Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல்

Featured Replies

"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல்

தன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் இது தொடர்பாக மோதலும் ஏற்பட்டது.

என்னைத் தெலுங்கன் என முத்திரை குத்துவதா? - சீமானுக்கு வைகோ எச்சரிக்கை

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் வைகோ, அந்தப் பயணத்தின் நடுவில் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூருக்கு சென்றார். கைரேகைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி உயிர்நீத்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, பிறகு பேசும்போது "என்னைத் தெலுங்கன் என சிலர் பேசுகின்றனர். அப்பாவி இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். வெளியில் நிற்கும் கட்சிக்காரர்களை நான் எச்சரிக்கிறேன்" என்று பேசினார்.

இந்த நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோ தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று உணர்ந்து, அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, "வீர வணக்கம், வீர வணக்கம்" என்று கோஷங்களை எழுப்பினர்.

வைகோ பேசி முடித்துவிட்டு வெளியில்வந்தபோது, அங்கு கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவரோடு மோதலிலும் ஈடுபட்டனர். இதனால், வைகோவுடனிருந்த ம.தி.மு.கவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இதற்குப் பிறகு, வேறொரு இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சீமான் மீது நேரடியாகவே குற்றம்சாட்டினார்.

"ஆறேழு ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். என்னைத் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்று சீமான் கீழ்த்தரமாக பேசுவதோடு, ஈரோடு ராமசாமிப் பயல் என்றும் பேசினார். இந்த அண்ணாத்துரைனு ஒருத்தன், இந்த நாட்டை கெடுத்துவிட்டான் என்று துவக்க காலத்தில் பேசினார். பெரியாரைத் தாக்குவது, அவரைக் காலி செய்ய அல்ல, என்னை காலி செய்ய என்று சினிமாத் துறையில் உள்ளவர்கள் சொன்னார்கள். பெரியாரை ஒழித்துவிட்டால், பிறகு தெலுங்கன் என்று என்னை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்" என்று கூறினார்.

என்னைத் தெலுங்கன் என முத்திரை குத்துவதா? - சீமானுக்கு வைகோ எச்சரிக்கைபடத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR

மேலும் தன்னைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் மீம்ஸ்களை நாம் தமிழர் கட்சியினர் உருவாக்கிவருவதாகவும் குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னை மிகவும் களங்கப்படுத்தி ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

பிரபாகரன் உயிரோடு இல்லையென்று நினைத்துக்கொண்டு, புலிகளின் சின்னத்தை தன் கொடியாக்கிக்கொண்டார் என்றும், புலிகளோடு தான் வேட்டைக்குப் போனதாகவும் ஆமைக்கறி தின்றதாகவும் சீமான் பொய் சொல்வதாகக் கூறிய வைகோ, பிரபாகரன் மொத்தம் எட்டு நிமிடங்கள்தான் அவரைச் சந்தித்ததாகக் கூறினார். பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய வைகோ, புலிகளின் சீருடையை அணிய சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லையென்றும் ஆனால், தான் அந்தச் சீருடையை அணிந்து பிரபாகரனோடு ஒரு மாதம் இருந்திருப்பதாகவும் கூறினார். பிரபாகரனிடம் தான் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும் சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்றுகூறி பணம் வசூலிப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தாலும் சமீப காலமாக தன்னையும் ஸ்டெர்லைட்டையும் தொடர்புபடுத்தி, ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டது. இப்போது நியூட்ரினோவுக்கு கிளம்பிவிட்டான் நாயக்கப் பய" என மீம்ஸ்களை வெளியிடுவதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் வைகோ கூறினார்.

வைகோவின் இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து நாம் தமிழர் கட்சியினரும் ம.தி.மு.கவினரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-43637129

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மக்கள் ipl போட்டிக்கு எப்படி ரியாக்ஷன் பண்றாங்கள் என்று முதலில் பார்க்க வேண்டி உள்ளது .

இரண்டாவது வைகோவை அங்கு அரசியல் வடிவேல் ரேஞ்சில்தான் மக்கள் பார்கிறார்கள் இவ்வளவு பெரிய தலைவர் உடுப்பு போட்டன் என்பவர்  இன்னும் 5ஆயிரம் பேருடன் தலைவர் வன்னிக்காட்டில் இருந்து சண்டை தொடங்குவார் என்று சொல்லிகொள்வது யாரை காப்பாற்ற?

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவுக்கு மறை கழண்டுபோச்சு 
இல்லையேல் கருனாநிதிதியுடன் மீண்டும் போய்ச்சேருவாரா? இவர் கருனாவுடன் சேர்ந்ததன் காரணமாக அவரது நிறம் என்ன என்பது தெரிந்துவிட்டது.

இன அழிப்புச் செய்த காங்கிரசுடன் எதிர்காலத்தில் கூட்டுவைக்கவிருக்கும் கருனாநிதியின் மகனுடன்.

இனாழிப்பு நடக்கும்போது தனது மகளையும் அவருடைய அனபானவரையும் (ராஜா) காப்பாற்ற போலி உண்ணாவிரதமிருந்த கருனாநிதியுடன்.

போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என சிதன்பரத்துடன் சேர்ந்து பொய்கூறிய கருனாநிதியுடன்.

நோய்வாய்ப்பட்ட முதாட்டியை விமானநிலையத்தில்வைத்தே திருப்பி அனுப்பிய கருனாநிதியுடன்.

பிரபாகரனுடன் படுத்துகிடந்தேன் சாப்பிட்டேன் போர்ப்பயிற்சி பெற்றேன் என புழுகித்தள்ளிக்கொண்டு பொறுக்க்கித்தன அரசியல் செய்வது மிகவும் கேவலம்

  • கருத்துக்கள உறவுகள்

 

29694649_1846286935421401_13401456487998

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ சோத்துக்குப் பதிலா தட்டில என்னாத்தப் போட்டுச் சாப்பிடுறாரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.