Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு அரசின் குழப்பங்களால் மகிந்தவின் கனவு நனவாகிவிடும்

Featured Replies

  • கூட்டு அரசின் குழப்பங்களால் மகிந்தவின் கனவு நனவாகிவிடும்
Mahinda-Rajapaksa-Ranil-Wickremesinghe-a

கூட்டு அரசின் குழப்பங்களால் மகிந்தவின் கனவு நனவாகிவிடும்

 

 

மகிந்­த­வின் மீள் எழுச்சி உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லு­டன் ஆரம்­ப­மா­கி­விட்­டது.சாதா­ர­ண­மா­ன­தொன்­றா­கக் கரு­த­மு­டி­யாத அள­வுக்­குப் பேரெ­ழுச்­சி­யா­க­வும் இது அமைந்­து­விட்­டது. அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­ச­ரின் தவ­றான அணு­கு­மு­றை­கள் இதற்­குச் சாத­க­மாக அமைந்­து­விட்­டன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் மகிந்­த­வுக்­குப் பேரெ­ழுச்­சி­யைக் கொடுத்­துள்ள அதே­வேளை, அர­சுக்­குப் பின்­ன­டை­வை­யும், சங்­க­டத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­விட்­டன. இதன் கார­ண­மா­கவே மகிந்த தரப்­பி­னர் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து அர­சுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

சுதந்­தி­ரக் கட்­சி­யில்  பொறுப்­புள்ள  ஒரு­வ­ரா­கச் செயற்­பட்­ட­வர்  மைத்­தி­ரி­பால சிறி­சேன

கடந்த 2015ஆம் ஆண்­டு­வரை, மைத்­தி­ரி­பால சிரி­சேன மகிந்­த­வுக்கு அடங்­கிய ஒரு­வ­ரா­கவே காணப்­பட்­டார். நீண்ட கால­மாக அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் முக்­கிய பொறுப்­புக்­களை வகித்­துள்­ளார். மிக முக்­கி­ய­மான பொதுச் செய­லா­ளர் பத­வி­யும் அவ­ரையே சென்­ற­டைந்­தது. ஆனால் மகிந்­த­வின் சகோ­த­ரர்­க­ளான பசி­லும், கோத்­த­பா­ய­வும் மகிந்த அரச தலை­வ­ராக வந்­த­தன் பின்­னர் அர­சி­ய­லுக்­குள் நுழைந்­த­வர்­கள்.

 

தமது தமை­ய­னா­ரின் எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களை இவர்­கள் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். மைத்­தி­ரி­பால சிரி­சேன தலைமை அமைச்­சர் பத­வி­யைப் பெறு­வ­தற்­குத் தடை­யாக இருந்­த­வர் பசில் ராஜ­பக்­ச­வெனக் கூறப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லா­மல், மைத்­தி­ரி­பால சிரி­சேன பல­முறை இவர்­க­ளால் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

ஆனால் அப்­போது இவ­ரால் ஒன்­றுமே செய்­ய­மு­டி­ய­ வில்லை. பொறுமை காப்­ப­தைத் தவிர வேறே­தும ் செய்­வ­தற்கு அரச தலைவரால் அப்­போது முடி­ய­வில்லை.

இவற்­றுக்­கெல்­லாம் பாடம் கற்­பிப்­ப­தற்கு 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இடம் பெற்ற அரச தலை­வ­ருக்­கான தேர்தல் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. ஏமாற்ற முடி­யா­த­வர், வெல்ல முடி­யா­த­வர் எனப் பெயர்­பெற்ற மகிந்­த­வி­னால் இறுதி நிமி­டம் வரை­யில் இவ­ரது மன­தில் உள்­ள­வற்றை அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. முட்டை அப்­பத்­தை­யும், கோப்­பி­யை­யும் வழங்கி மைத்­தி­ரியை உப­ச­ரிப்­ப­தற்கு மட்­டுமே அவ­ரால் முடிந்­தது. தனக்கு முன்­னால் பெட்­டிப் பாம்­பாக அடங்­கிக் கிடப்­ப­வர் நாளைக்­குப் பட­மெ­டுத்­துச் சீறப்­போ­கி­றார் என்­பது குறித்­துக்­கூட மகிந்­த­வுக்­குச் சந்­தே­கம் எழ­வில்லை. தேர்­தல் முடி­வு­கள் வௌியானபோது அந்­தச் சாது­ வான மனி­தர் சாதித்­துக் காட்­டி­யதை ஆச்ச­ரி­யத்­தோடு நோக்­கவே மற்ற வர்களால் முடிந்­தது.

அதன்­பின்­னர் ரணில் விக்­கி­ரம சிங்க தலைமை அமைச்­ச­ரா­ன­ தும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் கூட்டு அரசு ஒன்றை உரு­வாக்­கி­ய­தும் நாட­றிந்த விட­யங்­கள். ஆனால் பின்­னர் நடந்த சம்­ப­வங்­கள் நல்­லாட்சி அர­சுக்­குச் சோத­னை­யாக அமைந்து விட்­டன.

சுதந்­தி­ரக் கட்­சி­யைக்  கட்­டுப்­பாட்­டில் வைத்­துக்­கொள்ள அரச தலைவரால் முடி­ய­வில்லை

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ராக அவர் உள்ள போதி­லும், அந்­தக் கட்­சியை தமது முழுக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­தற்கு மைத்­தி­ரி­பால சிரி­சே­னா­வி­னால் முடி­ய­ வில்லை. மறு­பக்­கத்­தில் இவ­ரால் தோற்­க­டிக்­கப்­பட்ட மகிந்த, மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது தமது வெஞ்­சி­னத்­தைக் காட்­டு­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டார். சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரில் பலரை அவர் தம் பக்­கம் இழத்­துக் கொண்­டார். இவர்­க­ளில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அடங்­கி­யி­ருந்­தார்­கள். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி பிள­வு­பட்­டமை மைத்திரிபாலவைப் பல­வீ­ன­ம­டை­யச் செய்து விட்­டது. கூட்டு அர­சின் இன்­னொரு பங்­கா­ளி­யான ஐக்­கிய தேசி­யக் கட்சி தன்­னைப் பலப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டது.

குறிப்­பாக தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ரம சிங்க அர­சில் தமது பிடியை இறுக்­கிக் கொள்­வ­தில் ஈடு­பட்­டார். ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளில் இருந்து மகிந்த தரப்­பி­ன­ரைக் காப்­பாற்­று­வ­தில் ரணில் தீவி­ர­மாக ஈடு­ப­டு­வ­தா­கக் குற்­றச் சாட்­டு­க­ளும் எழுந்­தன. மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­தில் ரணி­லுக்­கும் பங்­கி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டு­கள் எழுப்­பப்­பட்­டன. இவை­யெல்­லாம் கூட்டு ஆட்­சிக்­குள் பூகம்­பத்­தையே ஏற்­ப­டுத்­தி­விட்­டன.

இன­வா­தப் பரப்­புரை­க­ளால் சிங்­கள மக்­க­ளது பேரா­த­ரவை
ஈட்­டிய மகிந்த

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லி­லும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் தனித்­த­னியே போட்­டி­யிட்­ட­தால், அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்து வந்த மக்­கள் பெரும் குழப்ப நிலைக்­குள் தள்­ளப்­பட்­ட­னர். மகிந்த தரப்­பி­னர் இதைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். மகிந்­த­வுக்­குக் குறை­வான வாக்­கு­கள் கிடைத்­தால் தமி­ழீ­ழம் தானாக மலர்ந்­து­வி­டு­மென இன­வாத பரப்­பு­ரை­க­ளும் தாரா­ள­மாக இடம் பெற்­றன.

தமி­ழர் ஒரு­வர் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருப்­பது தொடர்­பா­க­வும் மகிந்த தரப்­பி­னர் குற்­றஞ்­சாட்­டத் தவ­ற­வில்லை. இவை­யா­வும் பெரும்­பான்­மை­யின மக்­க­ளி­டையே அர­சுக்கு எதி­ரான மன­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் விளை­வைத் தேர்­தல் முடி­வு­கள் தௌிவாக எடுத்­துக்­காட்டி விட்­டன.
குளத்­தைக் கலக்கி அங்­குள்ள மீன்­களை பருந்­துக்கு இரை­யாக்­கி­யது போன்று, நாட்­டின் அர­சி­ய­லி­லும் இடம் பெற்­று­விட்­டது. மைத்­தி­ரி­யும், ரணி­லும் சேர்ந்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த, மகிந்த அதைத் தமக்­குச் சாத­க­மாக்­கிக் கொண்­டுள்­ளார்.

அரச தலை­வ­ரும், தலைமை அமைச் ச­ரும் தொடர்ந்து தமக்­குள் முரண் பா­டு­களை நீடித்­துக் கொண்டே போனால், மகிந்­த­வின் கைக்­குள் நாடு சென்­று­வி­டு­வதை எந்­தச் சக்­தி­யா­லும் தடுத்­து­நி­றுத்த முடி­யாது.

http://newuthayan.com/story/74274.html

  • கருத்துக்கள உறவுகள்

மறுபுறத்தே, இந்த மகிந்தவின், இனவாத மூலம் பதவியை பிடிக்கும் முயல்வும், நடைபெறும் கலவரங்களும், சர்வதேச உலகங்களுக்கு, பிரபாகரனின், போராட்டம் சொல்லாத செய்திகளை சொல்லி இருக்கிறது. tw_cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.