Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்தவரென கருதப்பட்டவர் 2 வருடங்களுக்கு பின்பு திரும்பிய அதிசயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவரென கருதப்பட்டவர் 2 வருடங்களுக்கு பின்பு திரும்பிய அதிசயம்

[21 - March - 2007]

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீதி விபத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்டவர் மீண்டும் தன் குடும்பத்தாருடன் சேர்ந்த அதிசய சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மலேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி விபரம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சாமிபிள்ளை (வயது 50). இவருக்கு மனைவியும், ஒன்பது குழந்தைகளும் உள்ளனர் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாமிபிள்ளை சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதியது. சைக்கிளின் அருகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒருவரது பிணம் இருந்தது. இறந்தவர் பிள்ளைதான் என்று நம்பிய அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்குகளை செய்தனர். விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கோலாலம்பூருக்கு 300 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பகுதியில் அன்ட்ரூ ராஜூ என்பவர் எதிர்பாராதவிதமாக சாமிபிள்ளையைப் பார்த்தார். ஆனால், வீதி விபத்தால் கை, கால்கள் பாதிக்கப்பட்டிருந்த சாமிப்பிள்ளை நடக்க முடியாத நிலையில் இருந்தார். ஊன்று கோலுடன் அப்பகுதியில் திரிந்து கொண்டிருந்த அவரை அன்ட்ரூராஜூ என்பவர் கோலாலம்பூருக்கு அழைத்து வந்தார். அவருடைய கைரேகைகளை வைத்து அவரை சாமிபிள்ளை என்று உறுதிப்படுத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரை பார்த்த அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் அவரை அழைத்து இருந்தாலும், இத்தனை நாட்களாக அவர் ஏன் குடும்பத்தாரை தொடர்பு கொள்ளவில்லை என்பது மர்மமாக உள்ளது.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவ இடத்திலிருந்து கை கால் ஏலாத இவரால் எப்படி விலகி செல்ல முடிந்தது? நம்பிற மாதிரி கதையா இல்லையே இது.

இந்த கதையில் ஏதோ மர்மம் இருக்குது என்று நான் நினைக்கிறேன்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவ இடத்திலிருந்து கை கால் ஏலாத இவரால் எப்படி விலகி செல்ல முடிந்தது? நம்பிற மாதிரி கதையா இல்லையே இது.

நீர் உண்மையிலயே 007தான்

  • கருத்துக்கள உறவுகள்

;வெள்ளை வானில் போயிருப்பார். :P :lol:

சம்பவ இடத்திலிருந்து கை கால் ஏலாத இவரால் எப்படி விலகி செல்ல முடிந்தது? நம்பிற மாதிரி கதையா இல்லையே இது.

புறப்படுமையா 007 துப்பறிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறப்படுறான் இந்த புல்லட்டு

பிரச்சனைன்னு வந்தா றிப்பீட்டு

புறப்படுறான் இந்த புல்லட்டு

பிரச்சனைன்னு வந்தா றிப்பீட்டு

துப்பறியப் போவது யாரு,..........? நம்ம 007 :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துல்ல நிறைய துப்பறி.........வாளர்கள் இருக்கினம்

புறப்படுறான் இந்த புல்லட்டு

பிரச்சனைன்னு வந்தா றிப்பீட்டு

எப்ப அட்மிட்டு ஆகுவீங்கள் ஆஸ்பத்திரியில வடிவேல்

;)

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில்(சத்துருக் கொண்டான் என நினைக்கிறேன்) முன்பு ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆண்களை இராணுவம் பிடித்து சுட்டுவிட்டு உயிருடன் எரிக்க, அதில் இருந்து தப்பி ஒடியவர் இன்னொரு இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு தென் மகாண சிறை ஒன்றில் வைக்கப்பட 18 வருடங்களுக்கு பின்பு அவர் தப்பி ஒடி வந்த சம்பவமும் நடைபெற்று இருக்கிறது. அவரது குடும்பத்தினர் அவர் இறந்து விட்டதாகவே எண்ணி இருந்தார்கள் . ஈழத்தில் இப்படி எத்தனை எத்தனை உண்மைச் சம்பவங்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஊரில் எனக்குத் தெரிந்த ஒருவர் மன்னாரில் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார் என்று செய்தி வர அவருடைய வீட்டில் அவரின் உடல் இல்லாமல் செத்தவீடு கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் அவ்வூரில் உள்ளவர் தொலைபேசியில் மன்னாரில் உள்ள ஒருவருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி விட்டு ஊர் புதினம் பற்றிக் கதைக்க, இறந்தவர் பற்றியும் சொன்னார். அப்பொழுது மன்னாரில் உள்ளவர் 'என்ன விசர் கதை கதைக்கிறீர்கள். பக்கத்தில் தான் அவர் உயிரோடு இருக்கிறார்' என்று சொல்லி அவரிடம் தொலை பேசியில் கதைக்கவிட்டார். இறந்தவர் வேறு ஒருவர் . ஆனால் ஒரே பெயர் என்பதினால் பெயர் குழப்பம் ஏற்பட்டது. பிறகு செத்தவீட்டுக்கு செய்தி போக செத்தவீடு சந்தோச வீடாக மாறியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.