Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாளிதழல்களில் இன்று: சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது எதனால்?

Featured Replies

நாளிதழல்களில் இன்று: சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது எதனால்?

 

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

சிந்து சமவெளிபடத்தின் காப்புரிமைDAILYTHANTHI

சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது குறித்து காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றினை நடத்தியது.

அதில் சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 'எல் நினோ' விளைவு காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. அதற்காக, மழை பெய்யவில்லை என்று அர்த்தம் அல்ல. நீரோட்டம் குறைந்துவிட்டது. அதனால், அப்பகுதி வறண்டப் பிரதேசம் ஆனது.

விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. இவைதான் அம்மக்களின் முக்கியமான தொழில்கள் என்பதால், அவர்கள் பருவமழை அதிகமாகப் பெய்யும் இந்தியாவின் தென்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் இடம்பெயர்ந்தனர் என அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் என தினத்தந்தி செய்து வெளியிட்டுள்ளது.

தினமலர்

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசிகலாவில் உறவினர்கள் மற்றும் ஜெயலலிதா உடலை எம்பார்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாஇ வெங்கட்ராமன் ஆகியோரிடம் நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. இந்நிலையில், விசாரணைக்குப் பின்பு பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,'' அப்பல்லோ மருத்துவமனையில் 2016 டிசம்பர் 3-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்களுடன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினார். மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது'' என கூறியுள்ளார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

புதுவை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு கால தாமதமாக வந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய உத்தரவிட்டார் என தினமணி செய்தி கூறுகிறது.

தி இந்து(தமிழ்)

சிவராஜ் சிங் சவுகான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகள் அனைத்தும் எங்கே போனது?. இந்தப் பணத்தை எல்லாம் யார் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு பணத் தட்டுப்பாடு நிலவ யார் காரணம் ஏதோ சதி நடக்கிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார் என தி இந்து(தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-43792879

  • கருத்துக்கள உறவுகள்

900 ஆண்டுகால வரட்சி என்றால் சிந்து நதிகூட வரண்டுபோனதா? அந்த நதி இமயமலையில் பனி உருகுவதால் பெருக்கெடுத்து வரும் நதியல்லவா. அதுபோல 900 வருட வரட்சியில் தமிழர்கள் விட்டுச் சென்றதும் ஈரான் / துருக்கி காரர் (இன்றைய வட இந்தியர், பாகிஸ்தானியர்) வந்து குடியேறினார்களாம். அப்போது மறுபடியும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதாம்.. tw_blush: அதுக்கும் வேதங்களின் வலிமைதான் காரணம் என்று கதைவிட போகினம்.. :unsure:

இந்த குப்தா ஆய்வுக்கு காரணம், சென்ற வருடம் இங்கிலாந்துகாரர் வெளிட்ட ஆய்வு முடிவுதான். அதில், சிந்து சம்வெளி நாகரிகத்தின் அழிவுகாலமும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலமும் ஒரே காலம் என தெரிவித்துள்ளார்கள். தாங்கள் மற்றவர்களை அழித்துவிட்டே இந்தியாவை கைப்பற்றினோம் என்பதை மறைக்கும் முனைப்புதான் இந்த ஆய்வில் தெரிய வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் வருடங்கள் பழமையான தமிழ் பல இடர்களை சந்தித்த போதும் நிலைத்து நிக்குது என்றால் எம் முன்னோர்கள் இட்ட அடித்தளம்தான், தமிழனாய் இருப்பதில் பெருமை கொள்வோம் , தமிழ் காப்போம், பிள்ளைகளுக்கு  தமிழ் கற்றுக் கொடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

900 ஆண்டுகால வரட்சி என்றால் சிந்து நதிகூட வரண்டுபோனதா? அந்த நதி இமயமலையில் பனி உருகுவதால் பெருக்கெடுத்து வரும் நதியல்லவா. அதுபோல 900 வருட வரட்சியில் தமிழர்கள் விட்டுச் சென்றதும் ஈரான் / துருக்கி காரர் (இன்றைய வட இந்தியர், பாகிஸ்தானியர்) வந்து குடியேறினார்களாம். அப்போது மறுபடியும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதாம்.. tw_blush: அதுக்கும் வேதங்களின் வலிமைதான் காரணம் என்று கதைவிட போகினம்.. :unsure:

இந்த குப்தா ஆய்வுக்கு காரணம், சென்ற வருடம் இங்கிலாந்துகாரர் வெளிட்ட ஆய்வு முடிவுதான். அதில், சிந்து சம்வெளி நாகரிகத்தின் அழிவுகாலமும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலமும் ஒரே காலம் என தெரிவித்துள்ளார்கள். தாங்கள் மற்றவர்களை அழித்துவிட்டே இந்தியாவை கைப்பற்றினோம் என்பதை மறைக்கும் முனைப்புதான் இந்த ஆய்வில் தெரிய வருகிறது.

ஒரு காவாலிக்கூட்டம்.....அங்கு வாழ்ந்த இனக்குழுமமொன்றின்...அறிவுப் பொக்கிஷங்களைக் களவெடுத்துத்....தங்களது சொந்தச் சரக்கைப் போல..உரிமை கொண்டாடுவது மட்டுமன்றி....அந்த இனத்தின் மிச்ச சொச்சங்களையும்...மூளைச் சலவை செய்யும் முயற்சி தொடர்கின்றது!

அசுரர்களின் வலிமையை...அடக்கி வைத்திருப்பதில் தான்....காவாலிகளின் வாழ்வு தங்கியிருக்கின்றது!

இதில்...முள்ளி வாய்க்காலும்..ஒரு அத்தியாயம்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை (ராமாயணம், மகா பாரதம்) சொல்லியே எங்கள் வளர்ச்சியை மறைச்சு விட்டார்கள். அது மட்டுமல்ல நாகரீகம் கற்றுக் கொடுத்த எங்களை அரக்கர்கள் என்றும் கதை விடுறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.