Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐபிசி தமிழ் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் வட மாகாண முதலமைச்சர் |

Featured Replies

பிரபாகரன் இறந்துவிட்டார்; ஆனால் உறுதிப்படுத்தமுடியாது என்கிறார் வட மாகாண முதலமைச்சர்

 

 
Image

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்ததன் பின்னர் தனது கொள்கையை கொண்டு செல்வதற்குரிய நபர்களை அதற்கேற்றாற்போல் வைத்திருந்தாரா என்பபதை தான் அறிந்திருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தேசியத் தலைவராக அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின் போது இறந்துவிட்டார் என்பதை தான் சர்வ சாதாரணமாகக் கூறினாலும் அதனை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் சக்கர வியூகம் என்ற நடப்பு விவகார நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர்,..

”அவர் (தலைவர் பிரபாகரன்) ஒரு சிறந்த போராளி என்பதை சரத் பொன்சேகா கூட கூறியிருக்கிறான்றார். தீவிர போராளி என்று சொல்வோமேயானால், ஒரு விடயத்தை அவர் தீவிரமாக பற்றிக்கொண்டார். அதாவது தனி நாடு மட்டும் தேவை வேறு எதுவுமே தேவை இல்லை என்று கூறியதனால், இலங்கையின் பல அரசாங்கங்கள் அதை வேறு விதமாக கருத்தில் எடுத்து எமக்கு எதிராக நடந்துகொண்டன. ஆகவே அவரை மாவீரன் என்பதிலோ தீவிர போராளி என்பதிலோ எந்தவிதமான பிழையும் இல்லை. அவரை ஒரு சிறந்த போராளி என்று நான் மட்டுமில்லை சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். அதை நான் சொல்லியிருக்கிறேன்.

அரசியல் ரீதியாக அவரது இடம் எங்கு இருக்கின்றது என்றால், தனி நாடு மட்டும் தான் தேவை என்ற அந்த ஒரு விடயத்திலே அவர் மிகவும் பற்றுறுதியோடு இருந்தார். இதனால் வேறு எதனையும் செய்யக்கூடிய அல்லது வேறு எதனையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை எங்களுக்கு ஏற்படவில்லை. அதனுடன், அவர் இறந்ததன் பின்னர் அதனைக் கொண்டு நடத்துவதற்கான ஆட்களை அவர் அதற்கேற்றமாதிரி வைத்திருந்தாரோ அது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதற்குப் பின்னர், பல வருடங்கள் கடந்ததன் பின்னர்தான் ஜனநாயக ரீதியாக நாங்கள் இதற்குள் நுழைந்தோம். அப்பொழுது எங்களுக்கு தரப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதைக் கூறியிருந்தார்களோ, அதாவது எங்கள் மக்கள், மக்கள் தலைவர்கள் இணைந்து எந்த தீர்மானத்தை எடுத்திருந்தார்களோ அதற்கமைவாகவே நாங்கள் இதுவரையில் செய்துவருகின்றோம். ஆகவே அதற்கும் முன்னர் குறிப்பிட்டதற்கும் வித்தியாசம் இருப்பதாகத்தான், அதை ஒரு விதமாக நான் முன்னர் விமர்சித்திருக்கிறேன்.” என்றார்.

நீங்கள் ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்துள்ளீர்கள். இப்பொழுது பேசுகின்றபோது அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளீர்கள். இதனை உறுதிப்படுத்த முடியுமா? என கேட்கப்பட்டது.

”இறந்துவிட்டார் என நான் சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டேன். அது என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால் நெடுமாறன் இப்பொழுதும் கூறுகின்றார், அவர் உயிருடன் இருபதாக. பொதுவாக மக்கள் அவர் இறந்துவிட்டர் என்று கூறியதன் அடிப்படையில் அதைப்பற்றி நான் யோசிக்காமல் கூறிவிட்டேன். அவர் இருக்கின்றாரா இல்லையா என நீங்கள் கேட்டால் எனக்கு தெரியாது என்பதுதான் என்னுடைய பதில்.” என்று குறிப்பிட்டதுடன், ஒரு போராளி, மக்களுடைய இதயத்தை வென்றவர், உயிருடன் இருக்கின்றார் என்பதை சிறப்பாகக் கருதுவீர்களா? அவர் இறந்துவிட்டார் என்பதைச் சிறப்பாக கருதுவீர்களா? நீங்களே சொல்லுங்கள்.” என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கருத்துக்கள் உட்பட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய மேலும் பல சர்ச்சைக்குறிய தகவல்கள் அடங்கிய முழுமையான செவ்வி, மே மாதம் 17 ஆம் திகதியான இன்றைய தினம் பிரித்தானிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள சக்கர வியூகம் என்ற நடப்பு விவகார நிகழ்ச்சியில் காணத் தவறாதீர்கள்!

http://www.ibctamil.com/srilanka/80/100651?ref=bre-news

 

முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் | சக்கர வியூகம்

முழுமையான காணொளி ஒரு சில மணி நேரங்களின் பின் இணைக்க கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

உறுதிப்படுத்த  இவர் யார் ?

 

  • தொடங்கியவர்

 

முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம்?

 

பிரபாகரன் இறந்துவிட்டார் என்கிறார் வட மாகாண முதலமைச்சர்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 8:47 PM, ரதி said:

 

உறுதிப்படுத்த  இவர் யார் ?

 

இதே கேள்வியை உங்கள் அண்ணர் துரோகியை பார்த்து கேட்க முடிந்ததா?

  • 3 months later...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.