Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆமியின் தம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வளாகம் போன புதிது. புதிய இடம். புதிய போதனை மொழி-ஆங்கிலம். புதிய பாவனை மொழி-சிங்களம்.( கடை கண்ணிக்கு போறதெண்டால் சிங்களம் வேணும்). சிங்களவர்களாக ஆமிக்காறனை மாத்திரம் தெரிந்த எங்களுக்கு சிங்கள ஊரில் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அனுபவம். புதிய நண்பர்கள் நண்பிகள் என்று எல்லாமே புதிது. ஒரு மாதகாலத்தில் எல்லாம் ஓரளவு பழக்கத்தில் வரத் தொடங்கியிருந்தது.

அன்றும் வழமை போல விரிவுரை சென்ற எமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வேறுபாடு தெரிந்தது. நட்புடன் சிரிக்கும் எமது சிங்கள நண்பர்களின் முகம் இருண்டிருந்தது. வழக்கமான புன்னகை தொலைந்திருந்தது. பிறகுதான் தெரிந்தது காரணம். ஆனையிறவை புலிகள் பிடித்துவிட்டார்களாம். ஆயிரக்கணக்கில் ஆமி பலியாகிவிட்டதாம். எங்களுக்கு உள்ளுக்குள் வெற்றிப்பெருமிதம் தான். ஆனால் காட்டிக்கொள்ள முடியாது - இது அவங்கட ஊர். சிங்கள தேசத்தின் ஒவ்வொரு ஊரிலும் அழுகையொலி. பலியானவர்களில் எங்களது முதலாம் ஆண்டு மாணவனொருவனின் தமையனும் ஒருவனாம். ஒன்றாய் படிப்பவர்கள் என்ற முறையில் இறந்த வீட்டில் எல்லாரும் கலந்து கொள்ள பெரும்பான்மையின மாணவர்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ் மாணவர்கள் ஒருத்தரும் போவதில்லை என நாங்கள் முடிவெடுத்தோம். எப்படிப் போவது? எங்களைக் கொல்கிறவன் செத்ததுக்கு நாங்கள் என்னண்டு துக்கங்கொண்டாடுறது. ஆனாலும் சிலர் போனார்கள். அவர்கள் வந்தபின் நான் இதை பெரிய பிரச்சினையாக்கி சண்டை போட்டேன். ஒரு ஆமிக்காறனின் செத்த வீட்டுக்கு நீங்கள் எப்படி போக முடியும். கூட படிப்பவனின் அண்ணன் என்று சொன்னார்கள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் செத்தவன் ஒரு ஆமி என்பது தான் என் மனதில் இருந்தது.

கொஞ்ச காலத்தில் படிப்புச்சுமை இதை எல்லாம் மறக்கச் செய்திருந்தது. இரண்டாம் ஆண்டிலிருந்து பிரயோக வகுப்புக்கு நாங்கள் போக வேண்டும். எனக்கு அருகில் சந்தன. ஒரு சிங்கள மாணவன். இவனின் அண்ணன் தான் ஆமியில் இருந்து செத்தவன் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். வசீகரமான புன்னகையும் நட்பான கதைகளும் என்னிடம் உள்ள சிங்கள வெறுப்பையும் தாண்டி நெருங்க வைத்தது. விடுதியிலும் அவன் பக்கத்து அறை. இது மேலும் எமது நட்பை இறுக்கியது. பிரயோக வகுப்பு எமக்கு எப்போதும் அரட்டை வகுப்புத்தான். பல விடயங்களும் எமது கதைகளில் வந்து போகும். அரசியல் உட்பட. ஆச்சரியமான விசயம் என்னவென்றால் தமிழர் பக்க நியாயங்களை அவன் ஏற்றுக் கொள்வதுதான். அரசாங்கம் எப்போதும் பொய்யே கூறுவதால் போர்ச்செய்திகளை அறிந்து கொள்ள அவன் எங்களிடம்தான் வருவான். படம் எல்லாம் கீறிக்காட்டி (சண்டை எங்கே நடக்குது எண்டு) உணர்ச்சிகளை மறைத்து செய்தியை செய்தியாக மட்டுமே சொல்லுவேன். அப்போதெல்லாம் அவர்களுக்கத்தான் இழப்புக்கூட. வாரவிடுமுறைக்காக வீடு சென்று வரும்போது அவன் கொண்டுவரும் அவர்களுக்கேயுரிய சாப்பாடு பலகாரங்கள் எல்லாம் சாப்பிட்டாக வேண்டும். இரண்டொருதரம் சந்தனவின் வற்புறுத்தலினால் அவனது வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன். சந்தனவின் தாயாரின் அன்பான உபசரிப்பு என்றைக்கும் மறக்கக்கூடியதல்ல.

இப்படியே போகையில் மூன்றாம் வருட பரீட்சை விடுமுறை வந்தது. எல்லோரும் விடுதியில் இருந்துதான் பரீட்சைக்கு தயார் செய்வது வழக்கம். சந்தனவை மட்டும் காணக்கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவன் வீட்டுக்கு சென்றுவிட்டானாம். யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையில் இருந்த அவனது இரண்டாவது தமையன் படுகாயமடைந்ததுதான் காரணம்.

இப்போது மட்டும் 'ஆமிதானே நல்லாப்படட்டும்' என்று ஏனோ என்னால் வழக்கம்போல் சந்தோசப்பட முடியவில்லை.

http://sikiri.blogspot.com/2005/08/blog-post.html

உண்மையில் அவர்கள் பணத்திற்காகத்தான் ஆமியில் சேருகிறார்களே தவிர விரும்பி அல்ல, எனக்கும் நிறைய ஆமி செத்தால் சந்தோசப்படுவன் ஆனா அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கு என்று நினைக்கும் போது ஒரு மாதிரி இருக்கும் பாவம் அவர்கள் சுயநல அரசியல்வாதிகளுக்காக பலியாகிறார்கள் , :lol: :mellow:

மனதைதொடும் அழகான உண்மையான கதை. இணைப்புக்கு நன்றிகள்

இதே போல் எனக்கும் இரு தடவை நடந்துள்ளது, அவர்களும் மனிதர்கள், 95% மானவர்க்ள் படிப்பறிவில்லாமல், குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாமல் இராணுவத்தில் இணைபவர்களே, அவர்களின் வறுமையை அரசாங்கம் சாதகமாக்கி அவர்களை கொலை செய்கிறார்கள், ஏசி அறையில் பாதுகாப்புக்குள் இருப்பவர்களை 1 நாள் 24 மணித்தியாலம் போர்முனையில் விடவேண்டும்

நானும் சிங்கள ஊரில் பல வருடங்கள் வாழ்ந்திருக்கின்றேன். சிங்கள் மக்களை ஒருபோதும் நான் எதிரியாகப் பார்த்ததில்லை.அவர்களும் என்னோடு நன்றாகப் பழகுவார்கள். ஆனால் சிங்களவரின் எண்ணப்படி புலிகள் தமிழரைக் கொடுமைப்படுத்துகின்றனர். இராணுவம் தமிழரை புலிகளிடமிருந்து விடுதலை செய்வதற்காகப் போராடுகிறது. என்னுடன் இதுபற்றி சிலர் பேசினால் நான் அவர்கள் சொல்லுவதை மறுக்காமல் மேற்கொண்டு உரையாடுவதைத் தவைர்த்துக் கொள்வேன். காரணம் சுற்றியிருக்கும் அத்தனை சிங்களவரையும் பகைத்துக் கொள்ள வேணடி வரும்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை முன்பு வேறு ஒரு ஊடகம் ஒன்றிலும் வாசித்த யாபகம்.

ஆனையிறவை புலிகள் பிடித்த போது தமிழ் பெடியள் பெரதெனிய அக்பர் விடுதியில பட்டாசு கொளுத்தினதை JVP students Game ஆக்கினாங்க :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை முன்பு வேறு ஒரு ஊடகம் ஒன்றிலும் வாசித்த யாபகம்.

யாராவது கொப்பி அடிச்சுப் போட்டிருப்பார்கள்.. அசல் மேலுள்ள இணைப்பிலுள்ள வலைப்பூவில் உள்ளதுதான் என்பதில் சந்தேகம் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.