Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?

Featured Replies

#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?

 

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் ஆறாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

திருமா

தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, தேசியம் என்பது தொடர்பான புரிதலைப் பெற வேண்டும். அதிலிருந்துதான் தமிழ்த் தேசியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தேசம் என்பதிலிருந்துதான் தேசியம் உருவாகிறது. தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கொண்ட, குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடிய, ஒரு நெடிய கலாசாரத்தைக் கொண்ட மக்கள் வாழும் பகுதி.

ஒரு நிலப்பரப்பு, ஒரு மொழியைப் பேசும் மக்கள், அவர்களது கலாசாரம், அவர்களுடைய பொருளியல் - சமூக உறவுகள், உற்பத்தி உறவுகள் என ஒருமித்த உறவுகளைக் கொண்டதாக இந்த தேசம் என்பது இருக்கும். தன்னிறைவு, தன் ஆளுமை என்பது அதில் நிலைநிறுத்தப்படும்.

தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும், நிர்வகிக்கும் ஆளுமையை அந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அது தேசிய இனமாகப் பரிணமிக்கும். வெறும் மொழி உணர்வும், இன உணர்வும் ஒரு தேசிய இனத்திற்கு இருந்தால் மட்டும் அது தேசிய இனமாக வளர்ந்துவிட்டதாக சொல்ல முடியாது.

மேலே சொன்ன இந்த வரையறைகள் தமிழ்த் தேசியத்திற்கு இருக்கிறதா என்பதிலிருந்துதான் இந்த விவாதத்தைத் துவங்க வேண்டும்.

தமிழ் என்கிற தேசிய இனம், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட சமூகமாக, தங்களுக்கிடையில் ஒருமித்த உறவுகளைக் கொண்டதாக, எந்த நிலையிலும் தனிநாடாக இயங்கும் பக்குவத்தை, இயங்கும் முதிர்ச்சியைப் பெற்றிருக்கிறதா என்று கேட்டால், இந்த தகுதிகள் தமிழ்த் தேசிய இனத்திற்கு முழுமையாக இருக்கிறது.

ஆனால், இந்தியாவுக்குள் ஒரு மாநிலம் என்ற வரையறைக்குள் தமிழ்நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆகவே தமிழ்த் தேசியத்தை செழுமைப்படுத்த வேண்டுமென்றால் இதைத் தனி நாடாக பரிணமிக்கச் செய்வதுதான் இலக்கு என்ற அடிப்படையில் அது அமைய வேண்டும். அப்போதுதான் தமிழ்த் தேசியம் என்பது முழுமையும் பெறும், செழுமையும் பெறும். ஒரு மாநிலமாக இயங்கும்போது தமிழ்த் தேசியம் செழுமை பெறாது.

ஹிந்தி எழுத்து அழிப்பு

இந்த நிலையில், இந்தியாவுக்குள் இருந்துகொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பேசுவதுதான் தமிழ் தேசியமா அல்லது நாங்கள் ஒரு தனி தேசமாக இயங்கப்போகிறோம் எங்களுக்கு அந்த தகுதியும் முதிர்ச்சியும் இருக்கிறது என்று குரல்கொடுக்கப் போகிறோமா என்ற கேள்விக்கு நாம் விடைதேட வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை வெறும் மொழி உணர்ச்சி, இன உணர்ச்சியின் அடிப்படையில் நாங்கள் அணுகவில்லை.

இந்து - இந்தி - இந்தியா என்ற கட்டமைப்பிலிருந்து வேறுபட்டு, அதிலிருந்து விடுபட்டு இயங்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதுதான் தமிழ்த் தேசியமாக பரிணாமம் பெற முடியும்.

ஆக, இந்திய தேசியத்திற்கு எதிரான போராட்டம்தான் தமிழ்த் தேசியத்திற்கான போராட்டமாக இருக்க முடியும். இந்திய தேசியம் இங்கே வெறும் நிலப்பரப்பை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கே மொழிவழித் தேசியத்தைப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். மதவழி தேசியத்தைப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.

போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆக, இந்த இரு தேசியங்களும் இணைந்து கட்டமைக்கப்பட்ட ஒரு தேசியமாக இந்திய தேசியம் இருக்கிறது. இந்து தேசியம் என்பது மதவழி தேசியம். ஹிந்தி என்பது மொழிவழி தேசியம்.

இதில் மதவழி தேசியம்தான் மதவாத சக்திகளின் முதன்மையான அடையாளம். அவர்கள் அதைக் கட்டமைப்பதற்குத்தான் ஹிந்தியை பிற மாநிலங்களின் மீது திணிக்கிறார்கள். பிற மொழியைப் பேசுபவர்களிலும் இந்துக்கள் இருந்தாலும் இந்தியைத் திணிப்பதால், மொழிவழி தேசியம் சிதைந்து மதவழி தேசியம் கட்டமைக்கப்படுகிறது.

தமிழனா, இந்துவா என்ற கேள்வி எழும்போது மொழி உணர்வு பெற்றவர்கள் இந்து என்ற அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இது மதவழி தேசியத்தை பாதிக்கிறது.

ஆகவே, பிற மொழிகளைப் பேசும் மாநிலங்களில் மொழிவழி தேசியம் மேலோங்கிவிடக்கூடாது; இந்தியைத் திணிப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இவர்களது நோக்கம், இந்திய தேசியத்தை இந்து தேசியமாக கட்டமைப்பதுதான். இப்போது யதார்த்தத்தில் அப்படித்தான் இருக்கிறது என்றாலும் அதை மேலும் வலுப்படுத்த நினைக்கிறார்கள். ஒரே மொழியைப் பேசினால்தான், ஒரே மதம் என்ற நிலையை உருவாக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

இந்தத் திட்டங்களைப் புரிந்துகொண்டால்தான் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முடியும். ஆனால், இங்கே தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், இந்து மதவழி தேசியம் என்பதை மிக பலவீனமான ஒரு கருத்தாகப் பார்க்கிறார்கள். அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஜாதியப் பிரச்சனைகளை உடனடியாக எதிர்கொள்வதில்லை. அதிலிருந்து விலகி நிற்கிறார்கள்.

ஜாதியப் பிரச்சனைகளைப் பேசினால், தமிழன் என்ற உணர்வு சிதைந்துவிடும்; இந்து, இந்துத்துவ அரசியலை எடுத்தால் தமிழர்களிடம் பிளவு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆகவே இதைத் தாண்டிச் செல்ல முனைகிறார்கள். தமிழ் தேசியம் இதனால்தான் நீண்ட காலமாக ஒரு வறண்ட நிலையில் இருக்கிறது.

ஆகவே, இந்து தேசிய ஒழிப்பில்தான் தமிழ்த் தேசியம் இருக்கிறது. ஜாதி ஒழிப்பில், ஜாதி முரண்பாடுகளின் ஒழிப்பில்தான் தமிழ் தேசியம் இருக்கிறது.

தமிழ்த் தேசிய சக்திகள், ஜாதி ஒழிப்பு சக்திகளோடு கைகோர்க்க வேண்டும். துவக்கத்தில் இது பின்னடைவையும் சோர்வையும் ஏற்படுத்தலாம். ஆனால், இதனைக் கூர்மைப்படுத்தி, கூர்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல முடியும்.

இந்த ஜாதி ஒழிப்புக் களத்தில் சொந்தங்களைக்கூட பகைத்துக்கொள்ள நேரிடும். ஆனால், அது ஒரு நட்பு முரண்பாடுதான். இந்துவாக இருந்து கொண்டு, தமிழ் தேசியம் வாழ்க என்பது போலித்தனமானது.

தமிழ் தேசியம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உயர் ஜாதியாக கருதிக்கொண்டு தமிழ் தேசியம் வாழ்க என்பது போலித்தனமானது. ஜாதிப் பெருமை பேசிக்கொண்டே தமிழ் தேசியம் பேசினால், அது அந்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லாது.

தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடினால், ஒருவேளை தமிழைப் பாதுகாக்கலாம். ஆனால், அது தமிழ்த் தேசியமாக வளர்ச்சியடையாது. தனித் தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும்.

ஜாதி ஒழிப்பை முதன்மை கருத்தியலாக ஏற்க வேண்டும். மதவழி அடிப்படையிலான இந்திய தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் தமிழ்த் தேசியத்தை கட்டமைக்க முடியும்.

எந்த ஒரு பிரச்சனையிலும் ஜனநாயக சக்திகளை அடையாளம் காண்பது முக்கியம். அதை எப்படிச் செய்வது? தமிழ் தேசிய அரசியலுக்கு நட்பு சக்திகள் யார், பகை சக்திகள் யார்? மொழிவழி தேசியத்திற்கு எதிரானவர்கள் யாரும் தமிழ் தேசியத்திற்குப் பகை சக்திகள்தான்.

அவர்கள் மதவழி அடிப்படையிலான இந்திய தேசியவாதிகள். குறிப்பாக இந்துத்துவ, ஹிந்தி அடிப்படையிலான இந்திய தேசியம் ஒரு பகை சக்தி.

ஆக, இந்து - ஹிந்தி - இந்தியா என்பதுதான் தமிழ் தேசியத்திற்கு பகை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிதீவிர இந்துத்துவவாதிகள் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு பகைவர்கள்தான். பிற மொழி பேசுவதாலேயே, பிற மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பதாலேயே அவர்களை பகைவர்கள் என்று கருதுவது ஏற்புடையதல்ல.

தமிழ்

தமிழ் தேசியத்தின் வரையைறையை உள்வாங்கியவர்கள், களப்பணி ஆற்றுபவர்கள், ஆற்றியவர்கள் தமிழ் அல்லாத மொழிகளைப் பேசினாலும் அவர்கள் நட்பு சக்திகள்தான்.

ஆகவே, வெறும் மொழி அடிப்படையிலான அடையாளத்தை தமிழ்த் தேசிய அடையாளமாக பார்க்க முடியாது. தமிழர் யார் என அடையாளம் காண்பதைவிட, தமிழ் தேசிய சக்திகள் யார், யார் என்று அடையாளம் காண்பதுதான் சரி.

பிற மொழியைத் தாய் மொழியாக கொண்டோர்

தமிழ் பேசாத ஒருவரிடம் ஆட்சியதிகாரத்தை எப்படிக் கொடுப்பது என்பது, துவக்கத்தில் ஓர் அவநம்பிக்கையில் வரும் அச்சம்.

களத்தில் பணியாற்றும்போது, தமிழ்மொழியை தாய்மொழியாக கொள்ளாத ஒருவர், தமிழ் தேசிய சக்தியாக வலுப்பெறுவார். அந்தக் களம் அவரை முழுமையான தமிழ் தேசிய சக்தியாக வளர்த்தெடுக்கும். அந்த நேரத்தில் அவருடைய தாய்மொழி அடையாளம் நீர்த்துப்போய்விடும்.

ஒருவர் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் அவரைத் தமிழ்த் தேசிய சக்தியாக வளர்த்தெடுப்பதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அவர் தமிழ்த் தேசிய சக்தியாக மாறுவதை பிறகு களம் தீர்மானிக்கும்.

தமிழ்த் தேசியத்தில் ஆதிக்க சாதிகள் தங்களை மேலும் ஒடுக்குவார்களோ என்ற அச்சம் ஒடுக்கப்படுபவர்களுக்கு எழுவது இயல்புதான்.

ஆனால், தமிழ் தேசிய சக்தியாக நாம் பரிணாமம் பெற்று வளர்ந்தால் அங்கே ஜாதி அடையாளம் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழ் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தினால், இந்த அச்சத்திலிருந்து நாம் விடுபட முடியும்.

அண்ணா, பெரியார்

தமிழ் தேசியம் என்ற களத்தில் அணி திரட்டப்படுகிறவர்கள், ஜாதி அடையாளங்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். ஆகவே, தமிழ் தேசிய சக்தி என்ற அடையாளம்தான் இருக்கும். அவருடைய ஜாதி உதிர்ந்துவிடும். அதாவது அவர் உண்மையான தமிழ் தேசிய சக்தியாக வளர வேண்டும்.

ஆனால், அமைப்பு ரீதியாக அணிதிரளாத பொதுமக்கள் ஜாதி ரீதியாக, மத ரீதியாக அணிதிரள்வது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவர்களையும் அரசியல்படுத்துவதில்தான் தமிழ் தேசியத்தின் வெற்றியிருக்கிறது.

கடவுள் அடையாளம்

கலாச்சார ரீதியில் தமிழ் தேசிய சக்திகளை ஒருங்கிணைக்க விரும்பி, சில அமைப்புகள் கடவுள் அடையாளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக, முருகன் தமிழ்க் கடவுள். முருகனை வழிபடுவது தமிழர்களின் வழிபாட்டு முறை என்று வாதிடப்படுகிறது. ஆனால், முருக வழிபாடு தமிழ் வழிபாடாக இருந்தாலும், அந்த வழிபாடு என்பது எப்போதோ இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கு அந்த வழிபாட்டை முன்னிறுத்துவது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் அது இந்துத்துவத்திற்கு துணைபோவதாக அமைந்துவிடும்.

கர்நாடகத்தில் பசவா இயக்கம் இந்துத்துவத்திற்கு எதிராக உருவாகி, போராடியது. ஆனால், இறுதியில் அவர்கள் ஒரு தனி ஜாதியாக, தீவிர இந்துக்களாக மாறிப்போனார்கள்.

இன்று அந்த லிங்காயத்துகள், தங்களைத் தனி மதம் என்று சொன்னாலும் அவர்கள் இந்து கலாச்சாரத் தளத்தில்தான் இயங்குகிறார்கள். லிங்கத்தை வழிபடுகிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், முருகனை முன்னிறுத்துவது தமிழ் தேசியத்திற்கு எவ்விதத்திலும் உதவாது.

திராவிடத்தை எதிராகப் பார்க்க முடியுமா?

இறுதியாக, திராவிட தேசியத்தை தமிழ் தேசியத்திற்கு எதிராகப் பார்க்க முடியுமா என்ற கேள்வி.

உண்மையில் திராவிட தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரானதல்ல. திராவிட தேசியம் தற்போதுவரை சொல்லாடலாக இருக்கிறதே தவிர, அது ஒரு நாடாக பரிணமிக்கவில்லை.

திராவிட தேசியத்தில் உள்ள பிற மொழிபேசுபவர்கள், தங்கள் மொழி அடையாளத்தைத்தான் வைத்துக்கொள்ள விரும்புகிறார்களே தவிர, திராவிட அடையாளத்தை வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே அது வெறும் கருத்தியலாக நின்றுவிட்டது.

மற்றொரு பக்கம் திராவிட சித்தாந்தத்தை தி.மு.க., அ.தி.மு.க. என்ற அரசியல் கட்சிகளின் செயல்பாட்டோடு பொருத்திப் பார்க்கிறோம்.

அவர்கள் இந்திய அரசோடு செய்துகொண்ட சமரசங்களால்தான் அவர்கள் மொழி உரிமைகளையும் இன உரிமைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற பார்வை இருக்கிறது.

ஜிஎஸ்டிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், இந்த இரு கட்சிகளின் செயல்பாடு மட்டுமே திராவிட தேசியமாகிவிடாது. திராவிட தேசியம் என்பது, தென்னிந்திய நலன்கள், தென்னிந்திய மொழிகளின் நலன்கள், அந்த இனங்களின் நலன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

திராவிட தேசியத்தில் இருந்து தமிழ் தேசியம்

இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது திராவிட சித்தாந்தத்தில் சமூக நீதிக் கோட்பாடு மிக முக்கியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது திராவிட தேசியத்தின் மிக முக்கியமான அம்சம்.

ஒரு காலகட்டத்தில் திராவிட தேசியத்திற்கான தேவை இருந்தது. அந்த காலகட்டத்தில் நாம் இருந்திருந்தால் அதைதான் பேசியிருப்போம்.

அந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கான சூழல் இல்லை. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான் மொழி அடிப்படையிலான தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறோம்.

ஆக, திராவிட தேசியம் என்ற களத்தில் இருந்துதான் தமிழ் தேசியம் என்ற அரசியல் உருவாகியிருக்கிறது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்துதான் தமிழ்நாடு உருவாகியிருக்கிறது.

ஆகவே, திராவிட தேசியத்தை பகையாக நிறுத்தி, தமிழ் தேசியத்தை அடைய முடியாது. இந்திய தேசியத்தை முதன்மை பகையாக நிறுத்தி, இந்து தேசியத்தை பகையாக நிறுத்தி போராடுவதில்தான் தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க முடியும்.

https://www.bbc.com/tamil/india-43843991

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.