Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது?

Featured Replies

பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது?

 

ஜனா­தி­பதி டோனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்கா தலை­வ­ராக பத­வி­யேற்று ஒரு வருடம் பூர்த்­தி­யா­வ­தற்கு முன்னர் பல வெளிநாட்டுக் கொள்­கை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் பாதை வேறு எனது பாதை வேறு என உல­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டினார். வெளிநாட்டு கொள்கை மாற்­றங்­களில் மிகவும் பிர­சித்­த­மா­னது என வர்­ணிக்­கப்­ப­டக்­கூ­டி­யது, இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­சலேம் நகரை மாற்­றப்­போ­வ­தாக விடுத்த அறி­விப்பு என துணிந்து கூறலாம். சென்ற ஆண்டு 2017ஆம் ஆண்டில் இச்­செய்­தியை வெளியிட்டார். பலஸ்­தீ­னிய விவ­கா­ரத்தில் தொடர்­பேச்சு வார்த்­தை­களில் ஈடு­பட்ட பலஸ்­தீன அதி­கா­ர­சபை தாம் எதிர் காலத்தில் பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கு­பற்றப் போவ­தில்­லை­யென அறி­வித்­தது. அமெரிக்கா பதில் நட­வ­டிக்கை மேற்கொண்­டது. ஐ.நா சபையால் 5 மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க உரு­வாக்­கப்­பட்ட UNRWA எனப்­படும் ஐ.நா சபைப் புனர்­வாழ்வு மற்றும் பணி­க­ளுக்­கான அமைப்­புக்கு அமெ­ரிக்கா உட்­பட பல நாடுகள் நிதிப்­பங்­க­ளிப்பு செய்­கின்­றன. அமெ­ரிக்­காவின் மாதாந்த பங்­குத்­தொகை 125 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். அமெ­ரிக்கா பதில் நட­வ­டிக்­கை­யாக தனது பங்­க­ளிப்பில் அரை­வா­சியை வெட்­டி­விட்­டது. UNRWA என்ற முக­வ­ராண்மை 1948 இல் இஸ்ரேல் எனும் பூகோள வரை­ப­டத்­தில்­ இல்லாத புதிய நாட்டை அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உரு­வாக்­கி­ய­போது, அப்­பி­ர­தே­சத்தில் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பலஸ்­தீ­னி­யர்கள் விரட்டி அடிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அவ்­வா­றான 5 மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உணவு, சுகா­தார வச­திகள், கல்வி ஆகி­ய­வற்றை செயற்­ப­டுத்­தவே UNRWA தாபிக்­கப்­பட்­டது. ட்ரம்ப் அமெ­ரிக்கா பங்­க­ளிப்பை அரை­வா­சி­யாக வெட்­டி­யமை அமெ­ரிக்கா உரத்­துப்­பேசும் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை, மனித உரிமை போன்ற விட­யங்­களில் அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டங்­களை இறு­மாப்­புடன் மீறு­வதை எடுத்துக் காட்­டு­கின்­றது. ட்ரம்பின் நட­வ­டிக்­கையை ஐரோப்­பிய யுனியன் வர­வேற்­க­வில்லை. ஐரோப்­பிய நாடுகள் தத்தம் பங்­க­ளிப்­பினை அதி­க­ரித்து அமெ­ரிக்­காவின் வெட்­டுத்­தொ­கையை சரி­செய்து பலஸ்­தீன அக­தி­களின் உணவு, சுகா­தாரம், கல்வி ஆகி­ய­வற்றை தொடர்ந்து பரா­ம­ரிக்க வேண்டும் என கூறி­யுள்­ளமை சற்று ஆறுதல் தரக்­கூ­டிய விட­ய­மாகும். காசா பிர­தே­சத்தில் 17 லட்சம் பலஸ்­தீன அக­திகள் UNRWA நிதி உத­வியில் தங்கி வாழ்­கின்­றார்கள். ட்ரம்பின் தீர்­மானம் காசா பலஸ்­தீன மக்­களை பல­மாக அடித்­துள்­ளது. பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு வயிற்றில் அடித்து பலஸ்­தீன அதி­கா­ர­சபை பிர­தி­நி­தி­களை பேச்­சு­வார்த்­தைக்கு அடி­ப­ணிந்து வரப்­பண்ணும் ட்ரம்பின் நட­வ­டிக்கை பல­தி­சை­க­ளி­லி­ருந்து கண்­டனக் கணை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. வாசிங்டன் போஸ்ற் பத்­தி­ரிகை ட்ரம்பின் கொள்­கையை கண்­டித்­தது மட்­டு­மல்ல ட்ரம்ப் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதித்­துள்ளார் எனவும் கண்­டித்­தது. அத்­துடன் நிற்­காமல் அர­சியல் பிரச்­சினை விட­யங்­களில் மனி­தா­பி­மான உத­வி­களை பேரம் பேசும் விட­ய­மாகக் கொள்­ளக்­கூ­டாது எனவும் கண்­டித்­துள்­ளது.

2018ஆம் ஆண்டு இஸ்­ரேலைப் பொறுத்­த­மட்டில் 70ஆவது அக­வையைக் கொண்­டாடும் வரு­ட­மாகும். அமெ­ரிக்கா, பிரிட்டிஷ் சாம்­ராஜ்­யங்­களின் நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லான திட்­டத்தின் பிர­காரம் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் பூர்­வீக குடி­க­ளான பலஸ்­தீ­னி­யர்­களை விரட்­டி­ அ­டித்து இஸ்ரேல் என்னும் நாடு உரு­வாக்­கப்­பட்­டது. தமது பாரம்­ப­ரியப் பிர­தே­சத்தை மீட்­க­வேண்­டு­மென புறப்­பட்ட இயக்­கங்கள் பலவும் இணைந்து பலஸ்­தீன விடு­தலை இயக்கம் எனும் அமைப்பை யசீர் அர­பாத்தின் தலை­மையில் நிறு­வின. 1968ம் ஆண்டு பலஸ்­தீன விடு­தலை இயக்கம் இஸ்­ரேலை அழித்­தொ­ழித்து பலஸ்­தீன நாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற நோக்­கத்தை உலகம் பூரா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தினர். ஆனால் அமெ­ரிக்கா, பிரிட்டிஷ் பாது­காப்­புடன் இஸ்ரேல் நின்று நிலைத்­தது. அரா­பிய மன்னர் ஆட்­சிகள் பலஸ்­தீன தாய­கத்­துக்கு பெரி­தாக ஆத­ரவும் அளிக்­க­வில்லை. அந்­நா­டுகள் அமெ­ரிக்­காவை ஆத­ரிப்­ப­னவாக இருந்­தனர். பலஸ்­தீன விடு­தலை இயக்கம் பல வெவ்­வேறு இயக்­கங்­களை உள்­ள­டக்­கி­யது. அவை­த­மக்குள் மோதிப் பல­வீ­ன­மா­யின. அத்­துடன் ஜோர்டான், லெபனான் ஆகிய நாட்­டுப்­ப­டை­க­ளு­டனும் பலஸ்­தீன விடு­தலை இயக்­கம்­மு­ரண்­பட்டு யுத்தம் வரையில் வியா­பித்து பல­வீனம் அடைந்­தன. இன்று பலஸ்­தீன விடு­தலை இயக்கம் Dr. அப்­பாஸின் தலை­மையில் பலஸ்­தீன அதி­கார சபையை நிர்­வ­கிக்­கின்­றது. ஹமாஸ் இயக்கம் பலஸ்­தீன அர­சுடன் கருத்து வேற்­று­மையின் கார­ண­மாக மோதல்­களும் இடம்­பெற்­றன. ஹமாஸ் இயக்­கத்­தினர் இன்றும் பலஸ்­தீன சுயாட்சி இலட்­சி­யத்­துடன் இயங்­கு­கின்­றது. பலஸ்­தீன அதி­கார சபைக்கு சவுதி அரே­பியா ஆத­ரவு பிர­தா­ன­மா­னது. ஹமா­சுக்கு கட்டார், ஈரான், சிரிய அர­சுகள் ஆத­ர­வ­ளிக்­கின்­றன. இந்தப் பின் புலம் தான் சென்ற வருடம் சவூ­தியும் இதர நாடு­களும் கட்­டா­ருடன் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்து தரை, கடல், வான் முற்­று­கையை ஏற்­ப­டுத்­தி­யது.

ஜனா­தி­பதி ட்ரம்ப் ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை நக­ராக்கும் திட்டம் சட்­ட­வி­ரோ­த­மா­னது. எந்த ஒரு அரசோ,அரச தலை­வர்­களோ ஐ.நா பாது­காப்­புச்­ச­பையின் தீர்­மா­னத்­துக்கு மாறாக செயற்­ப­ட­மு­டி­யாது. ஜ.நா பாது­காப்புச் சபை 23.12.2016 ஆம் திகதி 2334 இலக்கம் கொண்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது.அதன் உள்­ள­டக்கம் யாதெனில் 4.6.1967ஆம் திகதி காணப்­பட்ட எல்லைக் கோடு­களை மாற்­றவோ அல்­லது ஜெரு­சலேம் உட்­பட எந்த நக­ரத்தின் அந்­தஸ்­திலும் மாற்றம் மேற்­கொள்­ளவோ முடி­யாது என்­ப­தாகும். ஆனால் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் பேச்சு வார்த்தை மேசையில் தீர்­மா­னத்தால் மாற்றம் செய்ய முடியும் எனவும் கூறி­யது.இத்­த­ரு­ணத்தில் 4.6.1967ஆம் திகதி நில­விய எல்­லைகள் என்­பது பற்றி பார்­வையை செலுத்­துதல் அவ­சி­ய­மா­ன­தாகும். யூன் 1967ம் ஆண்டு இஸ்ரேல் திடீ­ரென எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடு­களை தாக்கி பல இடங்­களைக் கைப்­பற்­றி­யது. அமெரிக்கா பின் துல்­லி­ய­மான புல­னாய்வு தக­வல்­க­ளுடன் மூன்று நாடு­களில் பலஸ்­தீன மக்கள் வாழ்ந்த பிர­தே­சங்­க­ளான மேற்­குக்­கரை,ஜெரு­சலேம், கோலான் குன்­றுகள், சினாய் பிர­தேசம் ஆகி­ய­வற்றைக் கைப்­பற்றி தனது நாட்டின் எல்­லைப்­ப­ரப்பை இஸ்ரேல் மேலும் விஸ்­த­ரித்­தது. 1967 இல் ஐ.நா பாது­காப்­புச்­சபை தீர்­மா­ன­மொன்றை அங்­கீ­க­ரித்­தது. யுத்­தத்­தில்­இஸ்ரேல் பிர­தே­சங்­களை கைப்­பற்­றி­யமை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். இஸ்ரேல் அவ்­வா­றாக கைப்­பற்­றி­யமை தவ­றாகும். இஸ்ரேல் உட­ன­டி­யாக கைப்­பற்­றிய பிர­தே­சங்­களை விட்டு விலக வேண்டும் என்­பதே அத்­தீர்­மானம் ஆகும். 242இலக்கம் கொண்ட பாது­காப்­புச்­சபை தீர்­மா­னத்தை இஸ்ரேல் எள்­ள­ளவும் கவ­னத்­திற்கு எடுக்­க­வில்லை. சர்­வ­தே­ச­சட்­டங்­களை இஸ்ரேல் மட்­டு­மல்ல அமெரிக்­காவும் மீறி­யுள்­ளமை தெளிவா­கின்­றது. 23.12.2016ஆம் திகதி 2334ஆம் இலக்க பாது­காப்புச் சபை தீர்­மானம் பராக் ஒபாமா ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த போது இடம் பெற்ற விடய­மாகும். அமெரிக்கா இத்­தீர்­மா­னத்தை விட்டோ செய்­தி­ருக்க முடியும். ஆனால் அமெரிக்கா அவ்­வாறு செய்­ய­வில்லை. வாக்­கெ­டுப்பு நேரத்தில் அமெரிக்க பிர­தி­நிதி சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. ஆகையால் தீர்­மானம் நிறை­வே­றி­யது. இக்­கா­ர­ணங்­களால் பராக் ஒபாமா மத்­திய கிழக்கில் சமா­தானம் ஏற்­ப­டுத்த உழைத்தார் என அர­சியல் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர். பராக் ஒபா­மாவின் அரபு - இஸ்ரேல் பலஸ்­தீன நெருக்­கடி தொடர்­பான கொள்கை முன்­னேற்­ற­க­ர­மா­னது.அவ­ரது தலை­மைத்­துவம் ஈரானின் அணு ஆயுத தயா­ரிப்பு, கியூபா நாட்­டுடன் எழு­பது வரு­டங்­க­ளுக்கு பின்னர் இரா­ஜ­தந்­திர தொடர்பை ஏற்­ப­டுத்­தியமை, பூகோள வெப்­ப­ம­டைதல் தொடர்­பான பணியில் நடை­பெற்ற கோப் 21 மகா­நாட்டின் தீர்­மா­ன­ங்க­ளுக்கு ஆத­ரவு அளித்­தமை போன்­ற­வற்றில் சாத­க­மாக செயற்­பட்­டமை சர்­வ­தேச அமைதி, பாது­காப்­புக்கு பங்­க­ளிப்­பு­செய்­யக்­கூ­டி­யவை.

இஸ்ரேல் என்ற புதிய நாடு 14 வைகாசி 1948 இல் உத­ய­மா­னது அமெரிக்க ஜனா­தி­பதி ட்ரூமன் காலத்தில் அமெரிக்கா, பிரிட்­டனின் பல­மான ஆத­ர­வுடன் இஸ்ரேல் நாடு உத­ய­மாகி 70 வரு­டங்கள் இந்த ஆண்­டுடன் பூர்த்­தி­ய­டை­கின்­றன. வேறு வார்த்­தையில் கூறினால் பூர்­விக குடி­க­ளான, பூமி புத்­தி­ரர்­க­ளாக இருந்த பலஸ்­தீ­னி­யர்கள் பல­வந்­த­மாக தமது இருப்­பி­டத்தை விட்டு துரத்­தப்­பட்டு இவ்­வ­ரு­டத்­துடன் 70 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டை­கின்­றன. வைகாசி 2018, 14ஆம் திகதி அமெரிக்கா அதிபர் மார்­கழி 2017ஆம் ஆண்­டை பிர­க­ட­னப்­ப­டுத்தி இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேத்தை அங்­கீ­க­ரித்­தது. அமெரிக்க தூது­வ­ரா­ல­யத்தை ஜெரு­ச­லேத்தில் அமைத்­தது. முன்னாள் அதிபர் ட்ரூமனும் இந்நாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் 14 வைகாசி எனும் திக­தியில் இஸ்ரேல் தொடர்­பான கொள்­கை­களை தெரிந்­தெ­டுத்­தமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. 14 வைகாசி 2018 இல் அமெரிக்க தூது­வ­ரா­லயம் டெல் அவிவ் நக­ரத்­தி­லி­ருந்து ஜெரு­ச­லேத்­துக்கு மாற்­றப்­பட்­டதை ஆட்­சே­பித்து பலஸ்­தீ­னி­யர்கள் பெரும்­ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கினர். இஸ்ரேல் படைகள் கண்­மு­டித்­த­ன­மாக நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்­களை சுட்டுக் கொன்­றது இன்னும் பலஸ்­தீ­னி­யர்­களின் ஆக்­ரோ­ச­மான எதிர்ப்பு தளர்ந்து விட­வில்லை. பலஸ்­தீ­னர்கள் வெறும் கைக­ளுடன் போராட்ட உணர்வை வெளிக்­காட்­டு­கின்­றார்கள். அமெரிக்க தூத­ரக திறப்பு விழா 14 வைகாசி இடம் பெற்ற போது ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் திறப்பு விழாவில் பங்­கு­பற்­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.ஐ.நா பாது­காப்­புச்­சபை தீர்­மா­னங்­க­ளுக்கு விரோ­த­மாக இந்­நா­டுகள் செயற்­பட விரும்­ப­வில்லை.பலஸ்­தீ­னி­யர்கள் தாய் நாட்­டுக்கு திரும்­பு­வ­தற்­கான நீண்ட பய­ணம்­என்­கின்ற போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். நீண்ட பயணம் எனும்­போது சீனத்­த­லைவர் மறைந்­த­மாவோ சீன புரட்­சியின் போது நீண்ட பயணம் ஒன்றை நிகழ்த்­தி­யி­ருந்தார். உலகம் பூரா­கவும் நீண்ட பயண தத்­துவம் பெரும் செல்­வாக்கை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பலஸ்­தீ­னர்­களின் மீது இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யத்­திற்கு எதி­ரான குற்­றச்­சாட்டுக் கோரிக்­கைகள் ஐ.நா. பாது­காப்­புச்­ச­பையில் அமெரிக்­காவின் வீட்டோ அதி­காரம் எனும் துருப்­புச்­சீட்டு இருக்கும் வரை செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்­றது. இதனை தற்­போது பலஸ்­தி­னிய அதி­கா­ர­சபை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு முறைப்­பா­டு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிக்கை செய்­துள்­ளது.

அமெ­ரிக்கா, ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை­வராக்­கி­ய­தற்கு இஸ்­லா­மிய கூட்­டு­றவு அமைப்பு (Organization of Islamic Corporation - OIC) கடு­மை­யான கண்­ட­னத்தை வெளியிட்­டுள்­ளது. 57 முஸ்லிம் நாடு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் OIC அமைப்பு பலஸ்­தீ­னிய விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச அரங்­கு­களில் கூடு­த­லான அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­வது கண்­கூடு. ட்ரம்பின் நட­வ­டிக்­கையை சட்­ட­வி­ரோ­த­மா­னது எனவும் வர­லாற்று ரீதி­யா­­னதும் சட்­ட­பூர்­வ­மா­னதும் இயற்­கை­யா­ன­து­மான பாலஸ்­தீ­னர்­களின் தேசிய உரி­மைகள் மீதான தாக்­குதல் எனவும் கண்­டித்­துள்­ளது. தலை­ந­க­ராக்­கிய நட­வ­டிக்கை சர்­வ­தேச சமா­தானம், பாது­காப்­பிற்கு குந்­தகம் விளை­விக்கும் எனவும் கூறி­யுள்­ளது. இஸ்­லா­மி­யர்­களின் புனி­தத்­த­ல­மான அல் அக்சா பள்­ளி­வாசல் ஜெரு­ச­லேத்தில் அமைந்­துள்­ள­மையும் அதன் கார­ண­மாக பாலஸ்­தீ­னி­யர்­களின் சட்­ட­பூர்வ உரி­மை­களை அமெ­ரிக்கா அவ­ம­திக்­கின்­றது எனவும் OIC கண்­டனம் தொடுத்­துள்­ளது. துருக்கி, இஸ்­ரேலின் குற்­றச்­செ­யல்கள் மேன்­மேலும் அதி­க­ரிக்­கின்­றது எனவும் அண்­மையில் காசா பகு­தியில் இஸ்ரேல் நடாத்­திய கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டமை இஸ்­ரேலின் மிரு­கத்­த­ன­மான செயல் எனவும் கண்­டித்­துள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்தின் மௌனம் கலைக்­கப்­பட வேண்டும் எனவும் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் துருக்கி குரல் எழுப்­பி­யுள்­ளது.

2018 வைகா­சியில் ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக்­கிய போது ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கெதிராக பெரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. ஈரான் வெறும் வார்த்தைகளோடு விளையாடவில்லை. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சிரிய அரச படைகளுக்கு ஆதரவாக தாக்குதலை உக்கிரமாக்கி அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவுப் படைகள் மீது தாக்குதலைத் தொடுத்திருந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் சிரிய ஆதரவு ஈரான் தளங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் - ஈரான் யுத்தம் சமாந்தரமாக நடைபெறுவதாகத் தோன்றியது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கையெழுத்திட்டு ஈரானுடன் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தமையும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது. இச்சூழ்நிலையில் இஸ்ரேலின் இருப்புக்குச் சவாலாக விளங்கக்கூடிய ஒரேயொரு பலம் பொருந்திய நாடு என்றால் அது ஈரானைத் தான் குறிப்பிட முடியும்.

எழுபது ஆண்டுகள் தொடர்ந்து துன்பத்தின் மேல் துன்பம் அனுபவித்துவரும் பலஸ்தீனிய மக்களுக்கு கௌரவமான தீர்வினை எட்டுவதற்கு சமகால அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இல்லையென்பது தெளிவாகின்றது. எனினும் சர்வதேச சமாதானம், பாதுகாப்பு என்கின்ற கோட்பாடுகளுடன் இயங்குகின்ற ஐ.நா சபையும் வேறு சர்வதேச சட்டங்களும் சுதந்திரமான பலஸ்தீனிய அரசை உருவாக்கி பலஸ்தீனிய மக்களின் அவலங்களை போக்க வேண்டும் என்பது பெரும்பாலான சமாதானம் விரும்பும் மக்களின் வேட்கையாகும்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-02#page-6

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.