Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வீரனின் கதை..! என்னோடு நிற்கும் இவர் பெயர்தான் குமார..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
33813995_1744524362300555_47899642482539

 

இவரை நான் அம்பாரையில் அமைந்துள்ள ஏஎஸ்பி என்னும் வியாபார நிர்வனத்தில்  காணக்கிடைத்தது. 
இவரைக்கண்டவுடன் எனக்கு பழய யாபகம் ஒன்று நினைவுக்கு வந்தது.  
 
1990ம் ஆண்டு புலிகளினால் கல்முனை பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, அதில் கடமையாற்றிய முஸ்லிம் சகோதரர்கள் உட்பட 200 பொலிசாருக்கு மேல் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவுகள் எனது யாபகத்துக்கு வந்தது.
 
கல்முனை பொலிஸ் நிலையம் புலிகளினால் தாக்கப்பட்ட அதேநேரம் கல்முனை வாடி வீட்டில் அமைந்திருந்த 30 பேர் கொண்ட ராணுவ முகாமும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ராணுவ முகாமில் கடமையாற்றியவர்தான் இந்த குமார என்பவர். இவருக்கு நன்றாகவே தமிழ் பேசத்தெரியும். 
 
கல்முனை பொலிஸ் நிலையமும், ராணுவ நிலையமும் தாக்கப்படுவதற்கு முன், காலை 9 மணியளவில் சாய்ந்தமருதிலிருந்து அவர்களுக்கு தேவையான பலசரக்கு சாமான்களை வாங்கிக்கொண்டு ராணுவ வண்டியில் முகாமைநோக்கி வந்து கொண்டிருந்த 11 ராணுவ வீரர்களை கல்முனையின் 'எலிபண்ட் சோடா' கொம்பனிக்கு முன் புலிகளினால்  சுற்றிவளைக்கப்பட்டு ஓடஓட சுட்டுத்தள்ளப்பட்டார்கள். 
 
இதன் பின்தான் கல்முனை பொலிஸும் தாக்கப்பட்டு, பின்னர் சரணடைந்த பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
 
இந்த நிலையில்தான் கல்முனை வாடிவீட்டில் தங்கியிருந்த ராணுவ வீரர்களையும் புலிகள் சரணடையச் சொன்னார்கள். அவர்கள் சரணடையாமல் மூன்று நாட்கள் புலிகளுடன் போராடினார்கள். (ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தியும் பரவியது). அந்தளவு புலிகளின் தாக்குதல் உக்கிரமாக இருந்தது.
 
மூன்று நாட்களுக்கு பிறகு, கடல் படையினரின் கடும் முயற்சிக்கு பின்  கடல்மார்க்கமாக ராணுவீர்கள் 23பேரும் கடலில் குதித்து கடல்படை கப்பலில் தப்பிச் சென்றார்கள். அதில் ஒருவர்தான் இவர்.
 
தப்பிச் செல்லும்போது கடலில் வைத்தே மூன்று ராணுவ வீரர்கள் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். எஞ்சியவர்களே தப்பினார்கள் அதில் ஒருவர்தான் இந்த குமார என்பவர்.
 
இதில் வேடிக்கை என்னவென்றால்....
 
இவர்களைப்போல் கல்முனை பொலிசாரும் சரணடையாமல் போராடியிருந்தால் 200 உயிர்களை இழந்திருக்க தேவையில்லை என்று அன்றய சூழ்நிலையை கருத்தில் கொண்ட பலபேர் பேசிக்கொண்டார்கள்.
 
நீங்கள் தானாக சரணடைந்தால் உங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறிய புலிகளின் ஆசைவார்த்தைகளை நம்பி ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சிரித்த முகத்தோடு சரணடைந்த அத்தனை பொலிசாரும் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். 
 
அதிலிருந்து தப்பி வந்த கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜலீல் என்பவரும், நற்பட்டிமுனையைச் சேர்ந்த தாஹிர் என்பவரும்  இன்றும் உயிரோடு இருக்கிறார்.
 
ஆனால் இதே ஆசைவார்த்தைகளை வாடிவீட்டில் தங்கியிருந்த ராணுவவீரர்களுக்கும் புலிகள் விடுத்தார்கள். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் யுத்தம் செய்தார்கள். அதன் காரணமாகவே இன்று இந்த குமார என்ற முன்னால் ராணுவ வீரனை உயிரோடு காணக்கிடைத்தது என்றால் அது மிகையாகாது.
 
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...
www.madawalaenews.com
 
 

 

நல்லது. உங்கள் கடமையை நல்லா செய்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் அமைச்சராக இருந்தார் 
பிள்ளையான் இருந்தார் குமரவையும் கூட்டி சென்று 
நாலு கேள்வி கேட்டு இருக்கலாமே ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.