Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தா காலத்­தி­லேயே சிங்­கள குடி­யேற்றம்

Featured Replies

கோத்தா காலத்­தி­லேயே சிங்­கள குடி­யேற்றம்

 

(ரொபட் அன்­டனி)

மத்­திய அரசுடன் விக்கி பேச முன்  வ­ர­வேண்டும் என்­கி­றது அர­சாங்கம் 

முல்­லைத்­தீவில் அர­சாங்கம் எந்­த­வொரு சிங்­க­ளக்­கு­டி­யேற்­றத்­தையும் செய்­ய­வில்லை. சிங்­கள குடி­யேற்­றங்கள் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் காலத்­தி­லேயே இடம்­பெற்­றன. தற்­போ­தைய அர­சாங்­கத்தில் எது வும் இல்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.  

முல்­லைத்­தீவில் சிங்­கள குடி­யேற்­றங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்பில்  தன்­னிடம் சாட்­சிகள் இருப்­ப­தாக வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் கூறி­யுள்ளார். அவ்­வாறு சாட்­சிகள் இருந்தால் அவை தொடர்பில் விக்­கி­னேஸ்­வரன் மத்­திய அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும். மாறாக இன­வாதம் பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

 அர­சாங்­கத்தில் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இத­னைக்­கு­றிப்­பிட்டார்.

ராஜி­த­சே­னா­ரட்ன அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

கேள்வி: முல்­லைத்­தீவில் சிங்­கள குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­வ­தாக தெரி­வித்து பாரிய ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்பில் ?

பதில்: அவ்­வாறு சிங்­கள குடி­யேற்­றங்கள் எதுவும் தற்­போது முல்­லைத்­தீவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் காலத்­தி­லேயே அவ்­வாறு செய்­யப்­பட்­டது. தற்­போது எதுவும் இல்லை.

கேள்வி: சிங்­கள குடி­யேற்­றங்கள் நடை­பெ­று­வது தொடர்பில் தன்­னிடம் ஆதா­ரங்கள் இருப்­ப­தாக வடக்கு முதல்வர் கூறி­யி­ருக்­கின்­றாரே?

பதில்: சிங்­கள குடி­யேற்­றங்கள் இருப்­ப­தற்­கான சாட்­சி­யங்கள் இருந்தால் வடக்கு முதல்வர் மத்­திய அர­சாங்­கத்­துடன் பேச்­சு­ந­டத்­த­வேண்டும். அதை­வி­டுத்து இவ்­வாறு இன­வாதம் பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை. மாகா­ண­சபை ஊடாக அவர் வட­மா­கா­ணத்­திற்கு எத­னையும் செய்­ய­வில்லை. அத­னால்தான் தற்­போது இன­வா­தத்தை கையில் எடுத்­தி­ருக்­கின்றார். தற்­போது சிங்­கள குடி­யேற்­றங்கள் இல்லை. எமது அர­சாங்கம் அவ்­வாறு எத­னையும் செய்­ய­வில்லை.

கேள்வி: யுத்த வெற்றி நினை­வு­தூ­பி­களை அகற்­ற­வேண்­டு­மென வடக்கு முதல்வர் தெரி­வித்­தி­ருக்­கின்­றாரே?

பதில்: வடக்கு மக்கள் மூன்­று­வேளை உண­வுக்­கா­கவே போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றது. அதை­யெல்லாம் விட்­டு­விட்டு இரா­ணுவ நினை­வு­தூபி தொடர்பில் மக்கள் பேச­வில்லை. விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு இன­வாதம் தேவைப்­பட்­டுள்­ளதால் அவர் இதனைப் பேசிக்­கொண்­டி­ருக்­கின்றார். மாறாக மக்கள் எதுவும் நினை­வு­தூ­பி­தொ­டர்பில் கேட்­க­வில்லை. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மக்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைகள் உள்­ளன. அந்த மக்­களின் காணிகள் முழு­மை­யாக மீள­ளிக்­கப்­ப­ட­வில்லை. நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் மயி­லிட்­டித்­து­றை­முகம் விடு­விக்­கப்­பட்­டது. அது இது­வ­ரை­கா­லமும் கடற்­ப­டை­யி­னரால் முடக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் வடக்கு மக்­களின் மீன்­பிடி வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதே­போன்று கொக்­கிலாய் பகு­தியில் ஒரு பிரச்­சினை இருந்­தது நான் அனைத் தீர்த்­து­வைத்தேன். காணிப்­பி­ரச்­சினை, காணா­மல்­போனோர் பிரச்­சினை, அர­சி­யல்­கை­திகள் விவ­காரம் என வடக்கு மக்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்­கின்­றனர். அவற்றை நாங்கள் தீர்த்து வைக்­க­வேண்டும். வீடுகள் கட்­டிக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாகா­ண­ச­பைக்கு நாங்கள் அனுப்­பு­கின்ற நிதி முழு­மை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. இவ்­வாறு செயற்­றிறன் அற்­ற­வ­கையில் செயற்­படும் விக்­கி­னேஸ்­வரன் அவற்றை மறைப்­ப­தற்கு இன­வா­தத்தை கையில் எடுக்­கின்றார். மத்­திய அர­சாங்­கத்தில் இந்தப் பிரச்­சி­னையே இருக்­கின்­றது. மக்­களின் ஆத­ரவை இழக்­கின்­ற­போது போலி­யான தேசப்­பற்றை கையில் எடுக்­கின்­றார்கள். அத­னையே தற்­போது விக்­கி­னேஸ்­வ­ரனும் செய்­கின்றார்.

(கயந்த கரு­ணா­தி­லக்க) வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி தலை­மையில் விசேட செய­லணி நடை­பெற்­றது. இதில் வடக்­கு­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரை­வாக தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. வடக்கு, கிழக்கு மக்கள் பிர­தி­நி­திகள் இதில் கலந்­து­கொண்­டனர். விரைந்து அடுத்­த­கூட்­டமும் நடை­பெறும்.

கேள்வி: இவ்­வாறு வடக்கை துரித அபி­வி­ருத்தி செய்யும் போது பௌத்த பாரம்­ப­ரிய இடங்கள் அழிக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.?

பதில்: அவ்­வாறு எதுவும் இல்லை அப்­படி பௌத்த பாரம்­ப­ரி­யங்கள் அழிக்­கப்­பட்டால் தொல்­பொருள் திணைக்­களம் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அவற்றைத் தவிர்க்­க­வேண்­டி­யது அதி­கா­ரி­களின் கட­மை­யல்­லவா.

கேள்வி: எல்­லா­வல மேதா­னந்த தேரரும் இது தொடர்பில் விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தாரே?

பதில்: அப்­படி நடந்தால் எல்­லா­வல தேரர் அந்த இடங்­க­ளுக்கு சென்று பார்க்­கலாம் அல்­லவா இந்தப் பிரச்­சினை வடக்கில் மட்­டு­மல்ல தெற்­கிலும் இருக்­கி­றது.

கேள்வி: ஆனால் தொல்­பொருள் அதி­கா­ரிகள் எந்த நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளமல் இருக்­கி­றார்­களே?

பதில்: அவர்கள் அப்­ப­டி­யி­ருக்க முடி­யாது. நட­வ­டிக்கை எடுத்தே ஆக­வேண்டும்.

கேள்வி: அர­சாங்கம் இதில் தலை­யி­டாதா?

பதில்: அர­சாங்கம் தலை­யிட்­டாலும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது தொல்­பொருள் திணைக்­களம். இன்று அதிலும் பிரச்­சினை இருக்­கி­றது. தொல்­பொ­ருள்­வி­ய­லா­ளர்கள் குறை­வாக இருக்­கின்­றார்கள். அந்தப் பாடத்தை கற்­ப­வர்கள் குறைந்­து­விட்­டனர். தொல்­பொருள் திணைக்­களம் பாரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. மன்னார் எலுக்­குக்­கூடு மீட்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை எடுத்­துக்­கூ­றலாம்.

கேள்வி: எனினும் இருக்கின்ற இராணுவ தூபிகளையும் அகற்றவேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கின்றாரே?

பதில்: நான் முன்பு குறிப்பிட்டது போல வடக்கில் இராணுவத்தூபிகள் பிரச்சினை அல்லத அந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். நான் அடிக்கடி வடக்கிற்கு சென்று வருவேன். அப்போது அந்த மக்கள் என்னிடம் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையே கூறிவருகின்றனர். சி.வி. விக்கினேஸ்வரன் வடபகுதிக்கு எதையும் செய்யவில்லை. அதனால்தான் இனவாதம் பேசுகிறார். அந்த மக்கள் பொலிஸ், இராணுவத்தின் சேவை குறித்தும் நல்லவிதமாகவே பேசுகின்றனர். நாங்கள் அனுப்புகின்ற நிதியைக்கூட செலவழிக்காமல் இருக்கின்றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-30#page-1

1 hour ago, நவீனன் said:

முல்­லைத்­தீவில் அர­சாங்கம் எந்­த­வொரு சிங்­க­ளக்­கு­டி­யேற்­றத்­தையும் செய்­ய­வில்லை. சிங்­கள குடி­யேற்­றங்கள் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் காலத்­தி­லேயே இடம்­பெற்­றன. தற்­போ­தைய அர­சாங்­கத்தில் எது வும் இல்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.  

கோத்தபாயா ஒரு கொலைகாரர் ஒரு போர்க்குற்றவாளி மட்டும்மல்ல ஒரு இனவெறிச் சமூக விரோதி என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.