Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் காணுமா வடபகுதி?

Featured Replies

  • மாற்றம் காணுமா வடபகுதி?
 
 

மாற்றம் காணுமா வடபகுதி?

 

கிழக்கு மாகா­ணத்­தில் மூவின மக்­க­ளும் செறிந்து வாழ்­கின்­ற­னர். அங்கு சென்று பார்க்­கும் போது இது என்ன லண்­டனா?, சவூதி அரே­பி­யாவா? என்று ஆச்­ச­ரி­யம் ஏற்­ப­டு­கின்­றது. போருக்­குப் பின் குறு­கிய காலத்­தில் பெரிய அபி­வி­ருத்தி மாற்­றங்­கள் கிழக்­கில் ஏற்­பட்­டுள்­ளன.’’ இது யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், நிகழ்­வொன்­றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய போது தெரி­வித்த கருத்­துக்­கள்.

கிழக்கு மாகா­ணம் ஒன்­றும் நாம் சென்­று­வ­ராத பகு­தியோ எமது தலை­வர்­கள், எமது அரச அதி­கா­ரி­கள் சென்­று­வ­ராத பகு­தியோ அல்ல. பல தலை­வர்­க­ளும் அரச அதி­கா­ரி­க­ளும் பல­த­டவை சென்று வந்­தி­ருப்­பர். ஆனால் அவர்­கள் வெறு­மனே ‘‘சென்று திரும்­பி­ய­வர்­கள்’’ மட்­டும் தான்.

கிழக்கு மாகாணம் கணிசமான அபிவிருத்தி கண்டுள்ளது

அங்கு இடம்­பெற்­றுள்ள பல அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள், முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­கள் மற்­றும் வடக்கு மாகாண மக்­க­ளுக்­கும் பயன்­த­ர­வல்ல அவ­தா­னங்­களை கண்டு, விவ­ரிக்­கக்­கேட்டு, ஆராய்ந்து பார்த்து மன­தி­ருத்­திக் கொண்டு வரு­ப­வர்­கள் ஒரு­சி­லரே.

அவர்­க­ளுள் யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வன், தாம் அவ­தா­னித்த அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­களை வடக்­கி­லும், நடை­மு­றைப்­ப­டுத்த அவாக்­கொண்­டுள்­ள­மை­யையே அவ­ரது மேற்­கண்ட உரை வௌிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கொள்ள இய­லும்.

அண்­மை­யில் கிழக்­கில் முஸ்­லிம் சமு­கத்­தி­ன­ருக்கு எதி­ராக பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றை­கள் தொடர்­பான ஒளிப்­ப­டங்கள் ஊட­கங்­க­ளில் வௌியா­கி­யி­ருந்­த­மை­யைக் காண­நேர்ந்­த­போ­து­கூட, அங்­குள்ள வீதி­கள் மிக அழ­கான முறை­யில் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வதை ஊகிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இலங்கை சுதந்­தி­ரம் பெற்று70 வரு­டங்­க­ளைக் கடந்­து­ விட்டுள்ள இந்த வேளையிலும் கூட, எமது வடக்கு மாகா ணத்தில் அபி­வி­ருத்தி விட­யத்­தில், நாட்­டின் ஒன்­பது மாகா­ணங்­க­ளு­டன் ஒப்­பிட்­டால் இறுதி இடத்­தி­லேயே அது நிற்­கின்­றது. முப்­பது வரு­ட­கால அகிம்­சைப் போராட்­டத்­தி­லும், 30 வரு­ட­கால ஆயு­தப் போராட்­டத்­தி­லும் நாம் இழந்­தவை உயிர்­க­ளும், உட­மை­க­ளும், உரி­மை­க­ளும் மட்­டு­மல்ல; எமது பகு­தி­க­ளது அபி­வி­ருத்­தி­க­ளை­யும் தான்.

நாட்­டின் அரசை நிர்­வ­கித்­த­வர்­கள், பார­பட்­ச­மாக நடந்து வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளைப் புறக்­க­ணித்து ஏனைய பகு­தி­க­ளில் பொரு­ளா­தா­ர­ரீ­தி­யா­க­வும், கலை, கலா­சார ரீதி­யா­க­வும் மிகப்­பெ­ரும் அபி­வி­ருத்­தி­களை வலுப்­ப­டுத்­தி­னர். தொழிற்­று­றை­கள், வீதி­கள், கட்­ட­டங்­கள் என சகல வழி­க­ளி­லும் நவீ­னத்­து­வத்­து­டன் பிற மாகா­ணங்­கள் முன்­னேற்­ற­ம­டைந்­தன.

வடக்கின் அபிவிருத்தி
ஆமை வேகத்திலேயே

போரைக் கார­ணம் காட்டி, வடக்­குக் கிழக்­கில் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டா­லும், கிழக்கு மாகா­ணம் குறிப் பிடத்தக்க அளவு முன்­னேற்­றம் கண்டு வந்­தது. போர் முடி­வ­டைந்த பின்­ன­ரான கடந்த ஒன்­ப­தாண்­டு­கள் காலப்­ப­கு­தி­யி­லும், கிழக்கு மாகா­ணம் அபி­வி­ருத்தி விட­யத்­தில் வெகு­வான முன்­னேற்­றம் கண்­டுள்­ளது.

வடக்­கி­லும், வீதி­கள் கடந்த ஆட்­சி­யின்­போது விரை­வான மாற்­றம் கண்­ட­தென்­னமோ உண்­மை­தான். அத்­து­டன் புகையிரதப் போக்­கு­வ­ரத்­தும் ஆரம்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­ டத்­தக்­கது. எனி­னும் நீண்­ட­கால புறக்­க­ணிப் புக்­குப் பின்­னர் அதி­து­ரி­த­மாக பல துறை­ க­ளி­லும் முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருக்க வேண்­டிய வடக்கு மாகா­ணம் அபிவிருத்தி விடயத்தில் ஆமை வேகத்­தி­லேயே நகர்­கி­றது. உலக வங்கி உட்­பட உலக நாடு­கள் பல­வும் இலங்­கைக்கு, குறிப்­பாக வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பில் பல உத­வி­களை, நிதி­மூ­லங் களை வழங்­கி­ய­தாக தக­வல் அவ்­வப்­போது ஊட­கங்­க­ளில் வௌிவந்­தன.

ஆனால் வளர்ச்சி அல்­லது அபி­வி­ருத்தி என்­பது குறித்­துத் திருப்­திப்­பட முடி­ய­வில்லை. இந்­தியா, தான் வட பகு­தி­யில் 50 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தாக அடிக்­கடி பீற்­றிக் கொள்­ளும். ஆனால் இது­வரை அமைக்­கப்­பட்­டவை சொற்­பமே! இதே­போன்று, உலக வங்­கி­யின் உத­வி­யு­டன் யாழ். நக­ரம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்; அழ­கு­ப­டுத்­தப்­ப­டும் எனச் செய்­தி­கள் வந்து வரு­டக்­க­ணக்­கில் ஆகி­விட்­டன. ( ஒரு வேளை வரு­டக்­க­ணக்­கில் திட்­டம் தீட்­டு­கி­றார்­கள் போலும். அப்­படி நீண்ண்ண்ட….. திட்­டம் தீட்­டு­கி­றார்­கள் எனக் கொண்­டால் சிங்­கப் பூர், லண்­டன், கனடா நாடு­களை விட சிறந்த அபி­வி­ருத்தி இடம்­பெ­றப்­போ­கி­றது போலும்.)

அரசியல்வாதிகளது
வெத்துவேட்டு வாக்குறுதிகள்

பட்­டு­வேட்­டிக் கன­வால், இருந்த இடுப்­புக்­கச்­சை­யையும் பறிகொடுத்த வர­லாறே தமிழ் மக்­க­ளுக்கு மீண்­டும் மிச்­ச­மா­கி ­யுள்ளது. ஒவ்­வொரு தேர்­தல் காலத்­தி­லும் குட்­டிச் சிங்­கப்­பூர் போல யாழ்ப்­பா­ணம் மாறும் என்று கனவு காட்­டி­ய­வர்­கள், கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லி­லும் உச்சி குளிர வாக்­கு­று­தி­க­ளும், வரை­ப­டங்­க­ளும் காட்டி படங்­காட்­டிச் சென்­றுள்­ள­னர்.

வழக்­கம்­போல இல­வுப்­ப­ழத்­துக்­கா­கக் காத்­தி­ருப்­போம்! என்ன, ஒன்று யாழ்.நகருக்கு வரும் மக்­கள் ‘‘ அடக்­க­மாட்­டா­மல் ’’ படும் பாடு­தான் பெரும்­பாடு! சிங்­கப்­பூர் வேண்­டாம் ஐயா… சிறு­நீர் கழிக்கப் போது­மான, சுத்­த­மான, அடிக்­கடி ‘‘ பழுது கார­ண­மா­கப் பூட்­டப்­பட் டுள்­ளது ’’ என்ற அறி­விப்­பில்­லாத மல­ச­ல­கூட வச­தி­க­ளை­யா­வது ‘‘அவ­ச­ர­மாக ஏற்­ப­டுத்­தித் தாருங்­கள்’’ என்றே மக்­கள் எதிர் பார்க்­கின்­ற­னர். நகர மத்­தி­யிலுள்ள பேருந்து நிலைய வளா­கத்­தில் பகல் வேளை­யில் மல­ச­ல­கூ­டம் நிரம்பி வழிந்து துர்­நாற்­றம் வீசு­வதை, மூக்­கைப் பொத்­தி­ய­படி மக்­கள் கோபத்­தை­யும் ‘‘அடக்­க­மாட்­டா­மல்’’­­தமக்குள் திட்டித் தீர்க்கின்றனர்.

இவற்­றோடு ஒப்­பி­டு­கை­யில், கிழக்கு மாகா­ணம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வன் கூறி­யது போல, வீதி­கள் விசா­ல­மா­க­ வும், அழ­கா­க­வும் ( கிழக்­கில் வீதி விபத்­துக்­கள் குறை­வாக உள்­ள­மைக்கு இது­வும் ஒரு கார­ணம்.) பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­றன. தொழிற்­சா­லை­கள் பல உரு­வாக்­கப்­பட்டு பல­ருக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைத்­துள் ளன. மற்­றும் பல விட­யங்­க­ளி­லும் வடக்­கை­விட கிழக்கு கொடுத்து வைத்­தது என்றே கூற­வேண்­டும்.

இவற்­றுக்கு அர­சின் பாரா­மு­கம், மாற்­றாந்­தாய் மனப்­பான்மை என்­ப­ன­வோடு, எமது தலை­மை­க­ளின் தூர­நோக்­கற்ற, மந்­த­மான போக்­கும், இலங்­கைக்கு அப்­பால் இந்­திய, மேற்­கு­லக நாடு­க­ளின் நேரடி அபி­வி­ருத்­தி­யைக் கோரிப்­பெ­றா­மல், சரி­யான திட்­ட­ மி­டல்­களை வழங்கி, நிதி உதவி கோராமல் எழுந்­த­மா­ன­மாக நிதியுதவி செய்யுமாறு கேட்டால் எவர்­தான் உதவ முன்­வ­ரப்­போ­கி­ றார்­கள்? புலம்­பெ­யர் தமிழ் அமைப்­புக்­கள், நிதி வழங்க மனம் கொண்­டுள்ள எம்­ம­வர் கூட வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பில் கவ­னம் செலுத்­தி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. பார்ப்­போம்; உள்­ளூ­ராட்சி ‘‘ மன்­னர்­கள் ’’ மாற் றங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்­களா என்று…

http://newuthayan.com/story/76632.html

  • கருத்துக்கள உறவுகள்

சப்பிறா...திரும்பவும் தொடங்கும்   எண்ணம் போல....

வடக்கு மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் கையாளாகதவர்களாகவும் வெற்று அரசியல் பேசுகின்றவர்களாகவும் இருக்கும் வரைக்கும் இதுதான் நிலமை. கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நசீர் அஹமட் இன் செயற்திறனுக்கு முன்னால் வடக்கு மாகாணசபை முதலைச்சரின் திறமை பூச்சியம். அதே போன்று தமிழ் தேசிய கூத்தமைப்பின் வடக்கு எம்பிக்களின் செய்ற்பாடுகளும் பூச்சியம்.

ஒரு பெரும் அமைப்பை உருவாக்கி கட்டமைத்து செயற்படுத்திய புதல்வர்கள் பிறந்த மண்ணில் இந்த பூச்சியங்களும் பிறந்து இருக்கிதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.