Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

7 ஆயிரம் ரூபாவுடன், வட மாகாண சபையில் தவராசாவை தேடும் கிழக்கு பல்கலை மாணவர்கள்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 ஆயிரம் ரூபாவுடன், வட மாகாண சபையில் தவராசாவை தேடும் கிழக்கு பல்கலை மாணவர்கள்…

June 12, 2018

1 Min Read

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG-0139.jpg?resize=800%2C600

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணஅவைத் தலைவர்சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினை வுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறி ய எதிர்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.  ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்ய ப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனை கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத் துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாண வர்கள் முயன்றபோது அவை தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ள மாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என கூறியுள்ளார். இதேவேளை இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

7e13b6fd-5637-4df4-9444-fc25d513a382.jpg7e16e57d-e274-494e-8cc7-df291dbed2db.jpg70b11687-be4a-44d0-882c-b94ebd148a31.jpg92ee2eed-d99e-4ab2-81e9-cf9e8545daa6.jpg

 

http://globaltamilnews.net/2018/83294/

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் ,யாழ்பல்கலைகழகம் முள்ளிவாய்க்கால் பிரச்சனக்குள் ஏன் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர் :oO:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவப்பட்ட பணம் தவராசா வீட்டு வாசலில்: கொழும்பிலிருந்தபடி பொலிசில் முறையிட்டார் தவராசா!

June 12, 2018
35146956_1906532716058372_21506797479133

எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கு வழங்க சேகரிக்கப்பட்ட பண விவகாரம் தொடர்பாக இன்று யாழ் பொலிசாரிடம் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முறையிட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர்.

இன்று மாகாணசபையில் பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோதும், யாரும் பணத்தை வாங்காததையடுத்து, எதர்க்கட்சி தலைவர் தவராசாவின் கொக்குவில் வீட்டில் பணத்தை கொட்டியுள்ளனர். இதையடுத்தே யாழ் பொலிசாரிடம் தவராசா முறையிட்டுள்ளார்.

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக தான் கொடுத்த 7,000 ரூபா பணத்தையும் திரும்ப தரும்படி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மாகாணசபையில் கோரியிருந்தார். எனினும், இந்த கோரிக்கையை கைவிடுவதாகவும் அவையில் கூறியிருந்தார்.

இதையடுத்து கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபா வீதம் பணம் சேகரித்தனர். அதற்கு பாவப்பட்ட பணம் என்றும் பெயர் சூட்டினர்.

பாவப்பட்ட பணத்துடன் மாணவர்கள் சிலர் இன்று வடமாகாணசபைக்கு வந்தனர். பணத்தை முதலமைச்சரிடம் வழங்க எத்தனித்தபோது, இந்த விவகாரத்தை அவைத் தலைவர் ஊடாகவே கையாள வேண்டுமென முதலமைச்சர் கூறினார்.

இதையடுத்து, மாணவர்கள் அவைத்தலைவரை சந்திக்க முயன்றபோது, அவைத்தலைவர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். அத்துடன் பணத்தையும் வாங்க மறுத்துவிட்டார்.

இதன்பின்னர் வடமாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மினிடம் இது தொடர்பாக மாணவர்கள் பேசினார்கள். இந்த விவகாரத்தை சபைக்குள் பேசுவதற்கு அஸ்மின் முயன்றபோது, அவைத்தலைவர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார்.

 

இதேவேளை, இன்றைய தினம் பாவப்பட்ட பணம் தன்னிடம் வருவதை அறிந்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டார்.

இதனால் பாவப்பட்ட பணத்தை எதிர்க்கட்சி தலைவரிடம் வழங்கவோ, மாகாணசபை பிரதிநிதிகளிடம் வழங்கவோ, சபைக்குள் அது பற்றி பேசவோ முடியாத நிலையேற்பட்டது. தவராசாவிற்கு சார்பாக அவைத்தலைவர் செயற்பட்டு, பண விவகாரத்தை யாரும் பேசாத விதமாக செயற்பட்டுள்ளார்.

இதையடுத்து, மாணவர்கள் பாவப்பட்ட பணத்தை கொக்குவிலில் உ்ள தவராசாவின் இல்லத்திற்கு முன்பாக போட்டுவிட்டு சென்றனர்.

இதையடுத்து, கொழும்பிலிருந்தபடி யாழ் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, இது குறித்து முறையிட்டுள்ளார். IMG20180612092453_1080-169x300.jpgIMG20180612092501_1080-169x300.jpg

 

http://www.pagetamil.com/8089/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.