Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான்: ராகுல்காந்தி

Featured Replies

எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான்: ராகுல்காந்தி

 

ddfdf-720x450.jpg

‘எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான், எனவே வன்முறையினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த ஒரே வழி தவறு செய்தவர்களை மன்னிப்பது தான்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், நேற்று (புதன்கிழமை) ஜேர்மனியை சென்றடைந்தார்.

அங்கு ஹம்பர்க் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ராகுல் மேற்படி தெரிவித்திருந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குற்றவாளிகளான பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்டோரை விடுவிப்பதில் தமக்கு எந்த அட்சேபனையும் இல்லை என்றும், குற்றவாளிகளை தாம் மன்னிப்பதாகவும் ராகுல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளை மன்னிப்பதே தமது கொள்கையென மீண்டும் ராகுல் நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“நம்மீது மற்றவர்கள் வெறுப்பை உமிழ்ந்தாலும், பதிலுக்கு நாம் வெறுப்பை தூண்டும் வகையில் பேசக் கூடாது. என் மீது வெறுப்பை தூண்டும் விதமாக பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், அவரைப் போலவே பதிலுக்கு நானும் பேசாமல் இந்த உலகம் மிகவும் மோசமானது அல்ல என்பதை அவரிடம் கூற விரும்பினேன்.

அதற்காகவே அவர் இருக்கும் இடம் சென்று அவரை கட்டித் தழுவினேன். இந்த நற்குணத்தை தான் நாம் மகாத்மா காந்தியிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.

பாராளுமன்றத்தில் நான் பிரதமரை கட்டித்தழுவியது காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் எண்ணத்தை நான் ஆதரிக்கவில்லை” என ராகுல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கல்ந்துரையாடலின் போது பா.ஜ.க.மீதான குற்றச்சாட்டுக்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்திருந்தார்.

அதன் போது அவர் தெரிவித்ததாவது,

“தற்போதைய மத்திய அரசு முன்னெடுக்கும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் என்பன, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளை பேசும் பல்வேறு சமூகங்களுக்கானதாக அன்றி,  தனிப்பட்ட ஒரு சமூகத்திற்கானது.

பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுதல் ஆகிய விடயங்கள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் குறித்த கொள்கைகள் இந்தியாவில் வாழும் ஒரு தரப்பட்ட சமூகத்திற்கு மட்டுமே ஏற்புடையது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் அனைவரது வளர்ச்சியையும் உள்ளடக்கிய சித்தாத்தம் உடைய திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான திட்டங்களும், வளர்ச்சிகளும், சிறுபான்மையின மக்களை பாதிக்கும்.

பா.ஜ.க.வின் கொள்கை காரணமாக தலித்மக்களின் சட்டம், உணவு, உரிமைசட்டம், வேலைவாய்ப்பு, உரிமை சட்டம் போன்றவை தாக்குதலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று மத்திய அரசு மீதான பகிரங்க குற்றச்சாட்டை ராகுல்காந்தி முன்வைத்துள்ளார்.

http://athavannews.com/எனது-பாட்டி-மற்றும்-தந்த/

  • தொடங்கியவர்

பிரபாகரனின் மரணத்தினால் நான் மகிழ்ச்சியடையவில்லை- ராகுல்காந்தி

 

 
 

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து நானும் எனது சகோதரியும் மகிழ்ச்சியடையவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் எனது குடும்பத்தை சேர்ந்த இருவரை வன்முறை காரணமாக இழந்தேன் என  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

எனது பாட்டியும் எனது தந்தையும் கொல்லப்பட்டனர்,ஆகவே நான் வன்முறைகளால் துயரை அனுபவித்துள்ளேன் நான் அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுள்ளேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மன்னிப்பதன் மூலமே வன்முறையின் பின்னர் முன்னோக்கி நகரமுடியும் இதனை தவிர வேறு வழியில்லை, எனவும் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி மன்னி;ப்பதற்கு என்ன நடந்தது  ஏன் நடந்தது என்ற தெளிவு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை எதிர்கொள்வதற்கு செவிமடுப்பதும் அகிம்சை வழியில் செயற்படுவதும் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இது  பலவீனம் என கருதுகின்றனர் ஆனால் அதுவே உண்மையான பலம் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தை 1991 இல் பயங்கரவாதியால் கொல்லப்பட்டார் 2009 இல் எனது தந்தையை கொன்றவர் இலங்கையில் கொல்லப்பட் நிலையில் காணப்படுவதை நான் பார்த்தேன் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நான் எனது சகோதரியை அழைத்து இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது ஆனால் நான் இதனால் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணித்தவர் எனது தந்தையை கொன்றவர் என்பதால் நான் அவரின் மரணத்தை கொண்டாடவேண்டும்,ஆனால் ஏனோ நான் அந்த மரணத்தினால் மகிழ்ச்சியடையவில்லை எனவும் எனது சகோதரியிடம் தெரிவித்தேன் என  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கு எனது சகோதரி நானும் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்தார் என ராகுல் காந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான் பிரபாகரனின் பிள்ளைகளில் என்னை பார்த்ததே  நான் மகிழ்ச்சியடையாததற்கு  காரணம் , எனது தந்தையின் மரணத்தின் போது நான் அழுதது போன்று பிரபாகரனின் மரணத்தின் போது அவரின் பிள்ளைகள் அழலாம் என நான் நினைத்தேன் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

rahul_pirabjha.jpg

பிரபாகரன் தீயவராகயிருக்கலாம்,ஆனால் என்னை எனது தந்தையின் மரணம் பாதித்தது போன்று,

 அவரிற்கு எதிரான வன்முறைகள் ஏனையவர்களை பாதித்துள்ளன எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆழமாக சிந்தித்தால் இந்த வன்முறையை தூண்டிய ஏதோவொன்று இருக்கவேண்டும்,அது தற்செயலான சம்பவம் இல்லை,அவருக்கு அல்லது வேறு யாரிற்கோ எதிராக இடம்பெற்ற வன்முறைகள், நடவடிக்கைகள் வன்முறைகளை தூண்டியிருக்கலாம் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/38998

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டியும் கொப்பரும் கொல்லப்பட்டது வன்முறையாய் தெரிஞ்ச  தங்களுக்கு   ஈழத்திலை வஞ்சம் தீர்க்க பொதுசனம் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டது ஏன் வன்முறையாய் தெரியேல்லை?

64a-times-aerialsri_village1_564436a.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.