Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப கோரும் வழக்கு: பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

Featured Replies

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப கோரும் வழக்கு: பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

 

 

 
VIJAYMALLYAjpg

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கில் பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை நடைபெறுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

 

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து நீதீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்தன.

சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கியது.

இந்நிலையி்ல், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாகவும், விஜய் மல்லையா அப்பாவி என்றும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

ஜூலை 2-ம் வாரத்தில் இந்த வழக்கில் முக்கிய வாதம் மீண்டும் தொடங்கும் என கருதப்பட்டது. எனினும் தொடர்ந்து தாமதம் ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணையை தொடங்குகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் வழக்கில் நீதிமன்றம் விசாரணையை தொடங்கவுள்ளது. நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி இருதரப்பு வாதங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் வாதம் நடைபெறுகிறது

https://tamil.thehindu.com/world/article24559976.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இந்திய அரசியல்வாதிகளை காப்பாற்ற பலிஆடு தயராகிறது லண்டனில் இன்று .

  • தொடங்கியவர்

‘‘விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள மும்பை சிறையின் வீடியோ வேண்டும்’’ - பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

 

 

 
dc-Cover-g57rkvj50i2029eggur3pi68r2-2018

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவரை கைது செய்து அடைக்கப்படக்கூடிய மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் வீடியோவை சமர்பிக்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

 

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து நீதீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்தன.

சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கியது.

இந்நிலையி்ல், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘‘மல்லையா, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர், அவர் கைது செய்யப்பட்டால் இந்திய சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய சிறைகளில் மிக மோசமான சூழல் நிலவுகிறது. கொசுக்கடி, இருண்ட அறைகள், சுகாதாரமற்ற சூழலுடன் இருக்கிறது’’ என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணையின்போது மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைத்தால் அவர் கைது செய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்படுவார் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது.

அப்போது இந்திய அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டால் அவர் கைது செய்யப்பட்டு, மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி அந்த சிறையின் புகைப்படங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன.

அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலை புகைப்படங்களை பார்த்த நீதிபதி, அதனை பார்த்து முடிவெடுக்க முடியவில்லை எனக் கூறினார். புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால் சிறை உட்புறத்தை தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கூறினார்.

நண்பகல் நேரத்தில் வீடியோ எடுக்குமாறும், அப்போது சிறை அறைக்குள் சூரிய ஒளி இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தும் அளவிற்கு வீடியோ காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என நீதிபதி கூறினார். வீடியோவை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதி, மல்லையாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, செப்டம்பர் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய அரசிடம் இருந்து கருணை எதையும் தான் எதிர்பார்க்கவில்லை எனவும், கடன் தொகையை கட்டத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

https://tamil.thehindu.com/world/article24563678.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

 

நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி இருதரப்பு வாதங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

******

பழைய காலத்தில, ஜிஜி பொன்னர் போன்ற புறக்கிறாசியார்கள் வாயாள வெட்டிப் பிளந்து அலம்பறை பண்ணி கேசுகளை வெண்டவயள்.

இப்ப, விளப்பமான ஜட்ஜ் அய்யாமார், கதை விட இடம் கொடாமல், பாயிண்டுகளை எழுதி தாருங்கோ எணடெல்லோ சொல்லுகினம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.