Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா ஆர்வம் காட்டாமையினாலேயே மத்தளவை இந்தியாவுக்கு வழங்கினோம்

Featured Replies

சீனா ஆர்வம் காட்டாமையினாலேயே மத்தளவை இந்தியாவுக்கு வழங்கினோம்

ranil-ec8475b32ebfb7e611b72eac2e588cae13b63f83.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் அந்நாட்டிலிருந்து எமக்கு எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. அப்படி அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு 

 வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. மத்தள விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவே நாம் முற்பட்டோம் என்றாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சீனா ஆர்வம் காட்டமையின் காரணமாக‍ இந்தியாவுக்கு குத்தகை வழங்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

சுயாதீன இராஜ்ஜியமாக சீனாவுடனும் இந்தியாவுடனும் சமமாக கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை நான் உறுதியாக கூறுகின்றேன். மேலும் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியின் என் மீதான குற்றச்சாட்டுக்கு நான் பதிலளித்தேன். அடுத்த குற்றச்சாட்டுக்கு எனது சக பாராளுமன்ற உறுப்பினர் ஏன் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பில் நான் பதிலளிக்கவுள்ளேன். அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின் போது 1320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்டது. கடன் பெற்று துறைமுகத்தை நிர்மாணித்தாலும் கப்பலை கொண்டு வருவதற்கு முன்னைய ஆட்சியினரால் முடியவில்லை. கடன் சுமையை மாத்திரமின்றி கப்பல் வராத துறைமுகத்தை எம்மால் சுமக்க வேண்டி ஏற்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முகாமைத்துவத்தையும் கடனையும் கொழும்பு துறைமுகமே செலுத்தி வந்தது. 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் 47 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே வெள்ளை யானையாக இருந்த துறைமுகத்தை வளர்ச்சி மிகு துறைமுகமாக மாற்ற நாம் எண்ணினோம். இதன் கடன் சுமையின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. இதன்போது அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்ததை சட்டவிரோதம் என்று கூறி நிராகரிப்பதா? அல்லது பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணுவதா? என அரசாங்கம் என்ற வகையில் நாம் முதலில் ஆராய்ந்தோம். இதன்படி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் முதலிடம் வழங்கினோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு சென்று பல தடவை பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை போன்று நானும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இந்த பேச்சுவார்த்தையின் பயனாக தனியார்- அரச கூட்டு பங்காண்மையின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தை முன்னேற்ற திட்டமிட்டோம். இதன்படி தற்போது குத்தகைக்கு வழங்கியுள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமைக்கு எமக்கு எந்தவொரு அழுத்தமும் இருக்கவில்லை. துறைமுகத்தை சைனா மெர்சன்ட் ஹொல்டின் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க சீனா அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இது உலகளவில் பெரும் முன்னேற்றகரமான நிறுவனமாகும்.

இந்நிலையில் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவிடம் இருந்து முதற்கட்டமாக 293 மில்லியன் டொலரும் இரண்டாம் கட்டமாக 97 மில்லியன் டொலரும் மொத்தமாக தற்போது 584 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது. இதற்கு அப்பால் அம்பாந்தோட்டையில் உற்பத்தி துறை சார்ந்த கைத்தொழிலை மேம்படுத்தவுள்ளோம். எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையம் உட்பட பல கைத்தொழில் பேட்டைகளை நிறுவவுள்ளோம். அதன்பின்னர் அப்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவுள்ளோம். இது எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் சீனாவுக்கு விற்கவில்லை. இலாபமீட்டும் நோக்கில் சீனா நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம். இந்த துறைமுகம் எதிர்காலத்தில் வளர்ச்சிமிகு துறைமுகமாக மாற்றம் அடையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமையினால் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது. அத்துடன் சீன இராணுவத்தினால் அம்பாந்தோட்டைக்கு வருகை தர முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை நாம் சீனா உயர்மட்டத்திற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அப்படி அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது. மத்தள விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவே நாம் முற்பட்டோம் என்றாலும் அதனை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் ஆர்வம் காட்டமையின் காரணமாக‍ இந்தியாவுக்கு குத்தகை வழங்கவுள்ளோம்

சுயாதீன இராஜ்ஜியமாக சீனாவுடனும் இந்தியாவுடனும் சமமாக கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை நான் உறுதியாக கூறுகின்றேன் என்றார்.

இதன்போது விமல் வீரவன்ச எம்.பி எழுந்து கூறும் போது,

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கடன் தொகையை கொழும்பு துறைமுகம் செலுத்திய போதும் கொழும்பு துறைமுகமோ அல்லது துறைமுக அதிகார சபையோ நட்டம் அடையவில்லை. அதேபோன்று மத்தள விமான நிலையத்தின் நட்டத்தை போக்க கட்டுநாயக்க விமான நிலையம் பாரத்தை சுமப்பதாக கூறுகின்றனர். எனினும் தற்போது வரைக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் நட்டம் அடையவில்லை. ஆகவே பிரதமரின் தர்க்கம் பிழையானது என்றார்.

இதனையடுத்து பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியின் என் மீதான குற்றச்சாட்டுக்கு நான் பதிலளித்தேன். அடுத்த குற்றச்சாட்டுக்கு எனது சக பாராளுமன்ற உறுப்பினர் பதிலளிக்க போகின்றார் என நினைத்தேன். அதனாலேயே அவருக்கு பேச அனுமதி வழங்கினேன். ஆனால் அந்த செய்தியின் அடுத்த குற்றச்சாட்டுக்கு எனது சக பாராளுமன்ற உறுப்பினர் ஏன் பதிலளிக்கவில்லை என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனைப் பொறுத்த வரை சீனா தான் பிரதானம் என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கிட்டே இருக்கான். ஆனால் ஹிந்தியாவுக்கு தான் உது புரியல்ல. சோனியாவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக.. ஈழத்தீவில்.. ஹிந்தியாவுக்கு இருந்த உண்மையான நேச சக்தியான தமிழர்களின் ஆதரவை இழந்தது ஹிந்தியாவுக்கு பிராந்தியத்தில் பலவீனமான நிலையை உருவாக்கியுள்ளது.

இது சிங்களவனுக்கு இன்னும் இன்னும் சாதகமான களத்தையும் சீனாவுக்கு தலையீட்டுக்கு இலகு வழியையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஹிந்தியாவின் வல்லரசுக்கனவுக்கு விழுந்த பெரிய ஆப்பாகும். 

இதனை முழுமையாக உணர்ந்து கொள்ள ஹிந்தியாவுக்கு காலம் எடுக்கும். தமிழர்கள் மீதான ஹிந்தியாவின் இன அழிப்பு ஹிந்தியாவையே அது பழிவாங்கும்.. காலம் அதிக தூரத்தில் இல்லை. ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான நிலையத்தை கிந்தியாவும், மேட்ற்குலகும் வெறும் dud என்றே கூறிவந்தன. இந்த dud இ என் இப்பொது வலிந்து கட்டிக்க கொண்டு எடுக்கிறர்கள் கிந்தியர்கள்?

எனவே சீனாவின் அபிவிருத்தி முன்னெடுப்பு சரி என்பதை ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறது என்பது தானே அர்த்தம்.

விமான நிலையத்திதிற்கு தகுந்த தெருவழிப் பாதைகள் இல்லை. அது மட்டுமல்ல, சீன நினைத்தால் இந்த விமான நிலையத்தின் வான் வெளி கட்டுப்பாடு செயலாக்கங்களில் அம்பாந்தோட்டையில் இருந்து தலையிடலாம்.   

ரணிலின் கூற்றுப்படி, இலங்கை தீவில் கட்டுமானங்களில்  பரஸ்பர அவிவிருத்தி, வளர்ச்சி மற்றும் லாபம் என்பதில் ஆர்வம் உடையோரை  சொறி சிங்களம்  வரவேற்றுக்கும்.

இது உண்மையாயின், வடகிழக்கில், மற்றும் புத்தளம், மன்னார் இல்  உள்ள நீர்  அல்லது வான் வெளி இறங்குதுறைகளின் அபிவிருத்தியை மடக்குவதற்கு சீன போடும் தூண்டிலா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் நுழைவாயில்களான துறைமுகங்கள்,விமானநிலையம் என்பவற்றையே 

கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அது இந்தியாவுக்கு,இது சீனாவுக்கு,மற்றது ஜப்பானுக்கு,ரஷ்யாவுக்கு என்று கூறுபோட்டு

சொந்த தேசத்தை அடைவுவைக்கும் இனம்,தமிழர்களுக்கு ஏதும் தீர்வென்றால்மட்டும் 

இலங்கை இறையாண்மை,சுயகெளரவம் உள்ள ஒருநாடு இதில் அந்நிய தலையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று பொங்கியெழுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.