Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்த தலைமையை உருவாக்கும் சக்தியாக நாம் இருப்போம்......ஞான­சார தேரர்

Featured Replies

பெளத்த தலைமையை உருவாக்கும் சக்தியாக நாம் இருப்போம்

 

மாநா­யக்க தேரர்­களின் தலை­மைத்­துவம் தேவைப்­ப­டு­கின்­றது. அவர்­களே அடுத்த தலை­வரை தீர்மானிக்க வேண்டும்

மாநா­யக்க தேரர்­களின் தலை­மையில் சகல இனங்க ளையும் இணைத்துக்கொண்டு பய­ணிக்கும் தூய்­மை­யா­னதும் தைரி­ய­மானதுமான தலைமை ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். அவ்­வா­றான ஒரு தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க நாம் முன்­வ­ருவோம். ஆனால் தேர்­தலில் நேர­டி­யாக ஒரு­போதும் நாம் குதிக்­கப்­போ­வ­தில்லை. தேரர்கள் மன்­னர்­க­ளாக முடி­யாது, மன்­ன­ரா­வது எமது கட­மையுமல்ல. ஆனால் மன்­ன­ர்­களை உரு­வாக்கும் சக்தி நாமா­கவே இருக்க வேண்டும். அதுவே எமது அடுத்த பயணம்.  

இந் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப ஹிட்லர் போன்ற ஒரு­வரே சரி­யா­னவர். கோத்­த­பாய ராஜபக் ஷவின் குறு­கிய நிர்வாகக் காலத்தில் நாடு சரி­யாக செயற்­பட்­டது என்­பதை மறுக்க முடி­யாது. அதேபோல் சம்­பிக்க போன்­ற­வர்­களின் தலை­மைத்­து­வமும் வேண்டும் என அத்தே ஞான­சார தேரர் "­கே­ச­ரி"க்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். பொது­பல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரு­ட­னான முழு­மை­யான செவ்வி பின்­வ­ரு­மாறு:

 

 

 

சிறையில் உங்­களின் பெளத்த கொள்கை, பின்­பற்­ற­லுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­ட­தாக பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­தி­ருந்­தன. உண்­மையில் உள்ளே என்ன நடந்­தது?

எனது கைதின் பின்னர் பெளத்த மக்கள் அனை­வரும் என் மீதான அக்­க­றையை செலுத்­தி­யதை நான் அவ­தா­னித்தேன். 6 மாத காலக் கடூ­ழிய சிறை எனக்கு வழங்­கப்­பட்­ட­வுடன் எனக்கும் மனதில் வேதனை ஏற்­பட்­டது. புதிய வித­மான அனு­பவ­மா­கவும் இருந்­தது. சிறைக்குச் சென்­ற­வுடன் சாதா­ர­ண­மாக ஒரு கைதியைப் பதிவு செய்­வதைப் போலவே என்­னையும் பதிவு செய்­தனர். வழ­மை­யாக அங்கு சென்­ற­வுடன் எமது உட­மை­களைக் கைய­ளித்த பின்னர் சிறைச்­சாலை உடையைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். சிறைச்­சாலை உடை­யுடன் தான் சிறைக்குச் செல்ல வேண்டும். எனக்கும் இது புது­வி­த­மான அனு­ப­வ­மாக இருந்­தது. என்­னையும் அவ்­வாறே அழைத்துச் சென்­றனர். எனினும் எனக்கு எவ்­வாறு சிறை உடை கொடுப்­பது என்ற கேள்வி அவர்­க­ளுக்கும் எழுந்­தது. எனினும் "சிறைச்­சாலை உடையைத் தான் நீங்கள் அணிய வேண்டும்", எனக் கூறி­ய­வு­டன் எனக்கும் மிகப்­பெ­ரிய வேதனை ஏற்­பட்­டது. எனினும் என்னைத் தூக்கில் போட்­டாலும் கூட நான் எனது காவியைக் களைய மாட்டேன். நான் சிறைக்குச் செல்­லு­ம­ளவு எந்தத் தவறும் செய்­ய­வில்லை. எனவே எனது மன­சாட்­சிக்கு அமை­யவே நான் செயற்­ப­டுவேன் எனக் கூறினேன். எனினும் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் மீது குறை கூற முடி­யாது. எனவே அவர்­க­ளுடன் நான் சண்டை போட்டு எந்தப் பயனும் இல்லை. அவர்­களின் கட­மைக்கு நான் இட­ம­ளிக்க வேண்டும். எனவே நான் சிறைச்­சாலை உடை­களை அணி­கின்றேன் எனக் கூறினேன். வெலிக்­கடை சிறையில் பிர­தான அதி­காரி ஒரு முஸ்லிம் நபர். அவர் என்னைக் கண்­ட­வுடன் என்னருகில் வந்து என்­னுடன் கதைத்தார். அவர் அந்த பத­வியிலிருக்கும் போது தேர­ருக்கு சிறைச்­சாலை கால்­சட்டை அணிவித்தால் அது நாட்டில் எவ்­வா­றான குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும்..? ஆகவே ஒரு தேர­ராக நான் அதனை வெளிப்­ப­டுத்­த­வில்லை. என் மீதான விமர்­ச­னங்­களை நீக்க இது எனக்கு நல்ல சந்­தர்ப்பம் என்­ப­தையும் கருதி அமைதி காத்து செயற்­பட்டேன்.

 

 

 

எனினும் ஊட­கங்­களில் வேறு வித­மான கருத்­துக்­களும் வந்­தனவே? நீங்கள் காவியைக் களை­யவே இல்லை எனக் கூறு­கின்­ற­னரே?

இக் கேள்­விக்கு நான் பதில் கூற விரும்­ப­வில்லை. சில படங்­களை வெளிப்­ப­டுத்­தியிருந்த போதிலும் அதிலுள்­ளது நானில்லை. நான் காவியில் இருக்­க­வில்லை. வெள்ளை சாரம் ஒன்றை அணிந்­து­கொண்டே இருந்தேன். எவ­ருக்கும் கஷ்டம் கொடுக்­க­வு­மில்லை. சிறையில் உள்ள அனை­வரும் என்னை ஒரு கைதி­யாகப் பார்க்­க­வில்லை. அவர்கள் உண்­மை­யாக என்­மீது அன்பு செலுத்­தினர். நல்ல மனி­தர்கள் சிறையில் உள்­ளனர் என்­ப­தையும் நான் அறிந்­து­கொண்டேன்.

நீங்கள் ஏன் வெளி ஆட்­களை சந்­திக்­க­வில்லை?

சிறைச்­சாலை சட்­ட­மா­னது மிக நீண்­ட­கா­ல­மாக இலங்­கையில் கையா­ளப்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் என் ஒரு நபர் மூல­மாக குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நான் விரும்­ப­வில்லை. தேரர் ஒரு­வ­ருக்கு சிறைச்­சாலை ஆடை அணி­விப்பதை வைத்­து­க்கொண்டு சமூ­கத்தில் மாற்றுக் கருத்­துக்கள் தலைதூக்கும். என்னைப் பார்ப்­ப­வர்கள் வெளியில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வார்கள். அதற்கு நான் விரும்­ப­வில்லை. அதனால் தான் நான் வெளியிலிருந்து வந்த எவரையும் சந்­திக்­க­வில்லை.

எனினும் முக்­கிய நபர்கள் சிலரை நீங்கள் சந்­தித்­தீர்கள் தானே?

ஆம், சில நபர்­களை நான் சந்­தித்தேன். உதய கம்­மன்­பில சந்­திக்க வந்தார். கம்­மன்­பில போன்­ற­வர்கள் ஆரம்­பத்திலிருந்தே எனக்குப் பல உத­வி­களை செய்துள்­ளனர். ஆகவே அவரை நான் சந்­தித்தேன். அதேபோல் துமிந்த திஸா­நா­ய­க்கவும் சந்­தித்தார். எனினும் அவ­ருடன் நான் இதற்கு முன்னர் பழ­க­ியிருக்கவில்லை. ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் அவர் சந்­திக்க வந்­தி­ருந்தார். ஆனால் அவர் வரு­வதை எனக்கு எவரும் அறி­விக்­க­வில்லை. எனினும் சந்­திக்க வந்­த­வுடன் நான் நிரா­க­ரிக்­க­வில்லை.

எனினும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ரவை ஏன் நிரா­க­ரித்­தீர்கள்?

நான் நிரா­க­ரிக்­க­வில்லை. ஜயந்த சம­ர­வீ­ரவும் வந்­தி­ருந்தார். அவர்கள் வந்­தது எனக்குத் தெரி­யாது. எனக்கு இந்த விட­யங்கள் தெரி­ய­வில்லை. ஆகவே அவர்கள் சென்ற பின்­னரே நான் அறிந்­து­கொண்டேன்.

கைது செய்­யப்­பட்ட அன்­றைய தினமே பிணை பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற கருத்தும் நில­வி­யது. எனினும் வழங்­கப்­ப­ட­வில்லை. சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரி­களின் செயற்­பா­டு­களில் சிக்­கல்கள் இருந்­தனவா?

இது திட்­ட­மிட்ட செயற்­பா­டாகும். என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற திட்­ட­மிட்ட நகர்வு இருந்­தது. இது குறித்து இப்­போ­தைக்கு கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டாம் என மாநா­யக்க தேரர்கள் எனக்குத் தெரி­வித்­துள்­ளனர். அனை­வரும் எனக்­காகக் குரல் கொடுத்­தனர். இது எனக்கு நம்­பிக்­கையைக் கொடுத்­தது. ஆகவே அவர்­களின் கருத்­துக்­க­ளுக்கு நான் மதிப்­ப­ளிக்க வேண்டும். இலங்­கையைப் பொறுத்­த­வரை அனைத்­துமே தலை­கீ­ழாகத் தான் நடக்கும். ஒரு குற்­றத்­துக்கு இரு தண்­டனைகள். தேங்காய்த் திருடன் சிறையில். கோடிக்­க­ணக்கில் கொள்­ளை­ய­டித்­தவன் வெளியில். எனக்கு சட்டம் தெரி­ய­வில்லை. ஆனால் நியா­ய­மாகப் பார்த்தால் தவ­றாகத் தெரி­கின்­றது. எவ்­வாறு இருந்­தாலும் எனது விட­யத்தில் சட்­டத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­து­விட்­டனர். இதில் முக்­கிய அமைச்­சர்கள் இரு­வரும் வேறு சில நபர்­களும் இருந்­தனர்.

 

 

 

யார் அந்த இரு அமைச்­சர்கள்?

அர­சாங்­கத்தில் இன்று தாம் தான் தீர்­மா­னிக்கும் சக்தி எனக் கூறிக்­கொண்டு அனைத்து ஊட­கங்­க­ளையும் கையில் வைத்­து­கொண்டு செயற்­படும் நபர்களே அவர்கள். ஆனால் அவர்கள் குறித்து இப்­போது நாம் எதையும் பேசப்­போ­வ­தில்லை. மாநா­யக்க தேரர்­களின் ஆலோ­ச­னைக்கமைய தேவைப்­படும் நேரத்தில் நான் உண்­மை­களை வெளி­ப்ப­டுத்­துவேன்.

 

 

 

உங்­களைக் கைது செய்­யப்­போ­வது குறித்து உங்களுக்கு ஏற்­க­னவே தெரிந்­துவிட்ட­தாகக் கூறி­யுள்­ளீர்கள். எவ்­வாறு தெரிந்­தது?

நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்­களிலிருந்து எனக்கு அந்தத் தகவல் கிடைத்­தது, என்னைக் கைது செய்ய ஒரு வாரத்­துக்கு முன்­னரே இது தெரிந்­து­விட்­டது. எனினும் நான் கைதாக மாட்டேன் என்ற தைரி­யத்தில் அது குறித்து எந்த முன்­னா­யத்த நட­வ­டிக்­கை­க­ளையும் நான் முன்­னெ­டுக்­க­வில்லை. ஆனால் எனக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட காரணி என்னைக் கைது­செய்யும் அள­வுக்கு பார­தூ­ர­மா­னதல்ல. திட்­ட­மிட்டு என்னைப் பழி­வாங்­கி­விட்­டனர்.

யார்? எதற்­காக உங்­களைப் பழி­வாங்க வேண்டும்?

பல­ருக்கு என்னைப் பழி­வாங்க வேண்டும் என்ற தேைவயிருந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குரல் எழுப்­பி­யவன் என்ற பெயரில் கைது செய்ய பல முஸ்லிம் தலை­வர்கள் மற்றும் அமைப்­பு­க­ளுக்கு அந்தத் தேவையிருந்­தது. அர­சாங்­கத்தில் உள்ள, முன்­னைய ஆட்­சியிலிருந்த சில­ருக்கு என்னைப் பழி­வாங்க வேண்டும் என்ற தேவையிருந்­தது. அதன் விளைவே எனது கைதாகும்.

உங்­களது கைதின் பின்­ன­ணியில் சிலர் உள்­ளனர். திட்டம் உள்­ளது எனக் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் ஆதா­ரங்கள் எவையும் இல்­லையே?

ஆம், ஆனால் எமக்கு சில தக­வல்கள் கிடைத்­தன. சாட்­சி­யங்­க­ளும் எம்­மிடம் உள்­ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளி­யி­டுவோம்.

நீங்கள் தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் நெருங்­கிய தொடர்பில் உள்­ள­தா­கவும் அந்தக் கருத்­தினை நிரா­க­ரிக்­கவே இக் கைது இடம்­பெற்­ற­தா­கவும் மாற்று அணி­யினர் கூறு­கின்­றனர். இதில் உண்மையுள்­ளதா?

நாம் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என எனக்குத் தெரி­ய­வில்லை. முன்­னைய ஆட்­சியில் கோத்­தப­ாயவின் நபர் எனக் குறிப்­பிட்­டனர். அவர்கள் தான் எனக்குப் பணம் கொடுக்­கின்­றனர். நோர்­வே­யுடன் தொடர்புள்­ளது எனக் கூறு­கின்­றனர், ஆனால் இன்­று­வரை நிரூ­பிக்­க­வில்லை. இப்போது இந்த அர­சாங்­கத்தில் நான் ஒரு நபர் எனக் கூறு­கின்­றனர். எந்த அர­சாங்கம் வந்­தாலும் நாம் நாமா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம்.

கட்சி அர­சி­யலில் பய­ணிக்கும் நோக்கம் உங்­க­ளுக்கு இருந்­தது உண்மை தானே?

இரு சந்­தர்ப்­பங்­களில் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்­தது. ஒன்று ஜாதிக ஹெல உறு­மய உரு­வாக்­கப்­பெற்ற நேரத்தில் நாம் முன்­னின்று செயற்­பட்டோம். அப்­போதும் நாம் ஹெல உறு­ம­யவை ஒரு கட்­சி­யாகப் பார்க்­க­வில்லை, மக்­களும் பாரிய ஆத­ரவைத் தெரி­வித்­தனர். 2001–-2002 காலத்தில் சந்­தி­ரிகா ஆட்­சியில் பெளத்த சாசன அமைச்சின் கொள்­கையை எடுத்­துப்­பா­ருங்கள். இந் நாட்டில் சிங்­கள–பெளத்த மக்கள் மீதான திட்­ட­மிட்ட அழி­வுகள் குறிப்­பி­டப்­பட்­டன. இத­னையே ஜாதிக ஹெல உறு­மய வலி­யு­றுத்த முன்­வந்­தது. இறு­தியில் அவர்கள் பிளவுபட்­டனர். எமக்கும் வருத்­த­ம­ளித்­தது. ஆகவே நாம் அர­சி­யலிலிருந்து ஒதுங்கிக் கொண்டோம். அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு யுத்­தத்தை வெற்­றி­கொண்ட வீரர்­க­ளுக்கு நாம் மதிப்புக் கொடுத்தோம். கோத்­த­பாய ராஜபக் ஷவை மட்டுமல்ல, யுத்த வீர­ராக சரத் பொன்­சே­காவையும் பார்த்தோம். எனினும் இவர்கள் தனித்து அர­சியல் போராட்­டத்தில் ஈடு­பட்ட நிலையில் நாம் வேத­னைப்­பட்டோம்.

எனினும் அப்­போதும் நாம் அர­சியல் நோக்­கத்­துக்­காகப் பய­ணிக்­க­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனும் நாம் ஆரம்­பத்தில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பேச்­சு­வா­ர்த்தை நடத்­தினோம். ஆனால் இணை­ய­வில்லை. இறு­தியில் பொது­பலசேனா என எமக்­கென்ற அமைப்­பினை உரு­வாக்­கினோம். இது முஸ்லிம் எதிர்ப்பு அமைப்பு என்று கூறப்­பட்­டது, ஆனால் அது­மட்­டுமே காரணமல்ல. மத ­மாற்றம், இன அழிப்பு, நில ஆக்­கி­ர­மிப்பு, மனித உரி­மைகள் மீறல்­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுக்க என பல்­வேறு கார­ணி­களை உள்­ள­டக்­கிய கொள்கை எம்­மிடம் இருந்­தது. அதன் பின்னர் நாம் கோத்த­பாய ராஜபக் ஷவுடன் இணைந்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்­தனர். ஆனால் எந்­த­வொரு நெருக்­க­மான தொடர்­பையும் நாம் வைத்­தி­ருக்­க­வில்லை. எனினும் அவர்கள் மூல­மாக பெளத்த பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்கையிருந்­தது. கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து கொள்­கை­யுடன் செயற்­பட்டு வரும் என்னை இலக்கு வைத்தே அனை­வரும் தாக்­கு­கின்­றனர். நாம் யாரு­டனும் இணைந்தால் இவ்­வாறு இருக்க வேண்­டிய அவ­சியமில்லை.

கோத்­தபாய ராஜபக் ஷவுடன் இருந்த தொடர்பு என்ன?

அவர் பெளத்த பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுத்­த­ருவார் என்ற நம்­பிக்கை இருந்­தது. குறிப்­பாக அப்­போது முஸ்லிம் இன­வாதப் பிரச்­சினை தலை­தூக்கி இருந்­தது. அப்­போது அவர் தலை­யிட்டு முஸ்லிம் தரப்­பையும் எம்­மையும் வைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். உண்­மையில் நாட்டில் பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும் என்ற தேவை அவ­ருக்கிருந்­தது.

அப்­போது அளுத்­கம சம்­பவம் உங்­க­ளையும் கோத்த­பாய ராஜபக் ஷவையும் தொடர்பு படுத்­தி­ய­தாக இருந்­ததே?

உண்­மையில் இந்தக் கார­ணி­களை கண்­ட­றிய ஆணைக்­குழு ஒன்றை அமைக்கக் கோரி அப்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும் தெரி­வித்தோம். இந்த அர­சாங்­கத்­துக்கும் நாம் அத­னையே கூறினோம். இந்த சம்­ப­வங்­களில் பின்­னணி என்ன என்­பதைக் கண்­ட­றிய ஆணைக்­குழு ஒன்­றினை அமை­யுங்கள். யார் முதலில் கல் தாக்­குதல் நடத்­தினர் என்று பாருங்கள். நாமும் அப்­போ­தைய அர­சாங்­கமும் தொடர்பு பட்­டி­ருந்தால் இன்­று­வரை இந்த அர­சாங்கம் ஏன் கண்­ட­றி­யாது உள்­ளது? எமக்கு அவ்­வா­றான ஒரு இனக் கல­வ­ரத்தை உரு­வாக்க வேண்­டிய தேவையிருக்­க­வில்லை. எனினும் தேரர்கள் தாக்­கப்­பட்­டனர்.சிங்­களக் கடைகள் எரிக்­கப்­பட்­டன. நான் தான் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்த்தேன். இல்­லையேல் பாரிய இனக் கல­வ­ரமே உரு­வாகி இருக்கும். எனினும் இந்த அர­சாங்கத்தினர் எம்மை வைத்து தமது அர­சி­யலை நடத்தி விட்­டனர்.

 

 

 

எனினும் "உங்­களால் தான் தோற்றேன்" என்ற கருத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ஒரு சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்­தி­ருந்­தாரே?

ஆம். ஆனால் ஏன் அவ்­வாறு கூறினார் என எனக்கும் தெரி­ய­வில்லை. முஸ்லிம் வாக்­குகள் என்னால் தான் பறி­போ­ன­தாகக் கூறினார். அப்­ப­டி­யானால் சிங்­கள வாக்­குகள் எவ்­வாறு இல்­லாது போயின? தமி­ழர்கள் ஏன் ஆத­ரிக்­க­வில்லை? இரா­ணுவம் மற்றும் பொலிஸாரின் வாக்­குகள் ஏன் கிடைக்­க­வில்லை? தமது இய­லா­மையை வெளிக்­காட்­டாதிருக்க எம்­மீது குற்­றத்தை சுமத்­தி­விட்­டனர்.

"எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தேர்­தலை இலக்கு வைத்து நீங்கள் அமைச்சர் சம்­பிக்க ரண­வ­க்க­வுடன் இணைந்து செய்யும் நாட­கமே இது" என கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். இது குறித்து உங்­களின் கருத்து என்ன?

எனக்கு அவ்­வாறு எந்தத் தேவையும் இல்லை. சம்­பிக்க ரண­வக்க எனக்கு நண்பருமில்லை. உறவினருமில்லை. அவ­ருக்­காக ஏன் நான் கஷ்­டப்­பட வேண்டும்? அவர் மீது நான் அதி­ருப்­தியில் உள்ளேன். எனது விகாரை நடுவே பாரிய கால்வாய் ஒன்றை வெட்­டி­யுள்­ளனர். அதை மூடி­த்த­ரு­மாறு கேட்டேன். இன்­று­வரை செய்து தர­வில்லை. சம்­பி­க்க­வுடன் நான் இணைந்து செயற்­பட வேண்­டிய எந்தத் தேவையுமில்லை.

இன­வா­தத்தை பிர­தா­னப்­ப­டுத்­தி­ய­தாக உங்­களின் கொள்கை அமைந்­துள்­ளதே?

வடக்கில் தமிழ் தலை­வர்கள் எவ்­வாறு இன­வா­தத்தை கக்­கு­கின்­றனர்? மத­வாதம் இல்லை என்­பதை ஏற்­று­கொள்­கிறோம். ஆனால் அர­சியலில் இன­வாதம் உள்­ளது. முஸ்லிம் இன­வாதமும் மத­வாதமும் கக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் இது குறித்து எவரும் வாய் திறப்­ப­தில்லை. அவை சிறு­பான்மை உரிமை எனக் கூறு­கின்­றனர். நாம் பேசினால் சிங்­கள இன­வா­திகள் என்ற அடை­யா­ளத்தைப் பொறித்து விடு­கின்­றனர். நாம் ஏனைய இனத்­த­வ­ரிடம் இருந்து பறித்துக் கொண்ட ஒரு விட­யத்தைக் கூறுங்கள். நாம் சிறு­பான்மை மக்­களை கஷ்­டப்­ப­டுத்­திய ஒரு கார­ணியைக் கூறுங்கள். அவ்­வாறு எதையும் கூற முடி­யாது. நாம் இன நல்­லி­ணக்­கத்தைக் குழப்­பு­கின்றோம் என்று கூறு­வது உண்மை என்றால் வாசு­தே­வ­ ஏன் தீர்­வுகள் குறித்து பேச­வில்லை? அவ­ரது புதல்­வியை வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனின் புதல்வர் திரு­மணம் செய்­து­கொண்டார். இவர்கள் இரு­வரும் ஒரு மேசையில் அமர்ந்து தேசிய பிரச்­சி­னை­களைத் தீர்க்க முயற்­சிக்­க­லாமே...? அவர்கள் இன­வாதக் கொள்கை மூல­மாக தமது உரி­மை­களை வென்று கொள்­கி­ன்றனர். கிழக்கில் முஸ்­லிம்கள் தமது மதக் கார­ணி­களை கூறு­கின்­றனர். ஆக்­கி­ர­மிப்­பு­களை செய்­து­கொண்டு அவர்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்­கின்­றனர். ஆனால் சிங்­க­ளவர் நாம் என்ன செய்­வது?

பொது­பலசேனா எப்­போது அர­சி­யலில் குதிக்­கப்­போ­கின்­றது?

அது எமது இடமில்லை. தேரர் ஒருவர் மன்­ன­ராக முடி­யாது. மன்னராவது எமது தேவையுமில்லை. அர­சி­யலை சரி­யாக வழி­ந­டத்த அழுத்தம் கொடுக்க முடியும். மக்­க­ளுக்­கான சரி­யான பாதை­யினை உண்­மை­களைக் கூறி வழி­ந­டத்த முடியும். இது அர­சியல் கொள்கையல்ல. இந் நாட்டின் கல்வியும் சுகா­தாரமும் அழிந்து வரு­கின்­றன. மத முரண்­பா­டுகள் எழு­கின்­றன. மக்­க­ளுக்கு அர­சியல் வெறுத்துப் போய்­விட்­டது. இந் நாட்டை விட்டு மக்கள் வெளி­யேறும் நிலைமை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவற்­றுக்கு பதில் வேண்டும். ஒரு தேரர் என்ற வகையில் நாட்­டி­னையும் அர­சி­ய­லையும் சரி­யான பாதைக்கு கொண்­டு­வர வேண்டும். அதுவே எமது கடமை. அதனைச் செய்ய அனைத்து தரப்­பு­களுடனும் பேசுவோம். தேவை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். பெளத்­த­த்துக்கு முன்­னு­ரிமை வழங்க வேண்டும்.

நீங்கள் 2020 ஆம் ஆண்டு எந்தத் தலை­மைக்­காக முன்­ வ­ரு­வீர்கள்?

நாம் யாரு­டனும் இணைய வேண்­டிய அவ­சியமில்லை. ஏனைய நபர்­களை விட கோத்தபாய ராஜபக் ஷ முன்­ன­ணியில் உள்ளார். அவ­ருடன் ஆரம்­பத்தில் சில சந்­தர்ப்­பங்­களில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதில் அவர் பெளத்த கொள்­கையை ஆழ­மாக நேசிப்­பவர் என்­பது தெரியவந்­தது. ஆனால் அவர் வரு­வாரா என்று தெரி­யாது. சம்­பிக்க ரண­வக்­கவின் பெயரும் கூறப்படுகின்­றது. அவரும் பெளத்த கொள்­கையில் உள்­ளவர். ஆனால் இவர்­களில் யார் வரு­வார் என்று எமக்குத் தெரி­யாது. எவ்­வாறிருந்­தாலும் இந் நாட்டிலுள்ள பிரச்­சி­னை­களை சரி­யாக இனங்­கண்டு சரி­யான கொள்­கையில் ஒருவர் வந்தால் அவ­ருக்­காக நாம் மக்கள் மத்­தியில் செயற்­ப­டுவோம். சகல இனங்­க­ளையும் ஒன்­றாக இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க வேண்டும். அதேபோல் இன­வாத முரண்­பா­டு­க­ளையும் பேசுவோம். சந்­தர்ப்­ப­வாத அர­சியல்வாதி­க­ளுக்கு நாம் ஆத­ர­வில்லை. எமக்குத் தேசியத் தலைவர் ஒரு­வரே வேண்டும்.

 

 

 

ஹிட்லர் தலைமை போன்று இரா­ணுவ ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என பெளத்த பீடம் குறிப்­பிட்­டது. இது நாட்டில் பல்­வேறு கருத்து முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது குறித்து உங்­களின் பார்வை எவ்­வாறு உள்­ளது?

அவர் கூறு­வதில் தவறில்லை. இன்று சாதா­ரண ஒரு நப­ரிடம், சாதா­ரண மக்­க­ளிடம் உங்­களின் கருத்தைக் கேளுங்கள். என்ன நடந்­தாலும் பர­வா­யில்லை. இறுக்­க­மான தலைவர் வந்­தாலும் பர­வா­யில்லை. ஆட்­சியை சரி­யாக நடத்­துங்கள்.மக்­களின் பிரச்­சி­னையைத் தீருங்கள் என்ற கருத்­தி­னையே கூறு­வார்கள். கோத்­த­பாய ராஜபக் ஷ பாது­காப்பு அதி­கா­ரி­யாக இருந்த காலத்தில் ஏதோ ஒரு முறையில் நாட்­டினை கட்­டு­ப்பாட்­டுடன் ஒழுக்­கத்­துடன் வைத்­தி­ருந்தார் தானே..? அதற்­காக ஹிட்லர் என்று கூற வேண்­டிய அவ­சியமில்லை. இந் நாட்­டினை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றால் ஒன்று பயம் இருக்க வேண்டும். இல்­லையேல் அதிக பணம் இருக்க வேண்டும். இந்த நாட்­டினை சரி­யாக நடத்த நேராக நின்று செயற்­படும் தலை­மைத்­துவம் வேண்டும். மாண­வர்கள் போதைக்கு அடி­மை­யாக உள்­ளனர். கொள்கை ஒன்று இல்லை. இலக்கு இல்லை. இவற்றை உருவாக்க வேண்டும். எமது பிள்ளைகளுக்கு இலக்கு என்ற ஒன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு மோகத்தை மாத்திரம் பழக்கிக்கொண்டு எவ்வாறு எமது சமூகத்தை காப்பாற்றுவது? சட்டம், நீதி, சுயாதீனம் என எல்லாமே உள்ளன.ஆனால் இவை எவையும் நடைமுறையில் இல்லையே..? ஆகவே ஹிட்லர் போன்ற கட்டுப்பாடு கொண்ட ஒருவர் அவசியம் என்பதில் தவறில்லை.

சுயாதீனமாகக் களமிறங்கத் தயாரா?

நாம் மக்களுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம். ஆனால் எனது ஆயுட்காலத்தில் ஒரு நாளும் "அரசியல் பக்கம்" என்ற ஒன்றை எடுக்க மாட்டேன். எனினும் சரியான தலைவர் ஒருவருக்கு நாம் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளோம். அதுவும் இந் நாட்டு மக்களுக்காக என்பதை மறந்துவிடக்கூடாது.

 

 

 

பெளத்த தலைவர்கள் மூலமாக எவ்வாறு தலைமைத்து வத்தைக் கொண்டுவருவது?

சங்க சம்மேளனத்தின் மூலமாக அடுத்த தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும். நேர்மையான, தூய்மையான, பெளத்த –சிங்கள கொள்கையைக் கொண்ட ஒருவரை மாநாயக்க தேரர்கள் மூலமாக தெரிவுசெய்ய வேண்டும். கடவுளை ஏமாற்றும், மக்களை ஏமாற்றும், தம்மைத் தாமே ஏமாற்றும் அரசியல்வாதிகளே உள்ளனர். இவர்களை சகல மக்களும் நிராகரிக்க வேண்டும். மாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய தேரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந் நாட்டுக்கான தலைவரை உருவாக்க முடியும். இலஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான தலைவர்களை உருவாக்க முடியும். சிங்கள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரையில் தான் இந் நாட்டில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் வாழ முடியும். இல்லையேல் அனைவர் மத்தியிலும் முரண்பாடுகள் ஏற்படும். ஆகவே முரண்பாடுகள் இல்லாத நாட்டினை தேரர்களால் உருவாக்க முடியும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-30#page-3

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே...

உள்ள போய்... பிணையில் வந்து நிக்கிற சாத்தான்... வேதம் ஒதுது.?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பௌத்த மதத் தீவிரவாதமும் சிங்கள (ஆரிய) இனத் தீவிரவாதமும் ஒரே புள்ளியில் கூடுவன. ஹிட்லர் ஒரு ஆரிய இன வெறியன் என்பது அவனே உலகிற்குப் பறைசாற்றியது. இந்தியாவில் ஆரிய இனத் தீவிரவாதிகளும், இலங்கையில் பௌத்த மத  ( = ஆரிய இன ) தீவிரவாதிகளும் ஹிட்லரைக் கொண்டாடுவதில் சமன்பாடு சரியாக உள்ளது. அது மரபணுக் குறைபாடு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.