Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்

Featured Replies

222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்

 

Srilanka-Electionமாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும், 222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன விகிதாசார அடிப்படையில், மொத்தமுள்ள 22 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளில், 175 தொகுதிகள் சிங்களவர்களுக்கானதாகவும், 25 தொகுதிகள் தமிழர்களுக்கானதாகவும், 13 தொகுதிகள் முஸ்லிம்களுக்கானதாகவும், 9 தொகுதிகள் , மலையகத் தமிழர்களுக்கானதாகவும் உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின் போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

222 மாகாணசபைத் தொகுதிகளில் 13 உறுப்பினரை மாத்திரமே முஸ்லிம்கள் பெற முடியும் என்றும், 9 மாகாணங்களில் 5 மாகாணசபைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்றும், எல்லை வரையறுக்கும் குழுவில் இடம்பெற்றிருந் பேராசிரியர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

“இது கவலை தரும் விடயம். ஆனால் எல்லை வரையறை செய்யும் குழு சட்டத்தின்படியே செயற்பட முடியும். இந்த விவகாரத்தை தீர்க்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை பொருத்தமான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/04/news/29469

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

 

இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும், 222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன விகிதாசார அடிப்படையில், மொத்தமுள்ள 22 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளில், 175 தொகுதிகள் சிங்களவர்களுக்கானதாகவும், 25 தொகுதிகள் தமிழர்களுக்கானதாகவும், 13 தொகுதிகள் முஸ்லிம்களுக்கானதாகவும், 9 தொகுதிகள் , மலையகத் தமிழர்களுக்கானதாகவும் உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின் போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

222 மாகாணசபைத் தொகுதிகளில் 13 உறுப்பினரை மாத்திரமே முஸ்லிம்கள் பெற முடியும் என்றும், 9 மாகாணங்களில் 5 மாகாணசபைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்றும், எல்லை வரையறுக்கும் குழுவில் இடம்பெற்றிருந் பேராசிரியர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

“இது கவலை தரும் விடயம். ஆனால் எல்லை வரையறை செய்யும் குழு சட்டத்தின்படியே செயற்பட முடியும். இந்த விவகாரத்தை தீர்க்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை பொருத்தமான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்

http://puttalamtoday.com

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை டுடே வந்து கத்தினாலும் இனவாத சிங்களவனின் அடுத்த குறி இவர்கள்தான் .

  • தொடங்கியவர்

எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையில் மாகாணசபைகளின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு ஆப்பா?

 

Screen Shot 2018-02-22 at 7.03.55 PM

கடந்தாண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சட்டத்தின் 17ஆவது திருத்தச்சட்டப்படி மாகாண சபைகளின் எல்லைகளை வகுப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த எல்லை நிர்ணயக் குழு அதன் அறிக்கையை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு திங்களன்று கையளித்தது.

மாகாண சபைத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றுப்படி நாட்டில் 222 தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 222 தொகுதிகளுக்கு 50சதவீதம் தொகுதி முறைப்படியும் 50 சதவீதம் விகிதாசார முறைப்படியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

கலாநிதி தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த ஐவர் கொண்ட குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக சர்வகட்சி மகாநாடொன்றைக் கூட்டி ஆராயப்பட்ட பின்பே அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா புறம்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பித்து இந்த அறிக்கையின் சிபாரிசுகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி நாட்டில் தொகுதி மட்டத்தில் 13 முஸ்லிம்களே தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் ஹஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கூடிய வகையில் பேராசிரியர் ஹஸ்புல்லா பல சிபாரிசுகளை முன்வைத்த போதும் எல்லை நிர்ணயக்குழுவின் பெரும்பான்மையினர் அதற்கு ஆதரவு வழங்காததன் காரணமாகவே அவர் தனியாக STRONG RESERVATION என்ற தலைப்பில் புறம்பான அறிக்கை ஒன்றை அறிக்கையுடன் இணைத்து வழங்கியுள்ளார்.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் முறையில் இடம்பெற்ற தவறு போன்று மாகாணசபை தேர்தல் முறையிலும் தவறு ஏற்பட இடமளித்தால் மாகாண சபைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைய இடமுண்டு.

விகிதாசாரத் தேர்தல் முறையில் கடந்த காலத்தில் மாகாண சபையில் முஸ்லிம்களின் விகிதா சாரத்துக்கு ஏற்ப நாட்டின் அநேக மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. தவலிங்கம் அறிக்கை அப்படியே அமுல்நடத்தப்பட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம். எனவே இது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றாக செயற்பட்டு மாகாண சபைகளில் முஸ்லிம்களது விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைப்பதனை உறுதி செய்ய முன்வர வேண்டும்

http://www.dailyceylon.com/151392

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.