Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா?

Featured Replies

பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா?

 

484865578-1024x766.jpg
யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்ற செய்தி வெளிவந்தது. அதன் பின்னர்தான் முன்னணிச் சிங்கள ஊடகங்கள் அச்செய்தியைக் கையிலெடுத்தன. அது போலவே கூட்டமைப்பின் உள்விவகாரங்களை அப்பத்திதான் அதிகம் வெளியே கொண்டு வந்தது.

கடந்த 24ம் திகதி அப்பத்திரிகையில் வெளியான தலைப்புச்செய்தியில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனை பின்னர் சம்பந்தரும் உறுதிப்படுத்தினார். அப்படியொரு சந்திப்பு இடம்பெறவிருந்த ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் அரசுத் தலைவரின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றக் கூடாது என்று கேட்டிருக்கிறார். இக்கடிதத்திற்கான கூட்டமைப்பின் எதிர்வினையானது முன்பு எதிர்பார்க்கப்பட்ட விக்கி – சம்பந்தர் சந்திப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டது. ஒரு புறம் சந்திப்புக்கு நாள் கேட்டுவிட்டு இன்னொருபுறம் சந்திப்பை சாத்தியமற்றதாக்கும் ஒரு கடிதத்தை ஏன் விக்னேஸ்வரன் எழுதினார்?

சந்திப்புக்குத் தயார் என்று அறிவித்ததன் மூலம் அவர் தானாகக் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டார் என்பதனைத் தெரியப்படுத்தியுள்ளார். அதே சமயம் சந்திப்புக்கு நிபந்தனை விதிப்பதைப் போல சந்திப்புக்கிடையில் ஒரு கடிதத்தை எழுதியதன் மூலம் வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியலுக்கு தான் தயாரில்லை என்பதனையும் தெரியப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இணக்க அரசியல் என்ற அடிப்படையில் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்தால் விக்னேஸ்வரன் அதற்குள் நிற்கமாட்டார் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது பந்து கூட்டமைப்பின் பக்கம் வீசப்பட்டிருக்கிறது.

காலைக்கதிரில் வந்த செய்தி மற்றும் தினக்குரலில் வந்த செய்தி போன்றவற்றின் அடிப்படையில் விக்கிக்கும் சம்பந்தருக்குமிடையில் ஏதோ ஒரு நெருக்கம் நிலவுவதாகவே ஊகிக்கப்பட்டது. இந்த ஊகத்தின் அடிப்படையில் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் விக்கி எந்த முடிவை எடுக்கக்கூடும் என்பது பலருக்கும் குழப்பமாக இருந்தது. சில சமயம் சம்பந்தர் அவரை மறுபடியும் முதல்வருக்கான வேட்பாளராக நியமித்தால் அவர் என்ன முடிவை எடுப்பார் என்பது தொடர்பாகவும் ஒருவித குழப்பமான நிலமை காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் பேரவையைக் கட்டியெழுப்பி அதன் மூலம் அவர் சேகரித்து வைத்திருக்கும் உறவுகள் பெயர் பிம்பம் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு அவர் தனியனாகவே சம்பந்தரோடு போய் ஒட்ட வேண்டியிருக்குமென்று ஒரு மூத்த அரசியல் விமர்சகர் தெரிவித்தார். அப்படிப்போய் ஒட்டினாலும் தமிழரசுக்கட்சிக்குள் அவரை இணக்கமாகப் பார்க்கும் ஆட்கள் பெருமளவிற்கு இல்லையென்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாகும்.

கடந்த வாரம் அமைச்சர் ராஜித யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் விக்கி உரையாற்றினார். அப்பொழுது அவருக்கு எதிரான ஒரு கூட்டமைப்புப் பிரமுகர் “இப்படியெல்லாம் பேசிவிட்டு இவர் இன்னுமொரு மாதத்தில் வீட்டை போகப் போறவர்தானே” என்ற தொனிப்பட அருகிலிருந்த மற்றொரு கூட்டமைப்புப் பிரமுகரிடம் கூறியிருக்கிறார். அதாவது கூட்டமைப்பால் வெளித்தள்ளப்படுமிடத்து ஒன்றில் அவர் மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டிற்குப் போக வேண்டும் என்று பொருள்.

ஆனால் ஜனாதிபதியின் செயலணி குறித்து அவர் எடுத்த முடிவு அவர் அப்படியெல்லாம் அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டிற்குப் போய்விடுவார் என்று நம்பத்தக்கதாக இல்லை. சம்பந்தருக்கு அவர் முதலில் எழுதிய கடிதமும் அதற்கு கூட்டமைப்பினர் எதிர்வினையாற்றியபின் அவர் வெளியிட்ட கேள்வி பதிற் குறிப்பும் அதைத்தான் காட்டுகின்றன. அதாவது விக்னேஸ்வரன் ஒரு தெளிவான பிரிகோட்டை வரைந்திருக்கிறார். அபிவிருத்தி மைய அரசியல் அல்லது தீர்வுமைய அரசியல் என்ற இரண்டு தெரிவுகளை அவர் கூட்டமைப்பின் முன் வைத்திருக்கிறார். இதன் மூலம் இணக்க அரசியலா இல்லையா என்று கூட்டமைப்பே முடிவெடுத்து விட்டு விக்னேஸ்வரனை வெளித்தள்ளலாம். அவ்வாறு வெளித்தள்ளப்படுமிடத்து அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும்.

30743680_2114577151890964_21613828780809

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாகாண சபையின் காலம் முடிவதற்கு மிகக்குறுகிய காலமே இருக்கும் ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் முன்பு ஒரு முக்கியமான கேள்வி வீசப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக சம்பந்தர் வழங்கி வந்த வாக்குறுதிகள் காலக்கெடுக்கள் போன்றவற்றின் பின்னணியில் ஓர் அரசியல் தீர்வைப் புறந்தள்ளிவிட்டு அபிவிருத்தி அரசியலுக்குள் மூழ்கிவிட முடியாது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். தீர்வற்ற வெற்றிடத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியானது ஒரு மாயைதான். இதை அதன் பிரயோக வடிவத்தில் சொன்னால் வலி நிவாரணியே நோய் நிவாரணி ஆகிவிடாது.

கடந்த சில மாதங்களாக வடக்கு – கிழக்கிற்கு அரசுத்தலைவரும் பிரதமரும், அமைச்சர்களும் வரிசைகட்டி வருகிறார்கள். புதிது புதிதாக கட்டடங்கள் திறக்கப்படுகின்றன. அல்லது புதிய கட்டடங்களுக்குரிய அடிக்கற்கள் நாட்டப்படுகின்றன. இவை தவிர மேலும் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடக்கி வைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் ஒரு பின்னணியில் அபிவிருத்தியை முடுக்கிவிடுவது என்பது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் அரசாங்கத்தின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும்.

தெற்கில் ஒரு தேர்தலை வைத்தால் பெரும்பாலும் அது மகிந்தவோடான பலப்பரீட்சைக்களமாகவே அமையும். உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் நடந்தது போல மகிந்தவின் பலத்தை நிரூபிக்கத்தக்க தேர்தல்களை தெற்கில் நடாத்துவதற்கு அரசாங்கம் தயங்கும். ஆனால் மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே வரும் வடக்கு கிழக்கில் அப்படிப் பயப்படத் தேவையில்லை. கிழக்கில் மகிந்த சிறிதளவிற்குத் தலையைக் காட்டலாம். ஆனால் வடக்கில் அதுவும் கடினம். எனவே மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே தேர்தல்களை நடத்திப் பார்க்கலாம் என்று அரசாங்கம் சிந்தித்தால் வட – கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான வாய்ப்புக்கள் உண்டு. அத் தேர்தல் களத்தைக் குறிவைத்தே அரசாங்கம் அபிவிருத்தி அரசியலை முடுக்கிவிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் அரசாங்கத்திற்கு உற்சாகமூட்டக்கூடியவை. இவ்வாறாகக் தீர்வைக் கொண்டு வராமல் அபிவிருத்தியைக் கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பு பங்காளியாகக் கூடாது என்று விக்னேஸ்வரன் கேட்கிறார். ஆயின்,அதை எதிர்த்து கூட்டமைப்பு அபிவிருத்தி அரசியலின் பங்காளிகளாக மாறினால் அதற்கு எதிராண அணி ஒரு புதிய கூட்டை உருவாக்க வேண்டியிருக்குமா?

கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்பு அப்படியொரு கூட்டுக்கான ஏதுநிலைகள் காணப்பட்டன. ஆனால் விக்னேஸ்வரன் அப்பொழுது தயாராக இருக்கவில்லை. அதனால் அக்கூட்டு சிதறிப்போயிற்று. இப்பொழுது மறுபடியும் அப்படியொரு கூட்டை உருவாக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. கஜேந்திரகுமார் அணியானது விக்னேஸ்வரனோடு இணையத் தயாராகக் காணப்படுகிறது. ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியோடு இணைவதற்கு அவர்கள் தயாரில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளையும் ஒரே கூட்டுக்குள் வைத்திருப்பதற்கு விக்னேஸ்வரனால்தான் முடியும். அதற்கும் கூட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இது தவிர விக்னேஸ்வரனுக்கென்று ஓர் அணியுண்டு. ஐங்கரநேசன், அனந்தி, அருந்தவபாலன் போன்றவர்கள் அந்த அணிக்குள் வருவர். இவர்கள் அனைவரையும் திரட்டி கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய அணியை உருவாக்க விக்னேஸ்வரன் தயாரா?

வழமையாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் புதிய கூட்டுக்கள்; பற்றிய உரையாடல்கள் சூடு பிடிப்பதுண்டு. இப்பொழுது விக்னேஸ்வரன் தனது கடிதம் மூலம் தேர்தல் அறிவிக்கப் பட முன்னரே குறிப்பாக மாகாண சபையின் காலம் முடியவிருக்கும் ஒரு பின்னணியில் அதைத் தூண்டிவிட்டிருக்கிறாரா?

தமிழ்க்கட்சிகளில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்பைக் காட்டும் கட்சிகள்தான். பெருந்திரள் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்க முடியாத கட்சிகள்தான். அது மட்டுமல்ல எல்லாக்கட்சிகளுமே தேர்தல் மையக்கட்சிகள் தான். எனவே கொள்கைப்பிடிப்புள்ள கட்சிகளும், இலட்சியப்பாங்கான கட்சிகளும் பெருந்திரள் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்கும் விதத்தில் பெரிய கூட்டுக்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் வாக்குகள் சிதறிப்போய்விடும். தமிழ் வாக்குகள் சிதறுவது குடாநாட்டைவிட வவுனியாவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு புதிய அணி பற்றிய எதிர்பார்ப்புக்கள் வடக்கு மையச் சிந்தனைகளாகச் சுருங்கக் கூடாது. தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியலைச் சிந்திக்கும் போது ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்ற அடிப்படையில் சிந்திப்பது அவசியம். அதாவது கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய தலைமையை அல்லது ஒரு புதிய அணியைக் குறித்து சிந்திக்கும் எவரும் வடக்கையும், கிழக்கையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். வடமாகாண சபையின் காலம் முடியவிருக்கும் ஒரு பின்னணியில் அடுத்த கட்ட அரசியலைக் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் கிழக்கு மாகாண சபையின் காலம் முடிந்த பின் அந்தளவிற்கு விவாதங்கள் நடக்கவில்லை. கிழக்கை தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து வென்றெடுப்பதற்கான தெளிவான ஒரு வழி வரைபடம் வேண்டும். முதலில் வடக்கைப் பார்க்கலாம். பிறகு கிழக்கைப் பற்றி யோசிக்கலாம் என்பது தாயக ஒருமைப்பாட்டிற்குப் பாதகமானது.

எனவே அபிவிருத்தி அரசியலுக்கு முன்பு தீர்வைக் கொண்டு வரவேண்டும். என்று கேட்கும் தரப்புக்கள் இரண்டு விடயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். முதலாவது பிரிக்கப்படவியலாத தாயகம். இரண்டாவது நோய் நிவாரணி கொடுக்கப்படும் வரையிலுமான வலி நிவாரணி அரசியலை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வது என்பது.

தமிழ் அரசியல்வாதிகளும், கட்சித் தலைவர்களும், கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும் ஊடக முதலாளிகளும் அநேகமாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிக அருந்தலான புறநடைகள் தவிர இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்க வசதிகளோடு வாழ்க்கையில் ‘செற்றில்ட்’ ஆனவர்கள். ஆனால் இப்பொழுதும் உளவியல் ரீதியாக மீளக்குடியமராத ஒரு பெரிய தொகுதி மக்கள் உண்டு. நிரந்தரமற்ற வீடுகளில் வீட்டுத்திட்டங்களுக்காக காத்திருக்கும் மக்கள் உண்டு. கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் உண்டு. காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிவாரணமின்றித் தத்தளிக்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் வலிநிவாரணி தேவைப்படுகிறது. எனவே அடுத்த கட்டத் தமிழ் அரசியலைப்பற்றிச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களும் மேற்கண்ட இரண்டு விடயங்களிலும் தெளிவான வழி வரைபடங்களை வைத்திருத்தல் வேண்டும்.

விக்னேஸ்வரை மையப்படுத்திச் சிந்திப்பவர்கள் மேற்கண்ட இருவிடயங்கள் தொடர்பாகவும் தெளிவான வழிவரைபடங்களை முன்வைக்க வேண்டும். விக்னேஸ்வரனை மையப்படுத்திச் சிந்திப்பது என்பது ஒரு தனிமனிதனை மையப்படுத்தும் சிந்தனையல்ல. அது மிகத் தெளிவான ஓர் அரசியற் செயல்வழியை மையப்படுத்திய சிந்தனைதான். விக்னேஸ்வரனைக் குறித்து முடிவெடுப்பதை சம்பந்தர் நரசிம்மராவ் பாணியில் ஒத்திவைத்து வந்தார் ஆனால் இப்பொழுது விக்னேஸ்வரன் தன்னைப் பற்றி முடிவெடுப்பது என்பது ஓர் அரசியற் செயல் வழியைக் குறித்தும் முடிவெடுப்பதுதான் எனற ஒரு பொறிக்குள் சம்பந்தரைச் சிக்க வைத்துவிட்டாரா?

http://www.nillanthan.com/time-line/அரசியற்-பத்தி/3058/

  • தொடங்கியவர்

இன்­னமும் குழம்பும் தமிழ்த் தலை­மைகள்

S-01Page1Image0002-910f814d6cfdeea5e945cf0745860822576037c9.jpg

 

அபி­வி­ருத்­தியின் மூலம், தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­களை மறைத்து விடலாம் என்ற எதிர்­பார்ப்பு சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளிடம் இருப்­பதைப் போலவே, அபி­வி­ருத்தி அர­சி­யலின் மூலம், அர­சியல் தீர்வு காணாமல் போகச் செய்­யப்­பட்டு விடும் என்ற அச்சம் தமிழ் அர­சியல் தலை­மை­க­ளி­டமும் இருக்­கி­றது

அர­சியல் தீர்­வுக்கா- அபி­வி­ருத்­திக்கா முன்­னு­ரிமை கொடுப்­பது என்ற விட­யத்தில், பல தசாப்­தங்­க­ளா­கவே தமிழ் அர­சியல் தரப்­புகள் குழம்பிப் போயி­ருக்­கின்­றன. அந்தக் குழப்பம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை, இப்­போதும் விட்டுப் போக­வில்லை.

தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு – வடக்கு, கிழக்கை அபி­வி­ருத்தி செய்தல் இவை இரண்டும் முக்­கி­ய­மான விட­யங்கள்.

ஆனாலும், காலம் மற்றும் தேவைக்கு ஏற்ப இவற்றைக் கையா­ளு­வதில் தமிழ் அர­சியல் தரப்­புகள் சரி­யாகச் செயற்­பட்­டுள்­ள­னவா என்ற கேள்வி உள்­ளது.

தமிழ் மக்­களின் அர­சி­யலை வழி நடத்­திய விடு­தலைப் புலி­க­ளா­கட்டும், அவர்­க­ளுக்குப் பின்னர் அதனைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­கட்டும், அபி­வி­ருத்தி சார்ந்த அர­சி­யலின் மீது அதிகம் நாட்­டத்தைக் காட்­ட­வில்லை.

அபி­வி­ருத்தி அர­சி­யலின் மீது கவனம் செலுத்­தப்­பட்டால், அது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காலம் தாழ்த்தி விடும், கவ­னிக்­கப்­ப­டாமல் செய்து விடும். சில வேளை­களில் காணாமல் போகவும் செய்து விடக் கூடும் என்ற அச்­சமே அபி­வி­ருத்தி மீதான கவனக் குறை­வுக்குக் காரணம்.

இந்த விட­யத்தில் மிகவும் தெளி­வாக இருந்த தரப்பு என்றால் அது ஈ.பி.டி.பி. மாத்­திரம் தான். டக்ளஸ் தேவா­னந்தா எப்­போதும், அபி­வி­ருத்தி அர­சி­யலின் மீதே நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அத­னையே தனது அர­சியல் மூலோ­பா­ய­மா­கவும் பின்­பற்றி வந்தார்.

அபி­வி­ருத்தி அர­சி­யலை வைத்தே, தமிழ் மக்கள் மத்­தியில் தமது அர­சியல் செல்­வாக்கை தக்­க­வைத்துக் கொள்­ளலாம் என்றும் நினைத்­தி­ருந்தார்.

ஆனால், ஒரு கட்­டத்­துக்கு மேல் அவ­ரது அபி­வி­ருத்தி அர­சியல் மூலோ­பாயம், உணர்ச்சி அர­சி­ய­லுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் தோற்றுப் போகும் நிலையும் ஏற்­பட்­டது.

இப்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை மாத்­தி­ரமே வைத்­தி­ருக்கும் ஈ.பி.டி.பி.க்கு சாத­க­மான அர­சியல் மாற்­றங்கள் நிகழ்ந்தால், மீண்டும் அபி­வி­ருத்தி அர­சி­ய­லையே முன்­னெ­டுக்கும் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்போ அதற்கு மாறான நிலையில் இருந்­தது. போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கு, -கிழக்கில் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் சில அபி­வி­ருத்தி வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்த போது, கூட்­ட­மைப்பு அதனை ஆத­ரிக்­க­வில்லை. சில­வே­ளை­களில் அதனை எதிர்த்­தது. சில வேளை­களில் அமை­தி­யாக இருந்­தது.

போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு- நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்­ப­துதான், முக்­கியம். அர­சியல் தீர்வு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு விட்டால், இல­கு­வாக அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்­கலாம் என்ற நிலைப்­பாட்டில் இருந்­தது கூட்­ட­மைப்பு.

ஆனால் மஹிந்த அர­சாங்­கமோ அதனை விட்டுக் கொடுக்­க­வில்லை. பசில் ராஜபக் ஷவையும், டக்ளஸ் தேவா­னந்­தா­வையும் முன்­னி­றுத்­திய அபி­வி­ருத்தி அர­சியல் மூலோ­பா­யத்தை வைத்தே, கூட்­ட­மைப்பை அர­சி­யலில் இருந்து அகற்ற முற்­பட்­டது.

அதா­வது., அர­சியல் தீர்வு முக்­கி­யமோ முதன்­மை­யா­னதோ அல்ல, அபி­வி­ருத்­தியைக் கொண்டு எல்­லா­வற்­றையும் மாற்றி விடலாம் என்­பது அவர்­களின் கருத்­தாக இருந்­தது.

அண்­மையில் கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூட, தமிழ் மக்கள் அர­சியல் உரி­மை­களைக் கேட்­க­வில்லை. அவர்­க­ளுக்கு இருப்­பது பொரு­ளா­தாரப் பிரச்­சினை மட்டும் தான். பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை தீர்த்து விட்டால், அர­சியல் பிரச்­சி­னைகள் தானா­கவே தீர்ந்து விடும் என்று கூறி­யி­ருந்தார். இன்­னமும் கூட அர­சியல் தீர்வை விட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தான் முக்­கியம் என்று நம்பும் நிலை­யி­லேயே ராஜபக் ஷவினர் இருக்­கி­றார்கள்.

அதே­வேளை, போர் முடிந்து பத்து ஆண்­டுகள் ஆகப்­போ­கின்ற நிலை­யிலும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பொரு­ளா­தார ரீதி­யாக கடைசி இடத்­தி­லேயே இருக்­கின்­றன. அதிலும் வடக்கு மாகா­ணத்தின் நிலை படு­மோசம்.

போரினால் ஏற்­பட்ட பொரு­ளா­தாரச் சிதை­வு­களால், முன்­னேற முடி­யாத நிலை என்று மாத்­திரம் இதனைக் கூற முடி­யாது. போர் முடிந்த பின்னர் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் காட்­டப்­பட்ட பார­பட்­சங்­களும் கூட அதற்குக் காரணம்.

அபி­வி­ருத்தி மீது அக்­கறை காட்­டப்­ப­டாத நிலை­யினால், வடக்­கினால் இன்­னமும், பொரு­ளா­தார முன்­னேற்­றங்­களை அடைய முடி­யா­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, அபி­வி­ருத்­தியை விட அர­சியல் தீர்வு தான் முக்­கியம் என்று ஒற்­றைக்­காலில் நின்ற கூட்­ட­மைப்­பினால் அர­சியல் தீர்­வையும் எட்ட முடி­ய­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு பற்றி கிட்­டத்­தட்ட நான்கு தசாப்­தங்­க­ளாகப் பேசப்­ப­டு­கி­றது. அர­சியல் தீர்வு எட்­டப்­பட்டு விட்டால் இல­கு­வாக அபி­வி­ருத்தி செய்து விடலாம் என்று கூறு­வது தமிழ் அர­சி­யலில் வழக்கம்.

ஆனால், நான்கு தசாப்­தங்­க­ளாக அர­சியல் தீர்­வையும் எட்ட முடி­யாமல், அபி­வி­ருத்­தி­யையும் அடைய முடி­யாமல்- ஒரு திரி­சங்கு நிலையில் தான் வடக்­கி­லுள்ள மக்கள் இருக்­கி­றார்கள்.

அபி­வி­ருத்­தியின் மூலம், தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­களை மறைத்து விடலாம் என்ற எதிர்­பார்ப்பு சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளிடம் இருப்­பதைப் போலவே, அபி­வி­ருத்தி அர­சி­யலின் மூலம், அர­சியல் தீர்வு காணாமல் போகச் செய்­யப்­பட்டு விடும் என்ற அச்சம் தமிழ் அர­சியல் தலை­மை­க­ளி­டமும் இருக்­கி­றது.

இதை­யெல்லாம் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டிய நிலை வந்­த­மைக்குக் காரணம், வடக்கு- கிழக்கு அபி­வி­ருத்திச் செய­லணி தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் உரு­வா­கி­யி­ருக்­கின்ற பிரச்­சினை தான்.

சில மாதங்­க­ளுக்கு முன்னர், வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தித் திட்­டங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி செய­லணி ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. அந்த செய­ல­ணியில் 48 பேர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

அந்தக் குழுவில் அமைச்­சர்கள் இருந்­தார்கள், படைத் தள­ப­திகள் மற்றும் அதி­கா­ரிகள் இருந்­தார்கள். ஆனாலும், அந்தப் பிர­தே­சத்தில் இருந்து தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

வடக்கைப் பொறுத்­த­வ­ரையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இடம்­பெற்­றி­ருந்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் இடம்­பெற்­றி­ருந்தார். ஏனைய எந்த பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் இட­மில்லை.

வடக்கு, கிழக்கில் அபி­வி­ருத்தி திட்­டங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு, இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­படை, பொலிஸ் அதி­கா­ரி­க­ளை­யெல்லாம் செய­லணிக் குழுவில் இணைத்த அர­சாங்கம், பாரா­ளு­மன்ற , மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை சேர்த்துக் கொள்­ள­வில்லை.

இது கடு­மை­யான விமா­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இது­பற்றி ஜனா­தி­ப­திக்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும் கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். கூட்­ட­மைப்பும் அதற்கு கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனாலும், செய­லணிக் குழுவின் முத­லா­வது கூட்டம் கூட்­டப்­படும் வரை ஜனா­தி­பதி எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை. அந்தக் கூட்­டத்தில் தான், கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏன் அழைப்பு விடுக்­க­வில்லை என்று தமது அதி­கா­ரி­க­ளிடம் கேட்­டி­ருந்தார் ஜனா­தி­பதி.

இந்­த­நி­லையில், நாளை நடக்­க­வுள்ள இரண்­டா­வது கூட்­டத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

செய­லணிக் குழுவில் கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­ட­தாக எந்த அறி­விப்பும் வெளி­யி­டப்­ப­டாத போதும், இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்க அவர்கள் அழைக்­கப்­பட்­டுள்­ளார்கள். கிட்­டத்­தட்ட பார்­வை­யாளர் நிலை என்று தான் கூற வேண்டும்.

பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டா­ததை சுட்டிக் காட்டி முத­லா­வது செய­லணிக் குழு கூட்­டத்தை புறக்­க­ணித்­தி­ருந்தார் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன்.

இப்­போது, கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவர்­களும், செய­லணிக் குழுக் கூட்­டத்தில் பங்­கேற்கக் கூடாது என்று கூட்­ட­மைப்புத் தலை­மை­யிடம் கோரி­யி­ருந்தார் முத­ல­மைச்சர்.

அவ­ரது அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்து, நாளைய செய­லணிக் குழுக் கூட்­டத்தில் பங்­கேற்க முடிவு செய்­தி­ருக்­கி­றது கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு. விக்­னேஸ்­வ­ர­னுக்கும் கூட்­ட­மைப்புத் தலை­மைக்கும் இடையில் நடக்­கின்ற கயி­றி­ழுப்­பினால் கூட இந்த முடிவு எடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

மயி­லிட்­டியில் கடந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடந்த மீன்­பிடித் துறை­முக அபி­வி­ருத்தி திட்ட ஆரம்ப நிகழ்­வையும் கூட முத­ல­மைச்சர் புறக்­க­ணித்­தி­ருந்தார்.

அந்த நிகழ்வில் மாவை சேனா­தி­ரா­சா­வுக்கு முக்­கிய இடம் அளிக்­கப்­பட்­டது. அவர் அந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய போது, இந்த ஆண்டு இறு­திக்குள் ஜனா­தி­பதி அர­சியல் தீர்வைக் காண வேண்டும் என்றும், அர­சியல் தீர்வு காணப்­ப­டா­விடின் அபி­வி­ருத்­தியால் எந்தப் பயனும் கிட்­டாது என்றும் கூறி­யி­ருந்தார்.

அர­சியல் தீர்வு இன்றேல் அபி­வி­ருத்­தியால் பய­னில்லை என்று மாவை சேனா­தி­ராசா கூறி­யி­ருந்த நிலையில் தான், அபி­வி­ருத்­திக்­கான செய­லணிக் கூட்­டத்­துக்­கான அழைப்­பையும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது கூட்­ட­மைப்பு.

அதே­வேளை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும், தனது கூட்­டங்­களில் வெளி­நாட்டு மற்றும் புலம்­பெயர் தமி­ழர்­களின் முத­லீ­டுகள், அபி­வி­ருத்­திகள் குறித்து அதிகம் பேசு­கிறார். சுய­சார்பு பொரு­ளா­தாரம் பற்றி பேசு­கிறார். ஆனாலும், அபி­வி­ருத்தி என்­றதும் பின்­வாங்­கு­கிறார்.

அபி­வி­ருத்தி அர­சி­யலை முன்­னெ­டுப்­பதில் கூட்­ட­மைப்­புக்கும் சரி, விக்­னேஸ்­வ­ர­னுக்கும் சரி இன்­னமும் குழப்பம் தீர­வில்லை. போருக்குப் பின்னர் தான் தெற்கு பெரும் அபி­வி­ருத்­தியைக் கண்­டது. ஆனால் , வடக்கு தேய்ந்து போனது.

அர­சியல் தீர்வைக் காரணம் காட்டி அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களை பிற்­போட்டு அல்­லது புறக்­க­ணித்து வரும் நிலையில் தான், வடக்கின் நிலை மோச­ம­டைந்து செல்­கி­றது.

வெளி­நாட்டில் இருந்து கிடைத்து வரும் புலம்­பெயர் தமி­ழர்கள் மூல­மான வரு­மானம் தடைப்­ப­டு­கின்ற நிலை ஏற்­பட்டால் ,வடக்கின் பொரு­ளா­தாரம் படு­மோ­ச­மான கட்­டத்தை எட்டும். அந்த ஆபத்தைக் கூட உண­ராமல், தமிழ் அர­சியல் தலை­மைகள் உள்­ளன.

தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு முக்­கியம். உரி­மைகள் முக்­கியம். ஆனால், அதனை அடை­வ­தற்­கான முயற்­சிகள் 40 ஆண்­டு­க­ளாகச் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. சிங்­களத் தலை­மைகள் அர­சியல் தீர்­வுக்கு இணங்க மறுக்­கின்­றன.

இப்­ப­டி­யான நிலையில், அர­சியல் தீர்வு தான் முதலில் என்று ஒற்­றைக்­காலில் நிற்­ப­தற்குப் பதி­லாக, மாற்று வழி­மு­றை­க­ளையும் தேட வேண்­டிய சூழல் இருக்­கி­றது.

அர­சியல் தீர்வை இழுத்­த­டிப்­பதன் மூலம், தமிழ் மக்­களை எவ்­வாறு பல­வீ­னப்­ப­டுத்த சிங்­கள அர­சியல் தலை­மைகள் முற்­ப­டு­கின்­ற­னவோ அதற்கு இணை­யா­கவே தமிழ் தலை­மை­களும் செயற்­ப­டு­கின்­றன.

அபி­வி­ருத்தி அர­சி­யலின் மூலம் தமிழ் மக்­களை வசப்­ப­டுத்த அல்லது அவர்களின் அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மறக்கடிக்கலாம் என்று அரசாங்கமும் சிங்களத் தலைமைகளும் திட்டம் போடுவது உண்மை தான்.

அதற்காக அபிவிருத்தியைத் தொடர்ந்தும் புறக்கணிப்பது சரியானது தானா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால், இந்தப் புறக்கணிப்பு சிங்களத் தலைமைகளுக்கோ, அவர்களைத் தெரிவு செய்யும் சிங்கள மக்களுக்கோ பாதிப்பைத் தராது, தமிழ் மக்களையே பாதிக்கும்.

ஒருவேளை, அபிவிருத்தியின் மூலம், அரசியல் தீர்வு இல்லாமல் ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் தமிழ்த் தலைவர்களிடம் இருக்குமேயானால், சிங்களத் தலைவர்கள் கூறுவது போல, தமிழ் மக்களுக்கு இருப்பது அரசியல் பிரச்சினைகள் இல்லை, பொருளாதாரப் பிரச்சினைகள் தான் என்ற கூற்றும் உண்மையாகி விடும்.

தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் தான் உள்ளன என்ற வலுவான நம்பிக்கை தமிழ்த் தலைமைகளிடம் இருந்தால், அபிவிருத்தி அரசியலை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்குத் தயாராவதில் தவறில்லை.

இது ஒரு விஷப்பரீட்சை தான் என்றாலும், தமிழ் மக்களின் பொருளாதார இருப்பும் முக்கியமானது என்ற நிலையில் இருந்து பார்த்தால், இந்த அமிலச் சோதனை தவிர்க்க முடியாத ஒன்று தான். 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-26#page-1

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நவீனன் said:

வெளி­நாட்டில் இருந்து கிடைத்து வரும் புலம்­பெயர் தமி­ழர்கள் மூல­மான வரு­மானம் தடைப்­ப­டு­கின்ற நிலை ஏற்­பட்டால் ,வடக்கின் பொரு­ளா­தாரம் படு­மோ­ச­மான கட்­டத்தை எட்டும். அந்த ஆபத்தைக் கூட உண­ராமல், தமிழ் அர­சியல் தலை­மைகள் உள்­ளன.

இன்னும் ஒரு பத்து வருடம்தான் வெளிநாட்டுக்காசு அதன் பின் இங்குள்ள தலைமுறை காசு நிர்வாகத்தில் தலையிட தொடங்க கிளப்புகள் ,கோவில்கள் ,அரசியல் போன்றவற்ற்க்கு கிடைக்கும் வருமானம் தடைபட தொடங்கும் அடுத்து வரும் 20 வருட காலபகுதியில் முற்று முழுதாக நின்றுவிடும் . அப்ப கூட தீர்வு 2038 செப்டம்பரில் கட்டாயம் கிடைக்கும் என்று சுமத்திரன் போன்ற ஒன்று வாயால் வடை சுட்டுக்கொண்டு இருக்கும் என்பதை நம்பலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.