Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளியாகியது யாழ். கோட்டை குறித்து புதிய ஆய்வு

Featured Replies

வெளியாகியது யாழ். கோட்டை குறித்து புதிய ஆய்வு 

 

 

(வீ.பிரியதர்சன்)

* போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ் கோட்டையில் மக்கள் வாழ்ந்தனர்.

* யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள்.

* தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

* அரோபிய, சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள்.

* யாழ். கோட்டைப்பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ்.கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதாகவும் 

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்லியல்  பேராசிரியர் புஸ்பரெட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கையின் போதே மக்கள் அங்கு குடியிருந்து, வாணிக நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். 

jaffna1.jpg

இந் நிலையில் இதற்கான ஊடகவியலாளர் மாநாடு இன்று யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் திணைக்கள விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன்‍போது கருத்து தெரிவிக்கையிலேயே பேராசிரியிர் புஸ்பரெட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

jaffna2.jpg

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் 1800 அதாவது போர்த்துக்கீசர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருப்புக்கள் இருந்துள்ளன.

அதற்கான ஆதாரங்களை யாழ்.நகர ஆய்வு, யாழ்.நகரின் தோற்றம் போன்ற தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

இருப்பினும் அங்கு கிடைக்கப்பெற்ற தொல்லியல் புராதான சின்னங்கள் என்பன போர்த்துக்கீசர் வருகையின் முன்னர் யாழ். கோட்டைப் பகுதியல் மக்கள் வாழந்துள்ளனர். 

அங்கு தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. அரோபிய சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிதைவடைந்த கத்தோலிக்க தேவாலயாம், சிதைவடைந்த இந்து தேவாலயங்களுக்கான ஆதாரங்கள் சோழர் கால கட்டட ஆய்வு சிதைவுகள் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன. 

அக்காலத்தில் யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டை அமைந்துள்ள பகுதியில் கடல் மார்க்கமாக வணிகங்கள் மற்றும் மக்கள் குடியிருந்து வாழ்ந்தமையையடுத்தே போர்த்துக்கீசர் அப் பகுதியில் கோட்டை அமைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

யாழ்ப்பாண நகரத்தின் தோற்றம் என்ற தொல்லியல் ஆய்வுக்குட்பட்டு யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 

இதன்போது நாம்ப முடியாத ஆச்சரியமான வகையில் தொல்லியல் புராதான சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

jaffna3.jpg

இதில் உள்நாட்டு வெளிநாட்டு நாணயக் குற்றிகள், மட்பாண்டங்கள், இந்து ஆலய அழிவுகள், கல்வெட்டுக்கள் என்பன மீட்ககப்பட்டுள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/37422

  • தொடங்கியவர்

2700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் யாழ் கோட்டைக்குள் கண்டுபிடிப்பு….

 

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

Jaffna-fort-Res5-800x600.jpg
யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சிறைச்சாலை இருந்த பகுதிக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான – உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

 

கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொல்லியல் ஆய்வுப் பணிகள் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த ஒல்லாந்தர் காலத் தேவாலயம் அழிவடைந்தது. அந்த ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்வது மற்றும் அதனை மீள் உருவாக்கம் செய்வதே இந்த தொல்லியல் ஆய்வுப் பணியின் நோக்கமாகும். அத்துடன், ஐரோப்பியர் – போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னர் கோட்டைப் பகுதி எவ்வாறு இருந்தது என்பதை அறிவதும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

Jaffna-fort-Res2-800x600.jpg

ஒல்லாந்தர் கால கிருஸ்தவ ஆலயத்தை கண்டறியும் சில அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. ஆலயத்தின் அத்திவாரம், சுவர் மற்றும் கட்டடப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அதே காலப் பகுதியில் 2-3 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டன. அதில் சிறைச்சாலைக்கு அண்மையிலே ஒரு அகழ்வுக் குழி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இயற்கை மண்வரை ஆய்வு செய்யப்பட்டது.

9 கலாசார மண் அடுக்குகள் அதில் கண்டறியப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் தென்னிந்தியா அல்லது தமிழகம், கந்தரோடை, அநுராதபுரம், பூநகரி மற்றும் சாட்டி போன்ற இடங்களில் இருந்ததை ஒத்த ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான – உறுதியான சான்று கிடைத்துள்ளது. 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் இவ்விடங்களில் ஆதி கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது.

இரண்டாவதாக, இங்கு வாழ்ந்த மக்கள் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் வணிக உறவைக் கொண்டிருந்தமைக்கும் அந்த வணிகத்தில் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் முக்கிய வணிக மையமாக இருந்தமைக்கும் சான்றுகள் கிடைத்தன. இந்த நிலையில் அண்மையில் கோட்டையில் ஹெலிகள் வந்து இறங்கி தங்குகின்ற கட்டடப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

இம்முறை அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் நவீன கருவிகள் கொண்டு ஸ்கான் செய்து, நிலத்துக்கு அடியில் என்ன என்ன இருக்கின்றன என்று பார்க்கப்பட்டது. கோட்டைக்கு கீழ் 6-7 அடி ஆழத்தில் பண்டைய கட்டடப் பகுதிகள், கட்டட இடிபாடுகள், கிணறுகள் என்பன கண்டறியப்பட்டன. உலங்கு வானூர்தி வந்து தரையிறங்க 20ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கட்டடப் பகுதிக்கு அருகாமையில் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

Jaffna-fort-Res3-800x600.jpg

ஒல்லாந்தார் கால கிருஸ்தவ ஆலயம் அழிவடைந்ததுக்கு அண்மையான பகுதியான அந்த இடத்தில், 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்தன. அத்துடன், போர்த்துக்கேயர் கால கட்டட அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

போர்த்துக்கேயர் கால கட்டடங்களை இடித்து அந்தக் கற்களைக் கொண்டே கோட்டையை அமைத்ததற்கும் கிருஸ்தவ ஆலயங்கள் அமைக்கபட்டதற்கும் இதன்போது ஆதாரங்கள் கிடைத்தன. அந்த இடத்தில் போர்த்துக்கேயர் கால போர் வீரர்களின் கல்லறைகள் இருந்திருக்கவேண்டும். அந்தக் கல்லறைகளின் கற்பலகைகள் மாற்றப்பட்டு, அவை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதன் விளைவாக மனித எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது போர்த்துக்கேயர் கால மற்பாண்டங்களுடன் மீட்கப்பட்டன. எனவே அது போர்த்துக்கேயர் காலம் அல்லது அதுக்கு முந்திய காலப்பகுதியை உடையதாக இருக்கலாம். அந்த எலும்பு ஆய்வுக்கு அனுப்பப்படும். எலும்பு மீட்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு, அதற்கு அருகிலே ஆய்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு மீட்கப்பட்ட தொல்பொருள்கள், கோட்டைக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பார்வையிடவேண்டும் என தெரிவித்தார்.

Jaffna-fort-Res1-800x600.jpg

http://globaltamilnews.net/2018/89708/

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

அரோபிய சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முஸ்லீம்கள் தான் யாழின் பூர்வீக குடிகள் என்பது இதில் இருந்தே தெரியவில்லையா....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.