Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்

Featured Replies

3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்

 

Antonov-An-225-Mriya-landed-at-the-Mattaமூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

மலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன்  வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது.

எரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது.

இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றதால், 14 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று விமான நிலைய முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்தார்.

இதுபோன்ற விமானங்களின் வருகைகள் சிறிலங்காவுக்கு நல்ல வருமானத்தை தேடித் தரும் என்றும் அவர் கூறினார்.

இந்த விமானத்தின் பணியாளர்களுக்கு மத்தல விமான நிலையத்தின் சார்பில் தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.

பாரிய இடவசதி தேவைப்பட்டதால், விமானத்தை தாம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கியதாக அன்ரனோவ்- 225 விமானத்தின் தலைமை விமானி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த விமானத்தை தாம் மத்தலவில் தரையிறக்கப் போவதாக விமான தம்மிடம் தெரிவித்தார் என்றும் உபுல் கலன்சூரிய கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/04/21/news/30506

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த பெரிய சரக்கு யாருக்கு சொந்தமாம்..... (மலேசியாவுக்கா,பாகிஸ்தானுக்கா,இலங்கைக்கா)

  • தொடங்கியவர்

 

3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம்

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

 

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

உலகில் பாரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya என்ற விமானம் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் நகரிலிருந்து வந்துள்ள இந்த விமானத்தில் 27 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

குறித்த விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் பணியாளர்களின் ஓய்விற்காகவுமே மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதாக பிரதான முகாமையாளர் உப்புல் கலந்சூரிய தெரிவித்துள்ளார்.

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

இதேவேளை, உலகின் பாரிய சரக்கு விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன், இந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்கு இன்று இரவு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sri-Lanka

36 minutes ago, putthan said:

அது சரி இந்த பெரிய சரக்கு யாருக்கு சொந்தமாம்..... (மலேசியாவுக்கா,பாகிஸ்தானுக்கா,இலங்கைக்கா)

அது தொடர்பாக எந்த செய்தியிலும் விளக்கம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

 

3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம்

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

 

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

உலகில் பாரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya என்ற விமானம் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் நகரிலிருந்து வந்துள்ள இந்த விமானத்தில் 27 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

குறித்த விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் பணியாளர்களின் ஓய்விற்காகவுமே மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதாக பிரதான முகாமையாளர் உப்புல் கலந்சூரிய தெரிவித்துள்ளார்.

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

இதேவேளை, உலகின் பாரிய சரக்கு விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன், இந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்கு இன்று இரவு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென்று இலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sri-Lanka

அது தொடர்பாக எந்த செய்தியிலும் விளக்கம் இல்லை.

thanks எதாவது உலக‌ அரசியல் இதிலும் இருக்கோ....

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:

குறித்த விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் பணியாளர்களின் ஓய்விற்காகவுமே மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதாக பிரதான முகாமையாளர் உப்புல் கலந்சூரிய தெரிவித்துள்ளார்.

மலேசியா அலஸ்காவுக்கு பக்கத்திலிருக்குது தானே, அவ்வளவு தூரம் ஓடிவந்தமையால்  பெற்றோல் தீர்ந்திருக்கும்....விமான பணியாளர்களும்  கலைப்படைந்திருப்பார்கள்tw_blush:

  • தொடங்கியவர்
34 minutes ago, putthan said:

thanks எதாவது உலக‌ அரசியல் இதிலும் இருக்கோ....

 

22 minutes ago, putthan said:

மலேசியா அலஸ்காவுக்கு பக்கத்திலிருக்குது தானே, அவ்வளவு தூரம் ஓடிவந்தமையால்  பெற்றோல் தீர்ந்திருக்கும்....விமான பணியாளர்களும்  கலைப்படைந்திருப்பார்கள்tw_blush:

உங்கள் கேள்விக்கு இதில் பதில் இருக்கு.tw_blush:

இந்த உலகத்தில் அரசியல் இல்லாத ஏதாவது இருக்கா?

  • தொடங்கியவர்

இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம் – சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம்

 

Antonov-An-225-Mriya-landed-at-the-Mattaமத்தல விமான நிலையத்தில் மூன்று நாட்கள் தரித்து நின்று விட்டு, நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டுச் சென்ற  ரஷ்யாவின் இராட்சத சரக்கு விமானமான அன்ரனோவ்-225, கராச்சியில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு இந்த விமானம் கராச்சி ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் இரகசியமாக தரையிறக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்படாமல், இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்டதாகவும், பணியாளர்கள் ஓய்வெடுத்த பின்னர் இன்று காலை இது, சவூதி அரேபியாவின் டமாம் நகருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்றும் பாகிஸ்தான் சஹீன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரமாக எரிபொருள் நிரப்புவதற்காகவே மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், மீண்டும் அது கராச்சியிலும் எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

640 தொன் எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்லக் கூடிய இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பற்றிய எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2018/04/22/news/30522

On 4/22/2018 at 5:32 AM, நவீனன் said:

640 தொன் எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்லக் கூடிய இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பற்றிய எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

அந்த விமானமே அனு உலை கழிவுகளை காவும் விமானம் என்பது உலகில தெரிந்த விடயம் .

 

On 4/21/2018 at 4:16 AM, நவீனன் said:

இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றதால், 14 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று விமான நிலைய முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்தார்.

சும்மா குடுகிறான்கள் நம்புங்க .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, spyder12uk said:

அந்த விமானமே அனு உலை கழிவுகளை காவும் விமானம் என்பது உலகில தெரிந்த விடயம் .

 

சும்மா குடுகிறான்கள் நம்புங்க .

அந்த அணுக்கழிவுகளை இறக்கிப்போட்டு போனத்துக்குத்தான் அந்தக்காசோ ஆருக்குத்தெரியும்? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.