Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி!

Featured Replies

இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி!

aaaaaaaaaaaa-8e5601991bd7594803b8a8dea914b05c8e5336c1.jpg

 

மத்­தல விமான நிலை­யத்தின் மீது சில உரி­மைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமா­னப்­ப­டையின் தரப்பில் இருந்து விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அவ­சர தேவை­களின் போதும், தேசிய பாது­காப்பு பயன்­பா­டு­க­ளுக்­கா­கவும், மத்­தல விமான நிலை­யத்தின் ஓடு­பா­தையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தமக்கு அனு­மதி அளிக்­கப்­பட வேண்டும் என்­பது விமா­னப்­படை விடுத்­துள்ள முத­லா­வது கோரிக்கை.

தேவைப்­பட்டால் இரா­ணுவத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கென, விமான நிலை­யத்தில், ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்­பது விமா­னப்­படை முன்­வைத்­துள்ள இரண்­டா­வது கோரிக்கை.

தேசிய பாது­காப்பு நலன்­களைக் காரணம் காட்­டியே விமா­னப்­படை இந்தக் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார், சிவில் விமான நிலை­யங்கள் மற்றும் விமான சேவைகள் அதி­கார சபையின் பணிப்­பாளர் நிம­ல­சிறி.

மத்­தல விமான நிலை­யத்தை இந்­தி­யாவின் விமான நிலைய அதி­கார சபை­யுடன் இணைந்து கூட்டு முயற்­சி­யாக அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான பேச்­சுக்­களில் அர­சாங்கம் தீவி­ர­மாக இறங்­கி­யுள்ள நிலையில், விமா­னப்­ப­டையின் தரப்பில் இந்தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

மத்­தல விமான நிலை­யத்தை அமைக்கத் திட்­ட­ மி­டப்­பட்ட போது, அதற்­கென 2000 ஹெக்டேயர் நிலம் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்­டது. எனினும், முதற்­கட்­ட­மாக 800 ஹெக்­டேயர் நிலப்­ப­ரப்பில் தான் இந்த விமான நிலையம் அமைக்­கப்­பட்­டது. காலப்­போக்கில் அதனை விரி­வு­ப­டுத்தும் திட்­டத்­துடன், 1200 ஹெக்­டேயர் நிலம் ஒதுக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

மத்­தல விமான நிலையம் பய­ணி­களோ, விமா­னங்­களோ வரு­கை­யின்றி தூங் கிக் கிடக்­கின்ற நிலையில், இதனை எப்­ப­டி­யா­வது யாரு­டைய தலை­யி­லா­வது கட்டி விட வேண்டும் என்­பது தான் அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்பு.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் அம்­பாந்­தோட்­டையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வெள்ளை யானைத் திட்­டங்கள் என்று கூறப்­பட்ட இரண்டில், ஒன்று தான் மத்­தல விமான நிலையம். அடுத்­தது அம்­பாந்­தோட்டை- மாகம்­புர துறை­முகம்.

நட்­டத்தில் இயங்கிக் கொண்­டி­ருந்த- கொழும்பு துறை­மு­கத்தின் மூலம் பெறும் வரு­வாயைத் தின்று கொண்­டி­ருந்த அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை ஒரு­வ­ழி­யாக சீனாவின் தலையில் கட்டி விட்­டது அர­சாங்கம்.

99 வருட குத்­த­கைக்கு அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீன நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்டு விட்ட நிலையில், மத்­தல விமான நிலை­யத்­தையும் எப்­ப­டி­யா­வது இந்­தி­யாவின் தலையில் கட்டி விட வேண்டும் என்­பது அர­சாங்­கத்தின் திட்­ட­மாக இருக்­கி­றது.

இந்­தி­யா­வுடன் இது தொடர்­பாக அர­சாங்கம் பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்­றது. விரைவில் இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­படும் என்று கூறப்­பட்­டாலும், பேச்­சுக்­களில் இழு­ப­றிகள் காணப்­ப­டு­கின்­றன.

30 வீத பங்­கு­களை இலங்கை வைத்துக் கொண்டு, தம்­மிடம் 70 வீத பங்­கு­களைத் தந்து விட வேண்டும் என்­பது இந்­தி­யாவின் முத­லா­வது நிபந்­தனை.

அத்­துடன் முதற்­கட்­ட­மாக 40 ஆண்­டு­க­ளுக்கு இந்தத் திட்­டத்தை செயற்­ப­டுத்­தலாம் என்றும், பின்னர், அதனை நீடிப்­பது குறித்து ஆரா­யலாம் என்றும் இந்­தியா கூறு­கி­றது.

எனினும், இந்­தி­யா­வுக்கு 70 வீத பங்­கு­களை விட்டுக் கொடுக்க இலங்கை அர­சாங்கம் தயா­ராக இல்லை. தமக்கு இன்னும் அதிக பங்கு தேவைப்­ப­டு­வ­தாக பேரம் பேசு­கி­றது.

அதை­விட, மத்­தல விமான நிலை­யத்தை பாது­காப்புத் தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்தக் கூடாது என்­பதும் அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான நிபந்­த­னை­யாக இருக்­கி­றது.

சிவில் விமான போக்­கு­வ­ரத்து தவிர்ந்த வேறெந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மத்­தல விமான நிலை­யத்தை பயன்­ப­டுத்தக் கூடாது, விமான நிலை­யத்தை செயற்­ப­டுத்தும் பணி­களை மாத்­திரம் இந்­தியா கையாள வேண்டும் என்­றெல்லாம் இலங்கை நிபந்­தனை விதித்­தி­ருந்­தது,

அத்­துடன், விமான நிலைய கட்­டுப்­பாட்டுக் கோபுரம், இலங்­கையின் சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யி­டமே இருக்கும் என்றும் கூறி­யது.

இந்த நிபந்­த­னைகள் இந்­தி­யா­வுக்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது. இதனால் இழு­ப­றிகள் காணப்­பட்டு வரும் நிலை­யி­லேயே, விமா­னப்­ப­டையும் வேறு புதிய பிரச்­சி­னையைக் கிளப்பி விட்­டி­ருக்­கி­றது.

அவ­சர தேவைகள், தேசிய பாது­காப்புக் கார­ணங்­களின் போது, ஓடு­பா­தையைப் பயன்­ப­டுத்தும் உரி­மையும், அவ­சர தேவை­க­ளுக்­காக, விமான நிலை­யத்தின் ஒரு பகுதி நிலத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றும் விமா­னப்­படை கோரி­யி­ருக்­கி­றது. இவ்­வாறு விமா­னப்­படை கோரி­யி­ருக்­கின்ற நிலப்­ப­ரப்பு 90 ஹெக்டே­ய­ராகும்.

விமா­னப்­ப­டையின் இந்தக் கோரிக்­கைகள் நியா­ய­மா­னதே என்றும், இதனால் இந்­தி­யா­வுடன் இணைந்து கூட்டு முயற்­சி­யாக விமான நிலை­யத்தை இயக்கும் திட்­டத்தில் எந்தப் பிரச்­சி­னையும் இருக்­காது என்றும், சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கார சபையின் பணிப்­பாளர் கூறி­யி­ருக்­கிறார்.

இது பிரச்­சி­னையா- இல்­லையா என்­பதை கூற வேண்­டி­யது இந்­தியா தான். ஏனென்றால் இந்­தி­யா­வுடன் தான் உடன்­பாடு செய்து கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதை­விட, ஏற்­க­னவே மத்­தல விமான நிலை­யத்தைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக இலங்கை முன்­வைத்த நிபந்­த­னை­களை இந்­தியா ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்­லாத நிலையில், விமா­னப்­ப­டையும் புகுந்து கொள்­வதை இந்­தியா விரும்­புமா என்­பது சந்­தேகம். 

இதே பிரச்­சினை அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்கும் போதும் எழுந்­தி­ருந்­தது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நீண்ட காலத்­துக்கு சீனா­வுக்கு வழங்கும் போது, அதனை தனது இரா­ணுவத் தேவை­க­ளுக்கு சீனா பயன்­ப­டுத்திக் கொள்ளும் என்ற சந்­தே­கங்கள் எழுந்­தி­ருந்­தன.

அதனால் அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கு­வதை இந்­தியா இரா­ஜ­தந்­திர வழி­மு­றை­களில் எதிர்த்து வந்­தது. எனினும், இலங்­கையின் கடன் நெருக்­க­டியை சமா­ளிக்க, வேறு­வ­ழி­யில்லை என்று உணர்ந்து கொண்ட இந்­தியா, அதற்கு இணங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

ஆனாலும், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா இரா­ணுவத் தேவைக்குப் பயன்­ப­டுத்தக் கூடாது என்ற நிபந்­த­னையை முக்­கி­ய­மாக விதித்­தது. அதற்­கான எழுத்து மூல உத்­த­ர­வா­தத்தைப் பெற வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்­தது.

அடுத்து, துறை­மு­கத்தின் பாது­காப்பு முழு­வதும் இலங்கை கடற்­ப­டையின் பொறுப்­பி­லேயே இருக்க வேண்டும் என்றும், அதற்­காக துறை­மு­கத்­துக்குள் கடற்­படைத் தளம் ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கவும் இந்­தியா வலி­யு­றுத்­தி­யது.

அந்த இரண்டு கோரிக்­கை­க­ளையும் இலங்கை ஏற்றுக் கொண்டு சீனா­வுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா பயன்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா முன்­வைத்த நிபந்­த­னைகள் இப்­போது இந்­தி­யா­வுக்கே ஆபத்­தாக மாறி­யி­ருக்­கி­றது.

மத்­தல விமான நிலை­யத்தை இந்­தியா தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முனை­கின்ற நிலையில், இலங்கை விமா­னப்­ப­டையின் கட்­டுப்­பாட்டை அங்கு உறு­திப்­ப­டுத்­து­வதில் இலங்கை கவனம் செலுத்த ஆரம்­பித்­துள்­ளது.

மத்­தல விமான நிலையம் திறந்து வைக்­கப்­பட்டு ஐந்து ஆண்­டு­க­ளாகி விட்ட நிலையில், இது­வரை அங்கு தமக்­கான ஓடு­பாதை மற்றும் அவ­சர தேவைக்­கான பயன்­பாட்­டுக்­கான நிலம் எதையும் விமா­னப்­படை கோர­வில்லை.

அதனை இந்­தியா நீண்ட காலக் குத்­த­கைக்கு பெறப்­போ­கி­றது என்­ற­வுடன் தான், விமா­னப்­ப­டையும் தனது உரித்தை அங்கு நிலை­நாட்ட முனை­கி­றது.

பொது­வாக, எந்­த­வொரு நாடும், தமது தளங்­களை பிற நாடு­க­ளுக்கு வழங்கும் போது, அவ­சர தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தும் உரி­மையை விட்டுக் கொடுப்­ப­தில்லை. அதனை தமது கைக்குள் வைத்துக் கொண்டே, அனு­மதி அளிக்கும்.

அந்த வகையில் அவ­சர மற்றும் தேசிய பாது­காப்புத் தேவை­க­ளுக்­காக மத்­தல விமான நிலை­யத்தின் ஓடு­பா­தையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரித்­தையும், விமான நிலை­யத்தின் பெரி­ய­தொரு நிலப்­ப­ரப்­பையும் விமா­னப்­படை கோரி­யி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல.

ஆனால், இது இந்­தி­யா­வுக்கு அதிர்ச்சி தரக் கூடி­ய­தாக இருக்­கலாம். ஏனென்றால், அம்­பாந்­தோட்­டையில் இந்­தியா காலடி எடுத்து வைக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தற்கு அடிப்­படைக் கார­ணமே சீனாவைக் கண்­கா­ணிப்­பது தான்.

மத்­தல விமான நிலை­யத்தை இந்­தியா தேடிச் சென்று குத்­த­கைக்குப் பெற்றுக் கொள்­வ­தற்கு, அது ஒன்றும் மிகப்­பெ­ரிய வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுக்கக் கூடி­யது அல்ல. போடும் முத­லீ­டு­க­ளையே தின்று தீர்த்து விடக் கூடியது அது. அதனைத் தெரிந்து கொண்டும், இந்தியா முதலீடு செய்ய விரும்புகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது பாதுகாப்பு மூலோபாய நலன்கள் தான்.

அப்படியிருக்கும் போது, அத்தகைய பாதுகாப்பு மூலோபாய நலன்களை அடைய முடியாதவாறு இலங்கை கதவை அடைக்க முயன்றால், இந்தியா மத்தலவின் மீது முதலீடு செய்வதற்கு நிச்சயம் தயங்கும்.

ஏனென்றால், வெறுமனே பெயருக்கு மத்தலவில் போய் நிதியைக் கொட்டிக் கொண்டிருப்பது முட்டாள்தனம் என்பதை இந்தியா அறியும்.

தனக்கான பாதுகாப்பு மூலோபாய நலன்கள் இல்லாத ஒரு இடத்தில் மிகப் பெரிய முதலீடுகளை இந்தியா செய்ய முன்வராது. இந்தியாவின் பாதுகாப்பு மூலோபாய நலன்களுக்கான ஓட்டைகளை அடைத்து விட்டு மத்தலவை அதன் தலையில் கட்டி விட இலங்கை அரசாங்கம் நினைத்தால் அது சாத்தியமற்றதாகவே இருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-04#page-1

  • கருத்துக்கள உறவுகள்

'எத்தனுக்கு எத்தன்' வையக்கத்தில் உண்டுதானே..? :unsure::)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

'எத்தனுக்கு எத்தன்' வையக்கத்தில் உண்டுதானே..? :unsure::)

அதுவேறை வன்னியன் சார் இது தனக்குத்தானே தெரிந்துகொண்டே நெருப்பு வைத்து சாவது போல் நடந்துகொண்ட விதம் . எத்தனை முறை விளங்கபடுத்தபட்டது

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.