Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம்

Featured Replies

அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம்

 

திறந்த வெளிச்­சி­றை­யான தமிழ்­நாட்டில் ஆயுள் முழுக்க ஏழை அடி­மை­யாகக் கிடந்து சாகி­றதை விட பணக்­கா­ர­னாக்கும் அவுஸ்­தி­ரே­லி­யாவை நோக்­கிப்­போ­கவே விருப்­பப்­ப­டு­கிறோம் என்­கி­றார்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தமி­ழக முகாம்­களில் வாழும் இலங்கை அகதிப் பெண்கள்!

இலங்­கையில் போர் தொடங்­கிய பின் அங்­கி­ருக்கும் தமி­ழர்கள் பல்­லா­யிரம் பேர் உயிர் பிழைப்­ப­தற்­காகத் தமிழ் நாட்­டிற்குள் அக­தி­க­ளாக வந்து சேர்ந்­தனர். ராம­நா­த­புரம், கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் முகாம்கள் உரு­வாக்­கப்­பட்டு பல ஆண்­டு­க­ளாக தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு சுதந்­தி­ர­மான வாழ்க்­கையும் பல சிறப்பு வச­தி­களும் தரப்­பட்டு பாது­காப்­பான வாழ்க்கை உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக தமி­ழ­கத்தை மாற்றி மாற்றி ஆளும் கழக அர­சுகள் பெரு­மி­தப்­ப­டு­வது வழக்கம்.

ஆனால் இலங்கை அக­தி­களோ காவல்­து­றையின் தீவிர கண்­கா­ணிப்பு, மிகக் கடு­மை­யான சட்ட திட்­டங்கள், அடிக்­கடி அடை­யாள அணி­வ­குப்பு, எந்த வளர்ச்­சிக்கும் வாய்ப்­பில்­லாத அடிமை நிலை என்று தாங்கள் நசுக்­கப்­ப­டு­வ­தாக ஆதங்­கப்­ப­டு­கின்­றனர். இதனால் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட வச­தி­யான நாடு­க­ளுக்கு சிலர் தப்பிச் செல்­கின்­றனர். அவர்கள் அங்கே வள­மாகச் செட்­டி­லா­வதைப் பார்த்து தமி­ழக முகாம்­களில் இலங்கை அக­திகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஓடித் தப்­பு­வது தொடர் கதை­யாகி விட்­டது.

மத்­திய மாநில அர­சுகள் இதைத்­த­டுக்க கடும் நட­வ­டிக்கை எடுத்­தாலும் அரசின் கண்­களில் மண்ணைத் தூவி­விட்டு அவுஸ்­தி­ரே­லியா நோக்கி கள்­ளத்­தோ­ணியில் செல்­வது வாடிக்­கை­யா­கி­விட்­டது. இவர்கள் கடல் வழியே செல்லும் ஒவ்­வொரு நொடியும் மர­ணத்தை உர­சி­ய­ப­டியே பய­ணிக்கும் நிலைதான்.

இதை விவ­ரித்­தனர் இலங்கை அகதி முகாம்­களைச் சேர்ந்த சில யுவன்– யுவ­திகள். உயி­ருக்குப் பயந்து இலங்­கை­யி­லி­ருந்து கண்ணீர் வழிய வந்த எங்­களை அர­வ­ணைத்துக் கொண்ட தமிழ் மண்­ணுக்கு நாங்கள் என்றும் நன்­றிக்­கடன் பட்­ட­வர்­கள்தான். ஆனால் இந்த மண்ணில் வெறும் கால்­ந­டைகள் போல்தான் நாங்கள் நடத்­தப்­ப­டு­கிறோம். ஆடு, மாடு­களை தொழு­வத்தில் கட்டி வைத்து வேளா­வே­ளைக்கு வயிறு நிறையத் தீவனம் போடு­வ­து போல் தான் எங்­களை முகாமில் வைத்து ரேஷன் போடு­கி­றார்கள்.

எங்­க­ளுக்கும், எங்கள் சந்­த­தி­க­ளுக்கும் உயர்­கல்வி, உயர் உத்­தி­யோகம், கௌர­வ­மான வாழ்க்கை முறை வேண்­டாமா? அத­னால்தான் அவுஸ்­தி­ரே­லியா நோக்கி மீண்டும் உயிரை கையில் பிடித்­துக்­கொண்டு பய­ணிக்­கிறோம். சில வரு­டங்­க­ளுக்கு முன்­பெல்லாம் தமிழ் நாட் டின் எந்த மாவட்டக் கடல் வெளி­யி­லி­ருந்தும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பய­ணிக்க 25 ஆயிரம் ரூபாய் தேவைப்­பட்­டது. ஆனால் இன்று தலைக்கு இரண்டு இலட்சம் வரை வசூ­லிக்­கி­றார்கள்.

கடலில் மீன்பிடித்தல் மற்றும் கடல் வழி வர்த்­த­கத்தில் அனு­ப­வ­முள்ள சில நபர்கள் கூட எங்­க­ளுக்­கான இந்தப் பய­ணத்தை ஏற்­பாடு செய்­கி­றார்கள். முதலில் ஆளா­ளுக்கு ஒரு தொகையை போட்டு பழைய மீன் பிடி லோஞ்ச்சை வாங்கி அதை எங்­க­ளுக்கு ஏற்ற மாதிரி வடி­வ­மைத்துக் கொள்வோம். இங்­கி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா செல்ல நிச்­சயம் 25 நாட்­க­ளாகும்.

இலங்­கை­யி­லி­ருந்து தப்பி வந்­த­வர்­க­ளுக்கு கடல் பரிச்­சயம் இருக்கும். ஆனால் இங்கே முகாமில் பிறந்து வளர்ந்த அவர்­களின் பிள்­ளை­க­ளுக்குக் கடல் பரிச்­சயம் இருக்­காது. ஆதலால், அவுஸ்­தி­ரே­லியா கிளம்பும் ஒரு வாரத்­திற்கு முன்பு குழந்­தை­களை பல மணி நேரம் கடலில் குளிக்க விட்டுப் பழக்­கப்­ப­டுத்­துவோம்.

நடு­ராத்­திரி வேளை­களில் தூத்­துக்­குடி, சென்னை, வேளாங்­கண்ணி ஏதோ ஒரு கடற்­க­ரையில் ஒன்று கூடி கிளம்­புவோம். இந்­திய எல்­லையை தாண்டும் வரையில் கடற்­ப­டையின் கண்­ணிலோ அல்­லது சந்­தே­கத்­திலோ விழாமல் இருக்க வேண்­டி­யது கட­வுளின் கரு­ணைதான். ஒரு­வேளை அவர்கள் கவ­னித்து படகு அருகில் வந்தால் எங்கள் பட­கினுள் இருக்கும் பெண்கள், குழந்­தை­களை அடி­மட்­டத்­திற்குச் சென்று ஒளிந்து கொள்ளச் சொல்வோம். ஆண்கள் மட்டும் மேல் மட்­டத்தில் நின்று சரக்கு எடுத்துச் செல்­கிறோம் என்று ஏதா­வது பொருளை காண்­பித்து தப்­பிப்போம்.

அவுஸ்­தி­ரே­லியா நோக்­கிய பயணப் பாதையில் கண்­டிப்­பாக இலங்கை கடல் வெளியைக் கடக்க வேண்­டி­யி­ருக்கும். அப்­போது மனம் ரணப்­படும். சொந்த மண்ணை விட்டு இந்­தி­யா­வுக்கு அக­தி­யாகச் சென்று அங்கு வளர்ச்­சிக்கு வழி­யில்லை என்று மற்­றொரு நாட்­டுக்கு அக­தி­யாக அலையும் நம்­பி­ழைப்பு நாய்க்கும் வரக்­கூ­டாது என்று கண்ணீர் விட்­ட­படி கடப்போம். கடற்­ப­டையின் கண்ணில் படு­வது சில நேரங்­களில் பேரா­பத்­துத்தான். இப்­படி செல்லும் பட­கு­களால் தங்­க­ளுக்கு பிரச்­சினை இல்லை என்று அவர்கள் நினைத்தால் தப்­பிப்போம்.

துப்­பாக்­கியை நிமிர்த்­தி­ய­படி வந்து நின்றால் சாமர்த்­தி­ய­மாக பேசியும், நடித்தும் அவர்­களை கடக்க வேண்டும். இதனால் பெரும்­பாலும் இர­வு­களில் தான் வேக­மாக அவுஸ்­தி­ரே­லியா நோக்கிப் படகை வேக­மாக செலுத்­துவோம். மற்ற பட­குகள் கப்­பல்­களில் இருப்­ப­துபோல் துல்­லி­யமாய் திசைகாட்டும் கரு­வியோ, ரேடார் தொடர்போ, சாட்­டிலைட் போனோ எங்­க­ளிடம் இருக்­காது. அனு­ப­வ­சாலி லோஞ்ச் டிரைவர் வைத்­தி­ருக்கும் சிறு திசை­காட்டி அவ­ரது அனு­மானம் ஆகி­ய­வற்றை நம்­பியே படகு செலுத்­தப்­படும். இதனால் சில வேளை­களில் தவ­றான திசையில் சென்று சிக்­கு­வது, கடல் கொள்­ளை­ய­ரிடம் சிக்­கு­வது, சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் எந்த நாட்டு கடற்­ப­டையும் துப்­பாக்­கியை நீட்­டு­வது என்ற பிரச்­சி­னைகள் வெடிக்கும். ஆகவே ஒவ்­வொரு நொடி­யுமே உயி­ருக்கு உத்­த­ர­வாதம் அற்ற நிலைதான். கடற்­கொள்­ளை­யர்கள் இல்­லாமல் சில நேரங்­களில் சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் பல நாட்டு ரவுடிப் பட­கோட்­டிகள் வரு­வார்கள். அவர்­க­ளி­ட­மி­ருந்து எங்கள் பெண்­களை காப்­பாற்றிக் கொள்ள வேண்­டி­யது மிகப்­பெ­ரிய சவால்தான்.

கிட்­டத்­தட்ட ஒரு மாத­காலம் பய­ணித்து அவுஸ்­தி­ரே­லியா கடல் எல்­லையை கண்­டு­விட்­டாலும் மகிழ்ச்சி வந்து விடு­மென சொல்ல முடி­யாது. கரையில் கடற்­ப­டை­யி­னரின் நட­மாட்டம் அதி­க­மி­ருப்­ப­தாகத் தெரி­ய­வந்தால் கடலில் குதித்து நீந்திக் கரை­யே­றிடச் சொல்லி பட­கோட்டி உத்­த­ர­வி­டுவார். இப்­படி நீந்­து­கையில் இறந்­தோரும் உண்டு. அவுஸ்­தி­ரே­லியா எல்­லையை தொட்டு விட்ட நிலையில் படகில் எரி­பொருள் தீர்ந்து விட்­டதால் கடலில் குதித்து 6 கிலோ­மீற்றர் நீந்திச் சென்று கரை­யேறி வாழ்க்­கையில் செட்­டி­லா­ன­வர்­களும் உண்டு. இப்­படி ஒவ்­வொரு நொடியும் உயிரை பணயம் வைத்­துத்தான் அந்த தேசத்­தினுள் புக வேண்டும்.

முன்­பெல்லாம் அவுஸ்­தி­ரே­லியா அரசு இப்­படி தப்­பித்து வரும் அக­தி­களை தீர விசா­ரித்து அவர்­களால் தங்கள் நாட்­டிற்கு எந்த தீங்கும் வராது என்று உறு­தி­யாக நம்­பிய பின் அவர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்கிக் கொடுத்­து­விடும். படிப்­ப­டி­யாக குடி­யு­ரிமை உள்­ளிட்ட வச­தி­களும் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் மாதம் வெறும் 15 ஆயிரம் சம்­பா­திக்க வழி இல்­லா­த­வர்கள் எல்லாம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இன்று மாதம் ஒரு இலட்சம் வரை சர்வ சாதா­ர­ண­மாக சம்­பா­திக்­கி­றார்கள். இதை கேள்­விப்­பட்டுத் தான் தமி­ழ­கத்­தி­லிருக்கும் இலங்கைத் தமிழ் அக­திகள் பட­கே­று­கிறோம்.

ஆனால் இப்போது இந்தியரசு கேட்டுக்கொண்டதால் அவுஸ்திரேலியா அரசு இலங்கை தமிழ் அகதிகளை இருகரம் நீட்டி அரவணைப்பதில்லை. கடும் கெடுபிடி கள், விசாரணை, சிறை, திருப்பி அனுப்புதல் ஆகிய நடவடிக்கைகளை காட்டுகிறது. ஆனாலும் அவுஸ்தி ரேலியா சிறையில் அடைக்கப்பட்டாலும்கூட சகல வசதிகளுடன் கௌரவமாக நடத்தியே விசாரிக்கிறது. ஒருவேளை எங்களுக்கு தெரிந்த தச்சுப்பணி, தோட்ட வேலைகள், எலெக்ட்ரிக்கல் பணி ஆகியவை தங்கள் மக்களுக்கு தேவை என்று நினைத்தால் எங்களை அங்கே பிழைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கமாகி விடுகிறது எங்கள் மக்களுக்கு என்கிறார்கள்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.