சி­யிடம் கருத்து வெளி­யிட்­டுள்ள காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பெற்றோர் தரப்பின் பிர­தி­நிதி ஒருவர், தமது உற­வு­களைக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி எந்த உத­வியும் செய்­யாத நிலையில், மஹிந்த ராஜபக் ஷவே அதனைச் செய்யக் கூடி­யவர் என்ற ஒரு சிறிய நம்­பிக்கை தமக்குப் பிறந்­தி­ருப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார்.

அவ­ரது காலத்தில் காணா­மல்­போகச் செய்­யப்­பட்­ட­வர்கள் குறித்து அவரே பதி­ல­ளிக்க வேண்டும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ராஜபக்ச வந்து மைத்திரியை சாட்டுச்சொல்ல எல்லாம் கணக்காய் வரும்..

6 hours ago, ஈழப்பிரியன் said:

சரி மூன்று வருடமாக சதிகாரரை நம்பித்தான் நடந்ததென்ன?

பயங்கரவாத தடுப்பு சட்டத்தைக் கூட இன்னமும் இல்லாமல் பண்ண முடியவில்லை.

100 நாட்களுக்குள் எத்தனை விளையாட்டு நடக்கப் போகுது என்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்னமும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், வெளிப்புறம் மற்றும் இயற்கை

வண்டில் எண்டால் அது வலு ஆறுதலாய்த்தான் போகும்...tw_glasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.