Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு

Featured Replies

அரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு

 

 

sumanthiran-and-Jayampathy-720x450.jpg

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் கலாநிதி ஜயம்பதியும் கூட்டாக நிராகரித்துள்ளனர்.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் முரண்பாடு காணப்படுவதாகவும், கடந்த 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் போலியாக கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே சுமந்திரனும் ஜயம்பதியும் அக்கூற்றை முற்றாக மறுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சுமந்திரன் குறிப்பிடுகையில், ”அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் 10 பேர் உள்ளனர். வழிநடத்தல் குழுவின் கருத்துக்களுக்கு, அவர்களில் ஆறு பேர் மின்னஞ்சல் ஊடாக இணக்கம் தெரிவித்தனர். இருவர் தனியாக அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டே கடந்த 18ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், நிபுணர் குழுவின் கருத்துக்களை உள்வாங்கவில்லையென்றும், நாம் போலியாக கையொப்பமிட்டு அறிக்கை சமர்ப்பித்ததாகவும் எதிரணியினர் கூறுவதில் எந்த உண்மையும் கிடையாது. அரசியல்வாதிகள் வீணாக வதந்தியை பரப்பக் கூடாது. நிபுணர் குழுவை எச்சரிக்கும் வகையிலான கருத்துக்களையும் கூறக்கூடாது” என்றார்.

வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கம் கலாநிதி ஜயம்பதி குறிப்பிடுகையில் “பிரிக்கப்படாத நாட்டில் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டே அரசியலமைப்பு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதில் நாம் உறுதியாக உள்ளோம். அரசியலமைப்பு குறித்த வரைபு நகலொன்றே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், நாம் யாருக்கும் தெரியாமல் அரசியலமைப்பை தயாரித்துவிட்டோம் என கூறுவதில் எவ்வித உண்மையும் கிடையாது” எனக் குறிப்பிட்டார்.

http://athavannews.com/அரசியலமைப்பு-விடயத்தில-2/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, நவீனன் said:

அரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு

 உவையள் மாதத்துக்கொரு கூட்டறிக்கை கூட்டாஞ்சோறுமாதிரி போட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.......சிங்களம் தன்ரை வேலையை அமசடக்காய் நோகாமல் செய்து கொண்டிருக்குது...?
வேலை செய்யிற லட்சணத்திலை கோட்டுச்சூட்டு வேறை..tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை தான் சொன்னார்.. இந்த அரசாங்கம் ஒன்றும் தராதுன்னு. இந்தக் கிழமை இது.

வடிவேல் பகிடியை தினமும் பார்ப்பாரோ. ?

5 minutes ago, குமாரசாமி said:

வேலை செய்யிற லட்சணத்திலை கோட்டுச்சூட்டு வேறை.

சொறீலங்காவே வெக்கையில பத்தி எரியுதாம். உதில சட்டாம்பியருக்கு கோட்டுசூட்டு மிக முக்கியம் பாருங்க. வெட்டி பந்தா குறூப். ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.