Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!!

Featured Replies

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!!
 
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் நினைவேந்தல் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கென குழுவும் நியமிக்கப்பட்டது.

“ எமது இனத்துக்கு ஏற்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் நிகழ்வை எம்முடன் இணைந்து முன்னெடுக்க பொது அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன. நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்த மாகாண சபை உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு எதிர்வரும் 9 ஆம் திகதி கூடும். அதில் முடிவு எடுக்கப்படும் ” என்று கூட்டத்தின் பின்னர் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/90922.html

  • கருத்துக்கள உறவுகள்

மாவையும் பெரும் எடுப்பில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்ய போகிறாராம்.

  • தொடங்கியவர்
  • முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நாளை கூட்­டம்!!
 
 

முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நாளை கூட்­டம்!!

முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபை­யு­டன் இணைந்து கடைப்­பி­டிக்க ஆர்­வம் காட்­டும் பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­களை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நாளை முற்­ப­கல் 11.30 மணிக்கு ஒன்று கூடு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் அழைப்பு விடுத்­துள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் முள்­ளி­வாய்க்­கால் நினை­வு­தின ஏற்­பா­டு­கள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்று இடம்­பெற்­றது. இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் கருத்­துக் கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபையே ஒழுங்­க­மைத்து வரு­கின்­றது. முள்­ளி­வாய்க்­கால் நினை­வுத் தூபிக் காணி பிர­தேச சபைக்கு சொந்­த­மான கானி­யா­கும். அது எனது அமைச்­சின் கீழேயே வரு­கின்­றது.

எமது இனத்­துக்கு ஏற்­பட பேர­ல­வத்­தின் நினை­வு­நாள் என்­ப­தால் எம்­மு­டன் இணைந்து செயற்­பட பல அமைப்­புக்­கள் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். அவ்­வாறு விருப்­பம் உள்­ள­வர்­கள் நாளைய தினம் புதன்­கி­ழமை எனது அமைச்சு அலு­வ­ல­கத்­துக்கு அழைப்பு விடுக்­கின்­றேன். அன்­றை­ய­தி­னம் எம்­மு­டன் இணைய விரும்­பும் பொது அமைப்­புக்­கள் ஒவ்­வொன்­றி­லும் இரண்டு பிர­தி­நி­தி­கள் மட்­டும் வருகை தர­வும் – என்­றார்.

பல்­க­லைக் கழ­கத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்பு

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் 5 பேர் எங்­க­ளைச் சந்­தித்­த­னர். அவர்­கள் நினை­வேந்­தலை நடத்த விருப்­பம் வெளி­யிட்­ட­னர். அவர்­க­ளது எண்­ணம் சற்று வித்­தி­யா­ச­மாக இருந்­தது.

கடந்த ஆண்டு நாங்­கள் நினை­வேந்­தல் நடத்­தி­ய­போது வேறு 4 இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்வு நடை­பெற்­ற­தா­க­வும், எங்­க­ளால் எல்­லோ­ரை­யும் ஓரி­டத்­தில் ஒருங்­கி­ணைக்க முடி­ய­வில்லை என்­றும் குறிப்­பிட்­ட­னர். தங்­களை நினை­வேந்­தல் நிகழ்வை நடத்த அனு­ம­தித்­தால் அனை­வ­ரை­யும் ஓரி­டத்­தில் ஒருங்­கி­ணைக்க முடி­யும் என்று தெரி­வித்­தார்­கள்.

ஜன­நா­யக ரீதி­யில் சில விட­யங்­களை மக்­க­ளோடு சேர்ந்து ஆலோ­சித்து முடி­வுக்கு வரு­ப­வர்­கள் நாங்­கள். அவர்­கள் எல்­லோ­ரை­யும் அழைத்­துக் கொண்டு வரு­வது என்­றால் அவர்­க­ளுக்கு வேறு விதங்­கள் இருக்­கின்­றது. அது எங்­க­ளுக்­குத் தெரி­யும். அவர் வர­வேண்­டாம், இவர் அங்கு வந்து கூட்­டம் நடத்­தக் கூடாது என்று சொல்­வது சரி­யாக இருக்­காது. எங்­க­ளோடு சேர்ந்து செயற்­ப­டு­வது அவர்­க­ளுக்­குப் பிடிக்­க­வில்லை’ என்று முத­ல­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

http://newuthayan.com/story/91004.html

 
 
 

நினை­வேந்­தல் ஒழுங்­க­மைப்­புக்கு 9பேர் குழு அமைப்பு!!

வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஏற்­பாட்­டில் நடத்­தப்­ப­ட­வுள்ள முள்­ளி­வாய்க் கால் நினை­வேந்­தல் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­காக மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் 9 பேரைக் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் இரு­வ­ரும், மாவட்ட ரீதி­யில் நிய­மிக்­கப்­பட்ட குழுவை மேற்­பார்வை செய்­வார்­கள்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு, அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், அ.பரஞ்­சோதி ஆகி­யோ­ரும், கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு த.குரு­கு­ல­ரா­சா­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு து.ரவி­ர­க­ர­னும், வவு­னியா மாவட்­டத்­துக்கு ப.சத்­தி­ய­லிங்­க­மும், மன்­னார் மாவட்­டத்­துக்கு பிறி­முஸ் சிராய்­வா­வும் குழு­வில் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

http://newuthayan.com/story/90998.html

  • தொடங்கியவர்

மே 18 நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடாத்துவதற்கு வடக்கு முதல்வர் அழைப்பு

 

 
 

(எம். நியூட்டன்)

மே 18 நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடாத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் அழைப்பு பொது அமைப்புக்களின் பிரநிதிகள் இருவரை கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவிடம் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். 

cv-wigneshwaran.jpg

மே 18 முள்ளவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு தொடர்பான கூட்டம் நேற்று வடமாகாண முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. 

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் அமைச்சர்களான சர்வேஸ்வரன், சிவனேசன், திருமதி அனந்தி சசிதரன் முன்னாள் அமைச்சர்களான குருகுலராஜா, ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

 கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்றது போன்று இந்த வருடமும் வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று இன்று பிரசின்னமாகியிருந்த மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் இடமானாது பிரதேச சபைக்குரிய காணியாகும். எனவே அது என்னுடைய உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வருகின்றது. சம்பந்தப்பட்ட நிகழ்வினை ஒழுங்கமைக்க ஒரு உறுபினர்கள் குழு நியமிக்கப்பட்டதுள்ளது. எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரும் நினைவாதலால் எம்முடன் ஒன்றுசேர்ந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்ய பல பொது அமைப்புக்கள் எம்முடன் இணைந்துள்ளன. அவ்வாறான கரிணைச உடைய அக்கறை உடைய பொது அமைப்புக்கள் எமது குழுவுடன் எதிர்வரும் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கலந்துகொள்ளுமாறும் இங்கு ஒன்றுபட்டு நிகழ்வுகளை எவ்வாறு செய்வது என்பது ஆராயபப்படும். இக் கூட்டத்தில் இதில் பங்குபற்ற விரும்புகிகன்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அந்த அமைப்புக்களின் சார்பாக அழைப்பு விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒன்றுபட்டு நிகழ்வை நடத்துவதற்கு விரும்புபவர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுகிறேன். 

இக் கலந்துரையாடல் முடிவதற்கு முன்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 5 பேர் எம்முடன் கலந்துரையாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களும் தமது விருப்பங்கள் எண்ணங்களை தெளிவுபடுத்த கேட்டிருந்தோம். அவர்களும் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சற்று வித்தியாசமான எண்ணத்தை கொண்டிருந்தார்கள். வடமாகாண சபை இவ்வளவு காலமும் செய்து வந்ததை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அவ்வாறு வடமாகாண சபை செய்தும் கூட கடந்த வருடம் நான்கு இடங்களில் இவ்வாறான நிகழ்வேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றமையினால் நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவது பயனுள்ளது என்றார்கள். நாங்களும் இதனை வரவேற்கின்றோம். அதே எண்ணத்தைத் தான் நாங்கள் கொண்டுள்ளோம். 

அவர்களுடைய கருத்து உங்களால் அனைவரையும் ஒன்றிணைத்து செய்ய முடியாது போனமையினால் எங்களிடம் விடுங்கள் நாங்கள் அனைவரையும் கொண்டுவருகின்றோம். இதன்போது நான் கூறினேன் நாங்கள் ஜனநாயக ரீதியில் மக்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து முடிவிற்கு வருவோம். நீங்கள் எல்லோரையும் கொண்டு வருவதாயின் உங்களிடம் வேறு விதங்கள் இருப்பதற்கு எமக்கு தெரியும். அந்ததந்த விதங்களில் மக்களைச் சேர்த்து ஒருவரை வரவேண்டாம் என்றும் வந்தவரை இதற்குள் வரவேண்டாம் என்றும் கூறி செய்வது எங்களுக்கு சரியானதாகப் படவில்லை. உங்களுக்கு எங்களுடன் சேர்ந்திருக்க விருப்பம் என்றால் எங்களுக்கு பல நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது. 

குறிப்பாக நினைவேந்தல் இடம் அழகு படுத்தப்படல் வேண்டும். தீச்சுடர் ஏற்பாடுகள் இதில் பிரதான சுடர், பொதுமக்கள் சுடர் ஏற்பாடுகள் பொலிஸாரின் அனுமதி பெறல், ஊடக ஏற்பாடுகள் ஒலிபெருக்கி ஏற்பாடுகள் தாகசாந்தி ஏற்பாடுகள் மாவட்ட ரீதியான பிரயான ஏற்பாடுகள் என பல ஏற்பாடுகள் செய்ய  வேண்டும். இதில் ஏதாவது ஒன்று செய்வதாயின் எம்முடன் இணைந்து செய்வதற்கு ஒத்துழைக்க முடியும். இத்தகைய விடயங்கள் பிடிப்பில்லாதது போல் தெரிகிறது. மேலும் நினைவேந்தல் நிகழ்வு கூட்டம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று எண்ணங்கள் அவர்களிடம் இருந்தன. அத்தகைய எண்ணங்களை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள எமது செயற்குழுவுடன் கலந்துரையாட முடியும் என கூறியுள்ளோம் என்றார். 

http://www.virakesari.lk/article/33205

புலம்பெயர் மாவீரர் தின நிகழ்வுகள் நினைவில் வந்து தொலைக்குது.

  • தொடங்கியவர்

நினை­வேந்­தலை மாகா­ண­சபை- நடத்­தி­னால் குழப்­பங்­கள் வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.