Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்

Featured Replies

திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்

(திருக்­கோ­வில்-எஸ்.கார்த்­தி­கேசு)

திருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் நேற்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது.

Gayananan-Thirukovil-Sri-Lanka.jpgஅம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் பாட­சாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்­பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்­ப­டைத்­துள்ளான்.

திருக்­கோவில் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட தம்­பி­லுவில் தேசிய பாட­சா­லையில் தரம் 8 பிரிவில் கல்வி கற்கும் க.ஹயானன் என்ற மாண­வனே தான் கண்­டெ­டுத்த பணம், வங்கிப் புத்­தகம் மற்றும் அடை­யாள அட்­டை­களை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளான்.

இத­னை­ய­டுத்து குறித்த பணமும், ஆவ­ணமும் உரி­மை­யா­ளர்­க­ளிடம் திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் வைத்து ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. குறித்த மாண­வனை பொலிஸார் பாராட்­டி­ய­தோடு இம்மாணவனை முன்மாதிரி யாகக் கொண்டு ஏனைய மாணவர்கள் செயற்படவேண்டும் எனவும் கூறினர்.

http://metronews.lk/?p=23243

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு பாராட்டுக்கள்.....! விளையும் பயிரை முளையிலே தெரியும், நீ விளைந்து வருவாய் வளர்வாய்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பையனுக்கு பாராட்டுக்கள்.....! விளையும் பயிரை முளையிலே தெரியும், நீ விளைந்து வருவாய் வளர்வாய்....!  tw_blush:

எங்க மாவட்டம் என்று கூறிtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க மாவட்டம் என்று கூறிtw_blush:

அதுதான் எனக்கும் ஆச்சரியமாய் கிடக்கு.....! (சும்மா பகிடிக்கு பிறகு சண்டைக்கு வாரேல்ல)....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

அதுதான் எனக்கும் ஆச்சரியமாய் கிடக்கு.....! (சும்மா பகிடிக்கு பிறகு சண்டைக்கு வாரேல்ல)....!  tw_blush: 

ஆச்சிரமப் பக்கமாய்ப் போய் முனிவரிடம் ஆசி வாங்கியிருப்பான் பொடியன்... எண்டு சொல்லுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

அதுதான் எனக்கும் ஆச்சரியமாய் கிடக்கு.....! (சும்மா பகிடிக்கு பிறகு சண்டைக்கு வாரேல்ல)....!  tw_blush: 

ஹாஹா நிட்சயமாக அவரின் தாய் தந்தையை பாராட்டாலாம் பிள்ளையை நல்லா வளர்த்திருக்கிறார்கள் 

 

17 hours ago, Nathamuni said:

ஆச்சிரமப் பக்கமாய்ப் போய் முனிவரிடம் ஆசி வாங்கியிருப்பான் பொடியன்... எண்டு சொல்லுங்கோ..

ம் இருக்கலாம் நம்க்கும் பணத்தின் மீது ஆசையில்லை தேவைவரும் போது மட்டும் முளி பிதுங்கி நிற்பேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.