Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாய் இளவரசி கொடூர சித்திரவதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட வீடியோ!

Featured Replies

துபாய் இளவரசி கொடூர சித்திரவதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட வீடியோ!

 

 

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார்.

ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித்துள்ளார்.

ஆனால் அவரது திட்டம் குறித்து தெரியவந்ததும் துபாய் அரச குடும்பம் துரிதமாக செயல்பட்டு சர்வதேச கடற்பகுதியில் வைத்து இளவரசியை கொடூரமாக தாக்கி மீண்டும் துபாய் நாட்டுக்கே இழுத்துச் சென்றது.

அதன் பின்னர் இளவரசி லதிஃபா தொடர்பில் எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் இளவரசி லதிஃபா பதிவு செய்த 40 நிமிட காணொளி ஒன்றை மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

 

 

தாம் தொடர் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும், உயிருடன் இருப்பேனா அல்லது அதைவிட கொடூரமாக குற்றுயிராக விடப்படுவேனா தெரியாது என கூறும் அவர்,

ஐக்கிய அமீரகத்தின் முற்போக்கு நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகம் எனவும் லதிஃபா தெரிவித்துள்ளார்.

தற்போது இளவரசி லதிஃபா துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் ரகசிய சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா என்பதை அங்குள்ள அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் மன்னராட்சி நடைபெறும் துபாய் போன்ற இஸ்லாமிய நாட்டில் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு எல்லை வரையே அனுமதி அளிக்கப்படும்.

இளவரசி லதிஃபா தப்பிச்செல்ல உதவிய அவரது பெண் நண்பர் மற்றும் பிரான்ஸ் முன்னாள் உளவாளி என இருவரும் தற்போது துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

சர்வதேச அளவில் எழும் அழுத்தமே இளவரசி லதிஃபா தொடர்பில் துபாய் அதிகாரிகளை உண்மை நிலையை வெளிப்படுத்த வைக்கும் என இளவரசி லதிஃபாவின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் தெரிவிக்கின்றனர்.

https://www.ibctamil.com/middleeastcountries/80/103395?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணடிமைத்தனத்திற்கு குடிசையென்ன, கோபுரமென்ன ? தேச, மத , இன எல்லைகளைத் தாண்டி மனித உரிமைகளை மீட்டெடுக்க சர்வதேசக் குரல் எப்போதும் வலுப்பெற வேண்டும். இலங்கை , திபெத் போன்று பெரிய அளவில் இன அழிப்பும் , மனித உரிமை மீறலும் நிகழிடங்களில் இந்தியா, சீனா போன்று சுய லாபங்களைத் தேடாமல் பன்னாட்டுப் படைகள் நீதியை நிலைநாட்டும் அளவிற்கு மனித நாகரிகம் வளர வேண்டும். துபாயில் நடைபெறும் இது போன்ற கொடுமைகளுக்கு சர்வதேச அழுத்தம் ஒன்றே தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

பெண்ணடிமைத்தனத்திற்கு குடிசையென்ன, கோபுரமென்ன ? தேச, மத , இன எல்லைகளைத் தாண்டி மனித உரிமைகளை மீட்டெடுக்க சர்வதேசக் குரல் எப்போதும் வலுப்பெற வேண்டும். இலங்கை , திபெத் போன்று பெரிய அளவில் இன அழிப்பும் , மனித உரிமை மீறலும் நிகழிடங்களில் இந்தியா, சீனா போன்று சுய லாபங்களைத் தேடாமல் பன்னாட்டுப் படைகள் நீதியை நிலைநாட்டும் அளவிற்கு மனித நாகரிகம் வளர வேண்டும். துபாயில் நடைபெறும் இது போன்ற கொடுமைகளுக்கு சர்வதேச அழுத்தம் ஒன்றே தீர்வு.

உங்க ஆட்கள் தானே அவரை பிடித்து குடுத்தது இந்தியா கடல்படை இப்படியான வேலைகளுக்கு தான் இருக்குது போல்  சிறிய போட்டில் ஆள் தப்பி விட்டார் என்றவுடன் ஊகத்துடன் இந்தியாவை உசார்படுத்துவதோடு எச்சரிக்கையும் குடுத்தது "ஆள் உயிருடன் வேணும் இல்லையென்றால் இந்தியாவில் இருந்து வந்து தொழில் புரியும் அனைவரும் உடனடியாக நாடு கடத்தபடுவார்கள் " அதன் பிறகு இந்தியாவின் மாமா வேலை உலகறிந்த ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உங்க ஆட்கள் தானே அவரை பிடித்து குடுத்தது 

கயமைத்தனம் செய்பவர்களில் உங்க ஆட்கள் , எங்க ஆட்கள் என்ற பாகுபாடு என்ன ?  இலங்கையில் தமிழினத்துக்கு  இந்தியா செய்தது பச்சைத் துரோகம் என்பதுதான் என் நிலைப்பாடு. அதைத்தான் எப்போதும் எழுதி வருகிறேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.