Jump to content

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?


Recommended Posts

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?
 

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.   

இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.   

அந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், தமிழரசுக் கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.   

 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற, பேரவையின் மத்தியகுழுக் கூட்டத்தின் போது, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ. ஐங்கரநேசன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் விக்னேஸ்வரனால், ஏனைய மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்படாமலேயே, மத்தியகுழுவில் இணைக்கப்பட்டார்கள்.   

 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவானது, விக்னேஸ்வரனையும் அவரைச் சுற்றியுள்ளவர்களையும் சில துணிவான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியது.  

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், கூட்டமைப்புக்கு எதிராக, புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு விக்னேஸ்வரன் இணங்க வேண்டும் என்று பேரவையும், முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட கட்சிகளும், சில சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.   

அதற்காக ஊடகங்களில் பல பத்திகளும் எழுதப்பட்டன. ஆனாலும், புதிய கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்புகளை விக்னேஸ்வரன் அப்போது நிராகரித்திருந்தார்.  

 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரையில், புதிய கூட்டணியொன்றுக்கு தலைமையேற்பதற்கே பயந்து விலகியிருந்த விக்னேஸ்வரன், தற்போது புதிய கட்சியை ஆரம்பிக்கத் துணிந்திருக்கின்றார்.   

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், தமிழ்த் தேசிய அரசியலில் நிலைத்திருப்பதற்கு, அவருக்குப் பிடியொன்று தேவைப்படுகின்றது. அது, பேரவையின் மூலம் பெரிய அளவில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை.   

ஏனெனில், “பேரவை என்றைக்கும் மக்கள் இயக்கமாகவே இருக்கும்; தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக உருமாறாது. பேரவையின் இணைத்தலைவர் பொறுப்பை ஏற்கும் போது, மத்தியகுழு உறுப்பினர்களிடம் அந்த வாக்குறுதியைப் பெற்றேன்” என்று விக்னேஸ்வரன் பல தடவைகள் கூறியிருக்கின்றார்.  

அப்படியான நிலையில், பேரவை அடையாளத்தோடு, தேர்தல் கூட்டணி அமைப்பது அவருக்குப் பாதகமாக அமையும்.  

அதனால், பேரவைக்குள் இருக்கின்ற முக்கியஸ்தர்களையும் தனக்கு இணக்கமான தரப்புகளையும் இணைத்துக்கொண்டு, புதிய கட்சிக்கான அறிவித்தலை விடுக்க முடியும் என்று நம்புகின்றார். அதன்மூலம், பேரவை என்பது மக்கள் இயக்கமே. அது, கட்சியல்ல என்கிற நிலையைப் பேண முடியும். 

 பேரவையின் இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல் என்பது, விக்னேஸ்வரனின் புதிய கட்சிக்கான ஆழம் பார்க்கும் படலமே. புதிய கட்சியொன்றை முன்னெடுப்பதென்றால், இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியமானது. 

கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு களச்செயற்பாட்டாளர்கள் அவசியம். ஆனால், விக்னேஸ்வரனைச் சுற்றி, இதுவரையில் அவ்வாறான தரப்பொன்று உருவாகியிருக்கவில்லை. 

அப்படியான கட்டத்தில்தான், ஐங்கரநேசன், அருந்தவபாலன் உள்ளிட்டவர்களைத் தன்னோடு இணைப்பதில் விக்னேஸ்வரன் ஆர்வம் காட்டினார். அவர்கள் மூலம் இளைஞர்கள் படையொன்றைத் திரட்ட முடியும் என்றும் நம்புகின்றார்.   

 பேரவையால் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளின்போது, களச் செயற்பாட்டாளர்களாக அதிகளவில் செயற்பட்டது முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளின் தொண்டர்களே ஆவார். அவர்களோடு தன்னார்வத் தொண்டர்கள் சிறியளவில் கலந்திருந்தனர்.   

பேரவையிலுள்ள புலமையாளர்களினாலோ, சிவில் சமூக இயக்கங்களினாலோ களச்செயற்பாட்டாளர்கள் என்று யாரையும் முன்னிறுத்த முடியவில்லை. அதனால், பேரவையிலுள்ள புலமையாளர்கள், சிவில் சமூக இயக்கங்களை மாத்திரம் நம்பியும் களத்தில் இறங்க முடியாது.    

 இன்னொரு பக்கம், கட்சியொன்றை ஆரம்பிக்காமல், புதிய கூட்டணியொன்றுக்கு விக்னேஸ்வரன் தலைமையேற்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை அவரைச் சுற்றியுள்ளவர்கள் தற்போது எடுத்திருக்கின்றார்கள்.  

 அதற்கான கட்டங்களையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளே காட்டியிருக்கின்றன. 2015 பொதுத் தேர்தலில் வடக்கு- கிழக்கு பூராவும் சுமார் 18,000 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்த முன்னணி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுமார் 90,000 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.   

முன்னணியின் வெற்றிக்கு கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தி உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், யாழ். நகரச் சூழல், நல்லூர் வட்டங்களில் முன்னணியின் களச் செயற்பாடுகள் முக்கியமானவை.  

 ஒப்பீட்டளவின் முன்னணியின் களச்செயற்பாட்டாளர்கள் 35 வயதுக்கும் குறைந்தவர்கள். முன்னணியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே அந்த வயதினர்தான். அப்படியான நிலையில், அவர்கள் தங்களின் களச்செயற்பாட்டை, இன்னொரு தரப்பு அறுவடை செய்வதை விரும்பமாட்டார்கள்.   

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைய ஊடக சந்திப்பின் போதும், அதுவே முதன்மையாக வலியுறுத்தப்பட்டது. முன்னணி தற்போது தனித்துப் பெற்றிருக்கின்ற வாக்குகள் விக்னேஸ்வரனுக்கும், அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் உண்மையிலேயே அச்சுறுத்தலானதுதான்.

  ஏனெனில், புதிய கட்சியை ஆரம்பிக்காது, புதிய கூட்டணியை அமைத்தால், அதற்குள் முன்னணியின் பேரம் பேசும் பலம் அதிகரிக்கும்.   

அப்படியான நிலையில்தான், விக்னேஸ்வரனைத் துருப்புச் சீட்டாக புலமையாளர்களும் பத்தியாளர்களும் கையாள நினைக்கின்றனர். அதாவது, இளைஞர் மாநாட்டைக் கூட்டி, அதில் இளைஞர்களை குறிப்பிட்டளவில் பங்கெடுக்கச் செய்வதன் மூலம், விக்னேஸ்வரனைத் தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பது. 

அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வாங்குவது. அதன்பின்னர், கூட்டணியை அமைப்பதன் மூலம், செல்வாக்குச் செலுத்துவது.   

  முன்னணியைப் பொறுத்தளவில், கூட்டமைப்புக்கு மாற்றாக அல்ல, தமிழரசுக் கட்சி தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் ஆளுமைக்கு மாற்றாக, தன்னை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றது.   

ஏனெனில், தமிழரசுக் கட்சி தவிர்ந்து கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கியென்பது உண்மையிலேயே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.   

அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி எதிர் முன்னணி என்கிற கட்டத்தை வைத்துக் கொள்வதற்கே முன்னணியின் இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதன்போக்கில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக விக்னேஸ்வரனை முன்னிறுத்திய தேர்தல் கூட்டணியில் பயணிக்கவும் இணங்குகிறார்கள்.   

ஆனால், அந்தக் கூட்டணியே தம்மை பலவீனப்படுத்துமாக இருந்தால், அதில் பங்கெடுப்பதிலிருந்து விலகியிருப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். 

தமிழரசுக் கட்சியை வீழ்த்துவதற்கான கட்டத்தில் மாத்திரம் மற்றவர்களுடன் இணங்கிவிட்டு, தனியாவர்த்தனம் செய்வதையே கஜேந்திரகுமாரும், முன்னணியும் விரும்புகின்றது.   

விக்னேஸ்வரனைச் சுற்றியுள்ள புலமையாளர்கள், பத்தியாளர்கள் மீது முன்னணியின் இளைஞர்களுக்கு குறிப்பிட்டளவில் அதிருப்தியுண்டு.  

 அது தொடர்பில் கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாக அதிருப்தி வெளியிட்டு வந்த அவர்கள், அண்மைய நாட்களில் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.   

 தமிழ்த் தேசிய அரசியலில் இயக்கும் தரப்புகளில் பெரும்பாலானவை இந்தியாவோடு இணக்கமாக இருக்கவே விரும்புகின்றன. அதிலும், விக்னேஸ்வரன் போன்றவர்கள் இந்தியாவோடு மிகமிக நெருக்கமாக இருக்க விரும்புகிறவர்கள்.   

அப்படியான நிலையில், பூகோள அரசியலின் போக்கில் சீனாவோடு நெருக்கமான உறவைப் பேண வேண்டும் என்று வலியுறுத்திவரும் முன்னணியோடு, விக்னேஸ்வரன் இணைவதையோ, கூட்டணி அமைப்பதையோ இந்தியா விரும்புமா? 

தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் கூட்டணி அமைப்பதை அனுமதித்தாலும், முன்னணியின் முக்கியத்துவத்தை அடுத்த கட்டங்களில் எழாதவாறு பார்த்துக் கொள்வதிலும் இந்தியா கவனம் செலுத்தலாம்.   

அதன்போக்கிலும், விக்னேஸ்வரனின் புதிய கட்சிக்கான அறிவித்தலையும், அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும்.   

 இவற்றையெல்லாம் தாண்டி, விக்னேஸ்வரன் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கான கட்டங்கள் என்று கடந்த ஐந்து வருடங்களில் பெரிதாக எதுவும் நிகழவில்லை. அவர் நிகழ்த்தவுமில்லை.   

அப்படியான கட்டத்தில், அவரை குத்துச் சண்டை வீரராக முன்னிறுத்தி, கோதாவில் இறங்க நினைப்பதால் மாத்திரம், சாத்தியமான வழிகள் திறந்துவிடாது. அதற்காக நிறையவே உழைக்க வேண்டும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்னேஸ்வரனுக்காகக்-களமாடுவது-யார்/91-214891

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
    • தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
    • இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.