Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இரண்டு தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இரண்டு தமிழர்கள்!

June 12, 2018
Kim-selfiejpg-696x503.jpg கிம் ஜாங்கை விமானநிலையத்தில் வரவேற்று அவருடன் செல்பி எடுத்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் இரு தமிழர்கள் முக்கியக் காரண இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

 

சிங்கப்பூர் அரசின் அமைச்சரவையில் உள்ள தமிழர்களான விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் ஆகியோர் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் இருவருக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியவர் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரான பாலகிருஷ்ணன்.

ஏனென்றால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் சிறந்த நட்புநாடுகளாக ஒரு சில நாடுகள்தான் இருக்கின்றன. அதில் சிங்கப்பூர் மிகவும் முக்கியமாகும். அதனால்தான் இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்த விவரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் வாஷிங்டனுக்கும், வடகொரியத் தலைநகர் யாங்யாங்குக்கும், சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் தீவிரமாக பயணித்துச் சந்திப்பை முழுமை பெறச் செய்தார். அதிலும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு நடக்கும் தறுவாயில் ஜனாதிபதி டிரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்து அறிவித்தார். அதன்பின், வாஷிங்டனுக்குச் சென்று ஜனாதிபதி டிரம்பை சமாதானம் செய்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக நடக்கத் துணையாக இருந்தவர் பாலகிருஷ்ணன் ஆவார்.

 

57-வயதான பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர். மருத்துவம் படித்த பாலகிருஷ்ணன், கண்பார்வை சிகிச்சையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

kin%20donaldjpg அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்

மற்றொரு அமைச்சர் சண்முகம். இவர் சிங்கப்பூர் அரசில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது. இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, தங்குமிடங்கள், சந்திப்பை சுமூகமாகக் கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார் சண்முகம்.

59-வயதான சண்முகம் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர். வடகொரியாவின் விவகார ஆணையத்தின் தலைவராக இருந்துவரும் சண்முகம்தான், சாங்கி விமானநிலையத்தில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரை வரவேற்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

சிங்கப்பூரில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், ‘‘70 ஆண்டுகள் அவநம்பிக்கை, போர், ராஜதந்திர உறவில் தோல்வி ஆகியவற்றுக்கு முடிவுகட்டும் விதமாக இந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்தச் சந்திப்புக்காக 2 வாரங்களாக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறோம். இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பகை தீர்ந்து விடுமா என்பது தெரியாது, ஆனால், நட்பு மலர்வதற்கான முதல்படியாக இருக்கும்.

 

இந்த சந்திப்புக்கு தேவையான அனைத்துச் செலவுகளையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொண்டது. ஏறக்குறைய ரூ.100 கோடிவரை செலவானது. 5 ஆயிரம் பொலிஸார், உள்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன எனத் தெரிவித்தார்.

டிரம்ப், கிம் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்புச் செய்ய ஏறத்தாழ 3 ஆயிரம் பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். மேலும், இந்திய உணவு வகைகள் புலாவ், மீன், சிக்கன், பருப்பு, சிக்கன் குருமா, அப்பளம் உள்ளிட்ட 41 வகையான உணவுகள் சிங்கப்பூர் அரசு சார்பில் தயார்செய்யப்பட்டு இருந்தன.

 

http://www.pagetamil.com/8108/

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா

 

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

´´கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன´´ என டிரம்ப் கூறினார். 

மேலும், "கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்", "தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்," என கிம் நினைவு கூரப்படுவார் எனவும் டிரம்ப் தெரிவித்தார். 

´´வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் இராணுவ திறன்களை குறைக்கப் போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்´´ என்று அவர் தெரிவித்தார். 

இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார். 

வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்," என்றும் "அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்," என்றும் தெரிவித்தார். 

´´அணு ஆயுத பயன்பாடு முடியும் போது தான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்´´ என்று குறிப்பிட்டார். 

´´அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்´´ எனவும் டிரம்ப் தெரிவித்தார். 

´´வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,´´ எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கோயில்மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டினால் உலகத்திலை நாட்டிலை ஏன் வீட்டிலையே எல்லாம் வெற்றிகரமாய்த்தானே முடியும்...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.